உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, ராம்பால் நீக்கப்பட்டு, ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச்சுடன் அறிமுக வீரராக டான்ஜா …
-
- 0 replies
- 416 views
-
-
இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மீது தேசதுரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் ஒன்றின்போது பகையாளி நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக இவர்கள் மீது இக்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற வாரக் கடைசியில் ஆசியக் கோப்பை ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவைத் தோற்கடித்ததை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்த அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். தேசத்துக்கு எதிரான செயலில் அம்மாணவர்கள் ஈடுபட்டனர் என்று கூறி அப்படியான ஒரு குற்றச்சாட்டு அவர்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இந்தக் குற்…
-
- 2 replies
- 622 views
-
-
பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கிரிசெல்டா பிளாங்கோவாக சோஃபியா வெர்கரா நடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி." இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர். தன்னை மற்றவர்கள் பார்க்கும் விதம் பிடிக்கவில்லை என்பதற்காக, மக்களைக் கொன்ற இரக்கமற்ற ஒருவராக கிரிசெல்டா பிளாங்கோ அறியப்படுகிறார். 1970கள் மற்றும் 80களில் மியாமியில் மிகவும் அஞ்சப்படும் பெயர்களில் ஒருவராக பிளாங்கோ விளங்கினார். புக…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
சர்வதேச காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் எலுப்பிய கிரிட்டோ தன்பர்கை 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு சுவிடன் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பரிந்துரை செய்துள்ளனர். தன்பர்க்கின் சர்வதேச ரீதியிலான சிந்தனைகளும், அவரின் காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களும் சர்வதேச ரீதியில் அரசியல் மட்டத்தில் பல கேள்விகள் எழுப்பட்டது என சுவிடன் இடதுசாரி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜென்ஸ் ஹோல்ம் மற்றும் ஹக்கன் ஸ்வென்னெலிங் கேள்வி எழுப்பினர். தன்பர்க்கின் காலநிலைய தொடர்பான கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அத்தோடு அவரே 2020 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபள் பரிசிக்கு பொருத்தமானவரென அவர்கள் சபையில் எடுத்துரைத்தனர். கடந்த வருடம் அதி…
-
- 0 replies
- 362 views
-
-
கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு! உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. ‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வ…
-
- 1 reply
- 198 views
-
-
கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS சைபர் தாக்குதல்கள் மூலம் வட கொரியா மில்லியன் கணக்கிலான கிரிப்டோகரன்சியை திருடி, தனது ஏவுகணை திட்டத்திற்கு அதை பயன்படுத்தியதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சைபர்-தாக்குதல்கள் மூலம் 50 மில்லியன் டாலர்களுக்கும் (37 மில்லியன் பவுண்ட்) அதிகமான டிஜிட்டல் சொத்துக்களை திருடியதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு "முக்கியமான வருவாய் ஆதாரம்" என்று அவர்கள் தெரிவித்து…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
கிரிமியா கருத்து வாக்கெடுப்பை ஒபாமா நிராகரிப்பு! – முரண்டு பிடித்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடையாம். [Monday, 2014-03-17 17:47:48] உக்ரைனின் தன்னாட்சி பகுதி கிரிமியா. இங்கு ரஷிய மொழி பேசுகிற மக்களே அதிகமாக வாழ்கின்றனர். உள்நாட்டில் தனக்கு எதிராக கிளர்ச்சிகள் வலுத்ததைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச், நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து உக்ரைனின் தன்னாட்சிப் பகுதியான கிரிமியாவிற்குள் ரஷிய படைகள் நுழைந்தன. இந்த நிலையில், உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக கிரிமியா பாராளுமன்றம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரஷியா ஏற்றது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் நிராகரித்தன. இதற்கிடையே ரஷியாவுடன் சேருவதா அல்லது…
-
- 0 replies
- 312 views
-
-
கிரிமியா மற்றும் ரஷ்யா இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்து அதில் சென்ற முதல் ரயிலில் அந்நாட்டு அதிபர் புதின் பயணித்தார். கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியது சர்வதேச ரீதியில் விமர்சனத்துக்கு ஆளானது. இந்நிலையில் ரஷ்யாவின் தாமன் வளைகுடா பகுதியிலிருந்து கிரிமியாவின் கெர்ச் வரையிலும் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ($3.60 billion) அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்து, முதல் ரயிலில் புதின் பயணித்தார். https://www.polimernews.com/dnews/94146/கிரிமியா,-ரஷ்யா-இடையே-ரயில்பாதையை-திறந்து-வைத்தார்அதிபர்-புதின்
-
- 1 reply
- 593 views
-
-
கிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி உக்ரைனிடமிருந்து ரஸ்யா கைப்பற்றிய கிரிமியாவில் கல்லூரியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இனந்தெரியாத பொருள் வெடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்ய பாதுகாப்பு படையதிகாரியொருவர் இது பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ளார். வெடிபொருளொன்றே வெடித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன இதேவேளை உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர், கல்லூரியில் பல உடல்க…
-
- 1 reply
- 380 views
-
-
கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் கைது கும்பல் தலைவியிடம் தீவிர விசாரணை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு சென்னை, ஜன.30: தமிழகத்தை கலக்கி வந்த, கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கும்பலுக்கு இளம்பெண் தலைமை வகித்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. கும்பல் தலைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தமிழகப் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 2002 முதல் தொடர்ந்து கிரில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. தமிழகத்தின் பல நகரங்களில் அவர்களுடைய கைவரிசை தொடர்ந்து கொண்டே இருந்தது. கும்பலை பிடிக்க கூடுதல் துணை கமிஷனர் …
-
- 3 replies
- 1.1k views
-
-
கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 1 ஏதென்ஸில் உள்ள சாக்ரடீஸ் சிலை. உலகின் தலைசிறந்த காவியங்கள் என்ற பட்டியலில் நிச்சயம் இடம் பெறக்கூடிய இரண்டு, இலியட் மற்றும் ஒடிஸி. இவற்றை எழுதியவர் ஹோமர். பார்வை இல்லாமலேயே இந்தச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார். மேற்கத்திய இசை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் யானி. அவரது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்கள் தொடர்ந்து விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தன. இசைத்துறைக்கு வருவதற்கு முன்பேகூட சாதனை படைத்தவர் இவர். தனது 14வது வயதிலேயே தேசிய அளவில் 15 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றவர். மேற்கத்திய தத்துவத்தின் பிதாமகன் என்று இன்றளவும் கருதப்படுபவர் சாக்ரடீஸ். பல நூறாண்டுகளைத் தாண்டியும் இவரது சிந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்…
-
- 9 replies
- 5.4k views
-
-
பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன? பட மூலாதாரம்,JEFF KERBY படக்குறிப்பு, கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஓர் அலையை தூண்டியது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி செய்திகள் - அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந…
-
-
- 1 reply
- 631 views
- 1 follower
-
-
கிரீன்லாந்து கிராமத்தை அச்சுறுத்தும் பெரிய பனிப்பாறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெரியதொரு பனிப்பாறை கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு மிகவும் நெருங்கி வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஇதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்று உள்ளூர் அதிகாரிகள்…
-
- 0 replies
- 509 views
-
-
கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். சீனா அல்லது ரஷ்யாவால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்த அவர், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை இரட்டிப்பாக்கி, ஆர்க்டிக் பிரதேசத்தை கையகப்படுத்துவது நேட்டோவை வருத்தப்படுத்தினாலும் தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். வொஷிங்டனுக்குத் திரும்பும் போது எயார்போர்ஸ் வன் (Air Force One) கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது செய்தியாளர்கள், கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதால் நேட்…
-
- 0 replies
- 95 views
-
-
கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம தளம்! கிரீன்லாந்தின் பனிப்பாறைக்கு அடியில் புதைந்துள்ள விசித்திரமான ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சாட் கிரீன் மற்றும் அவரது குழுவினர் கிரீன்லாந்ன் பனிப்பாறைக்கு அடியில்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தளம் ஆர்க்டிக்கில் இருந்து அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் சோதனை தளமாக செயல்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு ஆய்வுப் பயணத்தின் போது, ரேடார் கருவிகளைச் சுமந்து சென்ற விமானம் கிரீன்லாந்தின் பனிக்கட்டியின் ஆழத்தையும் அதன் கீழே உள்ள பாறை அடுக்குகளையும் வரைபடமாக்கியது. இதன்போதே, இதுஉறைந்த …
-
- 0 replies
- 290 views
-
-
கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் டேனியல் புஷ் மற்றும் பவுலின் கோலா பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty கிரீன்லாந்தை இணைக்கும் தனது லட்சியங்களுக்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில் மற்ற நாடுகள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது வரிகளை விதிக்க முடியும் என்று டிரம்ப் கூறினார். எந்தெந்த நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படக்கூடும் என்றோ அல்லது தனது இலக்கை அடைய எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்குச் சொந்தம…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிக்கையை டென்மார்க் பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் நிராகரித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், லோரா கோஸி (கோபன்ஹேகன்), ராபர்ட் கிரீனால் (லண்டன்) பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நாட்களாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியும், உலகின் மிகப் பெரிய தீவுமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். 2019-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தின் போது டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தினார். இந்த வா…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர் 05 January 2026 "கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள்" என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. அமெரிக்காவின் இத்தக…
-
-
- 9 replies
- 616 views
- 1 follower
-
-
கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து – இதுவரை 32 பேர் உயிரிழப்பு! கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர். ஏதென்ஸிலிருந்து தெசலோனிகிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று தடம் புரண்டு தீ பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 32 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைய…
-
- 5 replies
- 649 views
- 1 follower
-
-
கிரீஸில் 30,000 அகதிகள் பரிதவிப்பு ஐரோப்பிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடியிருப்பதால் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அகதிகள் கிரீஸ் நாட்டில் பரிதவித்து வருகின்றனர். சிரியா, இராக், ஆப்கானிஸ் தானில் இருந்து ஆயிரக்கணக் கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி, கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரை யேறும் அவர்கள் அங்கிருந்து நடைபயணமாக ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ஆனால் அண்மைக் காலமாக அகதிகளால் ஐரோப் பிய நாடுகள் பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகின்றன. கடந்த 2015 நவம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி 130 பே…
-
- 1 reply
- 488 views
-
-
ஐரோப்பிய யூனியனில் சிக்கலில் இருக்கும் நாடுகளில் முக்கியமானது கிரீஸ். இங்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பொடாமி கட்சியைச் சேர்ந்த ஸ்டாவ்ரோஸ் தியோடோராகிஸ்-க்கு (Stavros Theodorakis) கணிசமாக செல்வாக்கு இருந்தது. நான் வெற்றி பெற்றால் ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரீஸ் வெளியேறும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இவர் தோல்வி அடைந்து இடது சாரி கூட்டணியை சேர்ந்த அலெக்சிஸ் சிபிராஸ் (Alexis Tsipras) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இதுவரை நடந்த சிக்கன நடவடிக்கைகளைத் திரும்ப பெறுவோம் என்பதை சொல்லி வெற்றி அடைந்தார். வெற்றி அடைந்த உடன் முதல் வேலையாக எங்களுடைய திட்டம் தொடரும் என்றும், எங்களை நம்பி வாக்களித்த மக்களை அதிருப்திக்கு உள்ளாக்க முடியாது…
-
- 0 replies
- 341 views
-
-
கிரீஸில் படகு கவிழ்ந்து 13 அகதிகள் பலி கிரீஸ் நாட்டு கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். இதுகுறித்து கடலோரக் காவல் படையினர் கூறும்போது, “துருக் கியிலிருந்து ஐரோப்பிய நாடு களை நோக்கி சென்றுகொண்டி ருந்த சிறிய பிளாஸ்டிக் படகு கிரீஸ் கடல் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 13 பேரை சடலமாகவும் 15 பேரை உயிருடனும் மீட்டுள்ளோம். மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம்” என்றார். http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%…
-
- 0 replies
- 447 views
-
-
கிரீஸ் அருகே 700 அகதிகளுடன் கப்பல் மூழ்கியது: 340 பேர் மீட்பு, 100 உடல்கள் கண்டுபிடிப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மாத இறுதியில் 3 கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் கடலில் மூழ்கின. இதில் ஒரு கப்பல், அகதிகளின் பாரம் தாங்காமல் சரிந்து மூழ்கிய கடைசி நிமிட புகைப்படங்கள். படங்கள்: ஏஎப்பி கிரீஸ் நாட்டின் கிரிதி தீவு அருகே 700 அகதிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கி யது. இதில் இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இதர அகதிகளை தேடும் பணி தொடர்கிறது. சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்க ணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் ந…
-
- 0 replies
- 246 views
-
-
கிரீஸ் கடற்பகுதியில் படகு மூழ்கி 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் பலி அகதிகள் பயன்படுத்தும் ரக படகுதான் இது. அதிகம் பேரை ஏற்றிக் கொண்டு வருவதால் கிரீஸில் கவிழ்ந்து அகதிகள் பலர் மூழ்கி இறக்கின்றனர். | படம்: ஏ.பி. கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் இறந்தனர். மேலும் சுமார் 11 பேரை காணவில்லை. ஏஜியன் கடற்பகுதியிலிருந்து 10 அகதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, இராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். ஆபத்தான கடல்பயணத்தில் இவர்களின் படகு வ…
-
- 0 replies
- 326 views
-
-
கிரீஸ் தேர்தலில் சிரிஸா கட்சி வெற்றி: சிப்ராஸ் மீண்டும் பிரதமராகிறார்- இடதுசாரி தலைவருக்கு கிரீஸ் மக்கள் தொடர்ந்து ஆதரவு தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஏதென்ஸில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அலெக்சிஸ் சிப்ராஸ் படம்: ராய்ட்டர்ஸ் கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சிரிஸா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ கொள்கைகளை உடைய அலெக்சிஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமராகிறார். இது கிரீஸ் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று சிப்ராஸ் கூறியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் 6 ஆண்டுகளில் 5 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 9 மாதங்களுக்குள் 2-வது முறையாக நடைபெற்ற தேர்தலில் சிப்ராஸ் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். கம்யூனிஸ ஆதரவு ஐரோப்பிய நாடு ஒன்றில் கம்யூனிஸ கொள்…
-
- 1 reply
- 310 views
-