உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26901 topics in this forum
-
கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார்.இருந்த போதிலும் அப்பெண்ணுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார். த…
-
- 6 replies
- 2.7k views
-
-
அமெரிக்கா நீதிமன்றில் நண்பரை திருடனாக சந்தித்த பெண் நீதிபதி ஒருவர் அதிர்ச்சி அடைந்ததோடு குற்றவாளி மனம் உருகி அழுத சம்பவம் பார்ப்பவர்களின் மனதை நெகிழவைத்துள்ளது. அமெரிக்காவில் மியாமா நகர நீதிமன்றில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு 49 வயதுடைய ஆர்தர் பூத் என்ற நபர் பொலிஸாரால் அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கை பெண் நீதிபதி மின்டி களேசர் என்பவர் விசாரணை செய்தார். குற்ற வாளியாக நின்று கொண்டி நபரை பார்த்த நீதிபதி கிளேசர் அதிர்ச்சியடைந்தார். திருடனாக நின்ற குற்றவாளி அவரது பாடசாலை காலத்தில் நெருங்கிய நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் மியாமி பகுதியில் உள்ள நயூடிலஸ் நடுநிலைப் பாடசாலையில் ஒன்றாக படித் துள்ளனர். வழக்கில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததும் அடையாளம் …
-
- 3 replies
- 359 views
-
-
‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்பது வெறும் பாட்டுக்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் உண்மை நிலவரம். சில தெருக்களில் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி சாமானியர்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் சில தெருக்களில் வாழ்வது பற்றி சாமனியர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பாரம்பரியம், நவீனம், வாழ்க்கை வசதிகள் அனைத்தும் கொண்ட முதல் தரமான தெருக்கள் இவை. இங்கு உலகின் பிரபலங்கள் வசிப்பதும் ஒரு காரணம். உலக அளவில் பணக்கார தெருக்களை பார்க்கலாம். இந்தியாவின் டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதி அலுவலகம் அமைப்பதற்கான அதிக செலவு கொண்ட பகுதியாக சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கான வாடகை 162 டாலர்கள் என்கிறது அந்த ஆய்வு. சராசரிய…
-
- 0 replies
- 556 views
-
-
துருக்கியின் ''அய்வசிக்'' நகர கடற்கரையோரமாக கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்றை கரையோரக் காவற்படை மீட்டுள்ளது. மிதவை இருக்கை ஒன்றில் கரையோரமாக இருந்த இந்த 10 மாதக் குழந்தை, அதனது பெற்றோருக்கு தெரியாமலேயே கடலின் அலைகளால் அடித்து நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்கள் இது கடலுக்குள் சென்று விட்டது. மெல்டா இல்கின் என்னும் இந்தக் குழந்தை கடலில் மிதப்பதை பார்த்து காவலர்களிடம் ஏனையவர்கள் முறையிடும்வரை அதனது பெற்றோருக்கு அதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. குழந்தையை கடலோரக் காவற்படையின் படகு மீட்டதும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இது குறித்த பிபிசியின் ஒரு காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/07…
-
- 2 replies
- 419 views
-
-
மார்க்கின் ஒரு நாள்! ஃபேஸ்புக்ல தூங்கி ஃபேஸ்புக்ல கண் விழிக்கிற நாம ஒரு நாளாச்சும் மார்க் ஸுக்கர்பெர்க்கைப்பற்றி சில வித்தியாசமான தகவல்களைத் தெரிஞ்சுக்காட்டா எப்பிடி? நம் எல்லோரையும் போல 10 டு 5 தான் அவருடைய வேலை நேரம். சில நேரங்களில் 8 மணி வரை உட்கார்ந்திருப்பார். ஃபேஸ்புக்கில் ரவுண்ட் வருவது அவருடைய ஹாபி. தன் அதிகாரப்பூர்வத்தளத்தில் (https://www.facebook.com/zuck) புதிதாக அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பத்தை தன் கைப்படவே ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்! ஒரே மாதிரியான க்ரே கலர் வட்டக்கழுத்து டி ஷர்ட்களைத்தான் தன் வார்ட்ரோபில் நிறைய அடுக்கிவைத்திருக்கிறார். முக்கியமான மீட்டிங்கிற்குக்கூட ட்ரெஸ்கோட் கட்டாயம் என்ற நாட்களில் மட்டும் கோட் சூட் அணிந்துகொள்கிறார். ‘எனக்கு இப்படி ஒ…
-
- 0 replies
- 938 views
-
-
வானில் பறந்து கொண்டிருந்த ராஜ கழுகு மீது காகம் ஒன்று இறங்கிய காட்சி படம் பிடிக்கபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிகழ்வு வாஷிங்டன் கடல் மீது பறந்து கொண்டிருந்த போது நடந்து உள்ளது. இதனை அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் படம் பிடித்து உள்ளார். ஒரு ராஜ கழுகு ஒன்று தனது இரையை தேடி வாஷிங்டன் கடல் பகுதி மேல் பறந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு காகம் பறந்து கொண்டிருந்த கழுகின் மீது இறங்குவதற்கு முயற்சி செய்து இறங்கியும் நின்றது. இந்த நிகழ்வுக்கு சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசைகளில் பறந்து செல்கின்றன.இந்த அபூர்வ காட்சி அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் ( வயது 50) படம் பிடித்து உள்ளார். இது குறித்து பூசான் கூறியதாவது:- ஒரு இரைதேடும் கழுகை படம் பிடிக்க …
-
- 1 reply
- 1k views
-
-
சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் திருமணம் செய் வதற்கான தனது விருப்பத்தை வெளியிடவுள்ளதாக வேடிக்கையாகத் தெரிவித்துள் ளார். அமெரிக்காவில் 50 மாநிலங்களில் தன்னினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து கேலி செய்யும் வகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். பராக் ஒபாமா தன்னினச்சேர்க்கைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதையடுத்து தான் முடிவொன்றுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்த ரொபேர்ட் முகாபே, “தேவைப்படும் பட்சத்தில், நான் வோஷிங்டனுக்குச் சென்று பராக் ஒபாமாவின் முன் முழந்தாளிட்டு அவரது கையை…
-
- 1 reply
- 314 views
-
-
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு மிகுந்த இடமாகும். அரசின் அறிவிப்புகள் வெளியாகும் இடம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கேமிராவில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்குள்ள பென்சில்வேனியா அவென்யூவில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டின் முதல் குடிமகளுமான மிசெலி ஒபாமா 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறாக, போட்டோகிராபியை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாளத்துடன் வெள்ளை மாளிகை இனி திகழும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள…
-
- 0 replies
- 333 views
-
-
கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிரேக்கத்தில் மூடப்பட்டிருக்கும் வங்கிகளின் முன்பு நிற்கும் பொதுமக்கள். கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீட்டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன. இன்றைய தொடக்க வணிகத்தில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கிட்டதட்ட 4 சதவித அளவுக்கு வீழ்ச்சி கண்டன. எனினும் சிறிது நேரம் கழித்து சிறு முன்னேற்றம் இருந்தது. முன்னதாக, ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக வீழ்ச்சிகண்டன. இந்த வாரம் முழுவதும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்…
-
- 1 reply
- 318 views
-
-
முக எலும்பில் வளர்ச்சியடைந்த புற்றுநோய்க்கட்டியை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு பண வசதியற்ற நபரொருவர், தனக்குத் தானே சுயமாக சத்திரசிகிச்சைகளை செய்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்ஸொயு நகரில் வசிக்கும் யு யி பேயி என்ற மேற்படி நபர், கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் 10 தடவைகள் சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட உபகரணங்களையும் தனது கையட க்கத்தொலைபேசியையும் பயன்படுத்தி தனது குளியலறை கண்ணாடியின் முன்பாக இந்த அறுவைச்சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். தனது அறுவைச் சிகிச்சைகள் ஒவ்வொன் றுக்கும் 30 நிமிடங்களை செலவிட்டுள் ளார். வறுமையி…
-
- 0 replies
- 326 views
-
-
சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டுமெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். சமஸ்கிருத மொழியை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய சுஷ்மா இவ்வாறு கூறியிருக்கிறார். 60 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சமஸ்கிருத வல்லுனர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பேசிய அவர், கங்கை அதனுடன் இணையும் நதிகளை புனிதமாக்குவது போல, சம்ஸகிருதமும் தூய்மைப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். பழைய மொழிகளில் ஒன்றான சம்ஸகிருதம் இந்தியாவில் மிகக் கு…
-
- 2 replies
- 318 views
-
-
ருவாண்டாவில் இனப்படுகொலையோடு சிங்கங்களும் ஒழிந்தன ருவாண்டாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன சிங்கங்கள் முதல்தடவையாக நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக வனவிலங்குத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு 1994-ம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், சிங்கங்களும் ஒழிந்துபோயின. இரண்டு ஆண் சிங்கங்களும் ஐந்து பெண் சிங்கங்களும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திங்களன்று விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன. இந்த சிங்கங்கள் அக்காகேரா தேசிய வனப்பகுதிக்குள் விடப்படும். நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இந்த சிங்கங்கள் மீள்-அறிமுகத்தை அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். இனப்படுகொலைக்குப் பின்னர், இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் இந்த வனப்பகுதிக்குள் கு…
-
- 0 replies
- 160 views
-
-
இந்திய வம்சாவளி பாபி ஜிண்டால்தான் அமெரிக்காவின் ஹாட் டாபிக். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், அமெரிக்க அரசியல் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய லூசியானா மாகாண கவர்னராக உள்ள பாபி ஜிண்டால், தனது தேர்தல் பிரச்சாரத்தை நியு ஆர்லியன்ஸ் நகரில் அதிரடியாகத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், ” அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசிக் கொண்டிருக்காமல், செயலில் என் திறமையைக் காட்டுவேன். ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், பணக்கார அமெரிக்கர்கள், ஏழை அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள் என்று யாரும் இல்லை. நாம் அனைவருமே அமெரி…
-
- 2 replies
- 604 views
- 1 follower
-
-
குண்டு அச்சுறுத்தல் ஒன்றைத் தொடர்ந்து நேற்றிரவு மூடப்பட்ட கனடா நியூஃபண்லாண்டின் சென் ஜோன்ஸ் (St. John’s) அனைத்துலக விமான நிலையம் மீளத் திறக்கப்பட்டது. நான்கரை மணி நேரம் வான் போக்குவரத்துக்கு மூடப்பட்ட விமான நிலையம் உள்ளுர் நேரப்படி நேற்றிரவு 11;30 மீளத் திறக்கப்பட்டது.அங்கிருந்து ஒடாவா நோக்கி எயார் கனடா விமானம் ஒன்று புறப்பட்டபோது, விமானத்தில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதென விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது. 82 பயணிகள், மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்த விமானம், மீண்டும் முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் விமான நிலையத்தின் பிரதான தளத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். - See more at: http://www.cana…
-
- 0 replies
- 141 views
-
-
ஆப்பிரிக்க யூனியன் படைகள் தளத்தைப் பாதுகாக்க தொடர்ந்து போரிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. சோமாலியாவில் ஆப்பிரிக்க யூனியனின் அமைதிகாக்கும் படையின் தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ராணுவ தளத்தை புருண்டியைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாத்துவருகின்றனர். லீகோ என்ற இடத்தில் இருக்கும் இந்தத் தளத்தின் பிரதான வாசலின் மீது, மிக வேகமாக வந்த தற்கொலைதாரியின் கார் மோதியது. தாங்கள் அந்தத் தளத்தைக் கைப்பற்றிவிட்டதாக அல் ஷபாப் கூறியிருக்கிறது. ஆனால், தாங்கள் இன்னும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருவதாக ஆப்பிரிக்க யூனியன் படைகள் தெரிவித்திருக்கின்றன. ஆப…
-
- 0 replies
- 265 views
-
-
குவைத்தின் தலைநகரில் உள்ள ஒரு ஷியா மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் இறந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எவ்வளவு பெரிய தாக்குதல் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தாக்குதல் நடந்தபோது மசூதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள இமாம் சாதிக் மசூதியில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மசூதிக்கு வெளியில் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் பொதுமக்கள்.இம்மாதிரியான தாக்குதல்கள் குவைத்தில் மிக அரிதாகவே நடந்திருக்கின்றன. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தக் க…
-
- 0 replies
- 263 views
-
-
சம்பவ இடத்தில் பாதுகாப்புப்படையினர் குவிந்துள்ளனர்பிரான்ஸின் தென்கிழக்குப்பிராந்தியத்திலுள்ள வேதிப்பொருள் தொழிற்சாலையில் இஸ்லாமியவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவமானது பயங்கரவாத தாக்குதலுக்கான அனைத்து முத்திரைகளையும் கொண்டிருப்பதாக பிரெஞ்சு அதிபர் ஃபிராங்கோய்ஸ் ஒல்லாந்த் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திலிருந்து தலை வெட்டப்பட்ட உடல் ஒன்று கண்டு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த உடலில் எழுத்துக்கள் கீறப்பட்டிருந்ததகாவும் அவர் தெரிவித்தார். அந்த கட்டிடத்தை வெடித்து தரைமட்டமாக்குவதே இந்த தாக்குதலின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஒல்லாந்து தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்திருக்கி…
-
- 0 replies
- 263 views
-
-
துனீஷியாவில் உள்ள சுஸ் நகரில், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தாக்குதல் நடத்திய ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. துனீசியாவில் சுஸ் நகரம் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வருகைதரும் நகரமாகும். துனீஷியாவின் தலைநகரான துனிசில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. பிபிசியிடம் பேசிய அந்நாட்டின் உள் துறை அமைச்சர், தற்போது பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவருவதாகவும் சிலர் இறந்த…
-
- 0 replies
- 169 views
-
-
தமிழ் செய்திகள் 1) இஸ்லாமியர்களுக்கு ஜப்பான் நாட்டில் குடியுரிமை கொடுப்பதில்லை ... 2)இஸ்லாமியர்கள் ஜப்பான் நாட்டில் நிரந்தரமாக வசிக்கவும் அனுமதி இல்லை 3) ஜப்பானில் இஸ்லாம் மதம்பரப்ப கடும் தடை உள்ளது 4) ஜப்பான் நாட்டின் பல்கலை கழகங்களில் அரபி அல்லது இஸ்லாமியர்களின் மொழிகள் எதையும் கற்றுகொடுக்கபடுவதில்லை 5) அரபி மொழியில் இருக்கும் குரான் இறக்குமதி செய்ய தடை 6)ஜப்பான் நாட்டின் புள்ளிவிவரங்களின் படி 2 லட்சம் இஸ்லாம்மியர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மட்டும் அனுமதிகொடுக்கப்ட்டுள்ளது அவர்களும் ஜப்பானிய நாட்டின் சட்டதிட்டபடியே வாழவேண்டும் 7)உலகின் உள்ள நாடுகளில் மிக குறைந்த அளவு தூதரகங்களை இஸ்லாமிய நாடுகளில் வைத்துள்ளது ஜப்பான் 8)ஜப்பான் மக்கள் இஸ்லாத்தால் எப்போதும் கவரப…
-
- 19 replies
- 4k views
-
-
கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தந்தை மரணம்! பியூனஸ் அயர்ஸ் : கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தந்தை டான் டியாகோ வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடனோவின் தந்தை வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறால் அவதிப்பட்ட அவர் பியூனஸ் அயர்சில் உள்ள லாஸ் ஆர்காஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களாக கோமாவில் இருந்த அவர், நேற்று மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தந்தை இறந்த தகவல் துபாயில் இருந்த மரடோனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். கடந்த இரு நாட்களுக்கு முன்தான், மரடோனா தனத…
-
- 0 replies
- 403 views
-
-
நியூசிலாந்தின் சவுத் ஐலாண்ட், ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் எனப்படும் அற்புதமான ஆகாயக் காட்சி தென்பட்டது. இந்த அபூர்வ ஒளிக் காட்சியைப் படம் எடுப்பதற்காக கடும் குளிரையும் மீறி நியூசிலாந்துக்காரர்கள் துருவப் பகுதியில் குவிந்தனர். பூமியின் துருவப் பகுதிகளில் சூரிய ஒளித் துணுக்குகளால் ஏற்படும் அபூர்வமான ஒளிக் காட்சியே ஆரோரா என்று அழைக்கப்படுகிறது. தென்துருவப் பகுதியில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் என்றும் வட துருவத்தில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா போராலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தென்துருவத்தில் தோன்றிய இந்த ஒளிக்கட்சி, வழக்காகத் தோன்றுவதைவிட சற்று வடக்கில் தோன்றியது. வியாழக்கிழமையன்று இரவில் மீண்டும் இந்தக் காட்சி தோன்றக்கூடும் எ…
-
- 1 reply
- 236 views
-
-
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, 2009-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் மோகன். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இவர் முறையீடு செய்தபோது, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டேன் என்று சொன்னார். இந்நிலையில், தற்போது அந்தப் பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ள நிலையில், 'இருவரும் சமரச மையத்தில் தீர்வு காணலாம்' என்று சொல்லி மோகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை நாம் சந்தித்து பேசினோம். பயந்தபடியே தயக்கத்துடன் அவர் பேச தொடங்கினார். ''மோகனின் மேல்முறையீட்டு மனு குறித்து உயர்நீதிமன்றம் எங்களிடம் எந்தவொரு கருத்தையும் கேட்கா…
-
- 0 replies
- 216 views
-
-
பகோடா: கொலம்பியா தலைநகர் பகோடாவில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவில் பதிவாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் தலைநகர் பகோடாவில் நேற்றுமுன்தினம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். புகாரமங்கா நகரின் தென்புறத்தில் 17 மைல் தொலைவில் 98.5 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம் அங்கு பல நகரங்களில் உணரப்பட்டது.Read more at: ht…
-
- 0 replies
- 372 views
-
-
அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு![Wednesday 2015-06-24 07:00] செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவி கறுப்பினத்தவர் ஒருவக்கு அமெரிக்க அரசு ரூ. 40 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புருக்ளின் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜொனாதன் பிளெமிங். கடந்த 89ம் ஆண்டு ஒரு கொலை குற்றத்துக்காக இவரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த சமயத்தில் தான் புளோரிடாவில் இருந்ததாக பிளெமிங் கூறினார். ஆனால் கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து பிளெமிங் தான் கொலை செய்தார் என போலீசார் உறுதியாக நம்பினர். அரசு வக்கீலும் போலீஸ் கொடுத்த ஆதாரங்களை வைத்து வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் ப…
-
- 0 replies
- 167 views
-
-
டோக்கியோ: ஜப்பானின் கடலோரப்பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. டோக்கியோவின் தெற்கே உள்ள ஒகாசவாரா தீவுகள் அருகில் கடலுக்கு அடியில் 480 கி.மீ., ஆழத்தை மையமாக வைத்து அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானில் இது போன்ற நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.Read more at: http://tamil.oneindia.com/news/international/a-strong-earthq…
-
- 0 replies
- 303 views
-