உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption அல் - அசாரின் இமாம் ஷேக் அகமத் அல்- தயீப் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையோடு வாழும் வகையில் பலதார மணம் புரிவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என எகிப்தின் உயர் இஸ்லாமிய அமைப்பான அல்-அசாரின் இமாம் தெரிவித்துள்ளார். சன்னி இஸ்லாமியர்களின் உயர் தலைமையிலுள்ள ஷேக் அகமத் அல்-தயீப் இது குறித்து பேசுகையில், ''குரான் பற்றிய சரியான புரிதலின்மை காரணமாகவே பலதார மணம் புரியும் பழக்கம் வந்திருக்கிறது'' என்றார். தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்த…
-
- 1 reply
- 604 views
- 1 follower
-
-
'ஜமால் உடல் எரிக்கப்பட்டுவிட்டது' Published : 04 Mar 2019 17:55 IST Updated : 04 Mar 2019 17:55 IST ஜமால் கஷோக்ஜி - Getty Images ஜமால் கஷோகி உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ''மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்பட…
-
- 0 replies
- 511 views
- 1 follower
-
-
தூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை மேரி குட்ஹர்ட்பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார். ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை வரும் …
-
- 0 replies
- 856 views
- 1 follower
-
-
இந்தியா தங்களை முட்டாளாக நினைத்துக் கொண்டிருக்கின்றது – ட்ரம்ப் குற்றச்சாட்டு! வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ட்ரம்ப் இதனைத் கூறினார். அதில் தொடர்ந்தும் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியாவை உச்சபட்ச வரி விதிக்கும் நாடு என்று குறிப்பிட்டார். அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 விகிதம் வரி விதிக்கப்படுவதாகவும், ஆனால் அந்நாட்டு இருசக்கர வாகனங்களுக்கு இங்கு வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார். அதேநேரம் இந்தியா வரி விதிப்பது போன்ற…
-
- 0 replies
- 739 views
-
-
நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது : 50 பேர் மாயம் தெற்கு நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு நைஜீரியாவின் நெம்பே மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது குறித்த இடத்தில் கடமையாற்றிய 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எண்ணெய் களஞ்சியசாலையை கொண்டு நடாத்தும் நிறுவனம் இந்த விபத்து தொடர்பாக இதுவரையில் எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 276 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவ தளம் மீது தலிபான்கள் தாக்குதல்: 23 படையினர் உயிரிழப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றான ஹெல்மெண்ட் மீது நேற்று மற்றும் நேற்று முன்தினம் தலீபான் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 23 படையினர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணித்தியாலங்களில் தலிபான் போராளிகள் நடத்திய 3 வது தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நட…
-
- 0 replies
- 351 views
-
-
ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை சவூதி அரேபியா ரத்து செய்தது… March 2, 2019 அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் அல்கைதா இயக்கத்தின் தலைவரான பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். இதனையடுத்து பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அ…
-
- 0 replies
- 369 views
-
-
தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் முழுமையாக நீக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் கேட்கவில்லை, ஒரு பகுதியளவு தடைகளை நீக்கும்படியே கேட்டதாக வட கொரியா கூறியுள்ளது. வியட்நாமில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பேசிய வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யொங் ஹோ, "நாங்கள் முழுத்தடைகளை நீக்குமாறு கோரிக்கை வைக்கவில்லை. பிரதான அணுஆயுத தளத்தை முடக்கியதற்கு பதிலாக ஒரு பகுதி தடைகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டோம்" என்ற…
-
- 0 replies
- 588 views
-
-
ஒசாமாவின் மகனை காட்டிக்கொடுத்தால் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுவோருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ஹம்சா பின் லேடன் கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். அல்-கொய்தா அமைப்பின் முக்கிய தலைவ…
-
- 0 replies
- 576 views
-
-
எகிப்து தலைநகரில் கோர விபத்து – அமைச்சர் பதவி விலகல்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை அடுத்து போக்குவரத்து அமைச்சர் ஹிஷாம் அரஃபாத் ராஜினாமா செய்துள்ளார். ரயில் எஞ்சின் தடுப்பொன்றில் மோதியதில் இன்று (புதன்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவத்துடன், தீ பரவியுள்ளது. குறித்த அனர்த்தத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் மீட்கப்பட்ட பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் சிகிச்சைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக சுகாதார …
-
- 0 replies
- 395 views
-
-
தென்னாப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் அறிவிப்பு! தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா அறிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவ்வகையில் மே 8 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், மே 8 ஆம் திகத…
-
- 0 replies
- 370 views
-
-
ட்ரம்ப் -கிம் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை வியட்நாம் ஹனோயில் நடந்த இரண்டாம் நாள் உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது, எனினும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதத்தை ஒழிக்கும் திட்டம் தொடர்பான அமெரிக்கா- வடகொரியாவுக்கிடையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் அணு ஆயுதத்தை முழுமையாக கைவிடுவதற்கு வடகொரியா இணங்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்லேயே வெள்ளை மாளிகை இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநாட்டின் இரண்டாவது தினமான இன்று இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது இதேவேளை நேற்று கிம் உடன்…
-
- 2 replies
- 492 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images புதன்கிழமை இரவு விருந்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிம் ஜாங்-உன்னுடன் கூட்டம் நடத்துவதற்கு முன், வியட்நாம் பிரதமர் மற்றும் பிற அரசியல்வாதிகளை டிரம்ப் சந்திப்பார். …
-
- 1 reply
- 806 views
-
-
வியட்நாமுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தங்கள்!- ட்ரம்ப் தெரிவிப்பு வியட்நாமுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடனான இரண்டாம்கட்ட சந்திப்பிற்காக, அமெரிக்க ஜனாதிபதி விட்நாம் சென்றடைந்துள்ளார். இந்நிலையில், வட கொரிய தலைவருடனான சந்திப்பிற்கு முன்னர் ஜனாதிபதி ட்ரம்ப், இன்று (புதன்கிழமை) வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த ட்ரம்ப், ”நாம் வியட்நாமுடன் பல பாரிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடவுள்ளோம். வியட்நாமின் உபசரிப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். வடகொரிய தலைவ…
-
- 0 replies
- 353 views
-
-
எதிர்பார்ப்புமிக்க இரண்டாம்கட்ட ட்ரம்ப் – கிம் சந்திப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த எதிர்பார்ப்புமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் வியட்நாமை வந்தடைந்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) மாலை இருவருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அணுவாயுத பாவனையை முற்றாக கைவிடுவதற்கு வடகொரியாவை வலியுறுத்துவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக விளங்குகிறது. வடகொரிய தலைவருடனான சந்திப்பிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து பிரதமருடன் இருதரப்பு சந்திப்பொன்றை முன்னெடுக…
-
- 0 replies
- 317 views
-
-
வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகப் பரவிவரும் இந்திய விமானப்படைத் தாக்குதல் ஒரு வீடியோ கேமில் இருந்து எடுத்தது ! கோடிக்கணக்கான இந்தியர்கள் கடந்த இரு நாட்களாக தமது விமானப்படையின் வீரப் பிரதாபங்கள் என்கிற ஒப்பனையோடு ஒரு கானொளியினைப் பார்த்தும் அதனை மீண்டும் மீண்டும் தரவேற்றியும் வருகிறார்கள். எனது வேலைத்தளத்தில்க் கூட எல்லா இந்தியர்களுமே, "பயங்கரவாதிகளைத் துரத்தித் துரைத்திக் கொன்றோம், அவர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்க, லேசர் முறையில் ஏவப்படும் ஏவுகணைகள் அவர்களைத் துவசம் செய்ய, அவர்களது கட்டிடங்கள் எல்லாம் தூள் தூளாக நொருங்குகிறதைப் பார்த்தோம், இது மிகப்பெரிய வெற்றி" என்று சொல்லிவருகிறார்கள். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு போலித் தேசியவாதத்தால் கட்டுப்பட்…
-
- 0 replies
- 390 views
-
-
பாக்ஹூசில் ஐஎஸ் இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் கடைசி பகுதி. Published : 25 Feb 2019 18:37 IST Updated : 25 Feb 2019 18:50 IST சிரியாவில் தங்கள் பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேர்கள் கொல்லப்பட்டு அவர்கள் தலைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரிட்டனின் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (SAS)பகீர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறவிடாதீர் ஏற்கெனவே டெய்லி மெய்ல் …
-
- 0 replies
- 520 views
-
-
படத்தின் காப்புரிமை EPA Image caption போப் பிரான்சிஸ் சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருந்ததாக கூறிய போப், ஒவ்வொரு வழக்கும் "மிகுந்த தீவிரத்தோடு" எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரிக்கப்படுமென்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, தற்…
-
- 0 replies
- 280 views
-
-
இந்தியாவின் மிரட்டலுக்கு அடிப்பணிய போவதில்லை: பாகிஸ்தான் இந்தியாவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணிய போவதில்லை என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி (Shah Mehmood Qureshi) தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “பாகிஸ்தான் அமைதியான நாடு, நாம் அமைதியை விரும்புகின்றோம். ஆனால் இந்தியா எம்மை அச்சுறுத்தி மண்டியிட வைக்க நினைத்தால் அந்த மிரட்டலுக்கு நாம் ஒரு போம் அஞ்சபோவதில்லை. இதனை தெளிவாக இந்தியாவுக்கு கூறி கொள்ள விரும்புகின்றேன். போர் தொடுப்போம் என மிரட்டினால் அதற்கு நாம் அஞ்சப்போவதில்லை. எனவே,…
-
- 0 replies
- 389 views
-
-
ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் புறப்பட்ட கிம்யொங் உன் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ட்ரம்ப் மற்றும் கிம்யொங் உன் இருவரும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அதன்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதற்…
-
- 2 replies
- 518 views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாரக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ஊடகவியாளர்களை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என கூறினார். இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார். ஏவுகணைகளை ஏவி மொஸ்கோவை தாக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயாராக இருக்கின்றது என கூறினார். அமெரிக்காவுக்கு அருகில், சர்வதேச கடல்பரப்பில் ரஷ…
-
- 0 replies
- 755 views
-
-
அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்! பயங்கரவாதத்தினால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நாங்கள் (இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறோம். அந்த வகையில், தீவிரவாதம் – பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி முழுமையாக உதவ தயராக உள்ளோம் என அறிவித்துள்ளது இஸ்ரேல். ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்…
-
- 5 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை RAJESH ASNANI-BBC ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதியான ஷாக்கருல்லா, உடன் இருந்த சக சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக காவல்துறை கூறுகிறது. ஜெய்பூர் மூத்த காவல் அதிகாரி லக்ஸ்மன் கௌடு சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். …
-
- 1 reply
- 727 views
-
-
கனடாவில் தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி February 20, 2019 கனடாவின் மொண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது. தீயணைப்பு படையினர் சென்று தீணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் . ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே கு…
-
- 1 reply
- 514 views
-
-
உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார் உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான Karl Lagerfeld தனது 85வது வயதில் இன்று(செவ்வாய்கிழமை) காலமானார். ஜேர்மன் நாட்டைப் பிறப்பிடமாக கொண்ட அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chanel & Fendi நிறுவனத்தில் உற்பத்தி இயக்குநராக இருந்த இவர் இறக்கும்வரை தனது ஆடை வடிமைப்பில் கைதேர்ந்து விளங்கினார். அதிக விருதுகளை வாங்கியுள்ள இவர் இறுதியாக பரிஸில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://athavannews.com/உலக-புகழ்பெற்ற-ஜேர்மனிய/
-
- 0 replies
- 506 views
-