உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
கொரோனா குறித்த விசாரணை: சீனாவுக்குள் வர அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு! by : Litharsan கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா அனுப்பும் விசாரணைக் குழுவை அனுமதிக்க முடியாத என சீனா அறிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி. இது உலகில் எந்த நேரத்திலும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். மற்ற நாடுகளைப் போலவே, சீனாவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில…
-
- 0 replies
- 338 views
-
-
உலகநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணிற்கு தென்படாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் வேலைவாய்ப்பினை பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணிற்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் மிகப்பெரும் பிரஜைகளின் வேலைவாய்ப்பை காப்பாற்றுவதற்காகவும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிக தடையை விதிக்கும் உத்தரவில் கைச்சாத்திடவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ள…
-
- 21 replies
- 1.5k views
-
-
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் கிம் ஜொங் அன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்,அமெரிக்கா வடகொரியாவின் புலனாய்வு தகவல்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது சிஎன்என் தெரிவித்துள்ளது. ஏப்பிரல் 15 ம் திகதி இடம்பெற்ற தனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வொன்றில் கிம் கலந்துகொள்ளவில்லை,இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்தது என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/80409
-
- 20 replies
- 2.4k views
- 1 follower
-
-
மனிதர்களிடம் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை ஆரம்பித்திருப்பதாக பிரித்தானிய அரசின் தடுப்பூசி கண்டுபிடிப்புக் குழுவின் உறுப்பினர் ஜோன் பெல் (John Bell) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் பிரித்தானியாவும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாகவுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசின் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு குழுவின் உறுப்பினர் ஜோன்பெல் கூறுகையில், “மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி சோதனையை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடங்கிவிட்டது. தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது முக்கியம்…
-
- 0 replies
- 220 views
-
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்! பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரியின் (Maulana Zubayer Ahmad Ansari) இறுதிச் சடங்கில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத…
-
- 9 replies
- 1.1k views
-
-
மைனஸ் 37 டாலரை தொட்ட கச்சா எண்ணெய் விலை! ஏன் இந்த வரலாறு காணாத வீழ்ச்சி? கொரோனா வைரஸ் வந்த பின், பங்குச் சந்தை சரிவு, மக்கள் மரணம், கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை என எல்லாமே நம்மை வாய் பிளக்க வைத்திருக்கிறது. அப்படி ஒரு கொடுமையைத் தான் நேற்று அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலையும் சந்தித்து இருக்கிறது. அப்படி என்ன பெரிய விலை சரிவு? -37 டாலர் என்றால் என்ன பொருள் வாருங்கள் பார்ப்போம்.வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் என்கிற WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, New York Mercantile Exchange (NYMEX) சந்தையில், தாறுமாறாக விலை சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர்ஸின் விலை மைனஸ் 37 டாலரைத் தொட்டு, வரலாறு காணாத வீழ…
-
- 1 reply
- 395 views
-
-
p>கொரோனா வைரஸ் காரணமாக லண்டனில் சிறுபான்மை இனத்தவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் கறுப்பினத்தவர்கள்,ஆசிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் சனத்தொகையில் 14 வீதமாக காணப்படுகின்ற போதிலும் இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏற்றத்தாழ்வு நிலை சிக்கலானது,மாறுபட்டது என அவர் எழுதியுள்ளார். எனினும் இந்த சமூகத்தினர் சுகாதார பணியாளர்களாகவும்,வணிகவளாகங்களிலும், பேருந்து சாரதிகளாகவும் பண…
-
- 2 replies
- 640 views
-
-
கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல்தான் இடம்பெறப்போகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கெப்ரெயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம் என குறிப்பிட்டுள்ளார் இதுஆபத்தான கூட்டு,நூறுவருடங்களிற்கு பின்னர் இது மீண்டும் இடமபெறுகின்றது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கொரோனா வைரசினை 1918 இல் மில்லியன் கணக்கானவர்களை பலிகொண்ட ஸ்பானிஸ் காய்ச்சலுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது எங்களிடம் தொழில்நுட்பம் உள்…
-
- 4 replies
- 890 views
-
-
சிங்கப்பூரில், அதிகப்பட்சமாக, ஒரே நாளில், 1426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8014 ஆக உயர்ந்தது. இன்று பாதிப்பு உறுதியான 1426 பேரில், 1410 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள். மீதி 16 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப் படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கியதில் சுகாதாரத்துறை காட்டிய தீவிரத்தால், சிங்கப்பூர் குடிமக்களிடையே கொரோனா பரவுவது பெருவாரியாக கட்டுப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/107480/சிங்கப்பூரில்,-ஒரே-நாளில்-1426பேருக்கு-க…
-
- 5 replies
- 681 views
-
-
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,268 பேருக்கு கொரோனா, 44 பேர் உயிரிழப்பு! by : Jeyachandran Vithushan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலதிகமாக 4,268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று முந்தினம் கொரோனா வைரஸினால் 6,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனபடி நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,121 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 44 பேர் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 359 views
-
-
உலக நாடுகளின் மாபெரும் சந்தேகத்துக்கு பதிலளித்தது சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுகூடம்! by : Litharsan உலககையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறித்து சீனாவை பல்வேறு நாடுகள் விமர்சித்து வருவதோடு சந்தேகத்தையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என வுஹானில் உள்ள சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையில் தோன்றியதாகக் கூறப்பட்டுவந்தது. எனினும் மற்றொரு பக்கத்தில் இந்த வைரஸ் வுஹான் நகரில் உள்ள வைரலொஜி இன்ஸ்ரிரியூட் ஆய்வுக்கூடத்தில…
-
- 0 replies
- 435 views
-
-
கொவிட் - 19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்படமுடியாதது : வூஹான் ஆய்வுகூட பணிப்பாளர் கூறுவது இதுதான் ! புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று கூறப்படுவதால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் மத்திய சீன நகரான வூஹானில் அமைந்திருக்கும் முக்கியமான நோய்நுண்மவியல் ஆய்வுகூடம் (Chinese Virology Laboratory) இந்த ஆட்கொல்லி வைரஸ் அங்கிருந்து தோன்றி உலகம்பூராவும் பரவி பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முதற்தடவையாக மறுத்திருக்கிறது. புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று இந்த ஆய்வுகூடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பலர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவைரஸ் தொற்றுநோயை கையாண்ட முறையில் ஔிவுமறைவின்றி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக ச…
-
- 0 replies
- 354 views
-
-
கொரோனாவிலிருந்து மீண்ட 163 பேருக்கு மீண்டும் கொரோனா! தென் கொரியாவில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 163 பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தென் கொரியாவில் தற்போது அதன் தீவிரம் படிப்படியாக குறைவடைந்து வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்த 7 ஆயிரத்து 829 பேரில் 2.1 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 44 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், குணமடைந்தவர்களின் உடலில் எஞ்சியுள்ள வைரசால் மீண்டும் அதன் தாக்கம் தீவிரமடைந்திருக்கக் கூடும் என தெரிவித…
-
- 2 replies
- 483 views
-
-
நோவா ஸ்கோஷியாவில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தின்போது, ஒரு ஆர்.சீ.எம்.பி. கான்ஸ்டபிள் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. துப்பாக்கிதாரி கப்றியேல் வோர்ட்மான் துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும், 51 வயதுடைய, கப்றியேல் வோர்ட்மான் என்பவரும் இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டுள்ளார். 23 வருடங்களாக ஆர்.சீ.எம்.பி. காவலதிகாரியாகப் பணியாற்றிவந்த ஹைடி ஸ்டீவன்சன் என்பவரே இ…
-
- 3 replies
- 688 views
-
-
நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவந்தாலும், நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் எடுவார்ட் பிலிப், வைரசுடன் நீண்டகாலத்துக்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம் என மே11க்கு பின்னராக கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான முக்கிய செய்திகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறான்வுடன் இணைந்து ஊடகங்களுக்கான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தடுப்பமருத்து கண்டுபிடிக்க நிலையிலும், முறையான சிகிச்சைமுறை இனங்காணப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களில் வைரஸ் தொற்று உள்ளதென்ற மதிப்பீட்டி…
-
- 0 replies
- 893 views
-
-
கொரோனாவின் தோற்றம் பற்றிய வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை.! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, அமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ ( Marco Rubio ) தலைமையிலான எட்டு செனட்டர்கள் குழு நேற்று முன்தினம் கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள், “கொரோனா வைரஸின் தோற்றம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முடிவு ஆகியவை பற்றிய வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்புக்கு எழுதிய அந்த கடிதத்தில், கூறியிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * சீனாவின் வு…
-
- 1 reply
- 521 views
-
-
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கொரோனாவின் பிறப்பிடமான வெற் சந்தையை மீண்டும் திறக்கும் சீனா.? உலக மக்கள் தொகையை குறைக்கக் கூடிய சார்ஸ், கொரோனா போன்ற வைரஸ்களின் பிறப்பிடம் எது என்று கேட்டால் அது சீனாவின் ‘வெற் மார்க்கெற்’ ( Wet market ) எனப்படும் மரக்கறி, இறைச்சி சந்தைதான். 2003ல் சார்ஸ் வைரஸ் பரவி உலகளவில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர் . அவ்வைரஸ் மனிதனுக்கு பரவக் காரணம், சீனாவின் குயாங்டாங்க் மாகாணத்தில் விற்கப்பட்ட புனுகுப் பூனைகள்தான். அந்த பூனையிடமிருந்து மனிதனுக்கு சார்ஸ் வைரசை பரப்பிய பெருமை சீனாவின் இந்த சந்தையையே சேரும். அதே போல், தற்போது வரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க காரணமான கொரோனாவை பரப்பியதும் இந்த 'வெற் மார்க்கெற்’ தான். ஹூபெய…
-
- 0 replies
- 442 views
-
-
ரமலான் (Ramadan) (/ˌræməˈdɑːn//ˌræməˈdɑːn/; அரபு மொழி: رمضان Ramaḍān, IPA: [ramaˈɮˤaːn] இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமஜான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூாண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம். ரமதான் என்ற வார்த்தையானது, அராபிய வார்…
-
- 2 replies
- 584 views
-
-
ஊரடங்கின் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டி, தனது செயல்பாடுகள் மூலம் உலக தலைவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல். ஏஞ்சலா மெர்கெல் கொரோனா தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மாகாண கவர்னர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு எடுத்தார்.நோய் தடுப்பு பணியில் மாகாண கவர்னர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்தார். அதுவே மெர்கலின் நிர்வாகத்திறமைக்கு சரியான எடுத்துகாட்டு. நாட்டை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை தனது ஒவ்வொரு பேட்டியிலும் மக்களிடம் உணர்த்தினார். எதிர்கட்சிகளை சேர்ந்த மாகாண கவர்னர்களும் மெர்கலின் பேச்சை ஏற்றுக்கொண்டு செயலாற்றினர். அமெரிக்காவை போலவே ஜெர்மனியும் விரைவில் அதிபர் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனாலும் தேர்தலையும், தங…
-
- 3 replies
- 662 views
-
-
கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக சர்வதேச யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஐநாவின் முயற்சிகளிற்கு அமெரிக்காவும் ரஸ்யாவும் தடை போடுகின்றன என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக அரசாங்கங்கள் ஆயுதக்குழுக்கள் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் மோதல்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டு;ம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஒரு மாதத்திற்கு முன்னரே வேண்டுகோள் விடுத்திருந்ததை கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது. பிரிட்டன் பிரான்ஸ் ஜேர்மனி உட்பட பல நாடுகளும்மனித உரிமை அமைப்புகளும்பரிசுத்த பாப்பரசரும் இதற்கு ஆதரவளித்துள்ள போதிலும் டிரம்ப் நிர்வாகம் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது எனகார்டியன் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 322 views
-
-
கனடா - அமெரிக்கா இடையே மேலும் 30 நாட்களுக்கு எல்லையை மூட இரு அரசுகளும் சம்மதம் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 30 நாட்களுக்கு எல்லையை மூட அமெரிக்காவும், கனடாவும் சம்மதம் தெரிவித்துள்ளன. கரோனா தொற்று வேகம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் அமெரிக்காவும், கனடாவும் எல்லையை மூட சம்மதம் தெரிவித்தன. இந்த நிலையில் கரோனா தொற்று இரு நாடுகளிலும் கட்டுக்குள் கொண்டு வராத நிலையில் மேலும் 30 நாட்களுக்கு இரு நாடுகளின் எல்லையை மூட அந்நாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் கூறும்போது, “அமெரிக்கா - கனடா இடையேயான எல்லையை இன்னும் அடுத்த 30 நாட்களுக்கு மூட இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால், மருத்துவப்…
-
- 4 replies
- 486 views
-
-
வாஷிங்டன்: சீனாவில் கொரோனா பரவ துவங்கிய காலகட்டத்தில் அதிகளவு மாஸ்க்குகளை , அமெரிக்கா ஏற்றுமதி செய்ததால், தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பலரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான கட்டுரை: கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிப்பதில் டிரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், அந்நாட்டிற்கு லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு மிக்க மாஸ்க்குகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை அமெரிக்கா ஏற்றுமதி செய்தது. இந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு மாஸ்க் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்தது. க…
-
- 1 reply
- 474 views
-
-
"அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்" - டொனால்டு டிரம்ப் Getty Images கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறையப் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,938ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 4,636 பேர் இந்த பெருந்தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர். Getty Images டொனால்ட…
-
- 4 replies
- 1.2k views
-
-
மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் – கொரோனாவின் கோரத்தாண்டவம்! தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ஊர்திகள் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறுவதைக் கண்ட முதியவர்களின் குடும்பத்தினர், அந்த இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயன்று வருகின்றனர். அங்கு இறந்தவர்கள் அனைவருமே கொரோனாவால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதும் நிலையில், முதியோ…
-
- 3 replies
- 704 views
-
-
சீனா அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை கொரோனா வைரஸ் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்தநாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்த தாக்கம் காரணமாக பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் இந்நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவியது குறித்து டொனால்ட் ட்ரம்ப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “வைரஸ்…
-
- 2 replies
- 642 views
-