உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஒரு பகுதியினரை அரசு ஆதரவு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த ராணுவப் புரட்சியை முறியடித்துவிட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட 161 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 2 ஆயிரத்து 839 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் பிரதமர் பினாலி யில்டிரிம் கூறியுள்ளார். இ…
-
- 0 replies
- 181 views
-
-
துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் தென் கிழக்கு மாகாணத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஐந்து துருக்கிப் படையினரும் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் கிளர்ச்சிக் குழுவான பீ.கே.கே. என்ற அமைப்பு இந்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் ஏழு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130713/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 343 views
-
-
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை; பங்கெடுக்காத ட்ரம்ப், புட்டின். மூன்று ஆண்டுகளில் மொஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் வியாழக்கிழமை (15) குறிப்பிட்டனர். அதற்கு பதிலாக கிரெம்ளின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை அனுப்பியது. ஞாயிற்றுக்கிழமை, “எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல்” இஸ்தான்புல்லில் உக்ரேனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த புட்டின் முன்மொழிந்தார். புதன்கிழமை (14) தாமதமாக, கிரெம்ளின் குழுவில் ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்…
-
- 9 replies
- 457 views
- 1 follower
-
-
அங்காரா: துருக்கியில் நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வான் என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு ஒன்றில், போலீஸ் அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு பொது மக்கள் பலியானார்கள். 20 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், ஈலாஜிக் என்ற நகரில் போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக அருகிலிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. http:…
-
- 2 replies
- 384 views
-
-
துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். தற்போது மத்திய மற்றும் மேற்…
-
- 0 replies
- 130 views
-
-
துருக்கியில் கார்க்குண்டு தாக்குதல் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் இல் பொலிஸ் பஸ்ஸை இலக்கு வைத்து கார்க்குண்டு தாக்குதலொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸானது வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது ரிமோட் கண்ட்ரோலரின் உதவியுடன் தாக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 4 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 36 பேர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த கார்க்குண்டு தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. http://www.…
-
- 0 replies
- 360 views
-
-
துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 14 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (27.07.2008) இரவு 22.00 மணியளவில் இஸ்தன்பூல் என்ற இடத்தில் இடம்பெற்றதாகவும், அங்கு 14 பேர் குண்டு வெடித்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,100 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகின்றது. மேலும் வாசிக்க............ http://www.tamilseythi.com/world/14-killed-in-Tyrkia.html
-
- 0 replies
- 642 views
-
-
துருக்கியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி அங்காரா : துருக்கி தலைநகர் அங்காராவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1459386 படங்கள். ஜேர்மனிய செய்தி ஊடகங்கள் கடைசி செய்திகளின்படி 28 பேர் பலி 60 க்கு மேற்பட்டோர் காயம்
-
- 1 reply
- 435 views
-
-
துருக்கியில் குர்திஸ் இனத்தவர்களையும் உள்ளடக்கிய புதிய பாராளுமன்ற பதவியேற்பு [06 - August - 2007] துருக்கியில் பல வருடங்களின் பின்னர் குர்திஸ் இனத்திற்கு சார்பான 20 பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய பாராளுமன்றம் சத்தியப் பிரமாணம் செய்துள்ளது. 1983 களிலிருந்து தொடரும், துருக்கி மற்றும் குர்திஸ் இன மோதலுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு தாம் விரும்புவதாக புதிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 1991 இற்குப்பின்னர் தற்போது முதற் தடவையாக குர்திஸ் இன பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனரென்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக பாராளுமன்றத்திற்கு தெரிவான குர்திஸ் இன உறுப்பினர்கள் குர்திஸ் மொழியிலேயே தமது சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்ட போதும் தற்போது இவர்…
-
- 0 replies
- 675 views
-
-
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பான்-ஐரோப்பிய ஒத்துழைப்புத் துறையின் தலைவர் நிகோலாய் கோப்ரினெட்ஸ், துருக்கியில், இஸ்தான்புல், தக்சிம் மாவட்டத்தில் உள்ள அவரது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ரஷ்ய தூதுவர் இஸ்தான்புல்லிற்கு கூட்டம் ஒன்றிற்கு கலந்துகொள்வதற்காக வருகை தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த கூட்டத்தை தவற விட்டமையால் ரஷ்ய அதிகாரிகள் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த வேளை அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை விசாரணைகளின் ஆரம்ப அறிக்கைகள் கோப்ரினெட்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றன. எனினும் அவரது உயிரிழப்பிற்கான சரியான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
துருக்கியில் டுவிட்டருக்குத் தடை! [saturday, 2014-03-22 17:48:19] துருக்கியில் தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு டிவிட்டர் இணையத் தளத்துக்கு தடை விதித்துள்ளது.துருக்கி பிரதமர் மீதும், அவர் அரசின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் விசாரணை நிலவரங்கள் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துருக்கி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. துருக்கி பிரதமர் எர்டோகனின் இந்த நடவடிக்கை முற்றிலும் அடிப்படையில்லாதது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஐரோப்பியன் கமிஷன் துணை தலைவர் நீலீ கிரோஸ் தெரிவித்து…
-
- 0 replies
- 326 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை DHA/Youtube வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பாலம்தான் மேய்ச்சல் நிலத்துடன் மேட்டு பகுதிகளை இணைத்தது என டெமிரோரென் செய்தி முகமை தெரிவிக்கிறது. பலஹோர் ஓடையின் குறுக்கே இருந்த இந்த பாலத்தை கடந்தவாரம் கூட பார்த்ததாக மக்கள் கூ…
-
- 0 replies
- 546 views
-
-
துருக்கியில் நடைபெற்ற இரண்டாவது கட்ட அதிபர் தேர்தலில்,எர்டோகன் மீண்டும் துருக்கி அதிபராகின்றார். Erdogan wins Turkish election, extending rule to third decade President Recep Tayyip Erdogan speaks at the presidential palace after winning reelection in a runoff. Chris McGrath/Getty Images CNN — President Recep Tayyip Erdogan has won Turkey’s presidential election, …
-
- 3 replies
- 416 views
- 1 follower
-
-
துருக்கியில் பணவீக்கம் 85.51 சதவீதமாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 02:05 PM துருக்கியின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 85.51 சதவீதமாக அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ தரவுகள் இன்று (03) வெளிப்படுத்தியுள்ளன. 1997 ஆம் ஆண்டின் பின்னர் துருக்கில் ஏற்பட்ட மிக அதிகளவு பணவீக்கம் இதுவாகும். துருக்கியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் ஆதரித்து வருகிறார். விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ஆனால், உயர் …
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 15 பேர் காயம் இஸ்தான்புல் குண்டுவெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ். இஸ்தான்புல்லில் குண்டு வெடிப்புப் பகுதியில் மீட்புப் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுல்தனாமெட் சதுக்கத்தில…
-
- 2 replies
- 566 views
-
-
அங்காரா: துருக்கியின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஐநூறு முதல் ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் துறை தலைவர் கூறியுள்ளார். துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் என்ற மிகப்பெரிய நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் காயமடைந்தர்களில் பலர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர். எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில், "நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன; பலர் பலியாகியுள்ளனர். எனினும், எத்தன…
-
- 1 reply
- 410 views
-
-
துருக்கியில் பயங்கர வெடி குண்டு தாக்குதல்: 27 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்[ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 10:34.57 மு.ப GMT ] துருக்கி நாட்டில் உள்ள கலாச்சார மையம் ஒன்றில் சற்று முன்னர் நிகழ்ந்த பயங்கர வெடி குண்டு தாக்குதலில் 27 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லைகளுக்கு அருகே உள்ள Suruc என்ற நகரில் அமைந்துள்ள Amara கலாச்சார மையத்தில் தான் இந்த வெடி குண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் தற்போது வரை சுமார் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. Suruc நகரிலிருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள Ko…
-
- 0 replies
- 352 views
-
-
துருக்கியில் பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி துருக்கியில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், விரிவுரையாளர் ஒருவர் மற்றும் பணியாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர்…
-
- 0 replies
- 399 views
-
-
துருக்கியில் புகையிரதம் தடம் புரண்டதில் 24 பேர் பலி துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 360 பயணிகளுடன் சென்ற பயணிகள் புகையிரதம் தெகிர்டாக் பகுதியில் செல்லும் போது குறித்த புகையிரதத்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புகையிரதத்தில் பயணம் செய்த 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணித்து…
-
- 0 replies
- 292 views
-
-
துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக் காரணம் என்ன? துருக்கிய ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கச் செல்கின்றனர். | படம்: ஏ.பி. துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன. வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதச்சார்பின்மை அரசியல் கொண்டது. ஜனநாயகம், அனைவருக்கும் இலவசக் கல்வி, பெண்களுக்கான சம உரிமை, மேற்கத்திய பாணி வாழ்க்கை முறை ஆகியவற்றை தங்களது கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள கீமலிசம் என்ற கொள்கையை ராணுவம் தூக்கிப் பிடிக்கிறது. மேலும் இவைதான் அரசின் கொள்கையாக…
-
- 0 replies
- 433 views
-
-
துருக்கியில் வெடிப்புச்சம்பவம் - பலர் காயம் By RAJEEBAN 13 NOV, 2022 | 08:36 PM துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இஸ்தான்புல் ஆளுநர் இதனை உறுதி செய்துள்ளதுடன் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வெடிவிபத்திற்கான காரணங்கள் இன்னமும் வெளியாகவில்லை இந்த வெடிவிபத்தை பதிவு செய்த பலர் அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அவசரசேவை பிரிவினர் விரைந்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வீதிகளில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் …
-
- 2 replies
- 240 views
- 1 follower
-
-
துருக்கி நாட்டின் வடகிழக்கு கிரெசன் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. சிகோர்ஸ்கி என்ற அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரமாண மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் குழந்தைகள். கருங்கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரமலான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக இராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவ தலைமை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது உற…
-
- 0 replies
- 272 views
-
-
துருக்கியுடனான பதற்றம்: மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்திய தரைக்கடலில் துருக்கியுடன் பதற்றம் நீடித்து வருவதால், மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்க கிரேக்கம் திட்டமிட்டுள்ளது. கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், கிரேக்க ஊடக அறிக்கையின்படி, ஏதென்ஸ் நான்கு புதிய போர் கப்பல்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஜனவரியில், கிரேக்கம் 18 விமானங்களுக்கு முன்பதிவு செய்தது. அவற்றில் 12 விமானங்கள் 2.5 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கிரேக்கத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 ரஃபேல் ஜெட் விமானங்களில், 12 தற்போது பிரான்ஸில் சேவையில…
-
- 0 replies
- 311 views
-
-
Published By: RAJEEBAN 02 MAR, 2025 | 12:13 PM துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஸ் போராளிகள் அமைப்பான பிகேகே யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகேகே அமைப்பிற்கு நெருக்கமான பிராட் செய்தி நிறுவனம் அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது. 1999 முதல் துருக்கியின் சிறையில் வாடும் பிகேகே அமைப்பின் தலைவரை மேற்கோள்காட்டி இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிராட் செய்தி நிறுவனம் சமாதான ஜனநாயக சமூகத்தினை ஏற்படுத்துவதற்காக பிகேகே தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று யுத…
-
- 3 replies
- 415 views
- 1 follower
-
-
துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்! துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கம், துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில், 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. அத்துடன், தெற்கு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து 4.0 அல்லது அதற்கும் அதிகமான அளவ…
-
- 58 replies
- 3.6k views
-