உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27047 topics in this forum
-
இரு பெண்களின் சமூக விழிப்புணர்ச்சி. Lines from the song But did you ever wonder, how this took shape Don't shy away now, you're a part of this culture Of lawyers who will kill & politicians who ban our will & all the other Blood-sucking vultures We're now known as the land of rapes http://www.bbc.co.uk/news/world-asia-india-31938381
-
- 0 replies
- 311 views
-
-
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 42 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 1,809 ஆக உயர்ந்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அசுர வேகத்தில் பரவியபடி உள்ளது. 15-ம் தேதி நிலவரப்படி, நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 387 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 378 பேரும், மராட்டியத்தில் 293 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 239 பேரும் பலியாகியுள்ளனர். தெலுங்கானாவில் 72, கர்நாடகாவில் 71, பஞ்சாப்பில் 51, அரியானாவில் 45, உத்தரப்பிரதேசத்தில் 35, ஆந்திராவில் 20, மேற்கு வங்காளத்தில் 19, இமாச்சல்ப…
-
- 2 replies
- 380 views
-
-
பூமியில் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையும் முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுவது வழமையாகும். ஐரோப்பாவில் இத்தகைய கிரகணம் கவனிக்கப்படுவது அபூர்வமாகவுள்ளது. இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை ஐரோப்பாவெங்கும் முழுமையான சூரிய கிரகணம் கவனிக்கப்படவுள்ளது. மேற்படி சூரிய கிரகணத்தை பிரித்தானியா மற்றும் வட ஐரோப்பாவிலுள்ள ஸ்கான்டினேவியா பகுதிகளில் கவனிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப்பின் மத்திய ஐரோப்பாவில் 2081 ஆம் ஆண்டும் பிரித்தானியாவில் 2090 ஆம் ஆண்டும் முழுமையான சூரிய கிரகணம் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=128570&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 396 views
-
-
இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருமே ஓரினத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்திய சம்பிரதாய முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் அதனால் ஆழமான அன்புகொண்டதாகவும் ஷெனொன் தெரிவித்துள்ளார். http://virakesar…
-
- 20 replies
- 1.7k views
-
-
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த 10 மாதங்களுக்குள் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 111 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக எம்பி சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கடந்த 10 மாதங்களில் 111 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் வெளியுற வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்தான் அதிகபட்ச பயணங்களை மேற்கொண்டுள்ளார். இத்தனை அதிகமான பயணங்களை அமைச்சர்கள் மேற்கொண்ட போதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் மட்டுமே இது போன்ற பல்வேறு நாடுகளுக்கா…
-
- 0 replies
- 246 views
-
-
மனிதக் கழிவினால் இயங்கும் பஸ் ஒன்று பிரிட்டனில் இம்மாத இறுதியில் சேவைக்கு வரவுள்ளது. 32,000 இற்கும் அதிகமான வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் உட்பட வீட்டுக் கழிவுப்பொருட்களால் இந்த பஸ் ஸுக்குத் தேவையான எரிபொருள் உருவாக்கப்படும். இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் சுமார் 24 கிலோமீற்றர் தூரம் கொண்ட பஸ் வழித்தடத் தில், 40 ஆசனங்களைக் கொண்ட இந்த பஸ் இயக்கப்படவுள்ளது. பிரிட்டனில் மனிதக் கழிவு மூலம் இயங்கும் பஸ் முதலாவது பஸ் இதுவாக இருக்கும். ஃபெர்ஸ்ட் வெஸ்ட் ஒவ் இங்கிலண்ட் நிறுவனத்தினால் இந்த பஸ் இயக்கப்படவுள்ளது. கடந்த வருடம் இந்த பஸ் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது அது உலகின் கவனத்தை ஈர…
-
- 1 reply
- 340 views
-
-
ஸ்வீடனின் 2-வது பெரிய நகரமான கோடீபெர்கில் மர்ம நபர்கள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்தனர். இருவர் பலியாகினர். ஸ்வீடனின் தென் - கிழக்கில் உள்ள கோடீபெர்க் நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் புதன்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய சரமாரி தாக்குதலில் பலர் சிக்கினர். இதில் இருவர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்தச் சம்பவத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணி தெரியவரவில்லை. இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் ஏற்கெனவே கும்பல்களால் தாக்குதல் ஏற்பட்ட…
-
- 1 reply
- 341 views
-
-
சிங்கப்பூர் என்ற நாடு உருவாக காரணமாக அமைந்தவரும் சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ, தனது 91ஆவது வயதில் காலமானார். http://www.tamilmirror.lk/142084#sthash.dVW9b4Wy.dpuf
-
- 10 replies
- 743 views
-
-
கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் வகையில் நடப்பு கூட்டத் தொடரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்குவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கியவர்கள் அது தொடர்பான விவரங்களை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வ…
-
- 4 replies
- 259 views
-
-
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்த டாக்டருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவரை நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொலையை தலிபான்களின் ஆதரவு இயக்கமான ஜுன்டாலா செய்ததாக பின்னர் அறிக்கை வெளியிட்டது.பாகிஸதானில் உள்ள அபோதாபாத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது டாக்டர் ஷகில் அப்ரிடி என்பவர் அப்பகுதியில் போலி தடுப்பு ஊசி மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, பின்லேடன் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். பின்னர் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த பகுதியை அமெரிக்க அதிரடி படையினர் …
-
- 1 reply
- 371 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அலுவலகத்தில் கடந்த வாரம் போலீசார் சென்று அங்க அடையாலங்கள் குறித்து விசாரணை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ராகுலை உளவு பார்ப்பதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசை கண்டித்து நாடெங்கும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தி பற்றிய விசாரணை சர்ச்சை இன்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எழுப்பப்பட்டது. முன்னதாக டெல்லி மேல் சபையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சார்பில் நோட்டீசு கொடுக்கப்பட்டது. பகல் 11 மணிக்கு டெல்லி மேல் சபை கூடியதும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபிஆசாத் ராகுல்காந்தி ப…
-
- 5 replies
- 423 views
-
-
அமெரிக்காவில் அமெரிக்க பிரஜை ஒருவர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்த ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய வழக்கில், அவர் மீது குற்றம் உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, எரிகா மெனெண்டெஸ் என்ற அமெரிக்கப் பெண்மனி, தி குவீன்ஸ் நகரின் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த 46 வயதான அமெரிக்க வாழ்-இந்தியர், சுனந்தோ சென் என்பவரை வேகமாக வந்த ரயில் மீது தள்ளி விட்டார். அடிபட்ட சுனந்தோ சென், படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே மாண்டு போனார். இதன் பின்னர் மெனெண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணைகளின் முடிவில், மெனெண்டஸ் அதிர்ச்சி அளிக்கு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தில், 2001ம…
-
- 5 replies
- 452 views
-
-
புதுடெல்லி: கிறிஸ்தவர்கள் தேவாலயங்களை கட்டுவதை நிறுத்தவில்லை என்றால் 1857 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது போல் மீண்டும் ஒரு மதகலவரம் முன்னெடுக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் எச்சரித்து உள்ளார். மேற்குவங்க மாநிலம் நாடியாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் பேசும்போது, ''இது கிறிஸ்தவ ஆலயத்தின் சதித்திட்டம் ஆகும். கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் தாக்குதல் கிறிஸ்தவர்களின் கலாசாரம், இந்துகளின் கலாசாரம் இல்லை. போப், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கவலை அடைந்திருந்தார் என்றால், ஓரினசேர்க்கையை ஊக்குவிப்பதை நிறுத்தட்டும்" என்றார். மேலும் ஹிசாரில் …
-
- 0 replies
- 493 views
-
-
கொல்கத்தா: தன்னை வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை மன்னித்துவிடுமாறு பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாகவும் மிகவும் சோர்வாகவும் இருக்கிறார். "என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள்!" என்று குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்கிறார். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட கவலையை விட, அவரு…
-
- 0 replies
- 339 views
-
-
பாகிஸ்தானில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு நாடெங்கிலும் உள்ள சிறைகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் 6 ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை கடந்த டிசம்பரில் மாற்றப்பட்டதை அடுத்து, ஒரே நாளில் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினம் இதுவேயாகும். தலிபான்களால் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சுமார் 150 பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, இதுவரை 40 பேருக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150317_pakistanhang
-
- 0 replies
- 322 views
-
-
ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள நானாக்சகி நாட்காட்டியில், இந்திரா காந்தியை கொன்ற கொலையாளிகள் தியாகிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் வெளியாகியுள்ள இந்த நாட்காட்டிக்கு பாஜகவிடம், காங்கிரஸ் கட்சி விளக்கம் கோரியுள்ளது. தியாகிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த நாட்காட்டியில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளும், ராணுவ முன்னாள் தளபதி வைத்யாவைக் கொன்றவர்களும் தியாகிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=128423&category=IndianNews&language=tamil
-
- 3 replies
- 492 views
-
-
நல்வரவு, உறவுக்கு மரியாதை மோடியின் இலங்கைப் பயணம் குறித்து இலங்கையிலிருந்து ஒரு பார்வை இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது நீண்ட காலத்துக்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கடைசியாக வந்து சென்றது பல விதங்களிலும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு வாருங்கள் என்று இலங்கையின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே போன்றோர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததுகூட இந்தியத் தலைவர்களின் காதுகளில் விழவில்லை. ஆனால், இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது நிச்சயம் என்ற நம்பிக்கையைப் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களைத் திருப்திப்பட…
-
- 0 replies
- 413 views
-
-
லண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில்கழிவு(Plane forced to return to Heathrow after 'smelly poo in the toilet') நாற்றம் பயணிகளை திணறடித்ததால், 30 நிமிடத்தில் மீண்டும் ஹீத்ரு விமான நிலையத்துக்கு திரும்ப நேரிட்டது. கடந்த வியாழனன்று குறித்த நேரத்தில் புறப்பட்ட அந்த விமானம் துபாய் நோக்கி வானில் பறந்து கொண்டிருந்தது. ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களில், விமானத்தில் கடுமையான கழிவு நாற்றம் பயணிகளை நிலை குலைய செய்தது. இதையடுத்து விமானத்தின் கழிவறை நிரம்பி வழிந்ததால் இந்த நாற்றம் வீசுவதாக அறிவித்த விமானி, மீண்டும் விமானம் ஹீத்ரு விமான நிலையத்திற்கு திரும்புவதாக கூறினார். இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த ஹெர்ட்ஸ்மியர் க…
-
- 12 replies
- 761 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாகப் புகலிடம் கோரி வந்தவர்களில் ஒரு பகுதியினரை கம்போடியாவில் மீளக் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு சில வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் டத்தொன் தெரிவித்தார். கம்போடியா தலைநகரான புனொம் பென்னில் அந்தநாட்டு அதிகாரிகளைச் சந்தித்து உரையாடிய தைத் தொடர்ந்து பீற்றர்டத்தொன் இவ்வாறு தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் பிரகாரம் ஆஸ் திரேலியாவானது கம்போடியாவுடன் 40 மில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கையை கடந்த செப்ரெம்பர் மாதம் கைச்சாத்திட்டிருந்தது. நவுறுவிலிருந்து கம்போடியாவில் மீளக் குடியமர்த்தப்படவுள்ள 5 இற்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வாழ்க்கைச்…
-
- 0 replies
- 327 views
-
-
டுபாய் இல் உள்ள நகீல் (Nakheel property developers) கட்டுமான நிறுவனம் உலகில் மிக உயரமான (World's Tallest Skyscraper) கட்டுவதற்கு திட்டம். இந்த கட்டடம் கிடத்தட்ட 1400 மீட்டர் உயரம் உடையதாகக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. மேலதிக தகவலுக்கு http://inhabitat.com/nakheel-tower-by-woods-bagot-will-be-worlds-tallest-tower/ http://www.architectureanddesign.com.au/news/dubai-tower-by-woods-bagot-is-world-s-tallest-unfi
-
- 4 replies
- 556 views
-
-
கனேடிய அரசாங்கம் முன்வைத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் தொடர்பாக இன்று கனடாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த சட்டமூலத்தை எதிர்த்து டொரன்டோ பெரும்பாகத்திலும், ஏனைய பல நகரங்களிலும் Defend our freedom என்ற தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெவறுதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் இந்தப் பிரேரணை மிகவும் ஆபத்தானது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் Bill C-15 எனப்படும் இந்த சட்டமூலப் பிரேரணையை கன்சவேற்றிவ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன்கீழ் காவற்துறையினருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு, அவர்கள் சந்தேகநபர்களைக் கைதுசெய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது டொரன்டோவில் நேத்தன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நட…
-
- 1 reply
- 339 views
-
-
கனடா ரொறன்றோ பல்கலைக் கழகம், உலகப் பல்கலைக் கழங்களில் 16 ஆவது இடத்தையும், கனடாவில் முதல் இடத்தையும் பெற்றதென Times Higher Education ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அனைத்துலக மட்டத்தில் ரொறன்றோ பல்கலைக்கழகம் நான்கு இடங்கள் முன்னேறியது. கனடாவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் மக்கில் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கங்களில் 35 ஆவது இடத்தை வகிக்கின்றது. ஹாவேர்ட் பல்கலைக்கழகம், கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியன உலகத் தர வரிசையின் முதல் மூன்று இடங்களையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/39356.html#sthash.aLhbCRu7.dpuf
-
- 0 replies
- 340 views
-
-
பசுபிக் நாடான வனுவாட்டுவை புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், டஜன் கணக்கான மக்கள் பலியாகியுள்ளதாகவும் உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வனுவாட்டுவில் கடும் புயல் அந்த சமூகத்தினரின் பாராம்பரிய ஓலை வீடுகள் அனைத்தும் புயற்காற்றில் வீசி எறியப்பட்டுள்ளதுடன், நவீன அடுக்கு மாடித் தொகுதிகளும் உடைந்து வீழ்ந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். வனுவாட்டுக்குச் சொந்தமான அறுபத்தைந்து தீவுக் கூட்டங்களிலும் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னமும் முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை என நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் தேவாலயங்களில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ளதாக கூறிய நிவாரணப் பணியாளர்கள் மேலும் அனேகமானோர் தலைந…
-
- 2 replies
- 435 views
-
-
உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்களை, கருத்து வேறுபாட்டு காரணமாக ஐ.நா சபையால் காப்பாற்ற முடியவில்லை என்று பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கும், 7.6 மில்லியன் மக்கள் அந்நாட்டிற்குள்ளாகவே அகதிகளாகியிருப்பதாகவும் பான் கீ-மூன் வெளியிட்டுள்ள அறிக…
-
- 6 replies
- 470 views
-
-
கனடா- துண்டிக்கப்பட்ட பன்றி ஒன்றின் தலை மொன்றியல் பொலிஸ் சங்க அலுவலகத்தின் முன்னால் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு காட்சிகளில் இருந்து வியாழக்கிழமை இரவு இது நடந்துள்ளதென விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். பொலிஸ் சேவைக்கும் பொலிஸ் அதிகாரிகளிற்கும் இது ஒரு “நேரடி அச்சுறுத்தல்” என Cmdr. Ian Lafreniere CTV செய்தியில் தெரிவித்துள்ளார். இதனால் தான் தாங்கள் இதனை மிகவும் தீவிரமானதாக எடுத்து கொள்கின்றோம் எனவும் கூறியுள்ளார். சங்க காரியாலயத்தின் வெளியே வெண்கட்டியினால் வரையப்பட்ட ஒரு ஐந்து முனைகளையுடைய நட்சத்திர-வடிவம் ஒன்றின் மத்தியில் இந்த தலை கண்டுபிடிக்கப்பட்டது. கதவி…
-
- 1 reply
- 414 views
-