உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
ஈரான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்- ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.! by : Litharsan ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாடு கடுமையான விளைவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஒருவேளை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தால், ஈரான் அதற்கான மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக்கில் கடந்த மாதம் அமெரிக்க …
-
- 7 replies
- 1k views
-
-
பிலிப்பைன்சில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைபேசியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் உங்களை கொன்று புதைத்துவிடுவேன் என அவர் எச்சரித்துள்ளார். நிலைமை மோசமடைகின்றது இதன் காரணமாக நான் உங்களிற்கு நிலைமை எவ்வளவு பாரதூரமானது என்பதை தெரிவிக்கின்றேன் நீங்கள் அதனை செவிமடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகள் உருவானால், அவர்கள் மோதலில் ஈடுபட்டு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றால் சுட்டுதள்ளுங்கள் என்பதே காவல்துறையினருக்கான எனது செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். நான்…
-
- 2 replies
- 363 views
-
-
ஐரோப்பாவில் இறந்த 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், 60 வயதுக்கு மேற்பட்டர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 203 நாடுகளுக்கு பரவி உள்ளது. 9.65 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக பலி 50 ஆயிரத்தை நெருங்குகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். ஐரோப்பாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், 'ஐரோப்பாவில் கொரோனாவால் இறந்த 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கி…
-
- 0 replies
- 332 views
-
-
"உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள்” -எஸ்.ராமகிருஷ்ணன் சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் நமக்குள்ளே நாம் மீண்டும் உணர முடியாத ஒரு அனுபவத்தை ஆழப் பதித்துச் சென்றிருக்கும். அப்போது நாம் மிகவும் நேசித்த சிறுவயது புத்தக கதைப்பாத்திரங்கள், நேற்று தான் நமக்கு அறிமுகமானவை போல இன்றும் நம் நினைவில் இருக்கக் கூடும். இப்படிச் சிறுவயதில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, இப்புத்தகங்கள் சில நல்ல கருத்துகளையும், நற்பண்புகளையும் சிறுவர்களுக்குள்ளே விதைத்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சிறு குழந்தைகளுடைய அந்தத் து…
-
- 0 replies
- 502 views
-
-
கொரோனாவின் மோசமான ஆளுகைக்குள் ஐரோப்பிய நாடுகள்! by : Litharsan உலக நாடுகள் முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைப் புரட்டியெடுத்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் மருத்துவ வசதிகள் நிறைந்த நாடுகளும் அதனைக் கட்டுப்படுத்தத் திணறிவரும் நிலையில் நாளுக்கு நாள் பல ஆயிரங்களில் மனித உயிர்களைப் பலியெடுத்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் ஐரோப்பாவில் மட்டும் 30 ஆயிரத்தும் மேற்பட்டோரைக் காவுகொண்டுள்ளது. இதன்படி ஐரோப்பிய நாடான இத்தாலி கடும் பாதிப்பை எதிர்கொண்டு 13 ஆயிரத்து 155 பேரை இதுவரை இழந்துள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் மாத்திரம் 727 பேரை பலியெடுத்துள்ள வைரஸால் அங்கு மொத்தமாக ஒரு இலட்சத…
-
- 0 replies
- 298 views
-
-
உலகளாவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தவறினால் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகும் உலக நிறுவனங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர் இது குறித்து உலக சுகாதார அமைப்பு , உலக வர்த்தக அமைப்புஉள்ளிட்ட தலைவர்கள் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல தங்களின் மக்களின் நலனை காக்கும் வகையில் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக உணவு விநியோகத்தொடரில் மந்தநிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல நாடுகளில் சூப்பர் மாக்கெட்டுகள் காலியாக உள்ளன. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உலக சந்தையில் பற்றாக்குறையை உருவாக்கும் என ஐ.நா.,வுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைவர் கியூ டோங்யு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 388 views
-
-
கொரோனாவுக்கு எதிரான போர் – சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர் கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அமெரிக்காவில் இதுவரை 2,10,714 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 4,697 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், வைரசுக்கு எதிராக போராடும் பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில், அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங், ஆம்புலன்ஸ் சைரனை போல ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில், பணியாற்றும் அனைத்து அவசரகால பணியாளர்களையும் பாராட்டுவதற்காக, ஆம்புலன்ஸ் சைரனை போல ஒளிரும் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவிக்கப…
-
- 0 replies
- 309 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு by : Litharsan ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில், 2 ஆயிரத்து 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைப் பார்வையிட்ட ஜனாதிபதி புடின், தலைமை மருத்துவர் டெனிஸ் என்பவரிடம் நிலைம…
-
- 1 reply
- 426 views
-
-
இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா வீரர் பவுலோ டைபாலா, வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல. மிகவும் கவனமாக இருங்கள் என வலியுறுத்தியுள்ளார். யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா வீரர் டைபாலா கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் …
-
- 0 replies
- 308 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேர் வரையில்பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 31 வரையில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2,352 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரையில் 29,474 பேர் தங்களை பரிசோதித்துள்ளனர். இது கடந்த முந்தைய நாளைவிட 4, 324 பேர் அதிகமாகும்.நாட்டில் முதன் முறையாக ஒரேநாளில் பலியானோர் எண்ணிக்கை 563ஆக ஆனது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் அரச குடும்பத்தையும் தாக்கிய. தாக்குதலுக்கு உள்ளான இளவரசர் சாரலஸ் இது குறித்துவீடியோவில் கூறி இருப்பதாவது: இந்த வைரஸ் தாக்க…
-
- 0 replies
- 273 views
-
-
பீஜிங்: சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் புதிதாக 1541 பேருக்கு 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் 81 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 3312 பேர் உயிரிழந்தனர். 76 ஆயிரத்து 238 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இப்படி மோசமான பாதிப்புகளை சந்தித்த சீனா பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது. இதையடுத்து இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியது. இந்நிலையில் சீன தேச சுகாதாரத்துறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை மக்களை பீதியடைய செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அறிகுறி…
-
- 0 replies
- 585 views
-
-
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்ற பிறகும் அந்த இடங்களில் காற்றில் கொரோனா வைரசுகள் பெருமளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நெப்ராஸ்கா (Nebraska) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் வராந்தாக்களிலும் கொரோனா வைரசுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து காற்றின் வாயிலாகவும் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் இதுவரை எந்த மருத்துவ இதழிலும் வெளியிடப்படவில்லை. எனினும் காற்றிலும் கொரோனா நீடிக்கும் என்ற ஆய்வு தகவலை அடுத்து கொரொனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான உடல் கவச ஆடைகள் மிகவும் அத்தியாவசியம் என்ற கர…
-
- 0 replies
- 397 views
-
-
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு, இலவசமாக வென்டிலேட்டர் கருவிகளை வழங்க தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் பில்லியனருமான எலன் மஸ்க் அறிவித்துள்ளார். உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா மிகவும் வலி மிகுந்த 2 வாரங்களை சந்திக்க போகிறதென அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன சி.இ.ஓ.,வுமான எலன் மஸ்க் தனது டுவிட்டரில், ‛எங்களிடம் எ…
-
- 0 replies
- 431 views
-
-
லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத…
-
- 0 replies
- 377 views
-
-
உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்…
-
- 0 replies
- 289 views
-
-
உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார். இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/world/80/140206
-
- 1 reply
- 519 views
-
-
கொரோனாவின் அகோரம்: அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் என்றுமில்லாத உயிரிழப்பு..! by : Litharsan மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 718 பேரை வைரஸ் காவுகொண்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 820 பேர் உலக அளவில் மரணித்துள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள போதிலும் தற்போது உயிரிழப்புக்களின் வீதம் அதிகரித்த…
-
- 4 replies
- 854 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ரோம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் …
-
- 1 reply
- 587 views
-
-
வெளிநாட்டவர்கள் உள்நுழையத் தடை விதித்தது இந்தோனேசியா! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் ரெட்னோ மார்சுடி, தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறினார். அந்தவகையில் குறித்த தடை உத்தரவு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்றும் இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் தமது நட்டு பி…
-
- 0 replies
- 338 views
-
-
சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீ: தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு! by : Litharsan சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள சிச்சாங்கில் (Xichang) பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதில் சிக்கிய சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும், தீயணைப்பு வீரர்கள் 18 பேரும் உயிரிழந்தனர். இதுவரை ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்…
-
- 0 replies
- 294 views
-
-
ஜெர்மனியின் நிதியமைச்சர் தற்கொலை: கொரோனோ கேட்கும் தொடர் பலி- மாயா March 30, 2020 - admin · கொரோனோ ஒரு மன்னன் கடமை தவறியதை உணரும் போது போது உயிர் துறப்பதை சிலப்பதிகாரத்தில் படித்தோம். ஆனால் கொரோனா பாதிப்பால் தனது கடமையை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் ஜோசஃப் ஷாஃபரின் தற்கொலை, கொரோனாவின் துயரம் எத்தனை கோணங்களில் நம்மைத் தாக்கப் போகிறது என அச்சுறுத்துகிறது. ஜெர்மனியின் நிதித் தலைநகரான ஹெஸ்ஸி மாநிலத்திலுள்ள ஃப்ராங்க்ஃபர்ட் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் நிதியமைச்சர் ஜோசஃப். ஒரு மரணக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கொள்ளை நோயின் பொருளாதார பாதிப்பிலிருந்…
-
- 0 replies
- 527 views
-
-
அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி by : Litharsan அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு அங்கு, ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய நோய்களுக்கான ஆய்வு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோனி ஃபாவுசி, பத்து இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெர…
-
- 4 replies
- 644 views
-
-
மணிலா: கொரோனா தடுப்பு மருந்துகளுடன் டோக்கியோவுக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்ததில், பிலிப்பைன்சில் 8 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பசய் நகரில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் ஓடுபாதையில் புறப்பட்டபோது திடீரென விபத்துக்குள்ளானது. விமானம் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததில் 8 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மருத்துவ பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்டபோது விபத்தில் சிக்கிக்கொண்டது.உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்; ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அடையாளம் காணப்பட்டவர்களில் நிக்கோ பாடிஸ்டா என்ற இளம் மருத்துவரும் அ…
-
- 0 replies
- 305 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் புதிய சுவாச கருவி ஒன்றை மெர்சிடிஸ் பார்முலா ஒன்னில் இடம்பெற்றுள்ள (Mercedes Formula One) குழுவினர் ஒரே வாரத்தில் உருவாக்கி உள்ளனர். இந்த கருவி இப்பொது லண்டன் மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. CPAP எனப்படும் Continuous Positive Airway Pressure கருவி ஏற்கனவே சீனா மற்றும் இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் தேவையின்றி, அதிக அழுத்தம் வாயிலாக காற்றையும், ஆக்சிஜனையும் இந்த கருவி வாயிலாக கொரோனா நோயாளிகளின் நுரையீரல்களுக்குள் செலுத்த முடியும். இந்த CPAP தொழில்நுடபத்தை மேம்படுத்தி அந்த குழுவினர் 100 சுவாசக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். விரைவில் தினமும் 1000 கருவிகளை …
-
- 4 replies
- 627 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது. ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன…
-
- 0 replies
- 774 views
-