உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மனிதவள ஆலோசகராக பணிபுரிந்து வருபவர் சச்சின். இவரது மனைவி சித்ரா ராகவ். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சித்ராவுக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். முதல் பிரசவம் என்பதால் சித்ராவை டெல்லியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட சச்சின் முடிவு செய்தார். நேற்று காலை 7.15 மணிக்கு அவர் சித்ராவை ஒரு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றார். விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் சித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த கணவர் சச்சினிடம் இதுபற்றி சித்ரா கூறினார். ஆனால் பிரசவத்துக்கு டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், இது சாதாரண வலியாகத்தான் இருக்கும். பயப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் எயர்லைன்ஸ்விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளார்- 20 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட விமானத்தில் 211 பயணிகள் உட்பட 229 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர் என சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி | Virakesari.lk
-
-
- 11 replies
- 897 views
- 1 follower
-
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய விமானம் : 8 விமான ஊழியர்களும் 4 பயணிகளும் காயம் பெருவின் லிமா நகரிலிருந்து ஆர்ஜென்டீனாவின் புயனொஸ் அயர்ஸுக்கு 23 பயணிகளுடனும் விமான ஊழியர்களுடனும் பயணித்த விமானமொன்று கடுமையாக குலுங்கியதால் அந்த விமானத்தின் 8 ஊழியர்களும் 4 பயணிகளும் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரு ஊழியர்கள் தலையில் காயத்துக்கும் கழுத்து எலும்புப் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த விமானம் தரையிலிருந்து 41,000 அடி உயரத்தில் பறக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 80 நிமிடங்கள் கழித்து அந்த விமானம் புயனொஸ் அயர…
-
- 0 replies
- 338 views
-
-
நடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video) விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது காற்று சீராக்கி (AC) வேலை செய்யாததால் விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் மதினா நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி , சவுதி எயார்லைன்ஸ் விமானம் SV -706 கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது. ஹஜ் புனிதப் பயணத்தினை முடித்து விட்டு நாடு திரும்பும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்தோர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள காற்று சீராக்கி (AC) திடீர…
-
- 0 replies
- 496 views
-
-
நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும். இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்ற…
-
- 2 replies
- 587 views
-
-
கடந்த 2ஆம் தேதியன்று சிங்கப்பூரில் இருந்து டொரண்டோவிற்கு வந்து கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 மீட்டர் வரை நிலைகுலைந்து கீழ்நோக்கி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில விநாடிகள் மட்டுமே நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். காலை சிற்றுண்டிகளை பயணிகள் அனைவரும் கையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததால், அவர் கையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டியது. விமான நிலைகுலைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சில விநாடிகள் மட்டுமே நிகழ்ந்தாலும் நிலைகுலைந்த நிகழ்ச்சியை மொபைல் போனில் படம் பிடித்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். http:/…
-
- 0 replies
- 313 views
-
-
நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்! வெடிகுண்டு மிரட்டல்: விமானம் அவசரமாக தரையிறக்கம் [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 11:55.25 மு.ப GMT ] இந்தோனேஷியாவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் எப் 16 ரக போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது திடீரென தீப்பிடித்து, கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சுதாரித்து கொண்ட விமான பாரசூட்டின் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார், இதில் அவருக்கு சிறிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. எப் 16 ரக போர் விமானங்கள் அமெரிக்க அரசால் இந்தோனேஷியாவுக்கு வழங்கப்பட்டது குறிப்…
-
- 0 replies
- 328 views
-
-
அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கிப் பயணித்தது. இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் பற்றி தீ பரவியதாகத் தெரிகிறது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் 93 பயணிகள் உயிர்பிழைத்தனர். http://www.akkinikkunchu.com/2014/04/29…
-
- 0 replies
- 182 views
-
-
நடுவானில் நேருக்கு நேர் மோதி கொண்ட விமானங்கள் கடலில் விழுந்து மூழ்கின! லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பரப்புக்கு மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு கடலில் விழுந்து மூழ்கி உள்ளது. அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, நடுவானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், இரு விமானங்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கடலில் துறைமுகம் அருகே விழுந்து மூழ்கி உள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விம…
-
- 3 replies
- 652 views
-
-
சென்னை சென்னை விமான நிலை யம் உள்நாட்டு முனை யத் தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு மதுரைக்கு தனியார் பயணிகள் விமானம் புறப் பட்டு சென்றது. இதில் 28 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானி சென்னையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்க நடவடிக்கை எடுக் கப்பட்டது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு காலை 10.30 மணியள வில் விமானத்தை பத்திர மாக சென்னை விமான நிலை யத்தில் தரை இறக்கினார். இதன் காரணமாக விமா னத்தில் இருந்த 33 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். …
-
- 0 replies
- 411 views
-
-
நடுவானில் பழுதான சக்கரங்கள்: ரியல் ஹீரோவாக மாறிய விமானி! பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை பத்திரமாக விமானி தரையிறக்கினார். பிஏ295 (BA295) என்ற விமானம், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிகோகோவிற்கு சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்தில் உள்ள இரண்டு சக்கரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை புரிந்துகொண்ட விமானி, சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறக்கியுள்ளார். விமானம் தரை இறக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பின்புற சக்கரங்கள் தெளிவாக புலப்படவில்…
-
- 0 replies
- 506 views
-
-
நடுவானில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் இலவச விமான பயணச் சலுகை வழங்குவதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் லியூ சியா யா. வயது 31. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், வடக்குப் பகுதி தீவான பினாங்கில் இருந்து போர்னியா நகருக்கு கடந்த புதன்கிழமை ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தார். நடுவானில் லியூவுக்கு பிரசவ வலி வந்தது. விமானத்தை பாதி வழியில் கோலாலம்பூருக்கு திருப்பினார் பைலட். விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் 2,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்தபோது, லியூவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த டாக்டர் பிரசவம் பார்க்க, பணிப்பெண்கள் உதவி செய்தனர். விமானம் தரையிறங்கியதும் தாயும், சேயும் மருத்துவமனையில…
-
- 0 replies
- 1.8k views
-
-
நடுவானில் மனித கழிவுகளை வெளியேற்றும் விமானங்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் இந்தியாவில் விமானங்களிலிருந்து மனித கழிவுகளை காற்றில் வீசும் விமான நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும் என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விமானங்கள் அதன் கழிவுகளை கொட்டுவதாக மனுதாரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். விமானங்களில் உள்ள கழிவறைகள் சிறப்பு தொட்டிகள் மூலம் மனித கழிவுகளை சேகரிக்கும். பொதுவாக விமானங்கள் தரையிறங்கியதும் கழிவுகள் அகற்றப்படும்; ஆனால், நடுவானில் கழிவறைகளில் உள்ள கழிவுகள் கசிய வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். வ…
-
- 0 replies
- 426 views
-
-
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ.-17 ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் வியாழக்கிழமை நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 5 அதிகாரிகள் உள்பட 9 வீரர்கள் உயிரிழந்தனர். ஜாம்நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள சர்மாத் கிராமத்துக்கு அருகேயுள்ள விமான தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்களும் பகல் 12 மணிக்குக் கிளம்பின. சில நிமிஷங்களில் அவை வானில் மோதிக்கொண்டன. இரண்டின் விசிறிகளும் ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இவற்றில் ஒரு ஹெலிகாப்டரின் வால் பகுதி விசிறி தனியே கழன்று கொண்டதும் விபத்துக்குக் காரணமானது. ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதை நேருக்கு நேர் பார்த்த கிராமவாசிகள், 2 ஹெலிகாப்டர்களும் கிளம்பிய சில நிமிஷங்களிலேயே மோதி நொறுங்கி கிராமத்திலிருந்து சற்ற…
-
- 0 replies
- 539 views
-
-
நடுவானில் விமானங்கள் மோதிக் கொண்டன - ஒன்று கடலில் விழுந்தது! [Monday, 2014-04-28 10:51:21] வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக நடு வானில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், ஒரு விமானம் கடலில் மூழ்கியது. மற்றொரு விமானத்தின் விமானி, சாதுர்யமாக விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கினார். சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஒட்டிய சிறிய விமான நிலையத்தில் தரையிறங்க வந்த போது இந்த விபத்து நேரிட்டது. கடலில் விழுந்த விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. இரண்டு விமானங்களிலும் விமானிகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=108251&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 208 views
-
-
நடுவானில் விமானம்- கிளைடர் நேருக்கு நேர் மோதல்- 137 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்! இங்கிலாந்து பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, கிளைடர் என்ற சிறிய ரக விமானத்தின் மீது நேருக்கு நேராக மோதியது. விமானத்தில் இருந்த 137 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் அந்த பயணிகள் விமானம், நேற்று சுவிஸில் உள்ள ஜெனீவா நகரிலிருந்து லண்டனில் உள்ள ஹெத்ராவ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. இந்த விமானத்தில் 5 விமான குழுவினர் உள்பட 137 பேர் பயணம் செய்துள்ளனர். ஓடுதளத்தை நோக்கி விமானம் தரையிறங்க முயற்சித்த அதே வினாடி, எங்கிருந்தோ வந்த ஒரு கிளைடர் விமானம் பயணிகள் விமானத்தின் மூக்கு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. …
-
- 2 replies
- 657 views
-
-
கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியுள்ளது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு இராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக …
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
அமெரிக்கத் தூதுவராய வாசலை விட்டு வெளியே... வரும் போது, ஜனாதிபதி ஒபாமாவின் வாகனம் வாசலில் உள்ள மேடான இடத்தில் தடைப்பட்டு நின்றது. அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும், போக்குவரத்திலும் பல பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வழித்தடத்தை ஆராய்வது வழமை. இதில் எப்படி கோட்டை விட்டார்கள் என்று புரியவில்லை.
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை: திருட வந்த இடத்தில் ஒரு பொருளும் கிடைக்காததால் கடுப்பான திருடன், வீட்டின் நடுவே மலம் கழித்து தனது கோபத்தை காட்டிவிட்டுப் போனான். சென்னை அருகே மூவரசம்பட்டு செந்தூரன் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் படாளத்தில் தோல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது அண்ணன் பரமேஸ்வரன் சௌதியிலிருந்து சென்னைக்கு வந்தார். ரவிச்சந்திரன் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். பின்னர் சௌதி திரும்பிச் சென்றார். அதன் பின்னர் மாடி பகுதிக்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் போகவில்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு மாடிப் பக்கம் ரவிச்சந்திரன் போனார். அப்போது அறையின் கதவு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டி…
-
- 0 replies
- 964 views
-
-
நடைபாதையிலிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை மோதிய பெண்; அழகுராணி போட்டி நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியே சம்பவம்: ஒருவர் பலி,37 பேர் காயம் 2015-12-22 12:04:40 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபாதையிலிருந்த மக்கள் மீது பெண்ணொருவர் காரை மோதியதால் ஒருவர் பலியானதுடன் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, ஞாயிறு இரவு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்வபவம் இடம்பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பொலிஸ் அதிகாரியான பிரெட் ஸிம்மர்மன் கருத்துத் தெரிவிக்கையில். இச்சம்பவம் ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனக் கருதப்படவில்லை எனக…
-
- 0 replies
- 441 views
-
-
-
- 0 replies
- 514 views
-
-
நட்சத்திர ஓட்டல் சிறையில் சவுதி இளவரசர்கள்: ஆட்சிக்கட்டிலுக்கான குடும்ப அரசியலால் மன்னரின் சூழ்ச்சி? இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். அல்-வலீத் பின் தலால் - Reuters இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். அல்-வலீத் பின் தலால் - Reuters சவுதி அரேபியாவின் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர…
-
- 2 replies
- 1.2k views
-
-
நட்டநடுக் கடலில் பனிக்கட்டி பெட்டியில் ஒரு மாத காலம் மிதந்து உயிர் தப்பிய மீனவர்கள் - மியன்மாரில் அதிசய சம்பவம் வீரகேசரி நாளேடு 1/20/2009 7:07:04 PM - உயிராபத்து மிக்க சுறாக்கள் நிறைந்த கடலில் தமது படகு மூழ்கியதையடுத்து பனிக்கட்டி பெட்டியொன்றில் ஏறி மிதந்தபடி மீனவர்கள் இருவர் சுமார் ஒரு மாத காலம் உயிர் வாழ்ந்த அதிசய சம்பவம் மியன்மாரில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய வடக்கு கடற்கரைக்கு அப்பால் 20 பேருடன் பயணம் செய்த மேற்படி படகானது 25 நாட்களுக்கு முன்பு மூழ்கியது. இதன்போது அதில் பயணம் செய்த 20 பேரில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிர் தப்பிய இருவர் ஒரு சிறிய மேசை அளவான பனிக்கட்டிப் பெட்டியின் மீது ஏறி அமர்ந்தனர…
-
- 0 replies
- 1.1k views
-
-
நட்புறவை புதுப்பிக்க புதிதாக பேச்சுவார்த்தை தொடங்குவோம்: இந்தியாவிற்கு ஷெரீப் அழைப்பு இஸ்லாமாபாத், ஆக. 13- இந்திய எல்லைக்குள் அதிகாலை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சமீபத்தில் 5 வீரர்களை சுட்டுக்கொன்றனர். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். இதனால், எல்லையில் ஒரு வாரத்திற்கு மேலாக பதட்டம் நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இரு நாடுகளும் சுதந்திரத் தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பாகிஸ்தான் நட்புறவை மீண்டும் புதிதாக தொடங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை செய்தி நிறுவனம்…
-
- 0 replies
- 349 views
-
-
பெங்களூர்: ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி) ரஜினிகாந்தை தனது பிராண்ட் அம்பாசிடராக்க திட்டமிட்டுள்ளது. கார்டன் சிட்டி எனப்படும் பெங்களூர் குப்பை நகரமாக உள்ளது. இந்நிலையில் குப்பையை உலர்ந்த மற்றும் ஈரப்பதம் உள்ள குப்பைகள் என இரண்டாக பிரித்து மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்குமாறு பெங்களூர் மாநகராட்சி அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியான ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி)வின் பிராண்ட் அம்பாசிடராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்க திட்டமிட்டுள்ளனர். அவர் குப்பையை இரண்டு வகையாக பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. பிபிஎம்பியின் புதிய மேயரான பிஎஸ் சத்யநாராயணா ரஜினியின் பள்ளித்…
-
- 0 replies
- 437 views
-