Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மயூரன் சுகுமாரன் மற்றும் அவரது சகாக்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா இந்தோனேசியாவிற்கான தனது தூதுவரை மீள அழைத்துள்ளது. பாலி 9 என்ற ஆஸி போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட மயூரன் சுகுமாரனையும், சானையும் மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக ஆஸி அரசாங்கம் இறுதிவரை கடும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருருந்தது. எனினும் தனது வேண்டுகோள்களுக்கு இந்தோனேசியா உரிய முறையில் செவிசாய்க்காதது குறித்து ஆஸி அரசாங்கம் கடும் சீற்றமடைந்துள்ளது. ஆஸி பிரதமர் டொனிஅபொட் தண்டனை குரூரமானது, தேவையற்றது குற்றவாளிகள் சிறையிலிருந்த காலப்பகுதியில் திருந்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தோ…

  2. நேபாள பூகம்ப மையம். | படம்: யு.எஸ்.ஜி.எஸ். நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பல மீட்டர்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் ஆய்வியல் நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறும்போது, “பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” என்று கூறினார். இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. …

    • 0 replies
    • 390 views
  3. நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக், தற்போது இந்த பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள் அங்கே நேபாளத்திற்கு நன்கொடை அளிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு கீழே ‘டொனேட்’ என்ற பட்டன் இருக்கிறது, அதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கடன் அட்டைகளை (கிரெடிட்/டெபிட் கார்ட்) பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் நன்கொடையாக அளிக்கும் நிதி முழுவதையும் சர்வதேச மருத்துவ நிறுவனத்திற்கு அளிக்கும் பேஸ்புக், அந்த நிறுவனத்திற்கு 2 மில்லிய…

    • 0 replies
    • 336 views
  4. அமெரிக்காவின் Baltimore நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ,கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. கறுப்பினத்தவரின் கோபத்தால் Baltimore நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் Baltimore நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் 2 வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கறுப்பின மக்கள், Baltimore நகரில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வ…

  5. நேபாளத்தில் போர் கால அடிப்படையிலான மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர். | படம்:ஏ.பி. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கோயில். | படம்:ராய்ட்டர்ஸ். நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உண்டு என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா கவலை தெரிவித்துள்ளார். கடந்த 25-ம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. நேபாளத்தின் எல்லை நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக அ…

    • 0 replies
    • 281 views
  6. ஒயின் தயாரிக்கப் பயன்படும் திராட்சைகளை வளர்க்கும் தோட்டங்களில் இப்போது சீனா பிரான்ஸையும் மிஞ்சிவிட்டது என புதிதாக வந்துள்ள புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சீனாவில் ஒயினுக்கான திராட்சைத் தோட்டங்கள் அதிகரித்து வருகின்றன பிரான்ஸிலேயே மிகவும் சுவைகூடிய ஒயின்களைத் தயாரிக்கப் பயனபடும் திராட்சைகள் பயிரப்படுவதாக பொதுவான எண்ணப்பாடு ஒன்று உள்ளது. சீனாவில் இப்போது 800 மில்லியன் ஹெக்டேர்கள் அளவிலான பரப்பளவில் ஒயின் தயாரிக்க பயன்படும் திராட்சைகள் பயிரப்படுகின்றன. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஒயினுக்கான திராட்சைகள் பயிரிடும் நாடாக சீனா உள்ளது என்று சர்வதேச ஒயின் மதிப்பீடுகளுக்கான அமைப்பு கூறுகிறது. தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் பிரான்ஸின் ஆளுமையே இன்னும் உள்ளது எனினும் …

  7. அமெரிக்காவினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற க்ரீன்காட் லோட்டரி சீட்டிழுப்பை பயன்படுத்தி, மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட்ட தொடர்பாடல் அதிகரி செலி ஸ்ரேன் இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார். இந்த சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாக கூறி, சிலர் போலியான முறையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டும், மின்னஞ்சல்களை அனுப்பியும் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றுள்ளமை குறித்து என்ற அமெரிக்காவின் க்ரீன்காட் சீட்டிழுப்புக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மாத்திரமே தெரிந்துக் கொள்ள முடியும். இந்த இணைத்தளத்தை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை. எனவே இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் மி…

    • 0 replies
    • 402 views
  8. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் படித்ததாக தெரியவந்துள்ளது. மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் எழுதிய மின் அஞ்சல்கள் படிக்கப்பட்டதாக நியூயார் டையம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மின்னஞ்சல்களில் தூதுவர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுடன் முக்கிய வேலைகள் பற்றி நடத்தபட்ட விவாதங்கள், நிகழ்ச்சிகளுக்கான கால அட்டவணைகள் போன்ற பல முக்கிய தகவல்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒபாமாவின் தனிப்…

    • 0 replies
    • 220 views
  9. கனடிய அரசாங்கம் இயற்கை பேரழிவு மதிப்பீட்டு குழு ஒன்றை பூகம்பத்தினால் பாதிக்கப்பட் நேபாலிற்கு அனுப்புவதோடு 5-மில்லியன் டொலர்களை நிவாரண நிதியாகவும் வழங்குவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றொப் நிக்கல்சனின் காரியாலயத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் பூகம்பத்தினால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை 2,500ற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் 5-மில்லியன் டொலர்கள் பங்களிப்பு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உணவு, குடி தண்ணீர், தங்குமிடம், உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் போன்றனவற்றை வழங்க உதவும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறிஸ்ரியன் பரடிஸ் கூறினார். மேலும் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் உயிர்-காக்கும் த…

    • 0 replies
    • 210 views
  10. கனடா- வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தின் யன்னல் ஊடாக விழுந்து மூன்று வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான. இச்சம்பவம் ரொறொன்ரோவின் மேற்கு எல்லையில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2-மணியளவில் நடந்துள்ளது. வெஸ்ரென் வீதி மற்றும் லோறன்ஸ் அவெனியுவில் ஹிக்கறி வீதியில் அமைந்துள்ள வானுயர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் இத்துயர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடித் துடிப்பெதுவும் இன்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் அங்கு மரணமடைந்துள்ளான். கிட்டத்தட்ட 17-வது மாடியிலிருந்து விழுந்திருக்க வேண்டும் என அவசரமருத்துவ சேவைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட கட்டிடத்தில் பல்கனி இல்லை. கட்டிடத்தின் யன்னல்கள் அசைக்க கூடிய ஒரு சிறுபகுதி ஸ்கிரீனை கொண்டதெனவும் அது தவிர்ந்த மற்றய பாகம் திறக…

    • 0 replies
    • 373 views
  11. தண்டனையை ஒத்திவைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என இந்தோனேசிய அரசாங்க வழக்கறிஞரகள் வலியுறுத்துவதால் ‘பாலி ஒன்பது’ குழு அங்கத்தவர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்றூ சான் ஆகியோரின் குடும்பத்தினர் இந்தோனேசியா செல்கின்றனர். இவர்களிற்கான மரணதண்டனை நிறைவேற்றும் காலக்கெடு 72-மணித்தியாலங்கள் என சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மரணதண்டனை மூன்று நாட்களில் நிறைவேற்றப்படலாம் என கருதப்படுகின்றது. தண்டனை ஒத்தி வைக்கப்படும் என்ற கடைசி நிமிட நம்பிக்கையும் மறைந்து போய் நாட்டின் அதிகாரிகள் இந்த வார ஆரம்பத்தில் துப்பாக்கி படையினரால் இவர்களின் தண்டனையை நிறைவேற்ற போகின்றனர் என்பது தெளிவாகி விட்டதென தெரியவந்துள்ளது. அரசாங்க வக்கீல்கள் மூலம் இவர்களது குடும்பத்தினருக்கும் தூதரக அ…

    • 0 replies
    • 1.2k views
  12. இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பக்தாதி இறந்துப் போனதாக ஈரான் வானொலி அறிவித்துள்ளது. வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் உள்ள ரக்கா நகரம் உள்ளிட்ட சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்ன…

  13. நான் இதை எழுதுவதன் நோக்கம் மயூரனை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதோ அல்லது அவரது குற்றத்தின் அளவைக் குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மாறாக , அவருக்கும், அவருடைய நண்பரான மைக்கேல் சானுக்கும் இந்தோனேசிய அரசும், நீதித்துறையும் நிறவேற்றத் துடிக்கும் மரண தண்டனை பற்றிய பின்புலத்தை வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். முதலில், எனது சொந்த அனுபவத்திலிருந்து இதைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். 2006 மார்கழி, வேலை நிமித்தம் நானும் எனது 8 தோழர்களும் சிட்னியிலிருந்து இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்ட்டாவிற்குப் பயணமானோம். இந்தோனேசிய நேரப்படி இரவு 7 மணிக்கு கொட்டும் மழையில் ஜகார்ட்டாவில் வந்திறங்கியபோது எம்மை வரவேற்றது, "போதைவஸ்த்துக் கடத்துபவர்களுக்கான தண்டனை மரண த…

    • 3 replies
    • 537 views
  14. எனது மகனுக்கு குடியுரிமை இல்லையா? கனடா அரசின் மீது வழக்கு தொடுக்கும் தந்தை [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:44.47 மு.ப GMT ] கனடா நாட்டில் வசித்து வரும் சிறுவனுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவருடைய தந்தை அந்த அரசின் மீது வழக்கு தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள Ontario மாகாணத்தை சேர்ந்தவர் பால் காம்ப்டன் (Paul Compton, 45). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு கனடா அரசு குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம், 2009ம் ஆண்டிற்கு பிறகு வெளிநாட்டை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தைக்கு கனடா குடியுரிமை கிடைக்காது என அரசு அறிவித்திருந்தது. …

  15. புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் காரணமா? [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 12:34.42 பி.ப GMT ] மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். ED Miliband நேற்று தனது உரையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை எதிர்த்து குற்றம் சுமத்தி பேசியுள்ளார். Mr Edmilband பிரித்தானிய அரசாங்கத்தை மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு காரணமாக குற்றம் சுமத்தியுள்ளார். Mr Edmilband மத்திய தரைக்கடல் புலம் பெயர்வோரின் மரணங்களை பிரித்தானிய அரசாங்கம் பெரிதும் தவிர்த்திருக்க கூடிய சூழ்நிலையில் இருந்தும் கூட, சரியான வகையில் திட்டமிட செய்யாத படியால் இந்த மத்திய ப…

  16. மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளை சந்திப்பீர்கள்..எச்சரிக்கும் பிரான்ஸ் [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 09:00.09 மு.ப GMT ] பிரான்ஸ் குடிமகனிற்கு மரண தண்டனையை நிறைவேற்றினால், இந்தோனேஷியா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் குடிமகனான Serge Atlaoui என்பவரை போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி கடந்த 2008ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு கைது செய்து மரண தண்டனை வழங்கியது. சமீபத்தில் பிரான்ஸ் குடிமகன் உள்பட 10 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேஷிய அரசு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனைதொடர்ந்து, தனது நாட்டு குடிமகனை மீட்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என பிரான…

  17. நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உலகின் முக்கிய சுற்றுலாதலமாக விளங்கும் நேபாளத்தில் வசந்த கால சீசன் நிலவுவதால் இயற்கை எழிலை ரசிக்கவும், மலையேற்றம் செய்வதற்காகவும் உலகெங்கிலுமிருந்து சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது தாயகம் திரும்புவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/41730.h…

    • 0 replies
    • 546 views
  18. முடியல்ல... இந்த அரசியல்வாதிங்க மட்டும் எப்படி இப்படி.. அடுத்தவனை கொப்பி பண்ணுறதில.. அவ்வளவு அவசரமா இருக்காங்க. அதுவும் இப்ப மேற்குலக அரசியல்வாதிங்களுக்கு பாடம் எடுப்பது.. ஹிந்திய மோடி.. சொறிலங்கா மைத்திரி. உலகம் உருப்பட்ட மாதிரித்தான். Election 2015: David Cameron sets out plan for 'first 100 days' David Cameron has said wages, welfare, housing and childcare will be at the heart of the Conservatives' programme for government in its first 100 days. http://www.bbc.co.uk/news/election-2015-32470837

  19. அமெரிக்காவில் உள்ள சுதந்தர தேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. மோப்பநாய்களுடன் வந்த காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படாததால், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் சுதந்தர தேவி சிலையைக் காண ஒவ்வோர் ஆண்டும் 40 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தாக்…

  20. டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!! டெல்லி: டெல்லி உட்பட வட இந்தியா நகரங்களில் இன்று பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாரா அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  21. இலங்கை - சீனா - இந்தியா இலங்கையால் சீனாவைப் புறக்கணிக்க முடியாது; இந்தியாவுக்கும் இலங்கையுடனான அணுக்கம் அவசியம். மார்ச் மாத இறுதியில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு வருகை தந்தார். அவருக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ‘கொழும்பு துறைமுக நகரம்’ எனும் திட்டத்தைத் தன் சொந்தக் கரங்களால் தொடங்கி வைத்திருந்தார் சீன அதிபர். அப்போது இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் ஆட்சி மாறும் என்றும் புதிய அதிபர் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பார் என்றும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும், தலைவர்களின் சந்திப்பு சுமுகமாகவே நடந்தது. சீனாவின் திட்…

  22. புதுடெல்லியிலிருந்து சிகாகோவுக்கு செல்லும் ஏர் இந்தியா (Flight AI-127) விமானத்தில் 270 பயணிகள் பயணம் செய்ய காத்திருந்தனர். புதுடெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து (இன்று அதிகாலை 2.20 மணிக்கு) புறப்பட தயாராக இருந்த இந்த விமானத்தை இயக்க போதுமான விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 15 மணி நேரம் தாமதமாக சென்றது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கொச்சிக்கு செல்லும் விமானத்தில் விமானி ஒருவர் தூசிகள் படிந்த ஆக்ஸிஜன் மாஸ்கை அணிய மறுத்ததால் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது ஏர் இந்தியா பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. - See more at: http://www.canad…

    • 0 replies
    • 371 views
  23. அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு உள்ளானார்கள். 75 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த நிலையில், திடீரென விமானத்தில் அழுத்தக்குறைவு(Cabin Pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பயணிகள் தங்கள் சுயநினைவை இழந்தனர். இந்த நேரத்தில் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் டைவ் அடித்தவாறு மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போனார்கள். எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நில…

    • 0 replies
    • 358 views
  24. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இளம் வயதுடையவருமான விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றார். 2013 முதல் அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தலைவராக இருந்த விவேக் மூர்த்தியை இப்பதவியில் அமர்த்த அதிபர் ஒபாமா முடிவு செய்தார். எனினும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக விவேக் மூர்த்தி கையெழுத்திட்டதால் அந்நாட்டு செனட் சபை அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வந்தது. எனினும் 2014 ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக மருத்துவத்துறை தலைவராக விவேக் ம…

    • 0 replies
    • 436 views
  25. மரண படுக்கையில் அல்பாக்தாதி: ஐ.எஸ் தீவிரவாதிகளை வழிநடத்தும் புதிய தலைவர் (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 11:15.16 மு.ப GMT ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் அமைப்பில் கலிபாவாக (தலைவர்) அபுபெக்கர் அல்பாக்தாதி இருந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் படுகாயமடைந்ததாகவும், நடமாட முடியாத நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இதனை ஐ.எஸ் அமைப்பும் உறுதி செய்தது. தற்போது உயிருக்கு போராடும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவரால் பணியாற்ற முடியவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.