Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சமையல்காரரின் பேரன் ஒருவன் அதிபராக முடியும் என்பதற்கு நானே உதாரணம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உருக்கமாக கூறினார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, டெல்லியில் இன்று நடைபெற்ற இருநாட்டு உறவு குறித்த கூட்டத்தில் பேசினார். அப்போது, அமெரிக்க மக்களின் நட்பை இந்திய மக்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன் என்றார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் என்பது பெருமையளிக்கிறது என்று கூறிய ஒபாமா, இந்தியா- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்க உறுதியாக உள்ளேன் என்றார். இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் புதிய அத்தியாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியா, அமெரிக்கா என்ற இரு நாடுகளும் வலிமை வாய…

  2. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்க காரணம், தொழில்நுட்ப கோளாறு இல்லை, ஹேக்கர்கள் கைவரிசை! லண்டன்: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை ஹேக் செய்தது தாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் சுமார் ஒரு மணிநேரமாக இன்று முடங்கிப்போனது. இதுகுறித்த பரபரப்பு உலகமெங்கும் பரவிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இதுபோல நிகழ்ந்ததாக அந்த நிறுவனங்கள் விளக்கம் கொடுத்தன. ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் எப்படி தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலைஞர்களுக்கு விலகாமலே இருந்துவந்தது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்க காரணம், தொழில்நுட்ப கோளாறு இல்லை, ஹேக்கர்க…

  3. அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்படவில்லை என்றும் அவரது உடலை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அங்கு ரகசிய இடத்தில் வைத்து எரித்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மே 1ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை, அமெரிக்கக் கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் அதிகாலையில் வீடு புகுந்து அதிரடியாக தாக்கி சுட்டு வீழ்த்தினர். பின்னர் பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும் பின்லேடனின் உடல் எங்கே போனது என்பதில் சர்ச்சை நீடித்து வந்தது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உளவு ஆய்வு நிறுவனம் ஒன்றின் இமெய…

  4. இந்தியா விஜயம் செய்திருக்கும் அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா மீது இலங்கையர்கள் குழுவொன்று அல்லது மாலைதீவினர் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடாத்தவிருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக பிரபல இந்திய தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக விசா இல்லாத நிலையில் தொடர்ந்தும் தங்கியிருப்போர் தொடர்பில் கண்காணிப்புகளை அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய குடியரசு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இச்செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID…

  5. டெல்லி: இந்தியாவுடனான உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்தியா தனது 66வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடிவருகிறது. குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவும்-இந்தியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறிவருவதை இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தின. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவுடனான கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்ட…

    • 0 replies
    • 1.4k views
  6. வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரலாறு காணாத பனிப் பொழிவு அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என நியூயார்க்கின் மேயர் கூறியு…

  7. கனடா- வட அமெரிக்காவின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட H7N9 பிரிட்டிஷ் கொலம்பியாவில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனை பறவை காய்ச்சல் என்றும் சொல்லப்படும். அண்மையில் சீனாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என கனடா பொது சுகாதார பிரிவு உறுதிப்படுத்தி உள்ளது. இவர்கள் சீனாவில் இருந்து வேறு பல இடங்களிற்கும் சென்று விட்டு ஜனவரி மாதம் 12-ந்திகதி கனடா திரும்பிய பின்னர் சுகயீனமுற்றதாக கூறப்பட்டுள்ளது. பயணத்தின் போது இவர்களிற்கு எதுவித அறிகுறிகளும் தென்படவில்லை. ஜனவரி 14-ந்திகதிக்கு பின்னரே தோன்ற ஆரம்பித்துள்ளது. பறவை காய்ச்சல் மனிதரிலிருந்து மனிதருக்கு இலகுவில் தொற்றக் கூடிய சாத்திய கூறுகள் இல்லை எனவும் இதனால் அபா…

  8. சீன அதிபர் ஜி ஜின்பிங்| கோப்புப் படம் "அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், "அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அ…

  9. யு.எஸ்.- ஒரு சிறிய ஆளில்லாத விமானம் குறைந்த உயரத்தில் பறந்து திங்கள்கிழமை விடியலுக்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் மோதியுள்ளது என இரகசிய சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வணிகரீதியாக கிடைக்க கூடிய பெயரற்ற நான்கு சுற்றியக்கியால் தூக்கப்படுவதாகும். இது குறித்து புலன்விசாரனை இடம்பெறுகின்றதாக தெரிவிக்க பட்டுள்ளது. சம்பவம் நடந்த சமயம் அதிபார் பராக் ஒபாமா மாளிகையில் இல்லை. அதிபரும் முதல் பெண்மணி மிசேல் ஒபாமாவும் இந்தியாவில் உள்ளனர். அதிபரின் பெண் பிள்ளைகள் ஷாசா மற்றும் மலியா இருவரும் அவர்களது பேத்தியார் மரியம் றொபின்சனுடன் வெள்ளை மாளிகையில் இருந்தனர் என கூறப்படுகின்றது. அதிபரின் இந்திய பய…

  10. ஜனாதிபதி மாளிகையில் எட்டிப்பார்த்த நாய்!!: துரத்தி பிடித்த போலீஸ். வர்றார்... ஒபாமா வர்றார்... என இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்க... டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் எறும்பு கூட எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தெரு நாய் ஒன்று கடும் பாதுகாப்பையும் மீறி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஹாயாக வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் 66 வது குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வருகை தந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வர இருந்த சம…

  11. குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 27-ம் தேதியன்று ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா 27-ம் தேதியன்று டெல்லியில் இருந்து சவுதி அரேபியா செல்கிறார். இதன் காரணமாக அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்தானது குறித்து உ.பி. மாநில அரசுக்கு அமெரிக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புக் குழுவினரும் ஆக்ராவிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். அமெரிக்க அதி…

  12. நியூயார்க்: உலக அழகிப் போட்டியில் கொலம்பியா அழகி பௌலீனா வேகா பட்டம் வென்றார். 2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, உக்ரைன் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உடை அலங்காரம், அறிவுத்திறன், உடல் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் போட்டி நடந்தது. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் கொலம்பியாவை சேர்ந்த பவுலினா வேகா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லர் கிரீடம் அணிவித்தார். 22 வயதாகும் வேகா தொழில் நிர்வாகம் படித்து வருகிறார். தான் பங்கேற்ற முதல் சர்வதேச அழகிப் போட்டி இதுதான் என்றும், இதில் பட்டம் …

    • 2 replies
    • 317 views
  13. "அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், "அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அமெரிக்கா இந்தியாவுடன் அதிகளவு நெருக்கம் காட…

  14. இந்தியாவின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவரான ஆர் கே லக்ஷமண் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானர். இவரது 'திருவாளர் பொதுஜனம்' கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமானது அவருக்கு வயது 93. சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் சில நாட்கள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று-திங்கட்கிழமை அவர் உயிரிழந்தார். அவர் உருவாக்கிய 'பொதுஜனம்' எனும் கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமடைந்தது. நாட்டு நடப்புகளையும், அரசியல்வாதிகளையும் மையப்படுத்தி அந்தப் பாத்திரத்தின் மூலம் நையாண்டித்தனமாக தனது கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி வந்தார். அவர் காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் ஆர் கே நாராயணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தகுந்தது. …

  15. டெல்லி: இந்திய குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக, ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவினரும் முதன்முறையாக அணிவகுப்பு நிகழ்த்திக் காண்பித்தனர். இன்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில் நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர் மூழ்கி எதிர்ப்பு விமானம் பி-81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மா போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று நடத்தி வந்த னர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. "நாம் அனைவரும்…

  16. இந்தியாவின் உள் நாட்டுத்தயாரிப்பான தேயாஸ் விமானம் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது

  17. டெல்லி: இந்தாண்டு டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெறவில்லை. இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் 66வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் இந்தாண்டு தமிழக அரசின் ஊர்தி பங்கு பெறவில்லை. மொத்தம் 16 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த ஊர்வலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த 16 மாநிலங்கள் பெயர் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை. கடந்தாண்டு நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றது தமிழக அரசின் ஊர்தி. ஆனால், சிலப்பல காரண…

  18. வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள். மத்திய மந்திரி ஒருவர்தான் தலைவர்களை வரவேற்க விமான நிலையம் வந்து காத்திருப்பார். அதேபோல் இப்போது ஒபாமாவை வரவேற்கும் வரவேற்பு குழு தலைவராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒபாமாவை வரவேற்க பாலம் விமான நிலையம் வந்து வரவேற்பறையில் காத்து இருந்தார். ஆனால் திடீர் என்று பிரதமர் நரேந்திர மோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமா விமானம் தரை இறங்கியதும் மோடி அந்த விமானத்தின் அருகே சென்று நின்று கொண்டார். அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு இருந…

  19. வரும் 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வருகிறார். இதையொட்டி பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒபாமா பயணம் செய்ய குண்டு துளைக்காத பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ‘பீஸ்ட்’ கார் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிளாக்பெர்ரி போனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் அந்த போனை பயன்படுத்திக் கொள்வார். அந்த போனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:- உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படும் அதிபர் ஒபாமா பயன்படுத்தும் போனில் பாஸ்வேர்ட…

  20. இஸ்லாமிய அரச தீவிரவாதிகளுக்கு உதவும் நோக்கில் சிரியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஒரு பெண்ணுக்கு அமெரிக்காவின் டென்வர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனி செல்லும் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த 19 வயதான ஷனான் கனோலியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் முஸ்லீமாக மதம் மாறியவர். பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு உதவ சதி புரிந்த குற்றச்சாட்டை கானோலி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். மேலும், தன்னைக் கைது செய்ததன் மூலம் தனது உயிரை அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறை காப்பாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிரியாவிலும், மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் நடக்கும் போர்களில் பங்கு பெற மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான…

    • 4 replies
    • 655 views
  21. ஜப்பானியப் பிணைக் கைதிகள் சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது பிரஜைகள் இருவரில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறும் வீடியோ காட்சிகளைத் தாம் சரிபார்த்து வருவதாக ஜப்பான் கூறியுள்ளது. இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இவர்களை பிடித்து வைத்துள்ளனர். ஹருணா யாக்காவா என்ற பணயக் கைதி கொல்லப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு பணயக் கைதியான கென்ஜி கோடோ இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய பிரதமர் ஷின்ஸோ அபே தலைமையில் அமைச்சரவை அவசரமாகக் கூட்டப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஜப்பான் பணியாது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டுள்ள கொலையை மன்னிக்க முடியாதது என்று தலைமை…

  22. சா பாலோவில் பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கு மழையே பெய்துள்ளது. பிரேசில் நாட்டில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகள் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இஸபெல்லா டெய்க்ஸெரியா தெரிவித்துள்ளார். 1930க்குப் பிறகு இவ்வளவு மோசமான பஞ்சம் ஏற்பட்டதில்லை என அவர் கூறியுள்ளார். தலைநகர் பிரெசிலியாவில் நடந்த அவசரநிலைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், சா பாலோ, ரியோ டி ஜெனிரோ, மினா கெரியா ஆகிய மாநிலங்கள் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்த தண்ணீர் பிரச்சனை மிகக் கவலையளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த வறட்சியின் காரணமாக தொழில்துறை, விவசாயம் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால், பிரேசிலின் பொருளாதாரத்திற்கு இது ப…

  23. கனடாவில் தனது பெற்றோரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில், டொரன்டோவைச் சேர்ந்த ஜெனிஃபர் பான் (Jennifer Pan) என்ற பெண்ணுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி, ஜெனிஃபர் பானின் தாயான, Bieh Ha Pan கொல்லப்பட்டதுடன், அவரது தந்தையான Hann Pan மிகக் கடுமையான காயங்களுக்கு உட்பட்டார். தனது பெற்றோர் மிகவும் கடுமையான முறையில் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டார் என்பதற்காக அவர்களைக் கொலை செய்வதற்கான திட்டத்தை ஜெனிஃபர் பான் மேற்கொண்டார் என அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இவருடன் சேர்த்து இந்தக் குற்றத்திற்கு உதவிய Lenford Crawford, David Mylvaganam மற்றும் ஜெனிஃபர் பானின் பாலியல் நண்பரான Daniel Wong ஆகியோருக்கும் நேற்றயதினம் ஆயுட்கால…

  24. கனடாவின் எட்மன்டன் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். Sayfildin Tahir Sharif என்ற இந்த நபர் புறூக்லினிலுள்ள நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்றார். வெளிநாடுகளிலுள்ள அமெரிக்கர்களைக் கொலைசெய்ய திட்டமிட்டமை மற்றும் அதற்கான உதவிகளை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் 36 வயதான ஷரிஃப் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாத அமைப்பொன்றிற்கு இவர் உதவியதாக நியூயோர்க்கிலுள்ள வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஆயுட்கால சிறைத்தண்டனையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: …

  25. பாகிஸ்தானிலிருந்து டொரன்டோவிற்கு வந்த விமானத்திலிருந்து சுமார் 17 கிலோகிராம் Heroin போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கண்டுபிடிக்கப்ட்ட இந்தப் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் மிகவும் முக்கியமானது என கனேடிய எல்லைப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 16ம் திகதி விமானத்திலிருந்து பொதிகள் இறக்கப்படும்போது, ஒரு பொதி மிகவும் பாரமாக இருந்ததாகவும் அதனைப் பரிசோதனையிட்டபோது போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பொதிக்குள் ஆறு கற்கள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அதில் போதைப் பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/37172.html#sthash.aOdH…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.