உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
08 DEC, 2023 | 04:02 PM அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது. தென் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுஇமாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மூண்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை வார இறுதிவரை தொடரலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கடும் காற்று மின்னல் கடும் வெப்பம் காரணமாக தென் அவுஸ்திரேலியா கிழக்கு அவுஸ்திரேலியா வடமேற்கு அவுஸ்திரேலியா தென்கிழக்கு நியுசவுத்வ…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
. துபாய் நகரின் வெப்பம் நேற்று எறக்குறைய ஐம்பது பாகையளவை எட்டி சாதனை படைத்துள்ளது... உலகில் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களைக் கொண்ட துபாய் நகரம் ஜூலைக் வெப்பக் காற்றால் கடும் வெப்பத்தில் தகிக்கிறது. போதாக்குறைக்கு இம்மாத இறுதியில் தொடங்கும் ரமலான் நோன்பால் உணவு விடுதிகளும் பகலில் மூடப்பட்டுவிடும்... யாழ் 'மட்டு' நிழலியின் "பேரீச்சம்பழ ஆன்டி"கள், கண்ணில் தெரிந்தால், தகிக்கும் பகலில் நிலவைக்(??) கண்டு குளிரலாம்... Dubai: Bus shelters across Dubai have turned into virtual roadside ovens with the air conditioning out of order in many, an XPRESS survey has revealed. A sample survey done on Sunday in Dubai's highly popula…
-
- 0 replies
- 606 views
-
-
கடும்போக்குடைய இணைய தளங்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ‐ இன்டர்போல் 22 September 10 07:28 am (BST) கடும்போக்குடைய இணைய தளங்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச காவல்துறை சேவையான இன்டர்போல் அறிவித்துள்ளது. கடும்போக்குடைய இணைய தளங்களின் வளர்ச்சி, அல் கய்தா அமைப்பிற்கு ஆட்களை இணைத்துக் கொள்ளவதற்கு சுலபமாகியுள்ளதென இன்டர்போலின் தலைவர் ரொனால்ட் நொபல் தெரிவித்துள்ளார். இவ்வாறான கடும்போக்குடைய இணைய தளங்களினால் சர்வதேச ரீதியான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1998ம் ஆண்டு இவ்வாறான கடும்போக்குடைய 12 இணைய தளங்களே செயற்பட்டு வந்ததாகவும், 2006ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4500 ஆக உயர்வடைந்துள்ளதெனவும்…
-
- 0 replies
- 548 views
-
-
கடும்போக்குவாதம்: சிங்கப்பூரில் வங்கதேசப் பிரஜைகள் கைது சிங்கப்பூரில் கடும்போக்குவாதச் செயல்களில் பங்கேற்க திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கதேசப் பிரஜைகள் இருபத்து ஏழு பேரை தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் சிங்கப்பூரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்களாக வேலைபார்த்துவந்த இவர்கள் அனைவரும் அண்மைய வாரங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கடும்போக்கு கருத்துகளையும், ஜிகாதி சித்தாந்தம் தரவுகளையும் பரிமாறிக்கொண்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றன…
-
- 0 replies
- 426 views
-
-
கனடா- ரிமின்ஸ், ஒன்ராறியோ.. கனடியன் ரயர் கடை ஒன்றிற்குள் மனிதன் ஒருவர் குறைந்தது ஒரு உயர் சக்கி வாய்ந்த துப்பாக்கியுடன் காணப்பட்டதால் பொலிசார் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். புதன்கிழமை அதிகாலை 4மணியளவில் கடையின் அபாய அறிவிப்பு அலறதொடங்கியதாகவும் ஊழியர்கள் உள்ளே சென்ற போது அங்கு ஆகாதவர் ஒருவர் காணப்பட்டதாகவும் ரிம்மிஸ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மைக் மக்ஜின் தெரிவித்தார். சுடுகலன்களை இலக்கு வைத்து குறிப்பிட்ட நபர் கடையை உடைத்து நுழைந்ததாகவும் அங்கு சுடுகலன்கள் இருந்ததாகவும் அவை அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள Home Depot, Esso gas station, பல கடைகள், வீதிகள் யாவும் மூடப்பட்டன.ஒன்ராறியோ மாகாண பொலிசார் அப்பகுதியில் ஒரு சுற்றுவளைவை ஏற்படுத்தி த…
-
- 0 replies
- 224 views
-
-
கடைசி உக்ரைனியர், நிற்கும் வரை... போர் நீடிக்கப்படலாம்: புடின் கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, மாநில ஊடக தொலைக்காட்சி ரஷ்யா-24 செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இன்று அவர்கள் எங்களை போர்க்களத்தில் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சரி, நான் என்ன சொல்ல முடியும்? அவர்கள் முயற்சி செய்யட்டும். கடைசி உக்ரைனியனும் நிற்கும் வரை மேற்குலகம் எங்களுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு ஒரு…
-
- 1 reply
- 255 views
-
-
கோனிகாவின் கடைசி கேமிரா மார்ச் மாதத்துடன் தனது மினோல்டா கேமரா உற்பத்தியை நிறுத்திக் கொள்ளப்போவதாக கோனிகா நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டோ பிலிம் உற்பத்தியில் உலகில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கோனிகா நிறுவனம், நுõறாண்டுகளாக உற்பத்தி செய்து வரும் கேமராவை இனி உற்பத்தி செய்யப் போவதில்லை என்று அறிவித்திருப்பது போட்டோ, கேமரா தொழில் நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. தவிர, போட்டோகிராபி பிசினசில் இருந்தே மெல்ல மெல்ல விலகிக் கொள்ளப்போவதாகவும் கோனிகா அறிவித்துள்ளது. இனி அந்த நிறுவனம், ஜெராக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் பிரிண்டர் மற்றும் மருத்துவக் கருவிகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் கேமராவின் பிரமாண்டமான வளர்ச…
-
- 0 replies
- 756 views
-
-
கடைசி பிரார்த்தனை கூட்டத்தில் போப் பெனடிக்ட் உருக்கம் போப் 16-வது பெனடிக்ட், வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி ஞாயிறு பிரார்த்தனை என்பதால் சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர். அவரைப் புகழ்ந்தும், ஆதரவு தெரிவித்தும், வழியனுப்பும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மக்கள் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மத்தியில் போப் மிகவும் உருக்கமாகப் பேசினார். “ஓய்வு பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டுள்ளேன். இனிமேல் தொடர்ந்து அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் எனது நேரத்தை செலவிடப் போகிறேன். நான் இந்த தேவாலயத்தை கைவிட்டுச் செல்லவில்லை.…
-
- 0 replies
- 356 views
-
-
கட்டலோனியா தனிநாடு குறித்து 5 நாட்களில் முடிவெடுக்கக் கெடு ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா, தனிநாடு கோரிக்கை தொடர்பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாட்கள் அவகாசம் அளிப்பதாக ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. ஸ்பெய்ன் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்துவந்தது. ஸ்பெய்ன் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெய்ன் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடு குறித்து ஸ்பெய்னின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப…
-
- 6 replies
- 666 views
-
-
கட்டிலிலேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிரபல எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார் தர்கா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். அன்னாரின் ஜனாஸா தொழுகையும் நல்லடக்கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரும்பு சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ஹாபிஸ் இஸ்ஸதீனின் புதல்வரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரியவகை நோயினால் தனது 4 வயதிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தார். இர்பான் ஹாபிஸ், தனது 18 வயதிலிருந்து எழுந்து நடமாட முடியாத நிலையில்…
-
- 0 replies
- 313 views
-
-
கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMANPREET ROMANA இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார். …
-
- 0 replies
- 323 views
-
-
காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் மீது கும்பல் இன்று தாக்குதல் நடத்தியது. கெஜ்ரிவால் வீட்டின் அருகே உள்ள இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதாகவும், பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்தனர். இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா கட்சியும், அதன் சார்பு அமைப்புகளும் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூஷன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2011-ம் ஆண்டு தனது வீட்டில் தாக்குதல் நடத்திய கும்பல்தான் இன்று தாக்குதல் நட…
-
- 0 replies
- 390 views
-
-
கட்சி உறுப்பினர்களிடையே.. கருத்துக் கணிப்பு: ரிஷி சுனக் முன்னிலை! பிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் போட்டி தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முன்னிலை பெற்றுள்ளார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கும் 2 போட்டியாளர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவிருக்கும் கட்சி உறுப்பினர்களிடையே ஜேஎல் பார்ட்னர்ஸ் ஆய்வு நிறுவனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துக் கணிப்பு நடத்தியது. நாடு முழுவதுமுள்ள 4,400க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே இந்த கருத்துக் …
-
- 0 replies
- 556 views
-
-
பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனர் நியமனம் குறித்த பாஜகவின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியை விமர்சித்தது ஆகியவற்றுக்காக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கடந்த நவம்பர் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்படி இருந்தும் அவர் இந்த மாத துவக்கத்தில் நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு வந்து ஊழல் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வன்மையாக ஏன் எதிர்க்காமல் உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரை கட்சியில் நீக்கிவிட தலைவர்கள் நினைத்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் காரணத்தைக் …
-
- 0 replies
- 423 views
-
-
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பிலிருந்து ஊர்வலகமாக புறப்பட்ட தேமுதிகவினர் சின்னமலை வழியாக பிரதமர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் திருமண மண்டபவங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 12.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூடங்குளம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி த…
-
- 0 replies
- 685 views
-
-
கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் பிரியாத்தியா பிராந்தியத்திலுள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 43 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்தது. அதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை நில்நியான்கார்ஸ்க் வி…
-
- 0 replies
- 372 views
-
-
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில்... கடந்த 4-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு. சிறுத்தைகள் சீறித் தள்ளினார்கள்... காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் மென்மையாக ஆரம்பித்தார். ''ஓர் ஆண்டுக்கு முன்பு வரை மாதம்தோறும் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அதை மீண்டும் நடத்த வேண்டும். கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது சரிதான். ஆனால், 'அந்த அணி, இந்த அணி’ என ஒரே மாவட்டத்துக்குள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கிட்டத்தட்ட 35 பேர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்...'' என்று அவர் சொல்ல, பலரும் கை தட்டி ஆமோதித்தனர். புதுச்சேரி சார்பில் துணைப் பொதுச…
-
- 0 replies
- 635 views
-
-
கட்டலோனியாவின் பிரிவினை போராட்ட தலைவர்கள் ஒன்பது பேரிற்கு எதிராகதேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ஸ்பெயின் நீதிமன்றம் அவர்களிற்கு நீண்ட கால சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2017 இல் இடம் பெற்ற சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பின் போது அவர்களின் நடவடிக்கைகளிற்காகவே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் துணை ஜனாதிபதி ஒரியோல் ஜன்குயரசிற்கு தேசத்துரோகம் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஸ்பெயின் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அவர் 13 வருடங்களிற்கு அரசியல்ரீதியிலான பதவிகளை வகிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டலானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரிற்கும் …
-
- 0 replies
- 277 views
-
-
கட்டாய தடுப்பூசி திட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து சனிக்கிழமை மத்திய ஏதென்ஸில் கூடியிருந்த மக்களை கலைக்க கிரேக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் இதற்கு பதிலளிக்கும் வகையில் கண்ணீர்ப்புகை வீசியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கிரேக்கத்தில் 12,890 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 மில்லியன் மக்கள் தொகையில் சு…
-
- 0 replies
- 162 views
-
-
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது. கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சு…
-
- 1 reply
- 734 views
-
-
கட்டாய மரண தண்டனையை... இரத்து செய்வதாக, மலேசியா அறிவிப்பு! கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது. 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது. அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்ட…
-
- 0 replies
- 225 views
-
-
கட்டாரில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர் அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் கட்டாரில் தஞ்சமடைந்துள்ளார். ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் ஒருவரின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி விட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதால் கட்டாரில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அல்-ஷாரிக்கின் குற்றச்சாட்டுக்கு ஐக்கிய அமீரக வெளியுறவு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள…
-
- 0 replies
- 456 views
-
-
கட்டாரில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! கட்டார் அரசாங்கமானது தனது நாட்டிலுள்ள 2 மில்லியன் வெளி நாட்டுத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய சட்ட மூலமொன்றுக்கு அங்கீகாரமளித்துள்ளது. கட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிதி ஆதரவை வழங்கும் மேற்படி சட்டமூலமானது அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் உரிய வேதனத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் என அந்நாட்டு தொழில் அமைச்சர் இஸ்ஸா அல் நுவா யிமி தெரிவித்தார். 'தொழிலாளர்கள் ஆதரவு மற்றும் காப்புறுதி நிதி' என அழைக்கப்படும் மேற்படி நிதியமானது அமைச்சரவையின் ஆதரவின் கீழ் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அவர் கூறினார். …
-
- 0 replies
- 340 views
-
-
கட்டார் அரச குடும்பத்தின் முக்கிய நிதி ஆவணங்கள் இணையத்தில் அம்பலம். கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டமையை அல் ஜெசீரா உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளியிடப்பட்ட இந்த தரவுகள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கட்டாரின் தேசிய வங்கியின் பாதுகாப்பு பிரிவிடம் இருந்து இணையம் மூலமாக இந்த தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தரவுப் பட்டியலில் குறித்த வங்கியின் ஆயிரக்கணக்கான வாடிக்கையா…
-
- 0 replies
- 332 views
-
-
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்! கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிகிறது என்று செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, பிளானட் லேப்ஸ் பிபிசியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அல் உதெய்ட் விமானத் தளத்தில் (அமெரிக்காவின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நிறுவல்) பெரும்பாலும் விமானங்களால் காலியாக இருப்பதைக் காட்டுகிறது. ஜூன் 5 அன்று, C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள்…
-
- 1 reply
- 417 views
-