Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுவிட்சர்லாந்து பேர்ண் நகரை அடுத்துள்ள ஓபர்லாண்ட் பகுதியில் இன்று வெடித்தொழிற்சாலையில் வெடி விபத்து இடம்பெற்றுள்ளது. காலை 7.30மணியளவில் பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும் நில நடுக்கத்தை போன்று கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் அயலில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைக்கும் படையினரும் காவல்துறையினரும் அந்த இடத்திற்கு சென்று கட்டிடத்தில் பரவி வரும் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடம் பாரிய அளவில் சேதமாகவில்லை என்றும் தீயணைக்கும் படையினர் கட்டிடத்தில் பரவியை தீயை அணைத்து விட்டனர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த வெடிப்பிற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இந்த தொழிற்சாலையில் 1959ஆம் ஆண்டு நடந்த விபத்…

  2. டோக்கியோ: ஜப்பானின் சில பகுதிகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இஷு தீவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை . நிலநடுக்கத்தின் எதிரொலியாக புகுஷிமா டாய்ஷி அணுஉலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக டோக்கியோ நிர்வாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயிர்ப்பலி எதுவும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும், சேதாரத்தின் அளவுகள் இதுவரை தெரிய வரவில்லை. அதேபோல், நேற்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆண்ட்ரியாப் தீவுகளில் நில நடுக்கம்…

  3. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் இரண்டு முக்கிய உரைகள் அடங்கிய டேப்களை ஆல் இந்தியா ரேடியோ பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது. ஆல் இந்தியா ரேடியோவிடம் ஜின்னா பேசி உரைகள் அடங்கிய டேப்கள் உள்ளன. இதில் 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஜின்னா நிகழ்த்திய உரைகள் அடங்கிய டேப்களை தங்களிடம் அளிக்குமாறு பாகிஸ்தான் பிராட்காஸ்டிங் கார்பரேஷன் (பிபிசி) ஆல் இந்தியா ரேடியோவை கேட்டுக் கொண்டது. பிபிசியின் 4 ஆண்டு கால முயற்சியை அடுத்து அந்த டேப்களை ஆல் இந்தியா ரேடியோ ஒப்படைத்துள்ளது. இந்த டேப்களின் தரத்தை பார்த்துவிட்டு அதை அடுத்த வாரம் ஒலிபரப்ப பிபிசி திட்டமிட்டுள்ளதாம். இது தவிர மேலும் ஒரு உரை அடங்கிய டேப்பையும் அளிக்க இந்த…

  4. காபூல்: ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் சிறப்பு பிரதிநிதித்தும் வழங்க வகை செய்யும் சட்டத்தை பிறப்பித்து அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கீழவையான Wolesi Jirgaவில் மொத்தம் 249 எம்.பிக்கள் உள்ளனர். Meshrano Jirga எனப்படும் மேல்சபையில் 102 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதால் கீழவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது. ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெ…

  5. டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி நேற்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரோந்து பணி முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் 5 பேரை ஆகஸ்ட் 6-ந் தேதியன்று இலக்கு வைத்து பாகிஸ்தான் படுகொலை செய்ததைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான கோட்டி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ…

  6. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற மனிதஉரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகத…

  7. டமாஸ்கஸ்: சிரியா மீது இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை இரண்டுமே மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும், சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், சிரியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தந்து வருகிறது. சிரிய அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக நிற்கிறது ரஷ்யா. இதனால், ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா தனது வீடோ அதிகாரம் மூலம் முறியடிக்கும் ந…

  8. முத்தம் கொடுத்தால், பரீட்சையில் பாஸ்.... சீன வாத்தியாரின் அத்துமீறல். பெய்ஜிங்: சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் தேர்வாவதற்கு படித்தால் மட்டும்போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம். இது அரசாங்க உத்தரவல்ல, கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் ‘காமக் கட்டளை'. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார். அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள், ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும்.…

  9. வாஷிங்டன்: சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் நழுவி வருவதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிரியாவில் புரட்சி நடத்துவோரை அதிபர் ஆசாத்தின் ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. கடந்த 21-ந் தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்தன. இதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, ஜெர்ம…

    • 8 replies
    • 1.1k views
  10. அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண், சுவாதி தாண்டேகர் போட்டியிட உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தவர் சுவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில், பட்டம் பெற்றவர்; 1973ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். ஐயோவா மாவட்டத்தின் மேரியான் பகுதியில் வசித்து வந்த அவர், பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இப்போதும் அம்மாவட்ட பொது பயன்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து இவர் போட்டியிட உள்ளார். இதற்கான அனுமதியை, அவர் சார்ந்துள்ள ஜனநாயக கட்சி வழங்கியுள்ளது. இதன் மூலம், அந்த பொறுப்புக்கு, ஐயோவா மாவட்டத்திலிருந்த…

  11. கியூபாவிலிருந்து புளோரிடாவை நீந்திக கடந்த 64 வயது பெண். 103 மைல்களை 52 மணி நேரத்தில் நீந்தி கடந்திருக்கிறார். (CNN) -- [breaking news alert at 2:04 p.m. Monday] Endurance swimmer Diana Nyad reached the shores of Key West on Monday afternoon, becoming the first person to swim Cuba to Florida without a shark cage. This was the 64-year-old's fifth attempt since 1978. [Previous story published at 1:51 p.m. Monday] Diana Nyad's Cuba-to-Florida swim nearly complete (CNN) -- After more than 52 hours of swimming, the Key West shore -- and a decades-old goal -- is in sight for Diana Nyad. Nyad, 64, on her fifth attempt to swim the 103 miles from Cuba to Florida withou…

  12. காங்கிரஸ் தலைவர் சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக ஆண்டு தோறும் வெளிநாடு சென்று வருவது வழக்கம். அதாவது 2011ல் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுவருகிறார்.கடந்த ஆண்டும் இதே போல் செப்டம்பர் மாதம் ‌சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் திங்களன்று லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கலின் போது அதில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நெஞ்சுவலியால் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மரு்த்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 மணி நேர சிகிச்சைக்கு பின் செவ்வாய் அன்று அதிகாலை வீடு திரும்பினார். அதன் பின்னர் சனிக்கிழமை மாலையில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று ஒரு மணி நேர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். கண் ‌நோய், எ…

  13. அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறீலங்காவினைசேர்ந்த ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் தேப்பட்டு வந்தநிலையில் குறித்த நபர் பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. http://www.sankathi24.com/news/32769/64//d,fullart.aspx

  14. இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. சட்டம் தடுத்தாலும் பெண்களிடம் இருந்து வரதட்சணை வாங்கும் நிலை நீடித்துவரவே செய்கிறது. வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவங்களில் சராசரியாக 35 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கு…

  15. மஸ்கட்: ஓமன் நாட்டில் இந்தியர்களிடம் ரூ. 66 கோடி வரை மோசடி செய்த பெண் அந் நாட்டைவிட்டுத் தப்பிவிட்டார். அவர் இப்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் வசிப்பதாகத் தெரிகிறது. ஓமன் நாட்டில் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றும் டெண்டர் தனக்குக் கிடைத்திருப்பதாகவும், இதற்காக நிதி திரட்டி வருவதாகவும், இந்த நிதிக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி இந்தியர்களை அந்தப் பெண் ஏமாற்றியுள்ளார். போர்ஜரி செய்யப்பட்ட ஓமன் நாட்டு அரசின் ஆவணங்களைக் காட்டி இந்தியர்களை நம்ப வைத்துள்ளார். ஓமன் நாட்டின் பல்வேறு சர்ச்சுகள், பள்ளிகளுக்கு வந்து இந்தியர்களை சந்தித்து தனது திட்டம் குறித்துப் பேசியுள்ளார். இவரை நம்பிய பலரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் தந்துள்ளனர். அதற்கு ரசீதுகளையும் தந்துள்ளார்…

  16. டெல்லி: சீனாவுக்கு செல்ல இருந்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் என்.ஏ.கே. பிரவுனியின் பயணத்தை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டது. எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு நமது விமானப் படைத் தலைவர் நல்லெண்ணப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது. முன்னதாக பிரவுனியை தனது நாட்டுக்கு வருமாறு சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பிரவுனி அங்கு செல்வதற்கு முன் சீனாவில் இருந்து முப்படைத் தலைவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு வரட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது. அதே போல இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் வரும் நவம்பரில் சீனா செல்ல உள்ளார். சீனா-இந்தியா கூட்டு ராணுவப் பயிற…

  17. சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸை இணங்க வைக்கும் முயற்சிகளில் அதிபர் ஒபாமா நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸில் அடுத்தவாரம் இதற்கான வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. ஒபாமாவின் சிரியா மீதான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் அமெரிக்க புலனாய்வு விளக்கக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் சிரியாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படக் காரணமான ஸரின் நச்சுவாயுத் தாக்குதலை அரசாங்கம் நடத்தியுள்ளதாக ஒபாமா நிர்வாகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிறுவுவதற்காக இந்தப் புலனய்வு விளக்கக் கூட்டம் நடக்கவுள்ளது.கோடைகால விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பியுள்ள பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள், புலனாய்வு விளக…

  18. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு பள்ளிவாசலை முற்றுகையிட்ட சம்பவம் இடம்பெற்ற போது, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த மதகுரு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே காவல்துறையினர் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். முஷாரஃப் கைது செய்யப்படும் போது ( பழைய படம்) தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதிக்குள் பாகிஸ்தானியத் துருப்புகள் அதிரடியாக நுழைந்தபோது நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதில் தீவிரவதாக் கொள்கைகளைக் கொண்டிருந்த இந்த மதகுருவான அப்துல் ரஷீத் காசியும் அடங்குவார். புட்டோ கொலையிலும் தொடர்பு? சுட்டுக் கொல்லப்பட்ட பேனசீர் புட்டோ பாகிஸ்தானை 1999 மு…

  19. சிரியா மீது எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில், அங்கு பதட்டம் நிலவுகிறது. அதற்கு எந்த விதத்திலும் குறையாத பதட்டம் இஸ்ரேலில் நிலவுகிறது. அமொிக்கா, சிரியா மீது 48 மணிநேர மட்டுப்படுத்திய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அமொிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந் நடவடிக்கையில் நாசகாரி நீர்மூழ்கிகள் மூலம் 100 ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய இலக்குகளாக கட்டளை மையங்கள், விமானத் தளங்கள், ஆயுத தளபாட விநியோக மையங்கள், புலனாய்வுத் தளம், இராணுவப் பயிற்சி முகாங்கள் தெரிவாகியுள்ளது. தாக்குதல் தொடுக்கப்பட்டால் சிரியா உடனடியாக திருப்பி தாக்கப்போவது, இஸ்ரேலை நோக்கித்தான். இதனால், இஸ்ரேலிய நகரங்களில் பலத…

  20. பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைபொருட்களுடன் கைதான மர்ம மனிதன் தீவிரவாதியா? டொரண்டோ போலீஸார் தீவிர விசாரணை. பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் வைத்திருந்த 25 வயது நபர் ஒருவர் டொரண்டோவில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டான். அவன் தீவிரவாதி இயக்கத்தை சேர்ந்தவனா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். டொரண்டோவில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் northwest, near Kipling and Finch avenues, என்ற இடத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு குழுவை சேர்ந்த சிலர் போலீஸாரிடம் வந்து, ஒரு மர்ம மனிதன் போலீஸாரை பார்த்ததும் சந்தேகத்திற்கிடமாக ஒடுவதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் காட்டிய பாதையில் போலீஸார் சென்று பார்த்தபோது ஒரு மர்ம மனிதன் ஓடிக்கொண்டு இருப்பது த…

  21. டெல்லி: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க முடியாது என்றும் அது இலங்கை எல்லைக்குட்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் கூறியுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதி கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தும் வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றை…

  22. பல நாட்களாக மருத்துவமனையில் இருந்துவந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வீடு திரும்பியுள்ளார். பிரெட்டோரியாவிலுள்ள மருத்துவமனையிலிருந்து விடப்பட்டதை அடுத்து ஜோஹன்னஸ்பர்கிலுள்ள வீட்டுக்கு மண்டேலா அழைத்துவரப்பட்டார். நெல்சன் மண்டேலா மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், சில நேரங்களில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்கு அது மோசமடைவதாகவும் தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் கூறுகிறது. மருத்துவமனையில் அவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து விதமான தீவிர சிகிச்சைகளுமே அதேயளவில் வீட்டில் வைத்தும் அவருக்கு வழங்கப்படும் என மண்டேலாவின் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படும் விதமாக அவரது வீட்டில் மாற்ற…

  23. இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. சட்டம் தடுத்தாலும் பெண்களிடம் இருந்து வரதட்சணை வாங்கும் நிலை நீடித்துவரவே செய்கிறது. "பெண்ணைப் பரிவர்த்தனைப் பொருளாகவே பார்க்கிறோம்"2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்துவந்துள்ளது என்றும் தெரியவருகிறது. எழுத்தாளர் வ. கீதா தவிர 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதி…

  24. டுபாய் காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவுத் தலைமையகத்தை வெடிக்கச் செய்யப் போவதாக பெண் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உடலில் வெடிபொருட்களை கட்டியிருப்பதாகவும், கட்டடத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறித்த பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆறு வயது சிறுமி ஒருவரையும் குறித்த பெண் அருகில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ரஸ்ய மொழியில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. டுபாய் ஆட்சியாளரை சந்தித்து தமது பிரச்சினைகளை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்காவிட்டால், குண்டை வெடிக்கச் செய்ய நேரிடும் என பெண் அச்சுறுத்தியுள்ளார். இதனால் குறித்த கட்டடத்தில் இருந்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். கட்டடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குடும்பப் பிரச்சினை காரணமா…

  25. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார். நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.