Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சுஜாதா சிங், அண்டை நாடுகளுடனான நட்புறவை வளர்ப்பதே தனது முதல் பணி எனவும், பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.புதுதில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தானுடன் ஆக்கபூர்வமான நல்லுறவை வளர்ப்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்து வருகிறது. அதற்கு வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை இல்லாத சூழல் அமையவேண்டியது கட்டாயமாகிறது. 2011-ல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. தற்போது பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்திருக்கிறது. அந்த அரசுடன் விட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடருவோம்.அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதற்கே மு…

    • 2 replies
    • 392 views
  2. ஸ்நோடனுக்கு தஞ்சம் வழங்கியது ரஷ்யா எட்வர்ட் ஸ்நோடனின் கடவுச் சீட்டு அமெரிக்காவிலிருந்து தலைமறைவான அந்நாட்டின் உளவுத்துறையின் செயல்திட்டத்தை அம்பலப்படுத்தியதாக கூறப்படும் எட்வர்ட் ஸ்நோடனுக்கு ரஷ்யாவில் தஞ்சம் கிடைத்துள்ளது. அவரது தஞ்சக் கோரிக்கைக்கான ரஷ்ய அரசின் ஆவணங்களைப் பெற்றபிறகு, இதுவரை மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருந்த ஸ்நோடன் அங்கிருந்து வெளியேறினார். ஊடகங்களின் பார்வையில் படாமல், ஸ்நோடன் விமான நிலயத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறிச் சென்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். அவர் எவ்வளவு நாட்கள் ரஷ்யாவில் இருப்பார் என்பது குறித்தோ, எங்கு சென்றார் என்பது குறித்தோ தகவல்களில்லை. ஆனால் அவர் பாதுகாப்பான இடத்திற்கு செல்கிறார் என்று அவரது வழக்கறிஞர் க…

  3. திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும்,மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார். இதே போலத்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனும் கூறி வருகின்றனர். தெலுங்கானா பிறப்பதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரை முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்றவை கருத்து தெரிவித்ததில்லை. இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு தமிழகத்தைப் பிரிக்க …

  4. சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு வாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படவுலகின் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75-ம் ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வோடு சேர்த்து இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது பிலிம்சேம்பர். இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் மற்றும் தென்னிந்தியாவின் நான்கு மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, தேதிகளில் அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நட…

  5. ஆந்திரா பிரிவினை விவகாரத்தில் முதல்வர் கிரண்குமார் ஒத்துழைக்காத பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு மத்திய அமைச்சர் சிரஞ்சீவியை முதல்வராக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி, சந்திர பாபுநாயுடு இருவரையும் வீழ்த்த சிரஞ்சீவிதான் சரியான நபர் என்பதால் அவரை முன் நிறுத்துகிறார் சோனியா. ஆந்திரா பிரிவினையை தடுக்க முதல்வர் கிரண்குமார் ரெட்டி பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தெலுங்கானாவை சோனியா காந்தி உருவாக்கியுள்ளார். மத்திய அரசின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவி விலக திட்டமிட்டார். கடந்த வாரமே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததன…

  6. அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அமெரிக்காவின் சட்டனூகா நகரில் மக்களிடையே ஆற்றிய உரை வருமாறு: நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் மேற்கொள்ளா விட்டால், இந்தியா, ஜெர்மனி, சீனா உள்பட உலக நாடுகளுக்கு நாம் வெள்ளைக் கொடியை காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்த நாடுகள் பின்தங்கப் போவதில்லை. இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றன. எனவே அமெரிக்காவும் சும்மா இருக்க முடியாது. நாம் எதை…

  7. தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த பந்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.தனி தெலங்கானா மாநிலம் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் பந்த் நடத்தப்பட்டது. ஆந்திர ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு, மாணவர்கள், அரசு ஊழியர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் கலவரங்கள் மூண்டது. அனந்தபூர் மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு கூட்டுக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து அனந்தபூரில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி…

  8. அமெரிக்க சிறையில் சிறுநீரை குடித்து உயிர்வாழ்ந்த வாலிபருக்கு 40 லட்சம் டாலர் இழப்பீடு போலீசாரின் மெத்தனத்தால் 5 நாட்களாக குடிக்க தண்ணீர் கூட இன்றி சிறையில் அடைபட்டு கிடந்து, தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு அமெரிக்க அரசு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை தடுப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியபோது கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த டேனியேல் சாங்(25) என்ற இளைஞரை கைது செய்தனர். அவரை 4 1/2 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 5 அடி உயர தனிமை சிறையில் அடைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கேயே வைத்து பூட்டிவிட்டு சென்றனர். தங்களது கட்டுப்பாட்டில் ஒரு கைதி இருப்பதை 5 நாட்களாக மறந்து …

    • 0 replies
    • 362 views
  9. தெலுகானா பிரிப்பு ஈழத்தின் கிழக்கு மாகானப் பிரிப்புக்கு நிகரானது. ஆந்திர அரசில் தெலுங்கானா சுயாட்சிப் பிரதேசமாக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். கிழக்கு ஈழத்தின் மாகாணத்துக்கும் இது பொருந்தும். மொழிவாரி மாநிலங்களைப் பிரிப்பது மைய ஆதிக்க சக்திகளின் நெடுநாலைய விருப்பமாகும். . இந்தி பரப்புக்கு வெளியே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவது ஆபத்தான ஒரு முன்நிகழ்வு.வட தமிழகத்திலும் இத்தகைய ஒரு கோரிக்கை முக்கியமான வடதமிழக சாதி/சமூக கட்ச்சி ஒன்றால் முன்வைக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்திய ஜனநாயகத்துன் சிறப்பம்சம் மொழிவாரி மாநிலங்கள்தான்.1848 தேசிய இன அரசுப் புரட்சின்போதே (nation state revolution) மொழிவாரி தேசங்கள் வரலாற்று இயங்கியலின் வளற்ச்சி நிலை. என்பது உணரப்பட…

  10. பஹ்ரைன்: பஹ்ரைனில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான மூவரின் பெயர் முருகேசன் கோனார்(40, சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) என்பதாகும். இவர்கள் தெற்கு மனாமா பகுதியில் உள்ள அல் ஈகர் கிராமத்தில் உள்ள வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் விஷவாயு தாக்கியது. இதில் உள்ளே இறங்கியிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து இருவரும் மயங்கி உயிரிழந்தனர். இந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று …

  11. ஆந்திர பிரதே மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, நேற்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தெலுங்கானா அமைந்தது. இனி தெலுங்கானா நாட்தின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும்.இந்த நிலையில் கடலோர ஆந்திர மாவட்டங்கள் பதற்றம் நிலவுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்…

  12. சிரியா இரசாயன ஆயுதத் தாக்குதலை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கான இடங்களில் ஐநா ஆய்வும் விசாரணையும் நடத்த சிரியா அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஐநா மூவர் குழு பரிந்துரைக்கு அமைய கூட ஒரு குழுவை அனுப்பி சிறீலங்காவில் அதன் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட மனித இனப்படுகொலைகளை (தமிழினப் படுகொலை), மனித உரிமை மீறல்களை விசாரிக்க..ஐநா இன்னும் பெரிதாக முயற்சிக்கவும் இல்லை. சிறீலங்காவும் அனுமதிப்பதாக இல்லை. சிரியாவில் மேற்குலக ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது பதியப்பட்டுள்ள மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்கள் போல்.. புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஐநா சிரியா விவகாரத்தில் சிரிய அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கே அதிகம் முக்கியம் கொடுத்து கையாண…

  13. சென்னை, ஜூலை 31 (டி.என்.எஸ்) பசுமை வீடுகள் கட்டுவதற்காக ரூ.1260 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வீட்டு வசதி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். மேலும், ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற நிலை ஒருவருக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதோடு சமுதாயத்தில் கவுரவமாகவும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றவுடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டுவதற்காக “முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி சூ…

  14. ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும். 1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாந…

  15. அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவை அடைந்துள்ளது. இன்று காலை சர்வதேச வர்த்தகம் துவங்கியதும், ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.10 ஆக வீழ்ச்சி கண்டது. உயர்ந்தது.நேற்று வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 60.48 ஆக இருந்தது. கடந்த பல வாரங்களாக இந்திய ரூபா மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=88868&category=IndianNews&language=tamil

  16. பாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நவாப் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த 73 வயதான மம்நூன் ஹூசைன் கலந்து கொண்டார். மம்நூனுக்கும், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் வேட்பாளர் முன்னாள் நீதிபதி வாஜிஹுதீன் அகமது ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. வெற்றி பெற 263 வாக்குகளே போதுமானது என்ற நிலையில், ஹுசேன் 277 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எனவே, வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி மம்நூன் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற…

  17. ஹைதராபாத்: தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திராவுக்கு 'ராயல ஆந்திரா' என்ற பெயர் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ராயலசீமா தனி மாநிலம் கோரி போராடுவோம் என்று அப்பகுதி காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 60 ஆண்டுகால தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராயலசீமா பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் இன்று ஹைதராபாத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சிறுபாசனத் துறை அமைச்சர் டி.ஜி. வெங்கடேஷ், தெலுங்கானா தனி மாநில மசோதாவை பார்லிமென்ட்டில் தோற்கடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எப்படியும் அந்த மசோதாவை …

  18. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கு தரக்கூடாது என, தென்மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த மின்சாரத்தில், தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, டில்லியில் நேற்று மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பலத்த எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி,கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்கியுள்ளது. ஆனாலும், முழுவீச்சில் உற்பத்தி துவங்க, இன்னும் சில நாட்களாகும். இங்கு உற்பத்தியாக உள்ள, மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, பலரும், மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், …

    • 10 replies
    • 911 views
  19. தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்தது: ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங் மேற்கு வங்காள மாநிலத்தை பிரித்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா சார்பில் நேற்று முன்தினம் முதல் 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பிமல் குருங் கூறுகையில், ‘தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்து வருகிறது. எனவே மத்திய அரசு தெலுங்கானா தனி மாநிலத்துக்கு அனுமதி அளித்தால், கூர்க்காலாந்து தனி மாநிலத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கோரிக்கை நிறைவேற…

  20. இனி லண்டனில், கண்ட இடத்தில "துப்பக்" கூடாது..... மீறினால் ரூ.4.5 லட்சம் அபராதம்! லண்டன்: லண்டன் மாநகரில் இனி கண்ட இடத்தில் துப்ப முடியாது.. மீறி துப்பினால் அவர்கள் 4.5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதுதான். அதோடு அவர்கள் கிரிமினல் குற்றவாளியாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தை சுத்தமாகவும், சுகாதார சீர்கேடுகளை தடுக்கவும் லண்டன் நகர நிர்வாகம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி லண்டனின் என்பீல்டு பகுதியில் எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சில் துப்புவர்கள் மீது குற்றச் செயல் புரிந்ததாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் …

    • 6 replies
    • 673 views
  21. 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கோரி தெலுங்கு தேசம் போராடியது.. இன்று பிரிவினைக்காக போராடுகிறது.. அத்துடன் எது தலைநகர் என்ற கோஷமும் உச்ச சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.. இது 60 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த கதைதான்.. பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகத்தைத் தொடர்ந்து உதயமானது ஆந்திரபிரதேச மாநிலம்.. ஆனால் அத்துடன் ஓய்ந்துவிடவில்லை விவகாரம்... தெலுங்கு பேசும் மக்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டனர். அன்று சென்னை ஆம்.. சென்னைதான் ஆந்திராவின் தலைநகரம் என்று முழக்கம் எழுப்பினர்.. அப்போது மிகவும் பிரபலமான கோஷம் ' மதராஸ் மனதே!".. அதாவது வடசென்னை ஆந்திராவின் தலைநகராகவும் தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஆனா…

    • 2 replies
    • 716 views
  22. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களிடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் வாஷிங்டனில் அளித்த விருந்தில் இருதரப்பும் சந்தித்திருந்தனர்.மிக மிக மிக விசேஷமான ஒரு தருணம் இது என்று ஜான் கெர்ரி வர்ணித்திருந்தார். இஸ்ரேலின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ஸிபி லிவ்னியும் பாலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத்தும் சேர்ந்து அமர்ந்து பேசினர். வரவிருக்கும் மாதங்களில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறை திட்ட வடிவம் பற்றி தற்போது அவர்கள் பேசினார்கள் என அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் பிரச்சினைக்குரிய விஷயங்கள் பலவற்றை விவாதிக்க வேண்டும் என்று அதிபர்…

  23. பல உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை சந்தைகளில் இருந்து விலக்கிக்கொள்வதை உலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும் ஐநாவின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் சத்துணவு உட்கொண்ட 23 பிள்ளைகள் இம்மாதத்தில் முன்னதாக உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வருகிறது. மிக அதிக நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து இந்த உணவில் கலந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு பூச்சிக்கொல்லி மருந்து இதுவாகும். இவ்வகையான ரசாயனங்கள் விற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் மனிதர்களின் ஆரோக்க…

  24. குவைட்டில் இரண்டாவது பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்களின் பாதிக்கும் அதிகமான ஆசனங்கள் பறிபோயுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஷியா பிரிவினர் 50 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களையே வென்றனர். முன்னதாக டிசம்பரில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில்ஷியாக்கள் 17 ஆசனங்களை வென்றிருந்தனர். எதிர்க் கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் 52.5 வீதமானோர் வாக்களித்திருந்தனர். லிபரல் மற்றும் பழங்குடியினரே அதிக ஆசனங்களை வென்றனர். குறைபாடுகளை காரணம் காட்டி குவைட் பாராளுமன்றம் கடந்த டிசம்பரில் கலைக்கப்பட்டது. மன்னராட்சி நிலவும் குவைட்டில் பாராளுமன்றம் மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நிறுவனமாக செயற்பட்டபோதும் அதனையொட்டி நாட்டில் தொடர்ந்தும் பதற்றம் நீடிக…

  25. ஷாங்காய்: சீனாவில், ஆளில்லா விமானங்கள் மூலம் கேக் டெலிவரி செய்யும் விமானங்கள் சில சமயங்களில் அந்தரத்தில் கேக் பார்சலைத் தவற விட்டு, பொதுமக்களை அலற வைப்பதால் அவற்றிற்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று தனது ஆன்லைன் புக்கிங் வாடிக்கையாளர்களுக்கு, ஆளில்லா விமானங்கள் மூலம் பேக்கரி ஐட்டங்களைச் சப்ளை செய்து வருகிற மூன்றரை அடி அகலம் கொண்ட இந்த ரக விமானங்களில் 2 தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும். முகவரியை டியூன் செய்து விட்டால் சரியாக விலாசம் தேடி டெலிவரி செய்வதில் இந்த விமானங்கள் கில்லாடிகளாம். ரிமோட் கண்ட்ரோல் முலம் இயங்கும் அத்தகைய விமானங்கள் சமயங்களில் அந்தரத்தில் பற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.