Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பரணி மணி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ, “1954ம் ஆண்டு இதே நாளில் பிரபாகரன் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று பிரபாகரன் பிறந்த நாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இரவு 7.18 மணிக்கு, இனிப்புகள் வழங்கி, பட்ட…

  2. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ– மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன. 26 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்க…

  3. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வரும் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டி, பிரச்சாரம் என இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விக்டோரியா மாகாணத்தில் 1.10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இம்மாகாணத்தில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பஞ்சாபி வேகமாக பரவி வரும் மொழியாகவும், இந்துமதம் வேகமாக பரவும் மதமாகவும் உள்ளது. இந்திய வம்சவாளியினர் இங்கு அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். தேர்தலில் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். லிபரல், லேபர், கிரீன்ஸ்,ஆஸ்திரேலின் கிறிஸ்டியன்ஸ் என பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடு…

    • 2 replies
    • 565 views
  4. ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாளும் எட்டு பயங்கரவாதிகளை கொல்வது என, திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கர வாதிகள், அதை, 'இஸ்லாமிய நாடு' என, அறிவித்துள்ளனர். இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட, எஸ்.ஏ.எஸ்., என, அழைக்கப்படும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்தப் படையினர், தினமும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எட்டுப் பேரை கொல்வது என்ற முடிவோடு, புதுவ…

  5. கவுகாத்தி: இந்தியா, சீனா, வங்கதேசம், மியான்மர் நாடுகள் வழியே திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார விரைவு நெடுஞ்சாலை, அந்நாடுகளை சேர்ந்த பல மாநிலங்களின் சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்பிற்கும் துணை புரியும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா, இந்தியா, மியான்மர் இந்தியா நாடுகளின் பிராந்திய கூட்டுறவுக்கான கூட்டமைப்பு (பி.சி.ஐ.எம்.,), வங்கதேசம், மியான்மர் வழியாக, இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் பிரமாண்ட பொருளாதார விரைவுசாலை திட்டத்தை உருவாக்கியுள்ளது.இது செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியா - சீனா இடையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை என்ற சிறப்பை பெறும். கோல்கட்டாவையும், சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரையும் இச்சாலை இண…

  6. டெல்லி: இந்தியக் குடியரசுத் தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை அழைத்த செயல் உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியதாகும். இருப்பினும், உலக அளவில் தூதரக அளவிலும், அரசியல் அரங்கிலும் வளரும் சக்தியாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் அண்டை நாடுகளுடனான சில முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பது கவலை தருகிறது. இந்தியாவுக்கு எதிரான நாடாகவே பாகிஸ்தான் வளர்ந்து நிற்பது புதிய விஷயமல்ல. அதேசமயம் பாகிஸ்தானுக்குள் பாதுகாப்பு நிலைமை சீர்கெட்டு வருவது இந்தியாவுக்கு ஆபத்தானது. மேலும் அங்கு தீவிரவாத குழுக்கள் பலம் பெற்று வருவதும், தீவிரவாதிகள் அதிகரித்து வருவதும் ஆபத்தானதாகும். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தில் தீவிரவாத ஆதரவு அதிகாரிகளும் வீரர்களும் பெருக…

  7. அமெ­ரிக்­காவில் கிளேவ்லாண்ட் நக­ரி­லுள்ள விளை­யாட்டு மைதா­ன­மொன்றில் போலி துப்­பாக்­கி­யுடன் விளை­யா­டிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலி­ஸாரால் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்ளான். கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்­படி சிறுவன் விளை­யாட்டு மைதா­னத்தில் விளை­யா­டிய வேளை, தனது கையில் இருந்த விளை­யாட்­டுத்­துப்­பாக்­கியை ஏனை­ய­வர்­களை குறி­பார்ப்­பது போன்று தூக்­கிப்­பி­டித்­துள்ளான். இந்­நி­லையில் தாமிர் ரைஸ்ஸின் கரத்தில் நிஜ துப்­பாக்கி இருப்­ப­தாக தவ­ற­தாக கரு­திய ஒருவர் பொலி­ஸா­ருக்கு அது தொடர்பில் அறி­விக்­கவும் சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் தாமிர் மீது …

  8. இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம் யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள். உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?) அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் நெஞ்சு நிறைய ஏக்கம் - ‘’நாம் …

    • 11 replies
    • 1.9k views
  9. திபெத்தில் பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டியுள்ள புதிய அணை, படம் - ஏஎப்பி. தீபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி மின் உற்பத்தியை தொடங்கியது சீனா. 2900 கி.மீ. பாயும் பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் இமயமலை பகுதியில் உற்பத்தியாகி இந்தி யாவில் அசாம், அருணாசலப் பிரதேசத்திலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் பாய்கிறது. நாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் பிரம்மபுத்திரா அழைக்கப்படுகிறது. இதனிடையே திபெத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி நீர் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த சீனா முடிவு செய்தது. இதன்படி முதல் நீர் மின்நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. பிரம்மபுத்திராவில் சீனா அணைகளை கட்டினால், இந்தியா வுக்கு வர…

    • 2 replies
    • 423 views
  10. அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் அந்நாடு, 200 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய மூலப் பொருட்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கான கவுன்சில் கூறியுள்ளது. மேலும் அதன் அறிக்கையில், உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும், ச…

  11. ஹாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர் அர்னால்ட். ஏழு முறை உலக ஆணழகன் பட்டம் வென்ற இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. இவருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அப்போது நேரமின்மையால் நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பி சென்றுவிட்டார். மீண்டும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அர்னால்டு கூறியதாவது :- நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன். மிகச்சிறந்த நாடான இந்த…

  12. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அவருடைய மனைவி பெங் லிவுவனும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களின் காதல் கதை, சீனாவில் பிரசித்தி பெற்றது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் தனிநபர் துதி பாடும் வழக்கம் கிடையாது. அதையும் மீறி, மனைவியுடனான சீன அதிபரின் காதல் வீடியோவை அரசு இணையதளமே வெளியிட்டுள்ளது. ”ஜி தடா லவ்ஸ் பெங் மாமா” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ, 3 நிமிடம் 21 வினாடிகள் ஓடுகிறது. அதில், இந்த தம்பதியின் 33 புகைப்படங்களும், 2 கேலிச்சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. பின்னணியில் இரண்டு பாடல்கள் ஒலிக்கின்றன. குஜராத் உள்பட உலகின் பல நாடுகளில் இந்த தம்பதிகள் மேற்கொண்ட பயண காட்சிகள், இதில் இடம்பெற்றுள்ளன. குஜராத்தில், இருவரும் கை கோர்த்தபடி ஊஞ்சலில் அமர்ந்துள்ள காட்சிய…

    • 2 replies
    • 2k views
  13. சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம் புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பேச்சுக்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு, மீண்டும் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை குறித்தும், செயல்திட்ட ரீதியான மற்ற விஷயங்கள் குறித்து, சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பணியின் ஒரு பகுதியாக, எல்லை பேச்சுக்களை அவர் நடத்துவார்.இவ்வாறு, பிரதமர் அலுவலகம் கூறிஉள்ளது. இதற்கு முன் பதவி வகித்த தேசிய பாதுகாப்பு…

  14. அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜினாமா வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ அமைச்சர் செக் ஹேகல் திடீரென ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக உள்ளவர் செக் ஹேகல், இன்று ராணுவ தலைமையகமான பென்டகன் வந்தார்.உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அமைச்சராக பணியாற்றிட தனக்கு ஆதரவு அளித்த அதிபர் ஒபாமா உள்ளிட்டோருக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். ஹேகல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஒபாமாவும் அங்கிகரீத்து முறையாக அறிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1122799

  15. லைபீரியாவில் நடந்த 14 ஆண்டு உள்நாட்டுப் போரைக்கூட அதிக ஆள்சேதம் இல்லாமல் தாக்குப்பிடித்துவிட்டது கைசர் டௌரின் குடும்பம். ஆனால் பாழாய்ப்போன இந்த எபோலா வைரஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலியானதுதான் கொடுந்துயரம். மன்ரோவியா நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை சந்திப்பு அது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வீதியில் நடமாடிக்கொண்டிருந்தனர். எஸ்தர் என்ற 5 வயதுச் சிறுமி எபோலா காய்ச்சலின் கடுமையைத் தாங்க முடியாமல் வீதியில் விழுந்த ஒரு மலர் போல தரையில் படுத்திருந்தாள். கடுமை யான வெயில் அடிக்கிறதே, இந்தக் குழந்தை சிணுங்கக்கூட காணோமே என்று மனம் பதைத்தது. அதைவிடப் பலமடங்கு வெப்பத்துடன் உள்ளே அடித்துக்கொண் டிருந்த காய்ச்சல் காரணமாக முனகக்கூட சக்த…

  16. உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய அழகுராணி பத்மா பென் முடி சூட்டிக்கொண்டார். அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார். இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும். மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன. இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற…

    • 26 replies
    • 2k views
  17. இலக்கத்தை மாற்றாவிட்டால் விமானம் தரையில் விழும் என்று ஜோசியர் கூறியிருந்தார் பிரேசிலின் அரச விமான போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு விமானத்திற்கு வழங்கப்பட்ட எண் ஜோசியர் சொன்னதைக் கேட்டு மாற்றப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்படும் கூற்றுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை சா போலோவிலிருந்து பிரசிலியா செல்லும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நகரின் முக்கியமான இடத்தில் அவ்விமானம் தரையில் விழும் என ஜூசெலினோ நொப்ரேகா டா லுஸ் என்ற அந்நாட்டின் பிரபல ஜோசியர் ஒருவர் கூறியிருந்தார். அந்த விமானத்தின் எண் ஜேஜே3720 என்பதிலிருந்து ஜேஜே4732 என்று மாற்றப்பட்டிருந்ததற்கு ஜோசியரின் வாக்கு காரணமல்ல, நிர்வாக மாறுதல்களே காரணம் என என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ…

  18. தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப்ரி போல் வாஷிங்டனில் கூறியது: தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு விமான தளம் அமைக்கும் விதத்தில் தீவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தக் கடற்பகுதியில் பல்வேறு இடங்களில் மணலை நிரப்பி, நிலப் பரப்பை சீனா விஸ்தரித்து வருகிறது. எனினும், இந்தக் குறிப்பிட்ட தீவில் நடைபெறும் பணி மூலம், விமான தளம் அமைக்கும் அளவுக்கான புதிய நிலப் பரப்பை அந்நாடு உருவாக்குகிறது.இதைத் தவிர, பெரிய எண்ணெய் சரக்குக் கப்பல்களும் ப…

  19. இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலைக்கு நடிகர் சல்மான் கான் உதவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள். தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருந்த 5 பேரும் விடுதலையானது தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 5 மீனவர்களையும் மீட்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியது. தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜ…

  20. மோடி விரும்பி அழைத்து சென்றால் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக அவரது மனைவி யசோதா பென் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலின் போது வதோதரா தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தனது வேட்பு மனுவில் தனக்கு மனைவி இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு முந்தைய தேர்தல்களில் இந்த தகவலை மறைத்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் மோடியின் மனைவி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாயின. குஜராத்தை சேர்ந்த யசோதாபென் என்பவருக்கும் மோடிக்கும் கடந்த 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்தார். தற்போது 62 வயதான யசோதா பென் ஆசிரியைய…

  21. சீனா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவின் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அமைப்புகளின் கம்ப்யூட்ரில் முக்கிய உள் கட்டமைப்புகளை முடக்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா வின் முக்கிய சேவைகள் வழங்கும் அமைப்புகளின் கம்யூட்டர்களில் சீனா மற்றும் வேறு ஒரு சில நாடுகளின் வைரஸ்ககளை அமெரிக்கா கண்டு பிடித்து உள்ளது. அமெரிக்க்க கணினிகளில் எதிர்கள் உளவு பார்ப்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது இது போல் கண்டறியப்பட்டு உள்ளது. என்று கூறினார். இத்தகைய தாக்குதல் சாத்தியம் உள்ளது என நாட்டின் சைபர் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுவது இதுவே முதல் முறையாகும். அதிகாரி கூறியதில் சீனா தவிர வேறு எந்த நாடுகளின் பெயர்கள் இல்லை என்றாலும் ரஷ்யா, ஈரான், போன்ற நாட…

  22. பலன் கேட்டு சென்ற ஐடி நிறுவன பெண் ஊழியரை, பலாத்காரம் செய்த பெங்களூரு நாடி ஜோதிடர்! பெங்களூரு: நாடி ஜோதிடம் பார்க்க போன ஐடி பெண் ஊழியரை பலாத்காரம் செய்த ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹொய்சாலா நகரில் அகஸ்தியர் நாடி ஜோதிடம் என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வருபவர் தாமோதரன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது கணிப்புகள் சரியாக உள்ளதாக கேள்விப்பட்டுள்ளார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவரும், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள உலக புகழ் பெற்ற ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியருமான மம்தா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எனவே தனது திருமண வரன் குறித்து விளக்கம் கேட்பதற்காக, தனது ஆண் நண்பர் ஒருவருடன்…

  23. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வந்த போலீஸாரை தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு, தாக்குதல் நடத்தி போக்குகாட்டி வந்த ஹரியானா சாமியார் ராம்பால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 12 ஏக்கர் பரப்பிலான அவரது ஆசிரமத்திற்குள் உள்ளே நுழைந்து பார்த்த போலீஸார், சாமியார் வாழ்ந்த ஆடம்பர மற்றும் உல்லாச வாழ்க்கைக்கு சாட்சிகளாக நிற்கும் மசாஜ் படுக்கைகளையும், நீச்சல் குளம் போன்றவற்றையும் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறார்கள். யார் இந்த ராம்பால்...? அவர் சாமியார் ஆனது எப்படி...ஆசிரமம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக உள்ளது என்பது குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போட் இங்கே... ஹரியானா மாநிலம் சொனேபட் மாவட்டத்தில் எளிய விவசாய குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தார் ராம்ப…

  24. சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றதாக கூறி 61 இந்திய மீனவர்களையும் அவர்களின் 11 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் வெளியுறவு சட்டத்தின் கீழும் மீன்படி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மற்றும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திற்கும் இடையேயுள்ள குறிக்கப்படாத கடல் எல்லைப்பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விடும் மீனவர்களை இரு நாடுகளும் அடிக்கடி செய்கின்றன. இவ்வாறு கைது செய்யப்…

  25. அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனி புயல் வீசி வருகிறது.இந்த கடுமையான பனிப் புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பனிப்புயலால் வடக்குப் பகுதி மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.பப்பலோ நகரில் பனிக்கட்டிகள் 5 அடி அளவில் அனைத்து இடங்கலீலும் உள்ளது. நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமா பனிப்புயல் ஒரு "வரலாற்று நிகழ்வு" என்று கூறி உள்ளார்.உறைபனி நிலை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் 50 மாகாணங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. சாலைகளில் சிக்கியுள்ள கார்களில் இருப்பவர்களை மீட்பதற்கு ஏதுவாக மீட்பு படைகள் ஆங்காங்கே தயார் நில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.