உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை! 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை ($66.3 பில்லியன் = ரூ 3.64 லட்சம் கோடி) முந்தைய ஆண்டை ($21.4 பில்லியன்= ரூ 1.17 லட்சம் கோடி) விட மூன்று மடங்காகி இருக்கிறது. இது உலகளாவிய மொத்த ஆயுத விற்பனையில் ($85.6 பில்லியன்) மூன்றில் இரண்டு பங்கு. அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அல்லாவின் தேசமான சவுதி அரேபியாவுக்குத்தான் முதலிடம். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியா $33.4 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.அமெரிக்க ஆயுதங்களுக்கான பிற முக்கிய வாடிக்கையாளர்கள் இந்தியாவும் ($4 பில்லியன் = ரூ 22,000 கோடி), தாய்வானும் ($2 பில்லியன் = ரூ 11,000 கோடி) ஆகும். இந்த நாடுகள் ஏன் இப்படி கொலை வெறியுடன் …
-
- 0 replies
- 491 views
-
-
பள்ளிவாசல்களில் ஜெர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை ஜெர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார். கொலோன் பெரிய பள்ளிவாசல் அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார். அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உள்ளூர் இமாம்கள் உள்நாட்டிலேயே பயிற்சிபெற வேண்டும் எனவும் …
-
- 8 replies
- 945 views
-
-
பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் நீரில் மூழ்கும் அபாயம்..! உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்புக்கு அமைவாக கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை காரியாலயங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை அன்மித்த சொத்துக்களும் நீரில் மூழ்கும் …
-
- 0 replies
- 483 views
-
-
ரஷியாவுடன் நட்புறவு வேண்டுமா, அல்லது ஜார்ஜியா தலைமை நீடிக்க வேண்டுமா இந்த இரண்டில் எது அமெரிக்காவுக்கு தேவை என்பதை அந்த நாடே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று ரஷியா கூறி உள்ளது. அமெரிக்க கண்டனம் ரஷியாவில் இருந்து பிரிந்த சிறு நாடுகளுள் ஒன்று, ஜார்ஜியா. இது இப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு உள்ளது. அதோடு அமெரிக்காவின் ராணுவ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவும் முன் வந்து உள்ளது. இதெல்லாம் ரஷியாவுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் ஜார்ஜியாவில் ரஷியர்கள் வசிக்கும் தெற்கு ஒசெட்டியாவில் ஜார்ஜிய ராணுவத்துக்கும், ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷியா போரில் குதித்தது. தெற்கு ஒசெட்டியாவை ரஷியா க…
-
- 5 replies
- 1.7k views
-
-
28 இலங்கை மீனவர்களுக்கு சிறை தண்டனை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008 இராமநாதபுரம்: இலங்கையைச் சேர்ந்த 28 மீனவர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட் 12 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜூன் 20ம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில், 6 விசைப் படகுகளுடன் இந்த 28 மீனவர்களும் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பிடித்தது. பின்னர் அனைவரும் ராமநாதபுரம் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, 28 மீனவர்களுக்கும் 12 வார கால சிறை தண்டனை, தலா ரூ. 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் மதுரை மத்திய சிறை…
-
- 2 replies
- 929 views
-
-
'முஸ்லிம்களுக்கு தடை' வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏ.பி. அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே என அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என கூறினார். இது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாக்ஸ் ரேடியோவுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "முஸ்லிகள் அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது அதிமுக்கிய பிரச்சினை. அதை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்குள…
-
- 1 reply
- 403 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கிய நகரான சிஸ்ரேயில் பொதுமக்களை கொன்றதாக வந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற ஐநா கோரிக்கையை துருக்கி நிராகரித்துள்ளது. - இருபத்தைந்தாவது சுதந்திர தினத்தை எரித்ரியா கொண்டாடுகிறது. ஆனால், கடும்போக்கு ஆட்சி நடக்கும் அந்த கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் இன்னமும் பிரச்சினைகள் இருக்கின்றன. - உலகின் மிகப்பெரிய முந்திரி ஏற்றுமதி நாடான இந்தியாவை முந்துகின்ற ஐவரிகோஸ்ட். சாக்லேட்டில் இருந்து முந்திரியை நோக்கி.
-
- 0 replies
- 468 views
-
-
சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் உள்ள நீதிமன்றங்களில் அந்நாட்டின் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது. [size=3][size=4]கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஈத்-அல்-அதா என்ற மாநாட்டில் பெண் வக்கீல்கள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் பெண் வக்கீல்கள் சவுதி நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கப்படுவர் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]அதேசமயம் நான்கு வருடம் சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே வாதாட முடியுமெனவும் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]சவூதி …
-
- 6 replies
- 592 views
-
-
மலேசியாவில் ஹிண்ட்ராப் குழு தடை செய்யப்படும்: விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம் [ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 02:10.24 AM GMT +05:30 ] இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்பு என குற்றம் சுமத்தி, மலேசிய அரசாங்கம், அந்த நாட்டில் செயற்படும் இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவைத் தடை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிண்ட்ராப் என்ற இந்த அமைப்பு, மலேசியாவில் ஒரு அமைப்பாகப் பதிவு செய்யப்படவில்லை. இந்தநிலையில் அந்த குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முனைப்புகளை மேற்கொள்வதாக மலேசியாவின் உள்துறை அமைச்சர் அப்துல் அஸிஸ் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மலேசியாவில் உள்ள 2.6 இந்திய தமிழர்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்திய ஹிண்ட்ராப் அமைப்பி…
-
- 0 replies
- 804 views
-
-
உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு! உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும் “இப்போது ஒரு முக்கியமான தருணம்” என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே கடந்த வாரம் வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் அண்மைய பதிப்பு குறித்து விவாதிக்க உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரை திங்களன்று (08) லண்டனில் சந்தித்தார். ரஷ்யாவுடன் விரைவான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்கா கெய்வ் மீது அழுத்தம் கொடுப்பதால், உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள…
-
- 0 replies
- 136 views
-
-
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 33 நாடுகள். சல் மூலம் பகிரவும்அச்சிடுக உலகளவில் 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் , 33 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா , பாதிப்பு கூட பதிவாகவில்லை. ஐ.நா அங்கீகரித்துள்ள 247 நாடுகளில் 214 நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது . அதில் 190 நாடுகள் உள்ளுாரில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளன . 214 நாடுகளில் குறைந்தபட்சம் 166 நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்துள்ளன . வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு குறித்த தகவல் இல்லை.கொரோனா தொடர்பான தகவல்களை வடகொரியா ரகசியமாக வைத்திருக்கலாமென கருதப்படுகிறது. இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத ந…
-
- 3 replies
- 758 views
-
-
http://www.adaderana.lk/tamil/news.php?nid=31105 வேலைவாய்ப்பிற்காக சென்று நிர்கதியான 66 பேர் நாடு திரும்பினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பிற்காக சென்று அங்கு நிர்கதியான நிலையில் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (11) இவ்வாறாக ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 66 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் அங்கு நிர்க்கதியாகி முகாம்களில் தங்கியிருந்துள்ளனர். பின்னதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களில் அநேகமான…
-
- 0 replies
- 503 views
-
-
இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் 9 ஜனவரி 2026, 12:44 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன 'ரஷ்ய தடைகள் மசோதா' என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டால், 'லிண்ட்சே கிரஹாம் மசோதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் …
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
உலகமே கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் போருக்குத் தயார் நிலையில் இருக்கும்படி தனது இராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார். உலகம் முழுவதும் மூன்றரை இலட்சம் பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான சொற்போர் வலுத்துள்ளது. இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை. கொரோனா வைரசால் உலகமே ஆடிப்போயிருக்கும் நிலையிலும் படைகளை த…
-
- 6 replies
- 720 views
-
-
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமாக கருதப்படும் ருபாயா (Rubaya) சுரங்கத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது. உலகிற்குத் தேவையான கோல்டன் கனிமத்தில் சுமார் 15% இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சுரங்கம் 2024 ஆம் ஆண்டிலிருந்து AFC/…
-
- 0 replies
- 129 views
-
-
பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்றவேளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல் யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த நிலையி…
-
- 0 replies
- 196 views
-
-
ஜேர்மனி புகையிரதத்தில் தாக்குதல் நடத்தியவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது ஜேர்மனியில் பயணிகள் புகையிரதத்தில் கோடரியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் அகதி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ஜேர்மனியின் வெர்ஸ்பர்க் நகரில் பயணிகள் புகையிரதத்தில் பயணம் செய்த 17 வயது நிரம்பிய இளைஞன், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்திவிட்டு அவர் புகையிரதத்தில் இருந்து தப்ப முயன்ற வேளையில் பொலிஸார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக பவேரியா மாகாணத்தி…
-
- 4 replies
- 471 views
-
-
ஜேர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான சம்பத்தை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நகைச்சுவையாக பதிலளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள முனிச் நகர வணிக வளாகம் ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானதுடன் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு ஜனாதிபதி ஒபாமா பேட்டி அளித்துள்ளார். அப்போது, ‘ஜேர்மனியில் என்ன நடக்கிறது என்பது நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தொடங்கியுள்ளார். பின்னர் இந்த துக்க நிகழ்வில் இருந்து உடனடியாக …
-
- 0 replies
- 551 views
-
-
புதிய அதிபர் என்ன செய்வார் உலகுக்கு? ஹிலாரி கிளின்டன் , டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலைப் புதிய நோக்குடன் அணுகவிருக்கிறது அமெரிக்கா. பலரும் நினைத்திருப்பதற்கு மாறாக, இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது. 1952 தேர்தலிலிருந்து நடந்த 16 தேர்தல்களைப் பார்க்கும்போது, 15 தேர்தல்களின்போது வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிந்த இரண்டு வாரங்களில் கருத்துக் கணிப்புகளில் யார் முன்னிலையில் இருக்கிறாரோ, அவர்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடத…
-
- 0 replies
- 459 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதியான ரால்ப் தாரான்ட்–பில்லிஸ் ஆகியோர் 100 ஆண்டுகளை தாண்டி வாழ்ந்த தம்பதி என்ற பெருமை பெற்றவர்கள். இவர்களில் பில்லிஸ் தனது 102–வது வயதில் மறைந்தார். ஆனால் கணவரான ரால்பி 109 வயது 185 நாட்கள் வரை ஆரோக்கியம் குன்றாமல் வாழ்ந்து சமீபத்தில் மரணத்தை தழுவினார். இவர்கள் 2 உலகப்போரையும், 24 பிரதமர்களையும் கண்டவர்கள். தனது 100 ஆண்டுகள் வாழ்க்கை ரகசியம் என்ன? என்பது பற்றி ரால்பி உயிரோடு இருந்த போது தனது பேரக்குழந்தைகளிடம் கூறியிருக்கிறார். ‘எந்த காரியத்தையும் முனைப்போடும், அறிவுத்திறனுடனும் செய்ய வேண்டும். நல்லது, கெட்டது இரண்டையும் அனுபவி. 70 வயது வரை புகைபிடித்தேன். சாகும் வரையில் மது குடிப்பதை நிறுத்தவில்லை. ஆகவே வாழ்க்கையை பற்றி அதிக கவலைப்பட கூ…
-
- 0 replies
- 375 views
-
-
வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்க இந்திய அரசு வரைவுச் சட்டம் இந்தியாவில், வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு ஒன்றை அரசு தயாரித்துள்ளது. இந்தச் சட்டம், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர்கள், தனியாக இருக்கும் பெற்றோர், ஓரீனச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, இதன் மூலம் தடை செய்யப்படும். குழந்தைப்பேறு பெற முடியாத பெற்றோர், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வ…
-
- 0 replies
- 417 views
-
-
கனடா மத்திய அரசின் உதவித் திட்டத்துக்கு முதல் நாளில் 240,640 விண்ணப்பங்கள்! தொற்று நோயின் மத்தியில் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டுக்கான மத்திய அரசின் உதவிக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக முதல் நாளில் 240,640 க்கும் மேற்பட்டடோர் விண்ணப்பித்துள்ளனர். சில சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முதல் நாளில் குறைந்தளவு விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய வருவாய்த் துறை அமைச்சரின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜானிக் கோர்மியர் தெரிவித்துள்ளார். கோவிட் -19 தொற்று நோய் காரணமாக வேலை இழந்த கனேடியர்கள் திங்கள்கிழமை முதல் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நெருக்கடி கால நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என கனடா கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது. ஒன்ராறியோ மற்றும் கியூபெக்…
-
- 0 replies
- 519 views
-
-
UNSC நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு குவியும் ஆதரவுகள் ! ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UN Security Council) நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு, ஆதரவு வலுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட, பல ஐ.நா. உறுப்பு நாடுகள் கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுக் கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. ஐநா பாதுகாப்பு சபை 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிக்க அமைப்பாகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதி 10 இடங்கள், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், நிரந்தர உ…
-
- 0 replies
- 277 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என, வருமான வரித்துறையினரிடம் கூறி விட்டு, தற்போது இல்லை என்று கூறுவது ஏன்? என்று அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துமணியிடம் சிறப்பு கோர்ட் அரசு வக்கீல் பவானி சிங் கேள்வி எழுப்பினார். பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அரசு வக்கீல் பவானிசிங் முன்னாள், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., முத்து மணியிடம் நேற்று குறுக்கு விசாரணை நடத்தினார். பவானி சிங்: ஜெயலலிதாவுக்கும், சுதாகரனுக்கும் என்ன உறவு? முத்துமணி: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் அல்ல. அரசு வக்கீல்: (ஒரு பேப்பரை காண்பித்து) 2002 ல் வருமான வரி துறை துணை கமிஷனரிடம் அளித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 16.04.2013 செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர், ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்க…
-
- 0 replies
- 436 views
-