Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 5 வருட ரகசிய திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ள சீனா, டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளது. சீனாவிலிருந்த பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் அதிக உயிர் பலியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தி உள்ளதால், பொருளாதாரமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. ஆனால் சீனா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. அங்கு சுற்றுலா தளங்கள், மால்கள், ஓட்டல்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும் செயல்படத் துவங்கி உள்ளன. இதனால் சீன பொருளாதாரம் சீரடைய துவங்கி உள்ளது. இந்நிலையில் சீனா, டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து டிஜிட்டல் 'யு…

    • 1 reply
    • 718 views
  2. ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக்கக் கூடாது: ஜேர்மனி அதிபர்! நாம் ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக்கக் கூடாது என ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில ஆறாவது இடத்தில் உள்ள ஜேர்மனியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் கருத்து தெரிவிக்கையில், ‘நாம் இறுதியில் இல்லை. ஆரம்பத்தில் உள்ளோம். நாம் இந்த வைரஸுடன் நீண்ட நாள் இருக்கப் போகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளோம். நாம் முடிந்த அளவு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக…

    • 1 reply
    • 466 views
  3. கொவிட்-19 இலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்! மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தேவையான அளவுக்கு ‘விட்டமின் டி’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை பிரித்தானிய நல்வாழ்வுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைப்பதில் ‘விட்டமின் டி’ மாத்திரைகளுக்குப் பங்கிருப்பதாக இதுவரை எவ்வித சான்றுமில்லை என்றும் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது பொதுவாக, நுரையீரல்களில் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து சுவாசத் தொற்றுகளைத் தடுப்பதில் ‘விட்டமின் டி’-க்குப் பங்கிருப்பதாகக் கருதப்படுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக நாம் பெ…

  4. சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர் திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அணு ஆயுதமோ, வேறு எந்த ஆயுதமோ இல்லாமல் கிருமி மூலமாக சீனா மூன்றாம் உலக யுத்தத்தை தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்காவே இந்த கொரோனா தொற்று நோயால் 50 ஆயிரம் பேரை பறிகொடுத்து விட்டது. மேலும் பல லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மண்டியிட வைப்பதுடன் அடுத்த 20 ஆண்டு…

    • 4 replies
    • 1.3k views
  5. கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி! கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக்கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக…

  6. கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து ஆராய தனிப்பட்ட சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அந்நாடு கூறுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் சீனாவின் கவனத்தை இது திசைத்திருப்பும் என்றும் இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பிரிட்டனுக்கான சீனாவின் துணை தூதர் சென் வென் பிபிசியிடம் தெரிவித்தார். கோவிட் 19 தொற்று எங்கிருந்து தோன்றியது, முதலில் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த தகவல் தெளிவாக கிடைத்தால், இத்தொ…

    • 0 replies
    • 373 views
  7. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பதிவு: ஏப்ரல் 25, 2020 04:45 AM கான்பெர்ரா, கொரோனா தாக்கத்தின் முதல் நிலையை நாடு கடந்துள்ளது. மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அப்போதுதான் அதன் தாக்கத்தை முழுமையாக கண்டறிய இயலும். முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடல் நலம் குன்றியவர்கள் மட்டும் அணிந்தால் போதும். இதனால் அவர்கள் மூலம் பிறருக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம். தற்போது…

    • 1 reply
    • 525 views
  8. கொரோனா வைரஸ் நவம்பர் மாதமே அடையாளங் காணப்பட்டுவிட்டதா? சீனாவை சீண்டும் அமெரிக்கா by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிற நிலையில், தற்போது கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்க கூடுமென அமெரிக்கா கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாயகமாக திகழும் சீனா, வேண்டுமென்ற வைரஸினை பரப்பிவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதனை தொடர்ந்து ஏற்க மறுக்கும் சீனா, அமெரிக்கா தான் இதற்கு காரணம் என பதிலளித்து வருகின்றது. இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ள…

  9. தொற்றுநோக்கீகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமொன்று மனித உடல்களில் அவற்றை பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. லைசோல் டெட்டோல் போன்றவற்றை தயாரிக்கும் ரெக்கிட் பென்கைசர் என்ற நிறுவனம் இந்த வேண்டுகோளை விடு;த்துள்ளது. தனது உற்பத்தி பொருட்களை மனிதர்கள் எந்த சூழ்நிலையிலும்,ஊசி மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ உடலிற்குள் செலுத்தக்கூடாது என ரெக்கிட் பென்கைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எங்கள் தொற்றுநீக்கிகள் மற்றும் சுகாதார பொருட்களை நோக்கம் மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள படி மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொற்று நீக்கிகளை வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம் எனஅமெரிக்க ஜனா…

    • 2 replies
    • 544 views
  10. தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஜேர்மனி வெற்றி! ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமான நாடான ஜேர்மனி, தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், கொரோனா பரவியவர்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 44 ஆயிரத்து 254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 2 …

    • 1 reply
    • 393 views
  11. உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை 1045 by : Yuganthini உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆபிரிக்காவின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஒற்றை மருத்துமனை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பலவிதமான தொற்றுநோய்கள் காலம் காலமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் மருத்துவ வசதிகள் ஆபிரிக்க நாடுகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்நிலை இவ்வருடம் கொரோனா வைரஸால் முழு உலகமும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலும் மாற்றம் பெறவில்லை. அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்…

    • 1 reply
    • 895 views
  12. துருக்கியை புரட்டி போடும் கொரோனா: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! 9 by : Anojkiyan உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாகுபாடின்றி அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன்படி அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு நிகராக ஆசிய நாடுகளிலும் பல மனித அழிவுகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆசியாவை பொறுத்தவரை துருக்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 101,790பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். 5481பேர் உயிரிழந்துள்ளதோடு, 80,808பேர் குணமடைந்துள்ளனர். 1,816 பேர் கவலைக்கிடமான நிலைய…

    • 0 replies
    • 373 views
  13. அடடே... இப்படியொரு சிகிச்சையா..? கொரோனாவை விரட்ட மாற்றி யோசித்த ட்ரம்ப்... உற்று நோக்கும் உலக மருத்துவர்கள்.? கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என அமரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யுக்தியை கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்…

  14. கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்! இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூ…

  15. கொரோனா வைரஸ் எதிரொலி: ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் திண்டாட்டம்! கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கடந்த ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் அவதிப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1930ஆம் ஆண்டுகளில் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் மிக மோசமான பணிநீக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கியதில் இருந்து ஆறு அமெரிக்க தொழிலாளர்களில் ஒருவர் வேலை இழந்துவிட்டதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வணிகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உதவ கிட்டத்தட்ட 500 பில்லியன் டொலர் செலவு தொகுப்பை அனுப்பியுள்ளது. உலகையே அச்சுறுத்தி…

  16. சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி வெளியீடு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பதிவாகி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் வுஹான் நகரத்திலும், தனது சொந்த ஊரிலும் என இருமுறை “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார். கொரோன…

  17. அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்…

  18. கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சீனா தொடர்ந்து குறைத்துக் காட்டிவருவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகிறார்கள். எனினும், இது குறித்து சீனாவிடம் நேரடியாகக் கேள்வி கேட்க ஐரோப்பிய நாடுகள் தயங்குவதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. தாங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் எதையும் மூடி மறைக்கவில்லை என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஏப்ரல் 17 அன்று, வைரஸ் பரவல் தொடங்கிய வுஹான் நகரில் நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை, முதலில் தெரிவித்த அளவைவிட சுமார் 50% அளவுக்கு உயர்த்திக்காட்டியது சீன அரசு. முக்கியமான மருத்துவக் கருவிகளுக்காக பல நாடுகள் சீனாவையே சார்ந்துள்ளதாலும், தற்போதைய பரவலின்போது என…

    • 0 replies
    • 740 views
  19. நியூயார்க்: 5 ஜி அலைக்கற்றையால் கொரோனா பரவாது என ஐ.நா. விளக்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம் 5 ஜி அலைக்கற்றை என பிரிட்டனில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பரவியதால் மக்கள் 5 ஜி கோபுரத்திற்கு தீ வைத்தனர். இந்நிலையில் ஐ.நா.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், அதிவிரைவு இணையதள தொழில்நுட்பமான '5 ஜி' அலைக்கற்றையால், கொரோனா வைரஸ் பரவாது 'இது வெறும் புரளி தான்; அதற்கு எந்தத்தொழில்நுட்ப ஆதாரமும் இல்லை' என, ஐ.நா., கூறியுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2526939

    • 0 replies
    • 298 views
  20. கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் எங்களுடனேயே இருக்கப்போகிறது;எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள் உள்ளன. பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், ஆபிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐ…

  21. உலகநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணிற்கு தென்படாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் வேலைவாய்ப்பினை பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணிற்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் மிகப்பெரும் பிரஜைகளின் வேலைவாய்ப்பை காப்பாற்றுவதற்காகவும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிக தடையை விதிக்கும் உத்தரவில் கைச்சாத்திடவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ள…

    • 21 replies
    • 1.5k views
  22. கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை தடுக்கும் ஆனால் கொரோனா வைரசினை தடுக்காத மருந்தொன்றினை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டர்களிற்கு எந்த மருந்து வழங்கப்படுகின்றது என்பது தெரியாத விதத்திலேயே இந்த பரிசோதனைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன…

    • 0 replies
    • 308 views
  23. ஜெர்மன் பயோடெக் நிறுவனமான பயோ என் டெக் (BioNTech) கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளது. BNT 162 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பயோ என் டெக்கும், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசரும் (Pfizer) இணைந்து உருவாக்கியுள்ளன. வெக்டர் மற்றும் ஆர்என்ஏ அடிப்படையில் தலா 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 18க்கும் 55 வயதுக்கும் இடையிலான நல்ல திடகாத்திரமான 200 பேரிடம் முதலில் இவை சோதித்துப் பார்க்கப்படும். அதைத் தொடர்ந்து தொற்று வாய்ப்பு அதிகம் உள்ள நபர்களிடம் இரண்டாம் கட்டமாக சோதனை நடக்கும் என ஜெர்மன் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை கொண்டு அமெரிக்காவிலும் கிளின…

  24. கொரோனா வைரஸ் வழக்கு விவகாரம்: அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது! by : Anojkiyan கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைகளை மறைத்ததாக, சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த தொற்று நோய் விவகாரத்தில், அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது என சீன செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடாமல் மறைத்தும், எச்சரிக்கை விடுத்தவர்களை கைது செய்தும், தொற்றுநோய் என்பதை முதலில் மறுத்தும், உலகளவில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை சீனா ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சுமத்தியுள்ளது. அத்துடன் அமெரிக்க நீதிமன்றத்தில் மிசவுரி ம…

  25. கொரோனா வைரசினை பயன்படுத்தி அடக்குமுறை நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுக்கின்றன- ஐநா செயலாளர் நாயகம் கொரோனா வைரசினை பயன்படுத்தி சில உலகநாடுகள் அடக்குமுறைகளில் ஈடுபடலாம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிஸ் ,கொரோனா வைரசுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஒடுக்குமுறை நடைமுறைகளை சில நாடுகள் பின்பற்றக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி மனித உரிமை நெருக்கடியாக மாறும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகினை தற்போது ஆட்கொண்டுள்ள சுகாதார சமூக பொருளாதார நெருக்கடிகளிற்கான தீர்வுகளை முன்வைக்கும்போது மனித உரிமைகள் எவ்வாறு அவற்றிற்கு வழிகாட்டவேண்டும் என்பது குறித்த ஐநாவின் அறிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.