Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 12-வது ஆசியான்-இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மியான்மர் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நே பி தா நகரில் உள்ள பார்க் ராயல் ஓட்டலில் தங்கி உள்ளார். நேற்று பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய மோடி, மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியும், அந்த நாட்டில் ஜனநாயகத்துக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியையும் சந்தித்தார். இந்த சந்திப்பு மோடி தங்கியிருந்த ஓட்டல் அறையில் நடந்தது. அப்போது இந்தியாவை தனது 2-வது தாய்நாடு என்று ஆங் சான் சூகி தெரிவித்தார். சூகியை மோடி சந்தித்து பேசியது இதுவே முதல் முறை ஆகும். சூகியின் தாயார் தா கின் யி 19…

  2. நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து தலைவராக உள்ள "வெற்றித் தமிழர் பேரவை' சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தருண் விஜய் ஏற்புரை ஆற்றினார். விழாவில் முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, தமிழறிஞர் அவ்வை நடராசன், முன்னாள் துணைவேந்தர்கள் க.ப.அறவாணன், ம.ராசேந்திரன், "அமெட்' பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், துரைமுருகன், ப…

  3. இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று முன்பு வர்ணிக்கப்பட்டது. மிகையான அழகும் வளமும் பொருந்திய இத்தீவு ஶ்ரீலங்கா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளை கொண்டது. இதில் தமிழீழம் வளம் மிகுந்த பெரிய கடற்பரப்பையும் நிலவளங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தமிழ் தேசமெங்கும் சிங்கள இனவெறியர்களின் பயங்கரவாத கால்கள் ஊன்றியுள்ளன. தமிழ் மக்கள் ஒரு பெரும் திறந்த வெளிச்சிறைச்சாலையில் அதாவது உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான சிறையில் அடைபட்டுள்ளார்கள். இந்த மக்களின் விடிவுக்காக உலகில் வாழும் தமிழர்கள் யாவரும் மாபெரும் போராட்டங்களை செய்துவருகின்றார்கள். இதில் தமிழ்நாட்டு சொந்தங்களின் தியாகங்கள் அளப்பெரியது. தமிழ் மக்களின் இவ்வாறான ஶ்ரீலங்கா எதிர்ப்பு நடவடிக்கைகள் சிங்களம் உலக…

  4. ஜேர்மனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து சுமார் 450 பேர், சிரியாவிற்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களில் 150 பேர் நாடு திரும்பி விட்டதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இந்நிலையில், மக்கள் நெரிசல் மிகுந்த வடக்கு ரினே வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தேடும் வேட்டையில் 240 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதானவர்களுக்கு சொந்தமான எண்ணற்ற கட்டிடங்களில் அதிரடி சோதனைகளையு…

  5. பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் வீதிகளில் துடைப்பம் ஏந்த பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் மறுத்துள்ளார். 'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இதுவரை திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு குறிப்பிட்ட பகுதிகளை சுத்தம் செய்து, இந்தத் திட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் நேரடியாக இணைய முடியாது என்று ஷாரூக் கான் தெரிவித்துள்ளார். முதலில் தனிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் தமக்கு தாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தன் உள்ளத்தையும் …

  6. காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. அதற்கு, நேருவின் பிறந்த நாளை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சி சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அந்த கட்சி, மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, திரிணாமுல்…

  7. உலகளவில் சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுடெல்லியில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது மாணவன் சைபர் பாதுகாப்பு குறித்து பேச இருக்கிறார்.உலகளவில் இன்டர்நெட் மூலம் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நவீன யுக்திகளின் மூலம் வங்கிகளில் பணம் திருடப்படுகிறது. உலக நாடுகளின் முக்கிய ரகசியங்கள் ஹேக்கிங் மூலம் திருடப்பட்டு வருகிறது. இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்கும் நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று துவங்கியது. இம்மாநாட்டை மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் துவங…

  8. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடை பெறுகிறது. http://www.pathivu.com/news/35305/57//d,article_full.aspx

  9. துபாய் மாநகரில் புதுசு - ட்ராம் சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் துபாய் நகரின் நவீன நகர் பகுதியான துபாய் மெரீனா - ஜுமைரா பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 10.6 கிமீ தூரத்திற்கு துபாய் ட்ராம் சேவையை இன்று மாலை துபாய் அமீரகத்தின் அரசர் 'ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும்' கொடியசைத்து திறந்து வைக்கிறார். நாளை புதன் கிழமை(12-11-2014) காலை 6.30 மணி முதல் பொது மக்களுக்கான ட்ராம் சேவை ஆரம்பமாகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான அல் சுஃபா முதல் ஜுமைரா பீச் ரெசிடென்ஸ் வரைக்குமான 10.6 கி.மீ தூர பாதையில் 11 நிலையங்களை கொண்டுள்ளது. ஒரு பயணத்தில் 405 பயணிகளை ஏற்றிச் செல்ல ஏழு பெட்டிகளைக் கொண்டது இந்த ட்ராம். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இந்த ட்ராம் சேவைக்கான பின் கம்பி…

  10. அகதிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது; அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளின் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் சுமார் 1200 பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற…

  11. மலேசிய விமானம் எம்.எச். 370 மாயமாகியுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்ம் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் மாயமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் காணாமல் போன மலேசிய விமானம் எம்.எச். 370 கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், குறித்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும். அதில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிரிழந்திருக்கலாமென பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த விபத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெர…

  12. டெல்லி: வரும் 24ம் தேதி இலங்கைக்கு செல்கிறேன். திரும்பி வருகையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுடன் வருவேன் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அந்த 5 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்ட…

  13. மாநாட்டில் பேசும் அதிபர் ஒபாமா | படம்: ஏஎப்பி ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள தங்கள் நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச மாட்டார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. 7,8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உட்பட ஜப்பான், தென்கொரியா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பெய்ஜிங் வந்தடைந்தார். விமான நிலையத்தில் …

  14. விருதுநகரில் பெண் போலீஸ்காரர் யாருக்குச் சொந்தம் என்ற சண்டையில் அந்தப் பெண் போலீஸ்காரர் வீட்டு முன்பு கூடி நடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் இரண்டு தலைமைக் காவலர்கள். இதையடுத்து இருவரையும் இடமாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி. விருதுநகர் காவல்நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் போலீஸ்காரர் ராசாத்தி (நிஜப் பெயர் அல்ல). இவருக்குத் திருமணமாகி விட்டது. லட்சுமி நகரத்தில் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் பணியாற்றும் ஒரு ஏட்டு மற்றும் எஸ்பி ஆபீஸில் வேலை பார்க்கும் இன்னொரு ஏட்டு என ஒரே நேரத்தில் இரண்டு பேருடனும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஆனால் இந்த இரண்டு ஏட்டுக்களுக்கும் ராசாத்தி எனக்குத்தான் சொந்தம் என்று அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 3 நாட்களுக்கு …

  15. 2ஜி வழக்கில் கனிமொழிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் பிறப்பிக்கப்படவிருந்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஆஜராகாத திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜரானார். அப்போது, கனிமொழி ஆஜராகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் கூறினார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கனிமொழிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பதைக் கைவிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=120489&category=IndianNews&language=tamil

  16. இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர், இந்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லவும் அதன் பயன்பாட்டை அதிகப் படுத்தவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.அதன்தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் கூறினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அமைச்சர் ஸ்மிரிதி இரானியைச் சந்தித்து இந்த…

  17. இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை கூடத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேயை போன்ற மாயதோற்றத்தை உருவாக்கினர். நரம்புதளர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேய் போன்ற மாயத்தோற்றம் தோன்றும். அதையே பேய் என நம்புகின்றனர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. http://www.maalaimalar.com/2014/11/08133051/scientists-made-artificial-…

  18. முத்த போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி மாணவ-மாணவிகள் கட்டிப்பிடி போராட்டம் நடத்தினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க. இளைஞர் அணியினர், அந்த ஓட்டலை அடித்து சூறையாடினார்கள். இதற்கு குறும்பட இயக்குனர் தலைமையில் சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற இணைய தள அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடந்த ஓட்டல் அருகே பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்க்க ஏராளமானோர் கூடியதால் அங்கு மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தினர். மேலும்…

  19. டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தமே 7 பேர்தான் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதுவும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த போது தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே இணை அமைச்சரானார். அப்போது லோக்சபா தேர்தலில் வெற்றி பெறாத நிலையிலும் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரும் கூட அமைச்சர்களாகக் கூடும் என்று பேசப்பட்டது. அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கும் கூட அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் தேமுதிக, மதிமுக, பாமக ஆகியவை கடும…

  20. போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக பா.ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொடர்புகொண்டு பேசியதை தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்சேவுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதமிழக மீனவர்கள் 5 பேரை இந்திய சிறைக்கு மாற்றவும், அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ராஜபக்சே சம்மதித்தார்" என அதில் சுவாமி கூறியுள்ளார். இதனிடையே இலங்கை அதிபர் ராஜ…

  21. இலங்கை அரசாங்கம் சீனாவுடன் மட்டும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவது ஆரோக்கியமாகாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் பொல் மொனச்சுவா தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து முட்டைகளையும் சீனா என்ற ஒரே கூடையில் நிரப்புவது புத்திசாதூரியமாகாது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய உலக நாடுகளுடனும் இலங்கை சுமூகமான உறவுகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். சீனாவுடன் இலங்கைப் பேணி வரும் உறவுகள் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகில் சீ…

  22. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சரித்திரச் சம்பவம் இது. மனிதர்களின் உறவுப் பாலங்களை அறுக்கும் வகையில், ஜெர்மனியின் குறுக்கே நின்றிருந்த அந்தத் தடுப்புச் சுவர் தகர்க்கப்பட்டது இந்த நாளில்தான். ஒரு சுவரால் பிரிக்கப்பட்டு, இரண்டாகப் பிரிந்துகிடந்த ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்த மறக்க முடியாத நிகழ்வு. இரண்டு உலகப் போர்களிலும் முக்கியப் பங்கு வகித்த ஜெர்மனியை, பிற வல்லரசுகள் ராட்சசனாகவே பார்த்தன. எனினும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி படுதோல்வி அடைந்தது. ஜெர்மனி மீண்டும் பலம் பெறக் கூடாது என்று நினைத்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய 4 பெரிய வல்லரசுகள் அந் நாட்டைக் கூறுபோட்டன. சோவியத் யூனியனைத் தவிர்த்த பிற நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந…

  23. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி டோனி ஆன்னி லட்கேத் (வயது 75). புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தையான இவர் ஆண்டு தோறும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள புட்டபர்த்தி ஆசிரமத்துக்கு வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஜூலை 23–ந் தேதி இவர் புட்டபர்த்தி வந்தார். ஆகஸ்டு 14–ந் தேதி வரை பிரசாந்தி நிலையத்தில் உள்ள தனது தோழியின் அறையில் தங்கி இருந்தார். பின்னர் புட்டபர்த்தி விவேகானந்தா நகரில் உள்ள சாய் கவுரி அபார்ட்மெண்டில் குடியேறினார். குடியிருப்பின் 3–வது தளத்தில் 30–வது அறையை வாடகைக்கு எடுத்து ஆசிரம பணிகளை செய்து வந்தார். அப்போது கிரேட் சுவட்டர் என்ற வெளிநாட்டு பெண்ணுடன் அறிமுகம் கிடைத்தது. எங்கு சென்றாலும் அவரிடம் சொல்லிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். …

  24. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கொட்ரதா கிஷன் என்ற கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 4ம் தேதி, புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஷாசத் மசி, ஷமா என்ற கிறிஸ்தவ தம்பதியினர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் பணமும், 10 ஏக்கர் நிலத்தையும் பாகிஸ்தான் அரசு இழப்பீடாக வழங்கி உள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=120340&cat…

  25. இது சின்ன விஷயம் அல்ல! சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. பிரிட்டிஷ் லைப்ரரி. ஆப்ஷன் சி. கலைவாணர் அரங்கம் என லிஸ்ட் இசட் வரை நீண்டுகொண்டே இருக்கும். ஆனால் பதில். உண்மையில் சரசாரியாய் ஓர் இந்தியப் பெண் தன்னுடைய 'ப்ளாடர்’ எனப்படும் சிறுநீர்ப்பையில் 13 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் பொறுமை காத்துத் தாங்கிக்கொள்கிறாள் என்பதுதான் அவலம் நிறைந்த உண்மை. காரணம் அவளுக்கான ஒதுங்கிடம் இங்கு இல்லவே இல்லை. இது போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அவதிப்படும் பெண்களின் சிக்கல்களை காமெடியுடன் 'ப்ராங்க்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோ படமாக்கி இருக்கிறார் மும்பையைச் சேர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.