உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் நடிகர் விஜய்யும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. விஜய் தனிகட்சி துவங்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதை உறுதிபடுத்தவில்லை. விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா…
-
- 0 replies
- 2.1k views
-
-
டெல்லி: ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தாங்கள் போட்டியிட விரும்பும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் தலா 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்துப் பெற்று சமர்ப்பித்தால்தான் டிக்கெட்டுக்குப் பரிசீலிக்கப்படுவர் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இப்படிச் செய்யாமல் யாராவது விண்ணப்பித்தால் அவர்களது பெயர் வேட்பாளர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்ததோடு, தற்போது காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியிலும் அமர்ந்துள்ளது. அடுத்து லோக்சபா தேர்தலிலும் மகத்தான முத்திரையைப் பதிக்க அது ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலைய…
-
- 2 replies
- 581 views
-
-
ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் கமார் விஸ்வாஸ் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் சுவரெட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களை தேச விரோத சக்திகள் என்று ராஷ்ட்ரீய ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.dinamani.com/latest_news/2014/01/11/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 260 views
-
-
டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது. கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்தியது. குறிப்பாக வாக்குப்பதிவு நெருங்கிய நிலையில் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் …
-
- 0 replies
- 469 views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சந்திப்பின் போது, காஷ்மீரில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ராணுவம் தேவையா இல்லை வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார். இந்த பிரச்சனைக்குரிய கருத்துக்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த கருத்துக்கு சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பூஷனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை இந்து அமைப்பினர் தாக்கினர். இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் கடுமைய…
-
- 0 replies
- 354 views
-
-
பாரதீய ஜனதா கட்சி ஆம் ஆத்மியை தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக எடுக்க வேண்டாம் என்று பாரதீய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதாவுக்கு கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-09-BJP-must-take-the-AAP-challenge-seriously-Mohan-Bhagwat
-
- 5 replies
- 472 views
-
-
ஆம்! சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை நான் கொன்றேன்: டுடெர்டே ஒப்புதல் டாவோ நகரின் மேயராக இருந்த போது, குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை,தானே கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபரான ரொட்ரிகோ டுடெர்டே ஒப்புக் கொண்டுள்ளார். சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை தானே கொலை செய்ததாக டுடெர்டே ஒப்புதல் பிலிப்பைன்ஸின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட பின்னர், டுடெர்டே இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறையாகும். பிலிப்பைன்ஸில் உள்ள பிரத்யேக கொலைப் படைகளில் தான் பங்கு வகித்தது குறித்து முன்னதாக டுடெர்டே ஒப்புக்கொண்டும், மறுத்தும் இருவேறு நிலைகளை வெளிப்படுத்தியிருந்தார். மனிலாவில் தொழில் அதிபர்கள் கூட்டமொன்றில் உரை…
-
- 0 replies
- 482 views
-
-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக உள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாவை தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியின் பிரசார பொறுப்பை பிரியங்கா ஏற்றுள்ளார். இந்த நிலையில் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்து காட்டுவேன் என்று சபதமிட்டப்படி இவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். நேற்று குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 100 கார்கள் பின் தொடர சென்ற அ…
-
- 0 replies
- 309 views
-
-
பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் எதிர்ப்பு கோஷம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் என்று கூறி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, அதே கோஷத்தை முன் வைத்து பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்காத, நல்ல இமேஜ் உள்ளவர்களை நாடெங்கும் சுமார் 300 தொகுதிகளில் நிறுத்த ஆலோசித்து வருகிறது. இது காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை கணிசமாக பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தங்களது தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 337 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார். ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் ர…
-
- 0 replies
- 763 views
-
-
[size=4]நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டதையடுத்து, அங்கு ஏர்போர்ட்டின் ஒரு பகுதி மூடப்பட்டது. [/size] [size=4]இதுகுறித்து, ஷிபோல் ஏர்போர்ட் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, 1945ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, [/size] [size=4]முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏர்போர்ட்டின் சி டெர்மினல் அவசரமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு விமானங்களின் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%A3%E0%AF%8D%E0%A…
-
- 7 replies
- 808 views
-
-
ஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் கோப்புப் படம். டான்சில்ஸ் அறுவை சிகிச்சை முடிந்த 7 வயது சிறுமியைப் பார்க்கச் சென்ற ஒரு பாதிரியார் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளார். இன்னொரு பாதிரியார் 9 வயதுச் சிறுவனை மோசமான முறையில் பலாத்காரம் செய்து பிறகு புனித நீரால் சிறுவனின் வாயைக் கழுவியதும் பெரிய சர்ச்சைக்குள்ளாகியது. இன்னொரு சிறுவனைப் பலாத்காரம் செய்து விட்டு அவரையே பாவமன்னிப்புக் கோர வைத்துள்ளார் இன்னொரு பாதிரி. பென்சில்வேனியாவில்சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் இவர…
-
- 0 replies
- 368 views
-
-
ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது லண்டனிலிருந்து எஸ்.நாதன் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்னர் தஞ்சம்கோரிய ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள். நாளொன்றுக்கு இருவர் அல்லது மூவர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பலர் பல இலட்சம் ரூபாவை செலவு செய்து பிரிட்டன் செல்கிறார்கள். அவர்கள் அங்கு தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தஞ்சம் கோரி சென்றவர்கள் கடவுச்சீட்டுகளை குடிவரவு அதிகாரிக்கு காட்ட வேண்டும் என்பது அவசியமானதாக இரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட…
-
- 34 replies
- 3.8k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசோவோவில் செர்பிய ராணுவப் படைகளிடமிருந்து தப்பித்த அகதிகள் 1999-ல் அல்பேனியா வந்தனர். 25 ஜூலை 2023, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை விட இறுதியில் அதிக யூதர்களைக் கொண்ட வெகு சில ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளிலிருந்து நாஜி ஆட்சியின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்து ஓடி வந்த ஆயிரக்கணக்கான அகதிகளை, அல்பேனியர்கள் - பெரும்பாலும் இஸ்லாமியர்கள் - தங்கள் இல்லங்களுக்கு வரவேற்று பாதுகாப்பு அளித்தனர். ஏற்கெனவே 1938ல், போருக்கு ஓராண்டு முன்பே, அல்பேனி…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
ஆயிரக்கணக்கான வட கொரிய தொழிலாளர்கள் சீனாவில் இருப்பதாக ஜப்பான் தகவல்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Thousands-of-North-Korean-workers-return-to-China-report-says-720x450.jpg சர்வதேச பொருளாதார தடைகளை மீறி 10,000 வட கொரிய தொழிலாளர்களை நாட்டிற்குள் சீன அதிகாரிகள் அனுமதித்திருக்கலாம் என ஜப்பானின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் மைனிச்சி ஷிம்பன் செய்தித்தாள், வடகிழக்கு சீன நகரமான ஹஞ்சூனுக்கு வடகொரிய தொழிலாளர்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. வட கொரியாவின், நாம்போ மற்றும் சோங்ஜின் உட்பட அதன் மூன்று துறைமுகங்களில் சரக்குக் கப்பல்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில், கொரோனா வைரஸ…
-
- 0 replies
- 817 views
-
-
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பரிந்துரையின்படி 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் இந்நிலையில், அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன? [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 12:21.25 மு.ப GMT ] இந்தோனேசிய நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்துகிடந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகர் அருகில் சித்ரா என்ற ஏரியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் திடீரென ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க தொடங்கின. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகவுமே மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் பரவி வருகின்றன. இ…
-
- 0 replies
- 539 views
-
-
Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 12:41 PM சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் காசாவிற்கு கடல்வழியாக செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இஸ்ரேல் முறியடித்துள்ள அதேவேளை காசா முற்றுகையை உடைக்கும் நோக்கில் சுமார் 1500 பேர் கொண்ட வாகனப்பேரணியொன்று அல்ஜீரியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. அல்ஜீரியா துனிசியாவை சேர்ந்த 1500க்கும் அதிகமான பாலஸ்தீன ஆதரவாளர்கள் வாகனங்களுடன் லிபியா சென்றடைந்துள்ளனர். அல்ஜீரியாவிலிருந்து புறப்பட்ட இவர்கள் துனிசியாவிற்கு சென்ற பின்னர் அங்கிருந்து லிபியாவை சென்றடைந்துள்ளனர். இஸ்ரேலின் மனிதாபிமான முற்றுகைக்கு சவால் விடுக்கும் நோக்கில் காசவை சென்றடைவதே இவர்களது திட்டம். லிபியாவின் ஜவியா நகரை சென்றடைந்துள்ள இவர்கள் எகிப்து ஊடாக ரவா எல்லையை சென்றடைய திட்டமிட…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்தது அமெரிக்கா! ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து நுழைவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான மே-29 ஜனாதிபதி பிரகடனத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அபாயங்கள் எனக் கருதப்படுகின்றனர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல் தலைவர் சாட் வுல்ஃப் கூறுகையில், ‘சில சீன பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சீனாவின் இராணுவ இணைவ…
-
- 0 replies
- 402 views
-
-
ஆயிரத்துக்கும் அதிகமான போலி எண்கவுன்ட்டர் சர்ச்சையில் மணிப்பூர் மாநிலம் - நீதி கேட்டு காத்திருக்கும் மக்கள்
-
- 0 replies
- 459 views
-
-
கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் குடித்த நோய்க்கு கோவிட் 19 என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, புதிய நோய்க்கு கோவிட்-19' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளதாகவும் கூறினார். சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையை…
-
- 2 replies
- 598 views
-
-
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பிளவுபட்டிருந்த, கிறிஸ்த மதத்தின் மேலைத்தேய மற்றும் கீழைத்தேய கிளைகளின் தலைவர்களின் சரித்திர முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிராஸிஸ், மற்றும் ரஷ்யாவின் மிகப்பழைய ஆர்த்தாடக்ஸ் (பழமைவாத கிறிஸ்தவ பிரிவு) திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில் ஆகியோருக்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படும் இந்த சந்திப்பு கியுபாவில் இடம்பெற்றது. ஹவானா விமான நிலையத்தில், இவர்களிடையோன சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்த…
-
- 5 replies
- 821 views
-
-
ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றது பொம்பார்டியர் நிறுவனம் [ Thursday,18 February 2016, 06:00:32 ] பொம்பார்டியர் விமான சேவைகள் நிறுவனம் வடகிழக்கு அயர்லாந்துக்கான பிரிவிலுள்ள ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்வதற்கு அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் ஊழியர்களில் 500 பேரை இந்த வருடத்திலும், மேலும் 500 பேரை அடுத்த வருடத்திலும் கட்டம் கட்டமாக பணியிலிருந்து விலக்குவதற்கு பொம்பார்டியர் விமான சேவைகள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை ஐரோப்பிய ஊழியப் படையை மட்டுமன்றி சர்வதேச அளவிலுள்ள தமது நிறுவனத்தின் 7 …
-
- 0 replies
- 518 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் சமீபத்திய அறிக்கை உலக மக்கள் தொகையானது 820 கோடியில் இருந்து 1030 கோடியை அடையும் என்று கணித்துள்ளது. வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் (World Population Prospects) என்ற தலைப்பில் உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 2080ம் ஆண்டு மக்கள் தொகை உச்சத்தை தொட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளது. இன்று பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர்வாழ்வார்கள். இது 1995ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.4 ஆண்டுகள் அதிகம் என்றும் குறிப்பிடட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் வெளியிடும் உ…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-