Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அதிர்வலைகளை ஏற்படுத்தும் அமெரிக்க அரசியல் :நிதி முறை கேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.790 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையானது அதிபர் டிரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஓட்டலானது, அரசு தொடர்பான கூட்டங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூட்டம் நிர்பந்தம் காரணம் டிரம்ப் ஓட்டலில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும்…

  2. புதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/115778679_tv064072243-720x450.jpg ஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கவும் ஈரான் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலம் யுரேனியத்தை செறிவூட்டுவதை 20 சதவீதமாக மீண்டும் தொடங்க வேண்டும். இது 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட 3.67 சதவீதத்துக்கும் மேலானது. ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே இலக்கு வைக்கப்பட்ட பின்னர் இது வருகிறது. இன்னும் மூன்று மா…

  3. மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை Rajeevan Arasaratnam December 2, 2020மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை2020-12-02T09:20:23+05:30 மலேசியாவின் பொலிஸின் தலைமை அதிகாரியை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல விடுத்துள்ள விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி தான் என தெரிவிக்கும் நபர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மலேசிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி என தெரிவித்துள்ள நபர் ஒருவர் மலேசியாவின் பொலிஸ்மா அதிபர் அப்த…

    • 9 replies
    • 1.4k views
  4. பிரான்சின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா வைரஸ் தொற்றினால் சாவடைந்தார்! December 3, 2020 பிரான்ஸின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா (Valéry Giscard d’Estaing) தனது 94 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். அண்மையில் மாறி மாறி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். பெப்ரவரி 2,1926 இல் ஜேர்மனியில் பிறந்தவர் வலெரி ஜெஸ்கா. பின்னர் பிரான்ஸின் Auvergne பிராந்திய அரசியல் ஊடாக நாட்டின் தேசிய அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தார். மைய வலதுசாரி அரசியல்வாதியான அவர் முன்னாள் அதிபர் சார்ள் து ஹோலின் ஆட்சியிலும் அதன் பின்னரும் பல முக்கிய அமைச்சுப் ப…

  5. பாதசாரிகள் மீது காரை மோதி தாக்குதல்: ஜேர்மனியில் கைக்குழந்தை உட்பட நால்வர் பலி! 30 பேர் காயம்!! ஜேர்மனியில் காரை பாதசாரிகள் மீது வேகமாகச் செலுத்தி நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.30 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஒன்பது மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை உயரக் கூடும் என்று முதலில் வெளியாகிய செய்திகள் தெரிவித்தன. ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ட்ரையர் (Trier) என்னும் நகரில் இந்தத் தாக்குதலை நடத்திய 51 வயதான சாரதி ஒருவரைப் பொலீஸார் கைதுசெய் திருக்கின்றனர். காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. நகரில் பாதசாரிகள் நடமாடும் …

  6. அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு அதிர்ச்சியானதாக அமையலாம்? நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்…

  7. பைடனுக்கு எதிராக இஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப் ஈழத்தமிழர், ரோகின்யா முஸ்லிம்கள் உள்ளிட்ட உலகில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளில், மேற்குலக நாடுகள் கையாண்ட தவறான அணுகுமுறைகளே, உலகில் இன்று எழுந்துள்ள அரசியல், பொருளாதார இராஜதந்திர நெருக்கடிகளுக்கான பிரதான காரணமென்ற அவதானிப்புகளும் உண்டு 0 அ.நிக்ஸன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் சென்ற 11ஆம் திகதி புதன்கிழமை கூறியுள்ள நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி இளவரசர் முகமது பின்…

  8. நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர். இந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/நைஜீரியாவில்-100க்கும்-மேற/

  9. எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது பட மூலாதாரம், GETTY IMAGES எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது. பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன. ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய…

  10. புதை குழிகளிலிருந்து எழும் விலங்குகள் டெனிஸ் அரசுக்கு தொடர்ந்து தலைவலி – கண் கலங்கிய பிரதமர் கார்த்திகேசு குமாரதாஸன் மிங் (Mink) விலங்குகள் இன அழிப்பு விவகாரம் டென்மார்க் அரசுக்குத் தொடர்ந்தும் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது. படம்: விலங்குகள் அழிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் மிங் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்த பின்னர் TV2 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டெனிஸ் பிரதமர் Mette Frederiksen இடையில் பல தடவைகள் கண்கலங்கிய காட்சி பாரிய கிடங்குகளில் லட்சக் கணக்கில் புதைக்கப்பட்ட விலங்குகள் அமுக்கம் காரணமாக ஊதிப் பெருத்து புதை குழிகளில் இருந்து மேலெழுகின்றன. இதனால் புதிதாகப் பெரும் சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்…

  11. ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தீர்மானம் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என தேர்தல் கல்லூரியினால் முறையாக அறிவிப்பப்பட்டுள்ளதால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்க மறுத்திவிட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்வது கடினம் என்று கூறினார். அத்துடன் தேர்தல் மோசடி குறித்த ஆதராமற்ற குற்றச்சாட்டுகளையும் இதன்போது மீண்டும் முன்வைத்தார். அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் தேர்தல் கல்லூரி முறையின் கீழ் பைடனுக்கு 306 வாக்குகளும்…

  12. 27 நவம்பர் 2020, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, காவல்துறை தலைமையகத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வரும் இசை கலைஞர் மிஷெல் ஸெக்லர் (இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கருப்பின இசை கலைஞரை மூன்று காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸின் பிரபல இசை கலைஞர்கள், கால்பந்தாட்ட அணியினர் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். கடந்த சனிக்கிழ…

  13. டிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/201125-tigray-ethiopia-mc-10455_df26fe974738625d819b462af20407a6.fit-760w-720x450.jpg எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள் அக்கறை காட்டுவதைப் பாராட்டுகிறோம். ஆனால், எங்களது உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச…

  14. மாய் கத்ராவில் குறைந்தது 600 பேர் படுகொலை: எத்தியோப்பியன் உரிமைகள் அமைப்பு எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தின் மாய் கத்ரா நகரில் இம் மாத தொடக்கம் முதல் அரங்கேறிய இனரீதியான படுகொலைகளில் குறைந்தது 600 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு மனித உரிமை அமைப்பு விசாரணைகளில் தெரிவித்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் மத்திய அரசின் இராணுவ பதவிகளுக்கு எதிராக டைக்ரேயன் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது பிராந்திய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடங்கிய நவம்பர் 4 முதல் டைக்ரே பிராந்தியம் கடும் மோதல்களுக்கு முகங்கெடுத்தது. அப்போதிருந்து, தகவல்தொடர்புகள் குறைக்கப்பட்டமையினால் டைக்ரேக்கான அணுகல் இ…

  15. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு விதிகளை தளர்த்த ஜேர்மன் மாநிலங்கள் திட்டம் ஜேர்மனியின் 16 மாநிலங்கள், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் 10 பேர் வரை கூடியிருப்பதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளன. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கொண்டாட அனுமதிக்கும் வகையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தொற்று பரவலை தடுக்க கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை டிசம்பர் 20 வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பாடசாலைகள் மற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் அதேவேளை மதுபான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை நா…

  16. சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்: பிடன்! சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும். …

  17. பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறுகையில், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முட…

    • 2 replies
    • 905 views
  18. ஜோ பிடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்ய தயாராகும் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் தனது தோல்வியை ஏற்க தயங்கிவந்த ட்ரம்ப், பிடன் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசாங்க அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளார். எனினும், டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் ட்ரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட அதிகா…

  19. கொவிட்- 19: 200 கோடி தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்! – யுனிசெப் அறிவிப்பு November 24, 2020 கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந் நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெப் (unicef) அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது https://thinakkural.lk/article/92106

  20. வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வு! வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இணையதளத்தில் சர்வேதச பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைவர் அப்தெல்மாலெக் துரூக்தெல் கொல்லப்பட்டதையடுத்து, ‘ஏக்யூஐஎம்’ என்றழைக்கப்படும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, மாலியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களால் கடத்திச் செல்லப்பட்ட சுவிஸ்லாந்…

  21. இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். …

  22. போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி! போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து மாதங்களுக்குள் 346 பேரைக் கொன்ற நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் ஒப்புதலை எதிர்பார்த்து, அமெரிக்கன் எயார்லைன்ஸ் டிசம்பர் 29 ஆம் திகதி வணிக நடவடிக்கைகளுக்காக மக்ஸ் விமானத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இன்று புதன்கிழமை அமெரிக்க …

  23. அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஸவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்! November 21, 2020 அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஸவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டொலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா. ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஸவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/913…

  24. மறுபரிசீலனை முடிவுகள் ஜோர்ஜியாவிலும் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுமார் 5 மில்லியன் வாக்குகள் ஜோர்ஜியாவில் பதிவாகிய பின்னர் மாநில தேர்தல் அதிகாரிகள், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜோர்ஜியாவில் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிக வாக்குகளை பெற்றதாக உறுதிப்படுத்தினர். தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளின்படி, பைடன் 12,284 வாக்குகள் முன்னிலை வகித்த ஜோர்ஜியா மாநிலத்தில் தேர்தல் வாக்களிப்பின் முடிவில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, தணிக்கைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பதிவான வக்குகளை மறுபரிசீலனை செய்ய மாநிலச் செயலாளர் உத்தரவிட்டார். இதன் விளைவாக முன்னர் வெளியான ஜோர்ஜியா தேர்தல் முடிவுகளில் 0.0099 சதவீதம் மாத்திரம் …

  25. பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள்- வேன்களுக்கு 2030ஆம் ஆண்டு முதல் தடை! பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள் மற்றும் வேன்கள் 2030ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படாது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஆனால், சில hybrids இன்னும் அனுமதிக்கப்படும், அவர் உறுதிப்படுத்தினார். புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியாகியுள்ளன. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் பிரித்தானியா, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. நமது பொர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.