Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அல்ஜீரியாவில் விமான விபத்து: இராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் பலி! [Wednesday, 2014-02-12 12:30:45] அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆம் எல்போவாகி மாகாணத்தில் ராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும், அதாவது சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கான்ஸ்டன்டைன்-எல் போவாகி இடையே சென்றபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவும், ஆம்புலன்சு…

  2. தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் மிதக்கும் இங்கிலாந்து நகரங்கள்! [Tuesday, 2014-02-11 18:27:14] இங்கிலாந்தில் பெய்யும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லண்டன் அருகே வெள்ளம் புகுந்தது. இங்கிலாந்தில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் இங்கிலாந்தின் மிகப்பெரிய தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கரையோரம் இருக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேம்ஸ் நதியின் சில கரைகள் உடைந்துவிட்டன. இதனால் லண்டன் அருகேயுள்ள பெர்க்ஷர…

  3. நிர்வாணக்கோலத்தில் மோடிக்கு ஆதரவு தேடும் மேக்னா பட்டேல்! – பாஜக அதிர்ச்சி. [Tuesday, 2014-02-11 18:05:18] பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இணையதளங்களில் தற்போது பரபரப்பாகவும், மின்னல் வேகத்திலும் பரவி வரும் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி கருத்து தெரிவித்த மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் மாதவ் பந்தாரி, ‘மோடிக்கு பலர் ஆதரவு திரட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். எனினும், இதைப்போன்ற ஆபாசமான அணுகுமுறைகள் ஏற்கத் தக்கதல்ல. சில நிமிடங்களுக்குள் பிரபலமட…

  4. போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் உலக சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் மரணமடைந்துவிட்டதாக வெளியான தகவல்களை அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 45 வயதான மைக்கல் ஷூமாக்கர் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானதிலிருந்து பிரான்ஸிலுள்ள கிறேனோபிள் வைத்தியசாலையில் செயற்கை கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பரவியிருந்தன. ஆனால், மைக்கல் ஷூமாக்கர் உயிருடன் உள்ளதாகவும் அவரை கோமாவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கிறேனோபிள் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.…

  5. சவூதி அரேபியாவின் மதீனா நகரில் யாததிரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலொன்றில் நேற்றுமுன்தினம் தீப்பற்றியதால் 15 பேர் உயிரிழந்ததுடன் 130பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஷ்ரக் அல் மதீனா எனும் ஹோட்டலில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தீப்பற்றியதாகவும் இறந்தவர்களில் எகிப்து, துருக்கி உட்பட வௌ; வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் மதீனா ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அதேவேளை இறந்தவர்களில் பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=4169#sthash.T2mES6mm.dpuf

  6. காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி [saturday, 2014-02-08 08:08:05] பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் நான் ஒரு சிப்பாய். இதை சமீபத…

    • 7 replies
    • 447 views
  7. மதுரை, முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையான காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைவதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பேசியதாவது:– தேவரின் பொன்மொழிகள் ‘‘இங்கு பெருந்திரளாக கூடியுள்ள சகோதர சகோதரிகளே கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட தேவர் திருமக…

  8. நரேந்திர மோடி வரலாறு தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு [sunday, 2014-02-09 12:00:58] பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரலாறு தெரியாமல் குஜராத்தில் ஆட்சி நடத்துவதாகவும், அவர் வரலாற்றை சரியாக படிக்கவில்லை என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பர்தோலியில் நேற்று மதியம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு கூறிய அவர், மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் ஆகியோரை பற்றி குஜராத் பா.ஜனதா தலைவர்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம்தான் காந்தி கொலைக்கு காரணம் என்றும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த நாட்டை அழிக்கும் விஷம் போன்றது எ…

  9. புதுடில்லி: டில்லி மாநில, முன்னாள் முதல்வர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ஷீலா தீட்ஷித் மீது, காமன்வெல்த் விளையாட்டு முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, ஆவணங்களை அனுப்பியுள்ள, "ஆம் ஆத்மி' கட்சி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளது. டில்லியில், 2010ல் நடந்த, காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ், எம்.பி., சுரேஷ் கல்மாடி, ஷீலா தீட்ஷித் உட்பட, பலர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க, பிரதமர், மன்மோகன் சிங் உத்தரவின் படி, ஷாங்லு கமிட்டி விசாரணை நடத்தி, ஷீலா மற்றும் அப்போதைய லெப்டினன்ட் கவர்னர், தேஜிந்தர் கன்னா ஆகியோர் மீது, பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அது தொடர்பான ஆதாரங்க…

  10. துருக்கி சென்ற விமானத்தை ரஷ்யாவுக்கு கடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு! [saturday, 2014-02-08 19:14:58] உக்ரைனில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 110 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 45 வயது மதிக்கதக்க பயணி ஒருவர் எழுந்தார். அவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரஷியாவின் சோஷி நகருக்கு ஓட்டும் படியும் மிரட்டல் விடுத்தான்.இந்த தகவலை காக் பிட் பகுதிக்கு சென்று விமானிகளிடம் கூறினான். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக அந்த கடத்தல்காரனிடம் தந்திரமாக நைசாக…

  11. உலகின் முதனிலை கணனி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகிக்கொண்டார். உலகச் செல்வந்தர்களில் முன்னணி வகித்து வரும் பில் கேட்ஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் தொம்பசன் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பணிப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட பில் கேட்ஸ், நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்தும் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சத்யா நடெல்லா மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்க…

    • 8 replies
    • 1.4k views
  12. ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட- அயர்லாந்து பிராந்தியங்களின் மக்கள் கோர வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்காட்லாந்து தனிநாடாக சுதந்திரம் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு செப்டெம்பெரில் நடக்கிறது. அதேபோல, நாடு ஐக்கியப் பட்டிருக்கவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் 'அலட்சியமாக' இருந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்று தீர்மானித்தால், முழு ஐக்கிய இராச்சியமும் 'மோசமாக சுருங்கிவிடும்' என்று பிரதமர் கெமரன் லண்டனில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார். அதேநேரம், டேவிட் கெமரன் 'கோழைத் தனமாக' இந்த உரையை…

  13. ஜேர்மனியில் 380 அடி உயரமான பல்கலைக்கழக கட்டிடம் தகர்ப்பு மேற்கு ஜேர்மனியில் பிராங்பூட்டிலுள்ள 380 அடி உயரமான பழைய பல்கலைக்கழக கட்டிடமொன்று கட்டுப்பாட்டின் கீழ் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகள் பழைமையான மேற்படி 50,000 தொன் நிறையுடைய அபி கோபுர கட்டிடத்தில் 32 ஆவது மாடியில் 1500 துளைகள் இடப்பட்டு அவற்றினுள் 950கிலோ கிராம் நிறையுடைய வெடிபொருட்கள் உட்செலுத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இது வெடி வைத்து தகர்க்கப்பட்ட ஜரோப்பாவிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக விளங்குகிறது. அந்தக் கட்டிடம் வெடி வைக்கப்பட்டு 10 செக்கன்களில் தரைமட்டமாகியது. மேற்படி கட்டிடத்தின் தகர்ப்பின்போது அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அந்தக் கட்டிடத்…

  14. பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டுகொள்வதில்லை – வத்திக்கானுக்கு ஐ.நா கண்டனம். [Thursday, 2014-02-06 17:28:44] கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா விமர்சித்திருக்கிறது.சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும், ஒரு பாலுறவு, கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விஷயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகளையும் அது கடுமையாக விமர்சித்திருக்கிற…

  15. கேரள மாநிலம் கொல்லம் கடற்பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இரண்டு பேரை அந்த வழியாக வந்த இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலானோ ரத்தோர், சல்வதோர் ஜிரோன் ஆகிய இரண்டு வீரர்களை கேரள போலீஸார் கைது செய்தனர். இருவருக்கும் மரண தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவிலிருந்து விலக்கு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன்வதியுடன் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவின் கீழ் இத்தாலி வீரர்கள் மீது வழக்கு தொடர வேண்டாம் என ம…

  16. தலைவர்கள் தவறினால் - மக்கள் தலைமை ஏற்கவேண்டும்: - கோபி அன்னன் [Thursday, 2014-02-06 16:06:28] தலைவர்கள் மக்களை வழிநடத்த தவறினால், மக்கள் தலைமை பொறுப்பேற்று தலைவர்களை வழிநடத்த வேண்டும் எனவும், தலைவர்கள் மக்களின் வழியில் செயல்பட வேண்டும் எனவும் ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தெரிவித்துள்ளார். தட்பவெப்ப நிலை, புவி வெப்பமயமாதல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது கோபி அன்னன் இவ்வாறு தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலும், ஆப்ரிக்காவிலும் அமைதி திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் குறித்தும், அவற்றின் நிலை குறித்தும் பேசிய கோபி அன…

  17. சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பா…

  18. இப்போதெல்லாம் சிலர் எங்கு சென்றாலும் செல்லிடத் தொலைபேசி கெமரா மூலம் தம்மைத்தாமே படம்பிடித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் போன்றவர்கள்கூட இதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தன்னைத்தானே படம்பிடித்துக்கொள்வது செல்ஃபீ (Sefie) என குறிப்பிடப்படுகிறது. பொதுவாக பலரும் மகிழ்ச்சிகரமான சூழலில்தான் இப்படி செலஃ;பீ படம்பிடித்துக்கொள்வாரள். ஆனால் அமெரிக்காவைச் சேரந்த இளைஞர் காளை மாடுகள் தன்னை துரத்திவரும் நிலையில் செல்ஃபீ படம்பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். உலகில் இதுவரையான மிக ஆபத்தான செல்ஃபீ படமாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஹொஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹொஸ்டன் காளை ஓட்டப்போட்…

  19. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடில்லியில் வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த சில தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் என கூறப்படும் ஒலிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டன. தொடர்புடைய விடயங்கள் ஊழல், திமுக மேலும் கலைஞ…

  20. 2ம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது. ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர். ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூடுதல் பரபரப்பையும் அவர் கிளப்பி விட்டுள்ளார். அதை விட முக்கியமானது, அவர் பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்தார் என்பதுதான். சிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவிதான் Hi…

  21. மூழ்கவே மூழ்காது என்ற கோஷத்துடன் 1912ஆம் ஆண்டு புறப்பட்ட டைட்டானிக் கப்பல், அதன் முதல் பயணத்திலேயே, அட்லான்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கக் காரணமாக இருந்த ஜகோப்ஷவ்ன் பனிப்பாறை தற்போது அதிகமாக உருகி, கடலில் வேகமாக நகர்ந்து வருகிறது. உலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, பனிப்பாறைகள் உருகி, உலகின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், டைட்டானிக் கப்பலுக்கு வில்லனாக இருந்த ஜகோப்ஷ்வன் பனிப்பாறையும் உருகுவதால், அது கடலில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், அட்லாண்டிக் கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=102978&category=WorldNews&l…

  22. லிபியாவில் இருந்த அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் அப்டெலாசிஸ், அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குண்டுகள், எறிகனைகள் உள்ளிட்ட அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டில் லிபியாவிடம் 25 டன் இரசாயன ஆயுதங்கள் இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=102981&category=WorldNews&language=tamil

  23. பதிமூன்று மாத காலம் நடுக் கடலில் திக்குத்தெரியாமல் தத்தளித்து உயிர் தப்பியுள்ள எல் சால்வடோர்காரர் ஒருவர் சொந்த நாடு திரும்பி குடும்பத்தாரைக் காண விருப்பம் தெரிவித்துள்ளார். மெக்ஸிகோவின் மேற்குக் கரையில் பழுதான இவரது படகு கடல் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆஸ்திரேலியாவுக்கு வடக்கேயுள்ள மார்ஷல் தீவுக் கூட்டத்தின் பவளத் தீவு ஒன்றில் அண்மையில் கரை ஒதுங்கியுள்ளது. கடல் ஆமைகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை பிடித்து பச்சையாக உண்டும், தனது சிறுநீரையே குடித்தும் இவர் உயிர் வாழ்ந்துள்ளார். தனது அளவற்ற கடவுள் நம்பிக்கையும், அன்புக்குரியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவலும், பிடித்த உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கனவும்தான் கடும் கஷ்டங்களுக்கு இட…

  24. 2ஜி ஊழல் சம்பந்தமாக கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மற்றும் கடந்த திமுக ஆட்சியில் உளவுத்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் தற்போது வெளிவந்துள்ளது. முதலில் ஜாபர் ஷெரிப்பிடம் கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், 2ஜி வழக்கிலிருந்து தயாளு அம்மாளை காப்பாற்றும் வகையில் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களின் சந்திப்புகள் தொடர்பாக ஆவணங்கள் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக 200 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கனிமொழிக்கும் ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதே பணப் பரிமாற்றம் தொடர…

  25. மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த டைனோசரஸ் படிவங்கள் கடந்த 2000–ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து 27 டைனோசரஸ் முட்டைகளும் இருந்தன.அவற்றை கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மந்து அருகே அஷ்மேதாவில் உள்ள புதை படிவம் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அவை விசேஷ கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், அங்கிருந்த 27 டைனோசரஸ் முட்டைகளும் திடீரென மாயமாயின, அவற்றை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தார் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 498 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாவலர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.