உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
எங்கே விழுந்தது மலேசிய விமானம்? - புதிய தகவல்கள் காணாமல் போன விமானத்தில் பயணித்த உறவினர்களின் துயரம் (கோப்புப்படம்) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, 239 பயணிகளுடன் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் எம்.எச் 370, நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி (6 ஆயிரம் மீட்டர்) வேகத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.எச். 370 விமானத்தின் தானியங்கி சிக்னல்களை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கிடைத்த இந்தப் புதிய தகவல்களும், போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தின் பதிவிறக்கங்களும் …
-
- 0 replies
- 294 views
-
-
ஜப்பான் கடற்கரையில் ஒதுங்கும் மனித எலும்புக்கூடுகளுடன் கூடிய வடகொரிய பேய் படகுகள் டோக்கியோ நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் ச்நிலையில் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்ப…
-
- 0 replies
- 716 views
-
-
இத்தாலியில் ஏன் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது? இத்தாலியின் மத்திய பகுதியை நேற்று புதன்கிழமை தாக்கிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதாக அதிகரித்துள்ளது. பூகம்பமும் அதனை அடுத்த அதிர்வுகளும் மூன்று புராதன நகரங்களை நிர்மூலம் செய்துள்ளன. இத்தாலியில் இந்த பிராந்தியத்திற்கு பூகம்பங்கள் புதியவை அல்ல. பல தசாப்தங்களாக இந்த பிராந்தியம் பல பூகம்பங்களை கண்டு வந்திருக்கிறது. ஆப்ரிக்க, யூரேஷிய நிலத்தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதும் இடம் என்பதால் இது ஆபத்தான பகுதி. ஆண்டுக்கு மூன்று சென்டி மீட்டர் அளவு இவ்விரு நிலத்தட்டுக்களும் ஒன்றைநோக்கி மற்றது தொடர்ந்து நகர்கிறது. …
-
- 3 replies
- 742 views
-
-
ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா வேலை நிமித்தம் காரணமாக அமெரிக்கா செல்வோருக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பல இலட்சம் பேர் வேலையிழந்த நிலையில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் விதமாக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் வேலை தொடர்பான விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிய சென்ற பல இலட்சம் பேர் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து இந்திய அரசும் அமெரிக்கா…
-
- 0 replies
- 547 views
-
-
எகிப்தில் மீண்டும் கலவரம்! By General 2013-01-26 14:24:20 எகிப்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முபாரக் பதவி விலகினார். தற்போது தேர்தல் மூலம் முகமது முர்சி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தணக்கு அதிகாரம் குவியும் வண்ணம் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கலவரம் நடந்த 2-ம் ஆண்டு நிறைவு நேற்று முன்தினம் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி, எற்கனவே போராட்டம் நடந்த கெய்ரோ தக்ரீக் மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர…
-
- 0 replies
- 407 views
-
-
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமறூன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கிறார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான பழமைவாத கட்சியின் டேவிட் கமறூன் ஒக்ஸ்போர்ட்ஷயர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் நீடிப்பதா அல்லது விலகுவதா என்ற கருத்துக்கணிப்பை கடந்த ஜூன் மாதம் நடத்திய டேவிட் கமறூன் நீடிக்க வேண்டும் என்ற முடிவை எட்டமுடியாத நிலையில் தனது பிரதமர் பதவியை துறந்திருந்தார். அதனையடுத்து புதிய பிரதமராக தற்போது பதவி ஏற்றிருக்கும் திரேசா மேயின் அரசியல் நடவடிக்கைளுக்கு இடையூறாக இருக்க விரும்பாத காரணத்தாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய…
-
- 0 replies
- 370 views
-
-
கிரிஸ் போக்மேன் கேப் டி ஏக்டே, தெற்கு பிரான்ஸ் கடந்த சில நாட்களாக பிரான்சில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதியான ஹெரால்ட் மற்றும் கேப் டி ஏக்டேவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த இரண்டுமே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை உல்லாசப் போக்கிடமாகும். இயற்கையுடன் ஒன்றி இன்பத்தை அனுபவிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது இது அதிகளவில் கொரோனா பரவும் இடமாக மாறி வருகிறது. இப்பகுதிகளில் எல்லையில…
-
- 2 replies
- 733 views
-
-
சீனாவில் கலாச்சார இனவழிப்புக்கு உள்ளாகும் உவீகர் இன முஸ்லிம் மக்கள் ஆகக் குறைந்தது பத்து இலட்சம் உவீகர் (Uighurs) முஸ்லிம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு மையங்களின் வலையமைப்பின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை அண்மையில் பெற்றுக்கொள்ளப் பட்ட இரகசிய ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இவ்வாறான தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுபவர்கள், சீன அரசினால் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும், முகாம்களுக்கு உள்ளே இவர்கள் எவ்வாறு அரசின் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுக் கண் காணிக்கப்படுகிறார்கள் போன்ற விடயங்களையும் இந்த இரகசிய ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. இரகசியமாகப் பேணப…
-
- 0 replies
- 622 views
-
-
கோவை அவினாசிசாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நடராஜன்(64). ஓய்வுபெற்ற தனியார் மில் மேலாளர். இவர் மனைவி சரோஜினி(54). இவர்களது எதிர்வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் யாசர்அராபத்(24). நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி 13ம் தேதி சரோஜினி மாயமானார். 21ம் தேதி யாசர்அராபத் வீட்டில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு சடலமாக சரோஜினியின் உடல்பாகங்களை போலீசார் கண்டெடுத்தனர். இதையடுத்து யாசர்அராபத் தலைமறைவானார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள லாட்ஜில் தலைமறைவாக இருந்த யாசர் அராபத்தை தனிப்படை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் யாசர்அராபத் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் மலேசியாவில் இருந்து …
-
- 2 replies
- 523 views
-
-
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசினால் வழக்கு தாக்கல் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/google-case-720x450.jpg இணைய தேடல்கள் மற்றும் ஒன்லைன் விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்து கொள்வதற்கான சட்டத்தை கூகுள் நிறுவனம் மீறியுள்ளதாக தெரிவித்து அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது நடைமுறைகளை உள்நாட்டில…
-
- 0 replies
- 939 views
-
-
மனித வள மேம்மாட்டில் கனடா இதுவரை உலகின் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வந்தது. இந்த வருடம் அந்த தகுதியை இழந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சியடைவது மிகவும் முக்கியமானதாகும். இதில் இதுவரை முதல் 10 இடங்களில் இருந்து வந்த கனடா, இந்த வருடம் 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. நேற்று வெளியான உலகின் மிகச்சிறந்த முன்னேறிய நாடுகள் என்ற அறிவிப்பில் கனடாவிற்கு 11 வது இடமே கிடைத்துள்ளது. இருந்தாலும் கனடாவின் கல்வி, பொருளாதாரம், மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் சென்ற ஆண்டை விட வளர்ச்சியின் விகிதம் அதிகம் இருப்பதாகவும், உலக அளவில் ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வளர்ச்சி சதவிகிதம் அதிக அளவில் கூடியிருப்பதால், கனட…
-
- 0 replies
- 624 views
-
-
அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா! Ilango BharathyDecember 23, 2020 அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா!2020-12-23T08:39:28+05:30உலகம் FacebookTwitterMore அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இக் கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 36 ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. அண்டார்டிகா பகுதியிலிருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.…
-
- 2 replies
- 821 views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவருடைய தாயார் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். “எனது மகன்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டது உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் செட்டப். அவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உளவுத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்” என்கிறார் இவர். பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து சிறு வயதில் கஸகஸ்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள். இருவரும் சகோதரர்கள். இருவரில் மூத்தவர் போலீஸ் சூற்றிவளைப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றையவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும்தான் குண்டு வைத்தவர்கள் என்பதை ஏறக்கு…
-
- 3 replies
- 731 views
-
-
விற்பனையில் சாதனை புரிந்த சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதை புத்தகம் சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதையை விளக்கும் மெயின் காம்ப் புத்தகம் ஜெர்மன் நாட்டில் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பெர்லின்: உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இரு…
-
- 0 replies
- 472 views
-
-
ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் இதுவரை 34 பேர் மரணம். ஜனவரி 10-ம் தேதி காலையில் ஆஃப்கானிஸ்தானின் காபுல் நகரத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக இதுவரை 34 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் அதிகமான நபர்கள் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கந்தாகர் கவர்னர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், `கந்தாகர் கவர்னர் ஹமாயுன் அசிசி, அரபு நாட்டுத்தூதர் இன்னும் சில அரசு அதிகாரிகள் என இந்தத் தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் முழுபொறுப்பு ஏற்றுள்ளது' என்றார். இந்தத் தாக்குதல் காபுலின் அமெரிக்க பல…
-
- 0 replies
- 385 views
-
-
நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோ இராஜதந்திரிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுவதாகவும், கிரெம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடுகளிலிருந்து வரும் இராஜதந்திரிகள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பி…
-
- 0 replies
- 326 views
-
-
பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டாலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். சுவை மாறாமல் 1943ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் ' கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து கிளிஃப் கூறுகையில், சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை…
-
- 3 replies
- 939 views
-
-
அமெரிக்காவுக்கு வாருங்கள் : மோடிக்கு டிரம்ப் அழைப்பு அமெரிக்க புதிய ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போது உலகில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடாக இந்தியா இருந்து வந்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவான ஆலோசனை நடத்திய இருநாட்டு தலைவர்களும், உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை எதிர்க்கும் போரில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றுவது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அமெரிக்கா-இந்தியா இடைய…
-
- 0 replies
- 393 views
-
-
-
'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப் அமெரிக்கா - வட கொரியா இடையே நடக்கும் பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு, அதன் ராணுவத் துருப்புகளை கொரிய தீபகற்பத்துக்குப் பக்கத்தில் அனுப்புவதும்... வட கொரிய அரசு, அமெரிக்காவை அச்சுறுத்துவதுபோல அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சிரிக்கை விடுவதும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கிவருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 'வட கொரியாவுடன் மிகப் பெரும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு, பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம்.'…
-
- 3 replies
- 724 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பு அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்த வருகிறது. இங்குள்ள காவல் துறை அதிகாரிகள், ஐ.நா.வின் அகதிகள் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் …
-
- 0 replies
- 316 views
-
-
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து சிங்கப்பூரில் சாங்கி என்ற இடத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் சுமார் 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாங்கி என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை 5.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் 2-வது டெர்மினல் பகுதியில் ஒரு அறையில் உள்ள ஏர்கண்டிசன் கருவியில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது. பின்னர் விமானம் புறப்படும் பகுதியில் உள்ள ஹாலுக்கு ப…
-
- 0 replies
- 505 views
-
-
டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு: கொந்தளிக்கும் குற்றவாளிகளின் வக்கீல் Friday, September 13, 2013, 16:23 [iST] டெல்லி: டெல்லி பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பு நியாயமானது இல்லை என்றும், அரசியல் தலையீட்டால் வழங்கப்பட்ட பாராபட்சமான தீர்ப்பு என்றும் 4 குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து மீதமுள்ள நான்கு ப…
-
- 4 replies
- 499 views
-
-
* அமெரிக்கா நிராகரிக்குமானால் காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற புது வியூகம் வகுக்க சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சி, * வங்கதேசத்தை தாக்கிய புயல்; இலங்கையில் பெய்த பெருமழை! பலர் பலி; பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிப்பு மற்றும் * உலகின் தனித்துவமான புகைப்படங்கள்; உலகின் பிரபல புகைப்பட இல்லத்திலிருந்து வரும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 196 views
-
-
டெல்லி: டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை விமர்சிக்கும் நரேந்திர மோடி அவரை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாரா என்று அம்மாநில அமைச்சர் ராஜ்குமார் செளகான் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் செயல்பாடுகளை குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அண்மையில் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு ஷீலா தீட்சித்தும் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ஷீலா தீட்சித் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜ்குமார் செளகான், நரேந்திர மோடி மக்களை பிரிக்கக் கூடிய சக்தி. அவருக்கு துணிச்சல் இருந்தால் ஷீலா தீட்சித்தை எதிர்த்து டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடட்டும். மோடியின் அரசியல் இந்த சமூகத்தை பிளவுபடுத்தக் கூடியது. ஆகையால் மோடியின் ம…
-
- 0 replies
- 331 views
-