உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. நோய் தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல…
-
- 0 replies
- 518 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் 2 புனல் மின் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், லடாக் வந்ததில் பெருமை அடைவதாகவும், புனல்மின் திட்டம் லே நகரத்தின் சுற்றுச் சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாது, லே மக்களின் நாட்டுப்பற்றுக்கு நான் தலைவணங்குகிறேன். இமயமலை மாநிலங்களை மேம்படுத்த புதிய அணுகுமுறை தேவை, காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சியாச்சின் செல்ல திட்டமிட்டுள்ள மோடி, சியாச்சின் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=114762&category=I…
-
- 0 replies
- 309 views
-
-
கார் விபத்தில் உயிர்தப்பினார் சுனில் கவாஸ்கர் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி முடிந்த அன்று அங்கிருந்து லண்டன் நோக்கி கவாஸ்கர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆனால் சரியான நேரத்தில் விழிப்புடன் இருந்ததால் காயமின்றி தப்பியுள்ளார். "கடவுள்தான் எங்களைக் காப்பற்றினார். நல்ல வேளையாக ஒருவருக்கும் காயமேற்படவில்லை, ஆனால் இந்த விபத்து பற்றி நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது” என்று கவாஸ்கர் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கவாஸ்கர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இருந்தார். இவருடன் மார்க் நிகலஸ் என்ற சக வர்ணனையாளரும் ஜாகுவார் காரில் மான்செஸ்டரிலிருந்து லண்டன் புறப்பட்டனர். பின் இருக்கையில் ஓட்டுனருக்கு நேராக மார்க் நிகலஸ் அமர, கவாஸ்கர் அவருக்கு எதிர்முனையில் அமர்ந்…
-
- 1 reply
- 443 views
-
-
சிரியாவின் ரக்கா நகரில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை கொண்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து ஐ.எஸ். போராளிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் கண்ட பெயரை வெளியிடாத நபரொருவர் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகத்துக்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார். பட்டாஹ் அஹமட் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவ தினம் பிராந்திய மதகுரு ஒருவர் தீர்ப்பை வாசித்ததும் அருகிலிருந்த நகர சபை மைதானத்தில் டிரக் வண்டியொன்றில் பெருந்தொகையான கற்கள் எடுத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டாஹ் அஹமட் கால் முதல் பாதம் வரை கறுப்புத் துணியாலான ஆடை மூடியிருக்க அந்த மைதானத்துக்கு அழைத்து வரப்பட…
-
- 3 replies
- 592 views
-
-
பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது மதிமுக! தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டது தமிழருவிமணியன். முதல் முதலில் கூட்டணியில் சேர்ந்தது ம.தி.மு.க., மற்ற கட்சிகளுக்கிடையே இழுபறி ஏற்பட்ட நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டணி பற்றி பகிரங்கமாக அறிவித்தார். தேர்தலில் இந்த கூட்டணி எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. பா.ஜனதாவும், பா.ம.க.வும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. எனவே, தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி நீடிக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வருங்காலத்தில் இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் …
-
- 8 replies
- 821 views
-
-
நான் நிதியமைச்சரானால் 2 வாரத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பேன் என்று சுப்பிரமணிய சாமி சவால் விடுத்துள்ளார். கோவை ரோட்டரி சங்கம் சார்பில் ‘இந்திய பொருளாதாரம் நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசியதாவது:- நமது நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமான வரியிலிருந்து கிடைக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். வருமானம் இல்லாததால் ஏழைகள் வரி செலுத்துவதில்லை. சட்டம் மற்றும் சட்ட வல்லுனர்களை தங்கள் கைக்குள் வைத்திருப்பதால் பணக்காரர்கள் வருமான வரி செலுத்துவதில்லை. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு பலன் க…
-
- 0 replies
- 494 views
-
-
இந்தியர்கள் என்றாலே இந்துக்கள்தான் என உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்தியா என்பது இந்துஸ்தான் என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வார பத்திரிகை ஒன்றின் பொன் விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "இந்தியர்கள் என்றாலே இந்துக்கள்தான் என உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியா என்பது இந்துஸ்தான் தான். இது ஒரு எளிதான விஷயம். இங்கிலாந்தில் வாழ்பவர்கள் ஆங்கிலேயர்கள் என்றும், ஜெர்மனியில் வாழ்பவர்கள் ஜெர்மானியர்கள் என்றும், அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்கர்கள் என்றும் அழைப்படுகின்றனர். எனவே இந்துஸ்தானில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களாகவே அறியப்படுகின்றனர…
-
- 1 reply
- 468 views
-
-
வட ஈராக்கிலுள்ள கொஷோ கிராமத்தை சுற்றி வளைத்துள்ள ஐ.எஸ்.போராளிகள், அங்குள்ள மக்களுக்கு மதம் மாறுவதற்கு காலக்கெடு விதித்துள்ளனர்.அவ்வாறு மதம் மாறுவதற்கு தவறுபவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொஷோ கிராமத்திலுள்ளவர்கள் மதம் மாறத் தவறும் பட்சத்தில் அந்த கிராமத்திலுள்ள 2,500 பேரும் கொல்லப்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அதிர்ச்சி தகவலை பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. போராளிகள் அந்தப் பிராந்தியத்தில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.கடந்த வாரம் க…
-
- 1 reply
- 471 views
-
-
முன்னாள் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் தியாகோ மரடோனா ஊடகவியலாளர் ஒருவரை கன்னத்தில் அரைந்த சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. மரடோனா தனது குடும்பத்துடன் சிறுவர் தின நிகழ்வில் பங்குபற்றிவிட்டு திரும்பும் வழியில் ஊடகவியலாளர் ஒருவர் மரடோனாவின் முன்னாள் மனைவி வெரோனிகா ஒஜேடாவை பார்த்து கண்ணடித்ததாக குறிப்பிடப்படுகிறது. இதனால் கோபமடைந்த மரடோனா ஊடகவியலாளரை கன்னத்தில் அரைந்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மரடோனா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல, 1986ஆம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டியின் போது இடது கரத்தால் கோல் போட்டு சர்ச்சையை தோற்றுவித்தார். இதேவேளை 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது ஊக்க மருந்து சோதனையில் சிக்கி…
-
- 0 replies
- 198 views
-
-
சிரியாவின் இராணுவ வீரர் ஒருவரது துண்டிக்கப்பட்ட தலையை, ஏழு வயது சிறுவனொருவன் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படமொன்று டுவிட்டரில் வெளியாகி அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஜிஹாட் போராளியான காலீத் ஷெரோத் (வயது 33) என்பவரின் மகனது புகைப்படமே இவ்வாறு டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் யுத்தக்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியா பொலிஸாரினால் தீவிரமாக தேடப்படுபவர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட தனது மகனின் புகைப்படத்தில் 'இவன் என்னுடைய மகன்' என்று காலீத் ஷெரோத் தெரிவித்துள்ளார். இதேவேளை, துண்டிக்கப்பட்ட தலையை கையில் பிடித்துக்கொண்டு 'எ…
-
- 0 replies
- 625 views
-
-
சர்ச்சைக்குரிய சாமியார் சுவரூபாநந்தா பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் என எச்சரிக்கை செய்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஷிருடி சாய் பாபா கோவிலுக்கு வரும்படி சிவ சேனா அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி, ஷிருடிக்கு செல்வாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே சாய்பாபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாமியார் சுவரூபாநந்தா, பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=114691&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 425 views
-
-
இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான் தேவி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஷேர் சிங் ரானா குற்றவாளி என்றும், குற்றம்சாட்டப்பட்ட மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். பழிக்கு பழி வாங்கும் விதமாக நடந்த இந்த கொலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஷேர் சிங் ரானா குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். பூலான் தேவி வரலாறு வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே. ஆனால் அவளது தோற்ற…
-
- 0 replies
- 566 views
-
-
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45-வது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார். மும்பையில் இருந்து 260 கி. மீட்டர் தொலைவில் உள்ளது இயோலா நகரம். அந்த நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் சிறுவயதிலேயே ஜவுளித் தொழிலில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். பள்ளிப் பருவம் முதலே அவருக்கு தங்கத்தின் மீது தணியாத ஆசை. அதனால் எப்போதுமே சுமார் இரண்டு கிலோ அளவுக்கு தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண் டுள்ளார். அவர் தனது 45-வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறார். இதற்காக அவர் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்க சட்டையை வாங்கியுள்ளார். …
-
- 5 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் ஒக்லஹோமா என்ற இடத்தில் உள்ள ஒரு உயர்தர பாடசாலைக்கு ஆசிரியர் ஒருவர் போதையில் காற்சட்டை அணியாது தனது முதல் நாள் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் பாடசாலைக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு ஆசிரியை கைது செய்யப்பட்டார். இவர் மீது மதுபானம் மணந்ததாகவும் ஆடைகள் குறைந்தும் காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. 49-வயதுடைய Lorie Ann Hill என்ற இந்த ஆசிரயை முதலில் பாடசாலையின் சக ஆசிரியர்கள் இருவர் கண்டுள்ளனர். Hill புதிதாக தெரிவு செய்யப்பட்டவர். மதுபானம் அருந்தியிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பொலிசார் பாடசாலைக்குள் வரும் போது தனது காற்சட்டையை அணிந்து கொண்டிருந்தார் என கூறப்பட்டுள்ளது. போதையில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். http:…
-
- 5 replies
- 646 views
-
-
இபோலா - பெருநெருக்கடியில் லைபீரியா இபோலா பரவல் காரணமாக லைபீரிய சுகாதார அமைச்சு முற்றாக நெருக்கடி நிலையை எதிர்கொள்வதாக மருத்துவ தொண்டு அமைப்பான எம் எஸ் எஃப் அமைப்பு கூறியுள்ளது. அந்த நோயின் பரவல் தீவிரத்தை அந்த அமைச்சு குறைத்து மதிப்பிட்டு விட்டது என்று அந்த அமைப்பின் அவசரகால இணைப்பாளர் கூறியுள்ளார். இந்த நெருக்கடியை அரசாங்கம் கையாளும் விதத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தைக் கலைக்க சனிக்கிழமையன்று கலவரம் அடக்கும் போலிஸார் பயன்படுத்தப்பட்டனர். லைபீரியாவில் இந்த வைரஸால் பீடிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க மதகுருவுக்கு மட்ரிட்டில் உள்ள மருத்துவ மனையில் ''சோதனையில் உள்ள மருந்து'' மூலம் சிகிச்சை வழங்கப்படும் என்று ஸ்பானிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. அமெரிக்காவில் இந்த மருந்து…
-
- 0 replies
- 340 views
-
-
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, சியோரா லோன் உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் மூலம் கொடிய உயிர்கொல்லி நோய் உருவாகியுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 1000–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் அவசர கால பிரகடனம் செய்துள்ளது. இதனால் அந்த நோயை நுழைய விடாமல் அனைத்து நாடுகளும் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுபோல், நைஜீரியாவில் தங்கி பணிபுரிந்த கனடாவை சேர்ந்த ஒருவர் தலைநகர் டொரண்டோ திரும்பினார். அவருக்கு காய்ச்சல் மற்றும் ஜலதோசம் இருந்தது. அதை தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவரை ‘எப…
-
- 2 replies
- 337 views
-
-
நேரடி ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா - ஈராக்கில் வான் தாக்குதல் தீவிரம்! உணவுப் பொருள்களும் விமானம் மூலம் வீச்சு!! [sunday 2014-08-10 09:00] வடக்கு ஈராக்கில் சின்ஜார் பகுதியில் இடம்பெயர்ந்து வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இரண்டாவது முறையாக தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் வீசியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வான் தாக்குதல் தீவிரம்; உணவுப் பொருள்களும் விமானம் மூலம் வீச்சு ஒரு சி - 17 ரக சரக்கு விமானம், இரண்டு சி - 130 ரக சரக்கு விமானம் ஆகியவை 72 பொதிகள் அடங்கிய உணவுப் பொருட்களை வீசியிருப்பதாக அமெரிக்க ராணுவத் தலமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்கள் சின்ஜார் நகருக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதியில் வீசப…
-
- 0 replies
- 397 views
-
-
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது எங்கு நிகழ்ந்தாலும், அதில் அமெரிக்கா தலையிடும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய தேசத்தை அமைக்கும் நோக்கத்தில், தற்போது ஈராக் தலைநகர் பாக்தாதை நோக்கி இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனை முறியடிக்க ஈராக் இராணூவம் முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகளும் ஈராக்கில், வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளதாவது, " நாம் யார் என்பது அவசியமான கேள்வி …
-
- 2 replies
- 234 views
-
-
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 48 பயணிகள் பலியாகியுள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 40 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பலியாகியுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. செபாஹன் விமான போக்குவரத்து நிறுவனத்தின் இந்த விமானம் கிழக்கு ஈரானில் உள்ள டாபஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இந்திய நேரம் 10.20 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. டெஹ்ரானுக்குத் தெற்கே மெஹ்ராபாத் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியது. கடைசியாக ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்து 2011ஆம் ஆண்டு நிகழ்ந்தது. வடமேற்கு ஈரானில் பனிப்புயல் காரணமாக தரையிறங்…
-
- 0 replies
- 420 views
-
-
ஈரான்,தெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டபான் எயார்லைன்சுக்கு சொந்தமான #HH5915 என்ற விமானம் காலை 9.45 மணியளவில் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான டபாசுக்கு புறப்பட்டுச் சென்று சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் பழுதானதால் அசாதி குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/08/10/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E…
-
- 0 replies
- 320 views
-
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைகோ சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். மதியம் 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கேளம்பாக் கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. மேலும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறத…
-
- 21 replies
- 830 views
-
-
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது கொடூர தாக்குதால் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் சீக்கியர் அமைப்புகள் நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசிப்பவர் சந்தீப்சிங் (வயது 29). இவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதி, சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது உரசியது. அப்போது கோபமடைந்த சந்தீப், லாரி டிரைவரை கீழே இறங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு கோபமடைந்த லாரி டிரைவர், 'தீவிரவாதி, உன் நாட்டிற்கே செல்' என்று இனவெறியுடன் பேசியதோடு, லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து கிளப்ப முயன்றார். லாரியை சம்பவ இடத்திலிருந்து செல்லவிடாமல், சந்தீப்புக்கு நெருங்கியவர்கள் முற்றுகையிட்டனர். ஆனால் அந்த டிரைவர் லாரி…
-
- 4 replies
- 550 views
-
-
அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தால் அமெரிக்கா நிச்சயம் தலையிடும்: ஒபாமா – அப்போ முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள்??? இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது எங்கு நிகழ்ந்தாலும், அதில் அமெரிக்கா தலையிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார். இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய தேசத்தை அமைக்கும் நோக்கத்தில், தற்போது இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனை முறியடிக்க இராக் ராணூவம் முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகளும் இராக்கில், வான…
-
- 0 replies
- 568 views
-
-
சென்னை வந்த இலங்கை சிறார் கிரிக்கெட் அணியை திருப்பி அனுப்பிய விழையாட்டு அதிகாரிகள்! [saturday 2014-08-09 20:00] தமிழ்நாட்டில் தனியார் கிரிக்கெட் சம்மேளனம் ஒன்று ஏற்பாடு செய்த 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்த இலங்கை இளம் கிரிக்கெட் வீர்ர்கள் குழு ஒன்று, பாதுகாப்பு கவலைகளால், மீண்டும் இலங்கைக்கே திரும்ப அனுப்பப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக அரசு விடுத்த கோரிக்கை ஏற்றுத்தான், அவர்களை நாட்டுக்கு திரும்ப அனுப்பியுள்ளதாக இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எழுதி வந்த கடிதங்களை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்ப…
-
- 0 replies
- 287 views
-
-
.காலத்தின் தேவை கருதி. சில தசாப்தங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜோர்ஜ் ஒர்வேல் எழுதிய 1984 எனும் நூல் வெளியானது. பனிப்போர் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில், கம்யூனிச அரசாங்கங்களை பற்றிய எதிர்மறையான கருத்துகளை பரப்புவதற்காக அந்த நூல் எழுதப் பட்டது. "பெரியண்ணன் உங்களை கண்காணிக்கிறான்" என்ற பெயரில், தனது நாட்டு பிரஜைகளின் நடமாட்டங்களை, அரசு கண்காணிப்பது கதைக்கரு. 1984 நாவல் ஒரு கற்பனைக் கதை. இருப்பினும், அன்றைய ரொமானியாவில் அவ்வாறான அரசாங்கம் இயங்கியதாக, மேற்குலக மக்கள் நம்ப வைக்கப் பட்டனர். இன்றைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சியில் பல வருடங்கள் பின்தங்கியுள்ள, வறிய நாடான ரொமானியாவில் அதெல்லாம் சாத்தியமாகியிருக்க முடியாது. இருப்பினும், "தனி நபர் சுதந்திரத்தை, மனித…
-
- 0 replies
- 565 views
-