Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முகக் கவசத்துடன் தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி டெனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை புளோரிடாவில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் 3 ஆம் திகதி என்றபோதிலும், முன் கூட்டியே வாக்களிக்கும் முறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு நேற்று சென்ற ட்ரம்ப், அங்குள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்போது வ…

  2. கொவிட்-19: ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை அண்மிக்கின்றது! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/07/Gvosdev_CovidDestabalizeRussia_040620-720x450.jpg ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சத்தை அண்மிக்கின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு இதுவரை மொத்தமாக 14 இலட்சத்து 97ஆயிரத்து 167பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 25ஆயிரத்து 821பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவி…

    • 0 replies
    • 358 views
  3. 40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா? சிலியில் நாளை வாக்கெடுப்பு! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/chile-720x450.jpg சிலியில் அகஸ்டோ பினோசேவின் சர்வாதிகார காலத்தில் எழுதப்பட்ட 40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மறுசீரமைப்பு கோரியும், புதிய அரசியலைப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் அண்மைக்காலமாக அங்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சாண்டியாகோ நகரில் நேற்றும் கூடிய மக்கள், அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …

    • 0 replies
    • 670 views
  4. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்கெடுப்பில் 50 மில்லியன் மக்கள் வாக்களிப்பு October 24, 2020 அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன்(Joe Biden) களமிறங்கியுள்ளார். ட்ரம்ப், ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்கள் தபால் மூல வாக்கெடுப்புக்கள் நடைபெற்றுவருகின்றன. டெக்ஸாஸில் இதுவரை வாக்குப் பதிவு 76% கடந்துள்ளதோடு புளோரிடாவில் இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இந் நிலையி…

  5. சீனா- ரஷ்யா இராணுவக் கூட்டணியை உருவாக்கத் தயார் என்கிறார் புடின்.! நேட்டோ போன்ற மேற்குலகின் இராணுவ கூட்டணியை ஒத்த ஒரு இராணுவக் கூட்டணியை ரஷ்யா – சீனா இணைந்து உருவாக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கான ரஷ்யாவின் விருப்பத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளார். மொஸ்கோவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு மற்றும் கலந்துரையாடல் மன்றமான வால்டாய் அமைப்புக்களுடன் இணைய வழி நேரலை கலந்துரையாடலின்போது இதனை அவர் தெரிவித்தார். ரஷ்யா – சீனா இணைந்த இராணுவக் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எனினும் இதனை நிராகரிக்க முடியாது எனவும் புடின் கூறினார். ரஷ்யாவும் சீனாவும் இணைந்து வழக்கம…

  6. ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் உயிரிழப்பு பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார ஆணையாளர்தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்த அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று சாவோபோலோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த நபர் வயது 28 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்…

  7. எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யா வழங்கிய அடைக்கலத்தை நீடித்தது! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/sowden-720x450.jpg அமெரிக்க உளவு இரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யா வழங்கிய அடைக்கலத்தை நீடித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்னோடனின் வழகறிஞர் அனாடோலி கூறுகையில், ‘ரஷ்யா ஸ்னோடனுக்கு வழங்கிய அடைக்கலத்தை நீடித்துள்ளது. மேலும் ரஷ்யாவுக்கு நிரந்தரமாக குடிமகனாக இருக்க விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை அவரே விண்ணப்பிப்பார். ஸ்னோடன் அமெரிக்காவுக்கு போக விரும்புகிறார் எனினும் அவர் மீதான வழங்குகள் இன்னும் அங்கு முடிவடையவில்லை. இதனால் தற்போது அவர் அங்கு செல்ல …

    • 0 replies
    • 470 views
  8. சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் வகையில் செயற்பட்ட 44 பேர் அதிரடியாக கைது அவுஸ்திரேலியாவில் சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் பொருட்களை தயாரித்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 44 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இணையத்தளத்தில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் காணொளி குறித்து ஒரு வருடமாக நீடித்த விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் இந்த நடவடிக்கையினால் ஜூன் மாதத்திலிருந்து மொத்தம் 134 சிறுவர்கள் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸார் கூறியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் 7 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 19 - 57 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள்…

  9. சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 1.8 பில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்கள் வாங்கும் தாய்வான்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/US-18-MK-48-Mod-6-Torpedoes-Taiwan-720x450.jpg சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 1.8 பில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவுள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தாய்வானுக்கு வான்வழி- தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1.8 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தாய்வானுக…

    • 0 replies
    • 556 views
  10. மருத்துவ பரிசோதனைக்கு முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பதிவு: அக்டோபர் 22, 2020 00:47 AM பீஜிங், உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, சீனா என பல முன்னணி நாடுகளும் உருவாக்கி, அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைகளில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசிகள் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளதால், இவை செயல்பாட்டுக்கு வர ம…

  11. பிரிட்டனின் லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதியில் உள்ள கடையில் எரிவாயு வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நான்கு ஆடவர்கள், ஒரு சிறார் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேற்கு லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதி, தெற்காசியர்கள் அதிகம் வாழும் இடம். அங்கு பஞ்சாபியர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். இதனால் இந்த பகுதியை உள்ளூர்வாசிகள், "லிட்டில் இந்தியா" (சிறிய இந்தியா) என்று அழைக்கிறார்கள். இங்குள்ள சந்தை பகுதிகளில் தொடர்ச்சியாக கடைகள் உள்ளன. இதில் ஒரு செல்பேசி கடை மற்றும் சிகை திருத்தகத்தில் பிரிட்டன் நேரப்படி காலை 6.30 மணியளவில் வெடிச்சம்பவம் நடந்ததாக தெ…

  12. கூகுள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசினால் வழக்கு தாக்கல் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/google-case-720x450.jpg இணைய தேடல்கள் மற்றும் ஒன்லைன் விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்து கொள்வதற்கான சட்டத்தை கூகுள் நிறுவனம் மீறியுள்ளதாக தெரிவித்து அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது நடைமுறைகளை உள்நாட்டில…

    • 0 replies
    • 938 views
  13. போராட்டத்தில் ஈடுபட்ட நைஜீரியர்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு! by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Nigeria.jpg வர்த்தக தலைநகர் லாகோஸின் லெக்கி மாவட்டத்தில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் நைஜீரியர்கள் மீது படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சாட்சிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக மிரட்டி பணம் பறித்தல், துன்புறுத்தல், சித்திரவதை மற்றும் கொலைகள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவு, சிறப்பு கொள்ளை தடுப்ப…

    • 0 replies
    • 433 views
  14. கொங்கோ சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி 900 கைதிகளை தப்பிக்க வைத்த ஆயுதக் குழு! கொங்கோ ஜனநாயக குடியரசிலுள்ள மத்திய சிறைச்சாலை மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலால், பெனி சிறையில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்க்பாய் மத்திய சிறைச்சாலை மீதும், அதற்கு பாதுகாப்பு அளிக்கும் இராணுவ முகாமின் மீதும் ஒரே நேரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆயுதமேந்திய போராளிகள் குழு தாக்குதல் நடத்தியது. 1,000க்கும் மேற்பட்ட கைதிகளில் தற்போது 100பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்று நகர மேயர் மொடெஸ்டே பக்வனமஹா கூறினார். அதிக எண்ணிக்கையிலான தாக்குதல் மற்றும் மின்சார உபகரணங்களுடன் ஆயுததாரிகள் வந்ததால், அவர்கள் சிறைச்சாலை கதவை உடைத்தாகவும…

  15. பிரான்ஸ்; தொடரும் ஊடரங்கின் மத்தியில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவ மனைகள் Bharati October 21, 2020 பிரான்ஸ்; தொடரும் ஊடரங்கின் மத்தியில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவ மனைகள்2020-10-21T05:57:01+05:30கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் பாரிஸ் பரிஸ் புறநகர் உள்ளடங்கிய Ile de France மாகாணமும் ஏனைய 8 மாநகரங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு உள்ளாகி இருக்கின்றன. பரிஸ் பரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு காலகட்டத்தில் கொரோனா தொற்று தணிவடையாவிடின் உள்ளிருப்பு நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இர…

  16. தேர்தல் பிரசாரத்தின் போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி; முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி; முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி; முதல் இந்திய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி; முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி என பல சாதனைகளை பதிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில…

  17. பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்கும் அவுஸ்ரேலியா: சீனாவுக்கு அச்சுறுத்தலா? by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/alj-720x450.jpg இந்தியாவின் கடற்கரையில் அடுத்த மாதம் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளில் அவுஸ்ரேலியா பங்கேற்கவுள்ளது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் – 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக எதிர்வரும் நவம்பர் மாதம் மலபார் கடற்படைப் பயிற்சியில் அவுஸ்ரேலியா பங்கேற்கின்றது. இந்திய- சீன மூலோபாய போட்டியின் முக்கிய இடமாக விளங்கும் அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் கடற்படை பயிற்சி நடைபெறும் என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் …

    • 0 replies
    • 637 views
  18. தாய்லாந்து ஆர்ப்பாட்டம்; டெலிகிராம் செயலியை தடை செய்ய நடவடிக்கை தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட டெலிகிராம் செய்தியிடல் செயலியை தடுக்க இணைய வழங்குநர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த திட்டங்களை கோடிட்டுக் காட்டிய ஒரு ஆவணம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரணிகளை தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களுக்கு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஆணையை மீறியதற்காக நான்கு செய்தி நிறுவனங்களை மூடுவதாகவும் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். தாய்லாந்தில் அந்நாட்டு மன்னராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் ஜனநாயக ஆதரவாளர்கள் பல மாதங்களாக போ…

  19. சிலியில் வன்முறையாக மாறிய நிகழ்வு: இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாகின! நாட்டை உலுக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த, எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும், முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி, தென் அமெரிக்க நாடான சிலியில், வன்முறையாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய சாண்டியாகோ சதுக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியிருந்ததால் இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயணைப்பு படையினர் வருவதற்குள் தேவாலயம் முற்றிலும் எரிந்து நாசமானது. தேவாலயத்திற்கு போராட்டக்காரர்கள் நெருப்பு வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது. இதன்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு நெ…

  20. அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. http://athavannews.…

  21. நியூசிலாந்து பிரதமராக மீண்டும் ஜெசிந்தா – இன்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி! நியூசிலாந்தில் இன்று (17) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் ஜெசிந்தா அர்டன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி மற்றும் தேசிய கட்சி இரண்டுக்கும் இடையில் போட்டி நிலவிய நிலையில் தொழிலாளர் கட்சி 64 ஆசனங்களை பெற்று பெற்றியை தமதாக்கியது. இதன்படி நியூசிலாந்தின் 40வது பிரதமராக 40 வயதுடைய ஜெசிந்தா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை தேசிய கட்சி 35 ஆசனங்களையும், ஏ.சி.ரி நியூசிலாந்து 10 ஆசனங்களையும், பச்சை கட்சி 10 ஆசனங்களையும், மோரி கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. https:/…

  22. அதிகரித்தது கொரோனா தொற்றுக்கள் - கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை இத்தாலி அறிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் கியுசெப்பே கொன்டே ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் நேரத்தை வீணடிக்க முடியாது, ஒரு பொது முடக்கல் நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும், இது பொருளாதாரத்தை கடுமையாக சமரசம் செய்யலாம். கியுசெப்பே கொன்டே "அரசாங்கம் இங்கே உள்ளது, ஆனால் எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளார். அவர் மேலும், "மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவ…

  23. தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப் அமெரிக்காவில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுவதகவும் ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால், தனது வாழ்க்கை வீண் என கருதி, நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என்ற முடிவுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெ…

  24. ரஷ்யத் தயாரிப்பு ஏவுகணையை பரிசோதித்தது துருக்கி: அமெரிக்காவுடன் முறுகல் நிலைக்கு வாய்ப்பு துருக்கியின் கருங்கடல் கடற்கரைப் பகுதியில் ரஷ்யத் தயாரிப்பான எஸ்-400 ஏவுகணை அமைப்பை துருக்கிய இராணுவம் பரிசோதித்துள்ளது. கடலோர நகரமான சினோப்பில் இந்த ஏவுகணை அமைப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) துருக்கி பரிசோதித்துள்ளது. கருங்கடல் பகுதியில் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு கப்பல்கள் மற்றும் விமான சேவைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்தப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. இதேவேளை, துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணை சோதனைகளை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி 2017இல் ரஷ்யாவுடன் எஸ்-400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2.5 பில்லியன் டொலர் மதிப்பு…

  25. பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம் பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார். இந்நிலையில் வஜிரலோங்கார்ன், நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார். பதவி விலக வலியுறுத்தல் ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள், ஒன்று கூடி வஜிரலோங்கார்னுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மன்னரின் ஆட்சியில் சீரமைப்புகள் கொண்டு வரவேண்டும்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.