Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடா- ஒரு சாம்பல் நிற திமிங்கிலம் சுற்றுலா பயணிகளின் படகு ஒன்றில் அத்துமீறி மோதியதால் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இத்துயர சம்பவம் புதன்கிழமை நடந்தது என மெக்சிக்கோ அதிகாரிகளின் அறிக்கை தெரிவித்துள்ளது. 35-வயதுடைய கனடியரான ஜெனிவர் கரென் என்ற இப்பெண் விடுமுறையை கழிக்க காபோ சான் லுக்காஸ். மேக்சிக்கோ சென்றிருந்தார். சம்பவம் காபோ சான் லூக்காஸ் ரிசாட்டிலிருந்து 2-கிலோமீற்றர்கள் தொலைவில் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த உல்லாச படகில் 24 சுற்றுலாபயணிகள் இருந்தனர். அனைவரும் பிற்பகல் அளவில் படகில் துறைமுகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த சாம்பல் நிற திமிங்கிலம் தண்ணீருக்குள் இருந்து பாய்ந்து படகிற்குள் இறங்கியது. திமிங்கிலம் படகிற்குள் பாய்ந்தபோது இப் பெண் திமிங…

    • 0 replies
    • 345 views
  2. 29007ca29b7a9557f365924bc9f4b4db

    • 0 replies
    • 531 views
  3. திடுக்கிடும் ரகசியங்களை அம்பலமாக்கிய புடின்: மிரளவைக்கும் ஆவணப்படம் (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:31.24 பி.ப GMT ] கிரிமியாவை கைப்பற்றியது தொடர்பான ரகசியங்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் தற்போது வெளியிட்டுள்ளார். உக்ரைனிடமிருந்து கிரிமியா மாகாணத்தை பிரித்து தங்களுடன் இணைத்துக் கொள்ள கடந்தாண்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் போரை நடத்தி வந்தார். இதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில் கிரிமியாவை கைப்பற்றியது குறித்து தற்போது புடின் ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, கிரிமியாவை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக தான், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் பாதுகாப்பு …

  4. டில்லி விமான நிலையில் தரையிறங்க முயன்ற ஓமான் விமானத்தின் டயர் வெடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஓமான் நாட்டை சேர்ந்த விமானம் டில்லி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 120 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் தரை இறக்கும் போது விமானத்தின் டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. சப்தம் கேட்டதும் விமானத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் விமானத்தில் இருந்த 120 பயணிகள் உயிர் தப்பினர். அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். . - See more at: http://www.canadamirror.com/canada/39206.html#sthash.gg6xbzYH.dpuf

    • 0 replies
    • 254 views
  5. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது குற்றச்சதி அரசு ஊழியர் என்ற வகையில் செயல்பட்டு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும் ஊழலில் ஈடுபட்டதாக ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகள் பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=128128&category=IndianNews&language=tamil

  6. சௌதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் குறித்து ஸ்வீடன் செய்திருந்த விமர்சனங்களினால் கோபமடைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார். எனினும் ஏட்டிக்கு போட்டியாக அங்கிருந்து தமது தூதரை நாடு திரும்பும்படி கூறும் எண்ணம் ஏதும் ஸ்வீடனுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எவ்வகையிலும் இருநாட்டுக்கும் இடையேயான ராஜீய உறவுகளில் விரிசல் இல்லை எனவும் ஸ்வீடிஷ் வெளியுறவுத்துறை பேச்சாளர் கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்து ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ராம் அரபு லீக் மாநாடு ஒன்றில்பேச விழைந்ததை சௌதி தடுத்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டன. பின்னர் நீண்டகாலமாக சௌதியுடன் …

    • 0 replies
    • 230 views
  7. புளொரிடா. பேன்சகோலா என்ற இடத்தில் ஏழு கடற்படையினரும் நான்கு படையினரும் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று புளொரிடா கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதெனவும் அனைவரும் இறந்து விட்டதாகவும் ஊகிக்கப்படுகின்றது. புதன்கிழமை 11 சேவை உறுப்பினர்களும் இறந்து விட்டதாக தெரிவித்த தண்ணீருக்குள் சிதைவுகள் கடலோரகாவற் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. UH-60 Black Hawk என்ற இராணுவ தேசிய காவலர் படையை சேர்ந்த ஹெலிகொப்படர் செவ்வாய்கிழமை இரவு 8.30-மணியளவில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாலை 2-மணியளவில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பணிக்குழுக்குள் தெ…

    • 0 replies
    • 430 views
  8. கனடா- ரொறொன்ரோவில் இந்த வார ஆரம்பத்தில் ஒருவர் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. மார்ச்மாதம் 9-ந்திகதி கைதான இந்த நபர் கைது செய்யப்பட்டதை கனடா எல்லைப்பகுதி சேவைகள் முகமை உறுதி செய்துள்ளது. இது குறித்து ரொறொன்ரோவில் விசாரனை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத சதித்திட்டத்தின் இலக்கு யுனிவேசிட்டி அவெனியுவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்ததெனவும் பத்திரிகை ஒன்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வரும்… - See more at: http://www.canadamirror.com/canada/39184.html#sthash.3XyKvaF1.dpuf ஆங்கில இணைப்புகள் http://www.cbc.ca/news/canada/toronto/jahanzeb-malik-accused-of-plan-to-blow-up-u-s-consu…

    • 0 replies
    • 335 views
  9. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து வருகின்றனர். அந்த இயக்கத் தில் சிறுவர்களை அதிக அளவில் சேர்த்து பயிற்சி அளித்து வருகின்றனர். உலக முழுவதும் இருந்து சிரியா சென்று அந்த இயக்கத்தில் சேருகின்றனர். சமீபத்தில் அந்த இயக்கத் தினர் வழக்கம் போல் ஒரு கொலையை அரங்கேற்றும் வீடியோ காட்சியை வெளி யிட்டனர். அதில் வழக்கத்துக்கு மாறாக 10 வயது சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை துப்பாக்கியால் சுட்டு கொல்லும் கொடூர காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த பிணைக்கைதியின் பெயர் முகமது சயீத் இஸ்மாயில் முசலாம் (19). இவர் இஸ்ரேலை சேர்ந்த அரபி ஆவார் . பாலஸ்தீனத்தில் உளவு பார்த்ததாக கூறி இவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து பிணைக்கை…

    • 0 replies
    • 446 views
  10. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005–ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. குமாரமங்கலம் பிர்லா மீதும் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் சி.பி.ஐ. தாக்கல்…

  11. பிரித்தானியாவில் வசிப்பதற்கு அல்லது தொழில் புரிவதற்கு வரும் குடியேற்றவாசிகள், தாம் கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பது அந்நாட்டின் புதிய கடும் சட்ட விதிகளின் கீழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டிலிருந்து தாம் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அத்தாட்சிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கையளிப்பது அவசியமாகும். பிரித்தானியாவில் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்பு விதிகளை இவ்வாறு மேலும் கடுமையாக்குவதன் மூலம் மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட க…

  12. சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, இந்திய தேசிய விமான நிறுவனமான ஏயர் இந்தியா ஞாயற்றுக்கிழமை முழுக்க முழுக்க பெண் பணியாளர்கள் மற்றும் பெண் விமானிகளைக் கொண்ட விமானங்களை லேடீஸ் ஸ்பெஷலாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்பாக 1985-ம் ஆண்டு இதைப்போன்று பெண்களுக்காக விமானங்களை இயக்கியிருந்தது ஏர் இந்தியா, பெண்களுக்காக பிரத்யேகமாக விமானங்களை இயக்கியது, அதுவே உலகில் முதல்முறையாகும். ஏயர் இந்தியா இன்று உள்நாட்டில் AI806 (மும்பை-டெல்லி) AI475 (டெல்லி-ஜோத்பூர்-மும்பை) பாதைகளில் இரண்டு லேடீஸ் ஸ்பெஷல் விமானங்களும், சர்வதேச அளவில் டெல்லி-மெல்போர்ன் மற்றும் மும்பை-மஸ்கட்-மும்பை பாதைகளில் இரண்டு விமானங்களை…

  13. லண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது யாரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகள் மண்ணில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில் லண்டனின் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு இடுகாட்டுப் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும் இந்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் லண்டனில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதை கண்டறியலாம் என்றும் கூறுகின்றனர். சுமார் 16 மற்றும் 17வது நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 3000 எலும்புக் கூடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிய…

  14. ஈராக்கில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய அரசை அமைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் யுத்தத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பெர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக தலிபான்கள், அல் கொய்தா போன்ற இயக்கத்தினரை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை சுட்டிக் காட்டியிருக்கிறார். சிரியாவில் ஹாஸ்ம் தீவிரவாத இயக்கத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்த இயக்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால்தான் அமெரிக்கா தற்போது வேறு யுத்திகளைக் கடைபிடிக்க வேண்டிய நி…

  15. மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்' என தெரித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா. வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது ய…

  16. யுஎஸ்.-வட கரோலினாவில் தேசிய ரயில்சாலை பயணிகள் கூட்டுத்தான வண்டியான ஆம்ரக் ரயில் வண்டி ஒன்று டிரக்டர்-ட்ரெயிலர் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் 40-பயணிகள் வரை காயமடைந்துள்ளனரென கூறப்பட்டுள்ளது. 25-பேர் பேரூந்து மூலமும் 15-பேர் அம்புலன்ஸ் மூலமும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கள்கிழமை பிற்பகல் விபத்து நடந்துள்ளது. விபத்தில் ரயில் எஞ்சின் பக்கவாட்டில் கவிழ்ந்ததுடன் முதல் இரண்டு கார்களும் மோதலின் பின்னர் கவிழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. 212 பயணிகளும் எட்டு பணிகுழுவினரும் ரயிலில் இருந்ததாகவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தேசிய ரயில்சாலை பயணிகள் கூட்டுத்தானமான ஆம்ரக்கி…

    • 0 replies
    • 370 views
  17. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும்போது நாம் வெட்கி தலைகுனியும் நிலை ஏற்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், ''தைரிய செயல்கள் மற்றும் புகழ்மிக்க சாதனைகள் நிகழ்த்திய பெண்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நமது நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதை அனைவரும் மனதில் நிலைநிறுத்தி செயல்படுவதில் உறுதியாக இருப்போம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும்போது நாம் வெட்கி தலைகுனியும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்கும்போதுதான் நாம் தோள் நிமிர்த்தி நிற்க முடியும். எனவே, நம் நாட்டில் இதுபோன்ற செயல்கள் நடக்காத சூழல் உருவாக வேண்டும். அதற்காக நாம் அ…

  18. ஒட்டாவா- ஈராக்கின் வடக்கில் இடம்பெற்ற நட்பு ரீதி துப்பாக்கி சூட்டில் ஒரு கனடிய சிறப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த துருப்புக்கள் உள் நாட்டு படைகளிற்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த போது ஒரு கவனிப்பு இடுகைக்காக முன் வரிசையில் திரும்பிய போது குர்தீஸ் போராளிகளால் தவறுதலாக சுடப்பட்டார்கள் என தேசிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நடந்துள்ளது. கொல்லப்பட்ட வீரர் கனடிய சிறப்பு நடவடிக்கை படைபிரிவு பெற்றவாவா, ஒன்ராறியோ தளத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் அன்ட்றூ ஜோசப் டொய்ரோன் என இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. காயமடைந்த மூவரும் மருத்துவ பராமரிப்பு பெற்று வருகின்றனரெனவும் அவர்களது காயங்களின் விபரங்களோ அல்லது பெர…

  19. யுஎஸ்-யுட்டா மாநிலத்தின் ஸ்பானிஷ் வோக் ஆற்று பகுதியில் ஒரு பகுதி நீருக்குள் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கார் ஒன்றிற்குள் சனிக்கிழமை ஒரு பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டாள். ஆனால் அவளது தாயார் விபத்தில் இறந்துவிட்டார். விபத்து நடந்து கிட்டத்தட்ட 13-மணித்தியாலங்களின் பின்னர் ஒரு மீனவர் இந்த நொருங்கிய காரை ஆற்றிற்குள் கண்டுள்ளார். தாயார் ஸ்பிரிங்வில் என்ற இடத்தை சேர்ந்த லின் ஜெனிவர் குரொஸ்பெக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரின் குழந்தையின் அடையாளம் வெளியிடப்படவில்லை. சிறிய பெண் ஸ்திரமான் ஆனால் இக்கட்டான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளாள். குரொஸ்பெக் இறந்த நிலையிலும் அவரது 18-மாத பெண் சிறுமி உயிருடன் வாகனத்தின் பின் பக்கத்தில் உறைபனி நிலையில் உள்ள தண்ணீ…

    • 0 replies
    • 333 views
  20. அமெரிக்காவில் மீண்டும் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர்கள் அந்நாட்டு போலீசாரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். போலீசின் இந்நடவடிக்கைக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வரும் போதிலும் இந்த அடக்குமுறை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் டோனி ராபின்சன் என்ற 19 வயது கருப்பர் இன இளைஞர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத் தலைநகரான மேடிசனில் மக்கள் பெருமளவில் திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெர்குஷனில் கருப்பர் இன இளைஞர் சுட்டு…

  21. கனடா- மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வார இறுதியிலும், நவம்பர் மாத முதல் வார இறுதிநாளிலும் கடிகாரம் நகர்த்தப்படுகின்றது. வசந்தகால ஆரம்பமான மார்ச் மாதத்தில் கடிகாரம் முன்நோக்கியும் முன்பனிக்காலமான நவம்பர் மாதத்தில் பின்நோக்கியும் நகர்த்தப்படுகின்றது. இதனை “spring ahead” and “fall back.” என்று கூறப்படுகின்றது. இந்த நேரமாற்றமானது பெரும்பாலான மக்களின் உடல் கடிகாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதென கூறப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை அதிகாலை 2-மணிக்கு இந்த பகலொளி சேமிப்பு நேரம் ஆரம்பமாகின்றது அதாவது ஒரு மணிநேர விலைமதிப்பற்ற தூக்கத்தையும் கண்களை மூடும் நேரத்தையும் மக்கள் இழக்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada…

    • 0 replies
    • 280 views
  22. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்காவை பழிவாங்குவதற்காக வாஷிங்டன் நகரின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட கிரிஸ்டபோர் லீ கார்னெல் என்பவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க உளவுப்படையினர் கைது செய்தனர். தற்போது கென்டக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த தீவிரவாதியின் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சிறையில் இருக்கும் அவனிடம் ஓஹியோ மாநிலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி கண்டது. நீங்கள் போலீசாரிடம் பிடிபடாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்ற நிருபரின் கேள்விக்கு சற்றும் தயங்காமல், ”துப்பாக்கியை எடுத்துச் சென்று ஒபாமாவின் தலையில் வைத்து சுட்டுக் கொன்றிருப்பேன். பாராளுமன்றத்தில் இருக்கும் சில எம்.பி.க்…

    • 0 replies
    • 345 views
  23. கனடா-சனிக்கிழமை அதிகாலை சட்பெரிக்கு வடக்கில் இரண்டரை மணித்தியால தொலைவில் கோகமா என்ற இடத்திற்கருகில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் வண்டி தடம்புரண்டதால் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவரும் காயமடையவில்லை என கனடிய தேசிய ரயில்வே தெரிவித்துள்ளது. சிரேஸ்ட நடவடிக்கைகள், பொறியியல் பிரிவினர் ,ஆபத்தான பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உட்பட்ட பல அணியினர் சம்பவ இடத்தில் காணப்படுகின்றனர். தடம்புரண்ட பகுதிக்கு அண்மித்த நெடுஞ்சாலை 144 மற்றும் நெடுஞ்சாலை 560ற்கு இடைப்பட்ட பகுதி மற்றும் மற்றகமி றிசேவ் வீதி பகுதிகள் பாதுகாப்பு கருதி 24முதல் 36-மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டிருக்கும் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

    • 0 replies
    • 215 views
  24. சிரியாவில் இயங்கி வரும் அல்கய்தா ஆதரவு பெற்ற நுஸ்ரா தீவிரவாத இயக்கத்தினருடன் நேற்று நடைபெற்ற வான்வழி தாக்குதலில், அதன் தலைவர் சுட்டு கொல்லப்பட்டார் என்று சிரிய ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக அல்கய்தா தீவிரவாத இயக்க ஆதரவு பெற்ற நுஸ்ரா முன்னணி பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களின் தாக்குதலில் இதுவரை ஏராளமான ராணுவத்தினரும் மக்களும் பலியாகி உள்ளனர். அவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்க சிரிய ராணுவம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் இருக்கும் ஹபீத் கிராமத்தில் நேற்று மதியம் நுஸ்ரா தீவிரவாத முன்னணி தலைவர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.