Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் ‘தி நியூயார்க்கர்’ நாளிதழில் வெளியான ‘நமது கண்ணுக்குத் தெரியாத ஏழைகள்’ என்ற கட்டுரை, அமெரிக்கா முழுக்க முழுக்க பணக் காரர்களைக் கொண்ட நாடு, அங்கு ஏழைகளே இல்லை என்ற மாயையைத் தகர்த்தது. டிவைட் மெக்டொனால்டு எழுதிய அந்தக் கட்டுரைதான் வறுமைக்கு எதிரான போரை லிண்டன் ஜான்சன் தொடங்கக் காரணமாக அமைந்தது. எங்கே பணக்காரர்கள்? ஏழைகள் இப்போது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்வதாக நான் நினைக்கவில்லை. “அவர்களை ஏழை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் வீட்டில் ‘எக்ஸ்பாக்ஸ்’ (வீடியோ கேம் சாதனம்) இருக்கிறது” என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். உண்மையில், இப்போது பணக்காரர்களைத்தான் பார்க்க முடிவதில்லை. நம்முடைய தொலைக்காட்சிகள் பெரும் பணக்காரர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை, நாடகங்க…

  2. ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அங்கு நடக்கும் ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. ஏனைய சீனப் பகுதிகள் போல் அல்லாது ஹொங் கொங்கில் மக்களுக்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை உண்டு, சிறந்த பேச்சுரிமைய உண்ட, ஹொங் கொங்கிற்கு என்று சீனாவிலும் வேறுபட்ட பொதுச் சட்டம் உண்டு, தனித்துவமான நீதித் துறை உண்டு, ஓரளவு சுதந்திரமான ஊடகத் துறை உண்டு. சீன அரசு ஹொங் கொங் மக்களுக்கு 2017-ம் ஆண்டு ஒரு சுதந்திரத் தேர்தலுக்கான உறுதி மொழியை வழங்கியுள்ளது. ஹொங் கொங்கில் பொதுவுடமை ஆட்சி இல்லாமல் அங்கு ஒரு முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலவுகின்றது எனச் சொல்லலாம். இதற்கான காரணம் 1997-ம் ஆண்டு வரை ஹொங் கொங் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததமையாகும்.…

  3. யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் !! தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் க…

  4. நியூ யார்க்: அமெரிக்காவில் 10 மாத குழந்தையையும், பாட்டியையும் கொன்ற இந்திய வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இந்தியாவைச் சேர்ந்த ரகுநாதன் யண்டமூரி(28) என்பவர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணம் வைத்து சூதாடும் பழக்கத்துக்கு தீவிர அடிமையாகிவிட்ட அவரால், தனது வருமானத்தை வைத்து அமெரிக்காவில் காலம் தள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு இந்தியரின் வீட்டில் இருந்து 10 மாத கைக்குழந்தையைக் கடத்திச் சென்றார்.பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டினார். கைக்குழந…

  5. ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற நான்... Stay Hungry. Stay Foolish. [sTANFORD UNIVERSITY-யின் பட்டமளிப்பு விழாவின் போது ஜூன் 12, 2005அன்று ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ்தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் "STAY HUNGRY. STAY FOOLISH" என்ற தலைப்பில் ஆற்றிய தலைமையுரை] உலகத்தின் மிகச் சிறந்த சர்வகலாசாலைகளில் ஒன்றின்பட்டமளிப்பு விழாவிலே உங்களுடன் இருப்பதிலே நான் மிகுந்தபெருமையுறுகிறேன். நான் பட்டம் எதுவும் பெற்றவனல்ல. உண்மையில், பட்டமளிப்பு விழா ஒன்றினையே இப்போதுதான்பார்க்கிறேன். மூன்றே மூன்று கதைகளை மட்டும் உங்களுக்குசொல்லுவதுதான் எனது நோக்கம். வேறெதுவுமில்லை. முதல் கதை சிதறிக்கிடந்த புள்ளிகள் இணைந்தது பற்றியாகும்.ரீட் கல…

  6. எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சரிதாநாயர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட் டனர். மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். வெளியே வந்ததும் அவர் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி என்பவர் …

  7. தனது காதலி மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து அவரின் மரணத்துக்கு காரணமான தென் ஆபிரிக்க பராலிம்பிக் நட்சத்திரம் ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, மாதாந்தம் 16 மணித்தியாலங்கள் நூதன சாலையை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்பட்டால் போதுமானது என அந்நாட்டு சிறைச்சாலை அதிகார ஒருவர் சிபாரிசு செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப் மீது ஒஸ்கார் பிஸ்டோரியஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் ரீவா உயிரிழந்தார். இதனால் ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது ஆனால், வீட்டுக்குள் திருடன் நுழைந்திருப்பதாக என எண்ணியே தான் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பிஸ்டோரியஸ் கூறினார். 29 வயதான மொடல் அழகியும், சட்டக்கல்லூரி ம…

  8. முக்கிய அறிவித்தல் பிரான்ஸ் அரசாங்கம் உரிய அனுமதியின்றி தனது நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக எதிர்வரும் 13.10.2014 ம் திகதியில் இருந்து 26.10.2014 வரை சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கென 18ஆயிரம் காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது அகதி தஞ்;சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் Gare de Nord Gare de l’ Est Gare de Lyon Chateau Rouge Barbés Gallieni Airoporte Charles de Galle ஆகிய இடங்களுக்கு இந்த திகதியில் அநாவசியமாக செல்வதை தவிர்ப்பது நல்லது.

    • 16 replies
    • 1.5k views
  9. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அந்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 33 பேர் இவ்வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுள்ளதுடன் 8 ஆயிரத்து 399 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைபீரியாவில் இந்நோய் காரணமாக உயிரிழந்த உறவுகளை எண்ணி கண்ணீர் சிந்தித் துடிப்போரின் புகைப்படங்களை டெய்லி மெயில் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/10/12/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%…

    • 0 replies
    • 1.4k views
  10. ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புய மிகமிக தீவிரப் புயலாக உருவெடுத்தது. ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் மூன்று பேர் பலி: ஹுத்ஹுத் புயல் மழைக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். ஹுத்ஹுத் புயலினால் ஏற்பட்டுள்ள முதல் பலி இவை. ஸ்ரீகாகுளத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்…

  11. ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நாளை கரையை கடக்க இருக்கும் ஹுத்ஹுத் புயல், கிழக்கு கடற்கரை அருகே 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த புயல் வெள்ளிக்கிழமை மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | படம்: பி.டி.ஐ. ஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறு…

  12. அமெரிக்கா- 29-வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 1-ந்திகதிக்கு முன்னர் இறந்துவிட எதிர்பார்க்கின்றார். இப்பெண்ணை வருத்திக்கொண்டிருக்கும் மூளை புற்று நோய் ஒக்டோபர் மாதத்தில் அவரை கொல்லாது விட்டால் தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். தனது கணவனின் 30-வது பிறந்த நாள் முடிந்து சில நாட்களில் நவம்பர் மாதம் 1-ந்திகதி உயிரை விட தீர்மானித்துள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த Brittany Maynard இவரும் இவரது கணவர் Dan Diaz-ம் கலிபோர்னியாவை விட்டு Oregon சென்றுள்ளனர். ஏனெனில் அங்கு முடிவு கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் வைத்தியர் ஒருவரால் பரிந்துரைக்கப்படும் உயிர் நீக்கும் மருந்துகள் மூலம் தங்களது உயிரை போக்கி கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 1997-ல் ய…

  13. நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது. நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக…

  14. அடாவடித்தனம் நீடித்தால் தாங்க முடியாத விலை கொடுக்க நேரிடும்: பாகிஸ்தானுக்கு மோடி எச்சரிக்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த புதன்கிழமை மராட்டிய மாநிலம் மகாட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். அதற்கு, பாரமதி என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் மோடி பதில் அளித்தார். முக்கியமான பிரச்சினையில் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் அருவருப்பான அரசியல் நடத்துகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். அத்துடன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். எல்லையில் இப்போது துப்பாக்கிகளில் இருந்து குண்டு…

  15. பிரான்சில் அழகான வீடு வாங்கணுமா? இதுதான் சரியான தருணம் பிரான்சில் வீடுகள் மற்றும் நிலத்தின் மீதான விலைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் வீடுகள் மற்றும் மனைகளின் விலை 3.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1.5 சதவிகிதமாக குறைந்த விலை, செப்டம்பரில் 1 சதவிகிதம், அக்டோபரில் மேலும் 1 சதவிகிதமாக குறைந்து கொண்டே போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை கடந்த மார்ச் 2011ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 9.1 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சராசரியாக பிரான்ஸில் ஒரு சதுர அடி 7,850 பவுண்ட்ஸ் விற்கப்படுகிறது. எனவே வீடு வாங்குபவர்களுக்கும், ரியல் எஸ்டேட்டில் …

  16. டெல்லியில் இணைய மாநாட்டில் பங்கேற்று பேசிய மார்க் ஸக்கர்பெர்க்.| படம்: ராஜீவ் பட். இந்திய கிராமங்களை இணையத்தால் இணைக்கும் முயற்சிக்கு ஃபேஸ்புக் உதவத் தயாராக இருப்பதாக, டெல்லியில் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார். டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இணைய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இன்று (வியாழக்கிழமை) காலை இந்தியா வந்தார். இணைய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, "திறனுக்கு வரம்பே இல்லாத அற்புதமான நாடு இந்தியா. சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்தியா சிறந்த களம். அந்த வகையில் ஃபேஸ்புக் வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. இங்கு மென்மேலும் பல வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக ந…

  17. 'சே' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சே குவேரா ஆர்ஜென்ரீனாவில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்திய ஆர்ஜென்ரீனா வறுமையிலும் அதன் விளைவாக சுகாதார முறைகளிலும் பின்தங்கியிருந்தது. இதன்விளைவாக சே பிறந்த ஒரு சில மாதங்களிலேயே ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்டார். மருத்துவம் படித்து ஒரு சிறந்த மருத்துவராக சேவை புரிந்து பின்னாளில் மார்க்சியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு புரட்சியாளாராக மாறினார். கியூபாவிற்குச் சென்று அந்நாட்டின் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் போராளி. அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளையும் விடுதலைசெய்ய பயணித்தபோது தென்பொலிவியக் காடுகளில் அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளாலும் பொலிவிய படைகளினாலும் சதித்தனமான முறையில் கொல்லப்பட்டார். கியூபாவின் விடுதலையி…

  18. ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியையொட்டி அமைந்திருக்கும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இன்றும் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகினர். இதனால் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சம்பா பகுதியையொட்டிய பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. பலியான 2 பேரில் ஒருவர் பெண் ஆவார். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்துவருவதாகவும், எல்லைப்பகுதியையொட்டிய வீடுகளில் வசிப்பவர்களை வீட்டிற்குள் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரி டி.கே. பதக் தெரிவித்துள்ளார். இரு தரப்பு த…

  19. பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்தபோதிலும் கூட, நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் அது தவறு என்று தற்போது தெரிய வந்துள்ளது. முன்னதாக இன்று முற்பகல் நடந்த விவாதத்தின்போது, ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார். மேலும் லாலு பிரசாத் வழக்கில்…

  20. இந்திய-பாகிஸ்தான் மோதல் ; அமெரிக்கா கவலை இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியபோது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தாக்குதல்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் உடனடித் தீர்வு காண வேண்டும்.காஷ்மீர் குறித்த எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.அந்த விவகாரம் குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும்தான் பேசி முடிவெடுக்கவேண்டும் என்றார் அவர். http://www.tamilnewsbbc.com/2014/10/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%…

    • 0 replies
    • 820 views
  21. தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்! இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத் திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் அய்ம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். ‘‘M130’’ எனப்படும்…

  22. கிரீன்பீஸ் அமைப்பு நியாயமாகச் சில கேள்விகளை எழுப்பினாலும் அதன் மீதும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. ‘நீங்கள் அருந்தும் தேநீர் ஒரு விஷம்’ என்று பரபரப்பாக கிரீன்பீஸ் அமைப்பு சமீபத்தில் இந்தியத் தேயிலைகுறித்து ஒரு ஆய்வக அறிக்கையை வெளியிட்டது. சந்தையில் கிடைக்கும் பிரபல பிராண்டுகளை வேதியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அதில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பட்டியலிட்டிருக்கிறது. இதைப் படித்தால், ‘அதிகாலையில் எழுந்ததும் விஷத்தையா வாய்க்குள் விடுகிறோம்?’ என்ற கேள்வி நியாயமாகவே எழும். இதற்கு முன்பே, 2012-ல் சீனாவில் பெய்ஜிங் நகரில் ‘லிப்டன்’ தேயிலையை கிரீன்பீஸ் பரிசோதித்து, அவற்றில் தடைவிதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளும், நச்சுப் பொருட்களும், உட்கொள்ளும் அளவுக்கு அதிக மாகக் காணப்படுவத…

  23. தீவிரவாதி என நினைத்து இரு கைகள் இல்லாத இளைஞரை சுட்டுகொன்ற பொலிஸார்! (வீடியோ) அமெரிக்காவில் யூட்டா என்ற மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு கையில்லாத ஒரு இளைஞனை தீவிரவாதி என தவறாக நினைத்து சுட்டு கொன்றுவிட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற ம் நிறைந்துள்ளது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் என்ற நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான போர்ன் குருஸ் என்பவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது மூன்று தீவிரவாதிகள் வீதியன் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்ததை அவதானித்துள்ளார். அவர் உடனடியாக தன்னுடைய காரில் இருந்து இறங்கி மூவரையும் நோக்கி தன்னுடைய துப்பாக்கியை காண்பித்து உடனடியாக மூவரும் கைகளை மேலே தூக்கும்படி எச்சரித்தார். The shooting death of…

  24. ஸ்வீடன்: 2014 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூளையில் உள்ள செல்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக ஜான் ஓ கிஃபி, நே பிரிட் மோசர், எட்வர்டு ஐ மோசருக்கு ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக்குழு செயலாளர் கோரன்ஹான்சன் இதனை அறிவித்துள்ளார். மருத்துவ நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ள ஜான் ஓ கிஃபி அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆவார். தம்பதிகளான நே பிரிட் மோசர் மற்றும் எட்வர்டு ஐ மோசர் ஆகியோர் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளாவார்கள். http://news.vikatan.com/article.php?module=news&aid=33176

  25. சர்ச்சைக்குரிய நியூயார்க் டைம்ஸ் கார்ட்டூன் செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. 'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசுமாட்டுடன் வந்து கதவைத் தட்டுவதுப் போல இந்தியாவை அவர் சித்தரித்திருந்தது. இந்த சர்ச்சை குறித்து பேஸ்புக் பதிவொன்றின் மூலம் எழுதிய நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்தக் கார்ட்டூன் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் பிரத்தியேக வெளியாக இனி இல்லை என்பதைக் காட்டவே வரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.