Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர் - தொழில்நுட்ப அதிசயம் பல்லப் கோஷ் அறிவியல் நிருபர், லாசனே ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, புதிய தொழில்நுட்பத்தால் நடப்பது சாத்தியமான மைக்கேல் ரோக்கட்டி தண்டுவடத்தின் இடையே வெட்டுப்பட்டு துண்டாகிப் போனதால் பாதிக்கப்பட்டு, செயலற்றுப் போன ஒருவர், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டு, உடலுக்குள் உட்பொருத்தப்பட்ட கருவியால் மீண்டும் நடப்பது சாத்தியமாகியுள்ளது. வெட்டுப்பட்ட மு…

  2. #BoycottHyundai #Boycottkia ஹுண்டாய் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் ஏன் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகின்றன? 7 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,YURIKO NAKAO/GETTY IMAGES ஹுண்டாய் பாகிஸ்தான் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பதிவேற்றப்பட்ட இடுகையில், காஷ்மீரின் 'விடுதலை'க்கு அழைப்பு விடுக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றதால், மிகப்பெரிய உலகளாவிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. @hyundaiPakistanOfficial என்ற அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பாகிஸ்தானின் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை ஆதரித்து, "சுதந்திரத்திற்கான போராட்டம்" என்று அழைக்கும் இடுகை பகிரப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் இட…

  3. 'மொசாத்' இஸ்ரேலிய உளவுப்படை: இரானிய உளவு அமைப்புகளில் ஊடுருவிய அதிகாரிகள் - அதிர வைக்கும் தகவல்கள் ஜியார் கோல் பிபிசி பெர்சிய சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இரானின் விஞ்ஞானி மொசெனை மொசாத்தான் கொலை செய்ததாக நம்பப்படுகிறது 2020ஆம் ஆண்டு இரானின் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்ட பிறகு அவர், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக தெரிய வந்தது. இந்த மாதிரியாக ஓடும் காரில் வேறு யாருக்கும் உயிர் சேதம் வராமல் இலக்கு வைக்கப்பட்ட நபர் மட்டும் துல்லியமாக கொல்லப்பட…

  4. கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS சைபர் தாக்குதல்கள் மூலம் வட கொரியா மில்லியன் கணக்கிலான கிரிப்டோகரன்சியை திருடி, தனது ஏவுகணை திட்டத்திற்கு அதை பயன்படுத்தியதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சைபர்-தாக்குதல்கள் மூலம் 50 மில்லியன் டாலர்களுக்கும் (37 மில்லியன் பவுண்ட்) அதிகமான டிஜிட்டல் சொத்துக்களை திருடியதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு "முக்கியமான வருவாய் ஆதாரம்" என்று அவர்கள் தெரிவித்து…

  5. மியான்மர் ராணுவம்: சொந்த மக்களையே வேட்டையாடும் கொடூரம் - இத்தனை பலம் பெற்றது எப்படி? 5 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மியான்மர் ராணுவம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களைக் கொன்றதன் மூலம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஓராண்டுக்கு முன்னர் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ ச்சீ அரசாங்கத்தை கவிழ்த்ததில் இருந்து, மியான்மரின் ராணுவம் - தாட்மடா என்று அழைக்கப்படுகிறது. - கொடூரமான அடக்குமுறை மூலம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களை கொன்று உலகையே அந்நாட்டு ராணுவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மியான்மர்…

  6. கனடா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தடைகளை எதிர்த்து போராட்டம் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போது 1000-க்கு மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்…

  7. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நிவாரணத்தை ஈரான் வரவேற்கிறது! 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சிவில் அணுசக்தி திட்டத்தின் மீதான பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் அறிவிப்பு நல்லது என ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்வது மட்டும் போதுமானதாக அமையாது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 மே அன்று ட்ரம்ப் அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரஷ்ய, சீன மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானி…

  8. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் படைகள் எப்படி தங்களை வலுப்படுத்திக் கொண்டன உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மூன்று ஆண்டுகளில் உக்ரைன் ராணுவ துருப்புகளின் எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்துவது மற்றும் அவர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். உக்ரைனின் ராணுவம் மற்றும் ஆயுதங்கள் ரஷ்யாவின் நிலையோடு ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. தற்போது எல்லைப் பகுதியில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய ராணுவம் படையெடுப்பை மேற்கொண்டால் உக்ரைன் ராணுவத்தினரால் கணிசமாக ரஷ்ய ராணுவத்தினரை எதிர்க்க முடியும். அதே நேரத்தில் அதிகப்படியான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர். …

    • 0 replies
    • 340 views
  9. உலகமே உற்று நோக்கும் மொராக்கோ சம்பவம்: சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள்! வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்சித்து வருகின்றனர். ஐந்து வயது சிறுவனான ரேயான், செவ்வாய்கிழமை வடக்கு மலை நகரமான பாப் பெர்டில் உள்ள கிணற்றில் விழுந்தார். இதனைத்தொடர்ந்து இச்சிறுவனை மீட்கும் பணியினை மீட்புப் பணியாளர்கள் முடுக்கிவிட்டுள்ளன. ‘எனது மகன் பாதுகாப்பாக திரும்புவதற்காக மொராக்கோவாசிகளை பிரார்த்தனை செய்யும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று உள்ளூர் ஊடகங்களில் காட்டப்பட்ட காட்சிகளில் ரேயனின் கலக்கமடைந்த தாய் கூறினார். சிறுவன் இன்னும் உயிருடன் இருப்…

  10. ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். சிரியாவில் அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு …

    • 5 replies
    • 430 views
  11. யுக்ரைன் பதற்றம்: “ரஷ்யாவை போரிடும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது” - புதின் குற்றச்சாட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மாஸ்கோவில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, புதின் இவ்வாறு கூறியுள்ளார். யுக்ரைனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார். பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்த தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க ஒரு சந்தர்ப்பமாக, இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்று தெரிவித…

  12. மியான்மர்: ராணுவ ஆட்சியை எதிர்க்கும் இளைஞர்களால் உள்நாட்டுப் போர் வர வாய்ப்பு? பிபிசி புலனாய்வு சோ வின், கோகோ ஆங், நசோஸ் ஸ்டிலியானோ பிபிசி பர்மீஸ், பிபிசி தரவு இதழியல் பிரிவு 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, PDF உறுப்பினர்கள் தற்காலிக ஆயுதங்களுடன் பயிற்சி பெறுகிறார்கள் மியான்மர் ராணுவத்துக்கும் ஆயுதமேந்திய பொதுமக்கள் குழுக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ராணுவத்தை எதிர்த்துப் போராடுபவர்களில் பலர், மியான்மரில் ஏற்பட்ட ராணுவ ஆட்சியால் தங…

  13. வட கொரியாவில் கிம் அரசு பரிசோதித்த ஏவுகணை படங்கள் வெளியீடு - விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்தது என வடகொரியா கூறிவரும் ஏவுகணை சோதனையின் புகைப்படங்களை அந்நாடு வெளியிட்டுள்ளது. விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட இந்த அசாதாரண புகைப்படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன. ஐ.ஆர்.பி.எம் எனப்படும் இடைநிலை தூர பாலிஸ்டிக் வகை, ஹ்வாசோங்-12 (Hwasong-12 ) என பெயரிடப்பட்டுள்ள ஏவுகணையை சோதனை செய்ததாக திங்கள்கிழமை வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை அதன் முழு சக்…

  14. நன்றி புகைப்படங்களுக்கு https://www.theguardian.com/uk-news/2021/mar/03/home-office-delays-leave-sri-lankan-man-in-immigration-limbo பிரித்தானியாவில் 40 வருடங்களாக வாழ போராடிய இலங்கை தமிழர் ஒருவர் இறுதியாக வெற்றி கண்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்காளராகப் பயிற்சி பெற பிரித்தானியாவுக்கு வந்த இலங்கை தமிழரான பொன்னம்பலம் ஜோதிபாலா என்பவர் தற்போதே அனுமதி பெற்றுள்ளார். பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் தவறுகள் காரணமாக வீடற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது 70வது பிறந்த நாளுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 69 வயதுடைய இலங்கைத் தமிழரான பொன்னம்பலம் ஜோதிபாலா, இப்போது வயதானவராக இருந்தாலும், இறுதியாக த…

  15. இத்தாலியின் ஜனாபதிபதியாக செர்ஜியோ மெட்டரெல்லா இரண்டாவது முறையாக தேர்வு! இத்தாலியின் ஜனாபதிபதியாக தற்போதைய ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 1,000க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்று வாக்கெடுப்பில், மேட்டரெல்லா 1009 வாக்குகளில் 759 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வாரம் முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியான மேட்டரெல்லாவின் ஏழு ஆண்டு பதவிக்காலம், பெப்ரவரி 3ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. ஆனால், 80 வயதான மேட்டரெல்லா, நீண்ட காலமாக பதவியில் நீடிப்பதை நிராகரித்திருந்தார். …

  16. அயர்லாந்து கரையில் இருந்து இராணுவ ஒத்திகையை நகர்த்தியது ரஷ்யா! அரசியல்வாதிகள் மற்றும் மீனவர்களின் அழுத்தத்திற்குப் பின்னர், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சி அயர்லாந்து கடற்கரையிலிருந்து மேலும் நகர்த்தப்பட்டது. நடைபெற இருந்த “லைவ்-ஃபயர்” பயிற்சி தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே மாற்றப்படும் என அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சைமன் கோவேனி கூறியிருந்தார். மேலும் தமது பொருளாதார மண்டலத்திற்குள் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளை அயர்லாந்து வரவேற்காது என்றாலும் ரஷ்யாவைத் தடுக்க அந்நாட்டுக்கு அதிகாரம் இல்லை என கோவேனி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பயிற்சியை இடமாற்றம் செய்வதற்கான முடிவு “நன்மையின் சைகையாக” எடுக்கப்பட்டதாக அயர்லாந்திற்கான ரஷ…

  17. 2017 க்குப் பிறகு மிகப்பெரிய ஏவுகணையை சோதனை செய்தது வட கொரியா! 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை விண்ணில் ஏவியுள்ளது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. நவம்பர் 2017 க்குப் பிறகு சோதிக்கப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை இது என்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 2,000 கிமீ உயரத்தை எட்டியதாகவும், 800 கிமீ தூரத்தை 30 நிமிடங்களில் கடந்து, ஜப்பான் கடலில் இறங்கியது என்றும் ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மாதம் வடகொரியா மொத்தம் ஏழாவது சோதனையை நடத்தியுள்ள நிலையில் ஜப்பான், தென் கொரி…

  18. குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. என்ன காரணம்? ஒட்டவா: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் தற்போது 229,818 ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் உள்ளன. அங்கு 3,027,167 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 28,957 பேர் அங்கு இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கனடாவில் வேக்சின் போடும் வேகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் வேக்சின் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் வேக்சின் அதேபோல் ஓமிக்ரான் பரவலால் சில லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது…

    • 7 replies
    • 675 views
  19. அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: பாம்போஜெனிசிஸ் வகை'வெடிகுண்டு பனிப்புயல்' எச்சரிக்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாசாசூசெட்சின் கோஹாசெட்டில் பனியை அகற்றும் பணி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது. கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, 5 மாநிலங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கடலோரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடு…

  20. ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜோ பைடன் எச்சரிக்கை! அடுத்த மாதம் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய போதே இந்த தகவலை வெளியிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டால் உடனடியாக அமெரிக்காவும் நட்பு நாடுகளும் முழு ஆதரவினை உக்ரைனுக்கு வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரேனைஇணைத்துக்கொள்ள கூடாது என்ற ரஷ்யாவிம் முக்கிய கோரிக்கை அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வொன்றை எட்டும் முயற்சி …

  21. பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்? கிளேர் ஹில்ஸ் பிபிசி நியூஸ், வாஷிங்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F35 போர் விமானம் கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனர்கள் மீட்பதற்கு முன், தான் மீட்கவேண்டும் என்று அமெரிக்கா காலத்தோடு போட்டி போட்டு தேடிக்கொண்டிருக்கிறது. தென்சீனக் கடலில், அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யூ எஸ் எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட F35-C வகை அதிநவீன போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கத் தரப்ப…

  22. கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல் ஹோல்லி ஹோண்டரெச் பிபிசி செய்திகள், வாஷிங்டன் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC GUJARATI படக்குறிப்பு, இந்தக் குடும்பம் 11 மணிநேரம் உறைபனி குளிரில் நடந்திருக்கலாம் என்கிறது கனடா போலீஸ் கனடா-அமெரிக்க எல்லையில் இருந்து சில அடி தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு இந்தியர்களின் மரணத்தை அந்த நாடுகளுக்குள் ஆள் கடத்திக் கொண்டு வரும் செயல்பாடுடன் தொடர்புடையது என்று கனடிய அதிகாரிகள் நம்புகின்றனர். கனடாவின் மனிடோபாவில் கடும் குளிரின் காரணமாக ஜெகதீஷ் படேல் (39), வைஷைல்பென் படேல்…

  23. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை! பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது. ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த நிலை…

  24. உக்ரேன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா (ஜெ.அனோஜன்) உக்ரேனை நேட்டோவில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையினை புதனன்று அமெரிக்கா நிராகரித்ததுடன், கெய்வின் எல்லைகளுக்கு அருகே மொஸ்கோவின் இராணுவக் குவிப்பால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வுக்கும் அழுத்தம் கொடுத்தது. உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மொஸ்கோவின் கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவுக்கு முறையான பதிலைக் கொடுத்தார். இந் நிலையில் நேட்டோவுடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட்ட பிளிங்கனின் பதிலை தனது நாடு ஆய்வு செய்யும் என்று ஒரு ரஷ்ய அமைச்சர் கூறினார். நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் அது தொட…

  25. அடையாளம் தெரியாத மற்றுமொரு ஏவுகணையினை பரிசோதனை செய்தது வட கொரியா! வட கொரியா, இன்று(வியாழக்கிழமை) கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு வட கொரியா ஆறாவது முறையாக ஏவுகணையை சோதனையினை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பினை புறக்கணித்த வட கொரியா, தொடர்ந்து தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றி வருகின்றது. கடந்த 5ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 14ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையையும் நடத்தியதாக வட கொரியா அறிவித்தது. கிழக்கு கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.