உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
ஒட்டாவா நகரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த நான்கு மாதங்களாக பனாமா நாட்டில் காணாமல் போனதாக வந்த செய்தியை அடுத்து தற்போது அவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஒட்டாவோ தொழிலதிபர் Ed Moynan என்ற 68 வயது தொழிலதிபர் தொழில் முறை பயணமாக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பனாமா சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. இதுகுறித்து ஒட்டாவோ காவல்துறையினர் பனாமா நாட்டிற்கு தகவல் கொடுத்தனர். பனாமா போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்தனர். நேற்று Campana National Park அருகே ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பனாமா போலீஸார் விரைந்து சென்று சூட்கேஸை திறந்து பார்த்ததில் அதில் எலும்பும், சதையுமாக ஒரு பிணம் இருப்பதை …
-
- 0 replies
- 497 views
-
-
டொரண்டோவில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக 72 வயது முதியவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 72 வயது முதிய பெண் ஒருவரை கொலை செய்த குற்றமும், 92 வயது முதிய பெண் ஒருவரை பலமாக தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டொரண்டோவில் உள்ள Wexford Seniors Residence Long Term Care என்ற முதியோர் இல்லத்தில் இருந்து நேற்று காலை 911 என்ற தொலைபேசிக்கு அழைப்புகள் தொடர்ந்து வந்தன. உடனே விரைந்து சென்ற டொரண்டோ காவல்துறையினர் அங்கு 72 வயது ஒருவர் இறந்து கிடப்பதையும், 92 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியதையும் பார்த்தனர். உடனே காயமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இது தொடர்பாக Peter Roy …
-
- 0 replies
- 451 views
-
-
Ontario's Harris Park என்ற இடத்தின் அருகிலுள்ள நதியின் கரையில் கடந்த செவ்வாய்கிழமை , Ainsley Chapman என்ற ஊனமுற்ற ஒரு நபர் நதிக்கரையில் தனது வீல்சேரில் இருந்தபடி பறவைகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் உட்கார்ந்திருந்த வீல்சேர் திடீரென முன்னோக்கி சென்று நதியில் விழுந்தது. குளிரான தண்ணீரில் அவருடைய வீல்சேர் மூழ்க ஆரம்பித்ததால் அவர் தன்னை யாராவது காப்பாற்றும்படி அலறினார். நதியில் ஆழம் அதிகமாகவும் சேறும் இருந்ததால் அவரால் உடனே எழுந்து வெளியே வரமுடியவில்லை. இந்த சம்பவத்தை தனது வீட்டின் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன், உடனே வெளியே வந்த தனது தாயாரின் தோழி ஒருவரிடம் இதை கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் நதியருகே செ…
-
- 0 replies
- 273 views
-
-
மனித வள மேம்மாட்டில் கனடா இதுவரை உலகின் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வந்தது. இந்த வருடம் அந்த தகுதியை இழந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சியடைவது மிகவும் முக்கியமானதாகும். இதில் இதுவரை முதல் 10 இடங்களில் இருந்து வந்த கனடா, இந்த வருடம் 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. நேற்று வெளியான உலகின் மிகச்சிறந்த முன்னேறிய நாடுகள் என்ற அறிவிப்பில் கனடாவிற்கு 11 வது இடமே கிடைத்துள்ளது. இருந்தாலும் கனடாவின் கல்வி, பொருளாதாரம், மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் சென்ற ஆண்டை விட வளர்ச்சியின் விகிதம் அதிகம் இருப்பதாகவும், உலக அளவில் ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வளர்ச்சி சதவிகிதம் அதிக அளவில் கூடியிருப்பதால், கனட…
-
- 0 replies
- 625 views
-
-
தென்னாப்பிரிக்க அமைச்சர் Aaron Motsoaledi இன்று வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சி அறிக்கையில் நாட்டில் இந்த ஆண்டு மட்டும் நான்கு சதவிகித பள்ளி மாணவ மாணவியர்களுக்கு HIV என்னும் எய்ட்ஸ் வைரஸ் பாதித்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் 28% மாணவர்கள் இந்த நோயின் பிடியில் உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையால் தென்னாப்பிரிக்க பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் இந்த வேளையில் Sowetan newspaper என்ற செய்தித்தாள், எய்ட்ஸ் கிருமிகள் பரவுவதற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் காரணமில்லை, சில சமூக விரோத பெரியோர்களும் காரணம் என்ற அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்னம் பள்ளி ஆசிர்யர்களும் பெற்ற…
-
- 0 replies
- 2.9k views
-
-
ரஷ்யாவின் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று முஸ்லீம் இளைஞர்களை அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் அவர்களது நீண்ட தாடியை வலுக்கட்டாயமாக நீக்க கட்டாயப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யாவின் Surgut என்ற நகரத்தில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு அருகிலுள்ள ஓரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக மூன்று முஸ்லீம் இளைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் சிலர் அந்த மூன்று இளைஞர்களையும் நெருங்கிவந்து, அவர்கள் முகத்தில் வைத்திருந்த தாடியைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படுவதாகவும் எனவே உடனே தாடியை நீக்க வேண்டும் என்றும் மறுத்தால் தாடியை தீயிட்டு கொளுத்துவோம் என்றும் துப்பாகி முனையில் பயமுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 489 views
-
-
சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள். அதுபோல பல்கேரியை சேர்ந்த ஒரு நபருக்கு அடுத்தடுத்து இரண்டு தடவை மிகப்பெரிய தொகையை லாட்டரியில் வென்றிருக்கின்றார். அவருக்கு மீண்டும் அதிர்ஷ்ட தேவதை அருகே சென்றிருக்கிறார் என்பதே இந்த புதிய செய்தி. பல்கேரியாவை சேர்ந்த George Traykov என்ற 41 வயது நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள லாட்டரி பரிசை வென்றார். பின்னர் மூன்றே மாத இடைவெளியில் மீண்டும் £160,873மதிப்புள்ள பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவ்வாறு இரண்டு தடவை மிகப்பெரிய தொகையுள்ள பரிசை வென்ற இவருக்கு மூன்றாவது முறையும் பரிசு நெருங்கி வந்துள்ளது. அதாவது சென்ற வாரம் நடந்த ஒரு பரிசு கு…
-
- 0 replies
- 835 views
-
-
இங்கிலாந்து நாட்டில் உள்ள Bridgend, South Wales என்ற இடத்திலுள்ள ஒரு குடும்பத்தில், சில மணி நேரங்களில் அடுத்தடுத்து மூன்று நபர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மரணம் அடைந்த ஒரு சோக சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி உள்ளது. Hillary Dennis என்ற பெண்ணின் மகள் Caryl உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பலனளிக்காமல் இறந்துவிட்டதாக முதலில் தகவல் வந்தது. இந்த செய்தி கிடைத்த அதிர்ச்சியில் அவர் உறைந்து இருந்த போது அவருடைய மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் Hillary Dennis அவர்களில் சகோதரி ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக தெரிய வந்தது. அதையடுத்து சிலமணி நேரங்களில் தொலைபேசியில் சகோதரியின் மரண செய்தியை கூறிய மகன் Nigel அவர்களும் விப…
-
- 1 reply
- 316 views
-
-
கம்போடியாவில்பல லட்சம் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியவரும் போக்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருமான அந்நாட்டு முன்னாள் தலைவர்87 வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச்கொடுங்கோலர்கள் பூல்பாட், இயங்சரே,நெளவான்சியா, கெஹியூ சம்பான் ஆகியோர் 1975- 79-ம் ஆண்டு வரை நடந்த ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் இயங்சரே,பூல்பாட் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகி்த்தார்.ஐ.நா. முயற்சியால் நான்கு தவைர்கள் மீதும் கம்போடியா சர்வதேச தீர்ப்பாயத்தில் போர்க்குற்ற விசாரணை நடந்து வருகிறது.இதில் 2007-ம் ஆண்டு இயன்சரே (87) கைது செய்யப்பட்டார்.அவர் மீதும் போர்க்குற்ற வி…
-
- 2 replies
- 504 views
-
-
மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து. வைரமுத்துவின் சமீபத்திய படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்துள்ளது. இந்த நாவல் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை தஞ்சைப் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் என பகிர்ந்தளித்தார். இந்த நிலையில், இப்போதே தனது அடுத்த படைப்புக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார் வைரமுத்து. இப்போது அவர் எழுதப் போவது தமிழ் ஈழம் தொடர்பான ஒரு நாவல். எனவே அதை தமிழகத்திலிருந்து எழுதாமல், இலங்கைக்கே போய் சில காலம் தங்கியிருந்து அந்த மண்ணையும் மனிதர்களையும…
-
- 6 replies
- 642 views
-
-
இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின்போது குறித்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட கியூபா, இவ்விவகாரம் தொடர்பில் வோஷிங்டனுடன் நேரடிச் சொற்போரிலும் ஈடுபட்டது. கியூபா பிரதி நிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறுகையில், இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா குரல்கொடுத்தன. இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை நலிவடையச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன. இவ்வேளையில், குறுகீடு செய்து களமிறங்கிய ஐரோ…
-
- 1 reply
- 548 views
-
-
இத்தாலி தூதர் Daniele Mancin இந்தியாவை விட்டு வெளியேறத் உச்சநீதி மன்றம் தடை. கிருஸ்தவ விடுமுறை களிற்க்காக இத்தாலி சென்ற, கேரளா மீனவர்களை சுட்டு கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 2 இத்தாலியர்கள், அவர்கள் நாட்டிற்கு சென்றதும் இந்தியா திரும்ப முடியாது என்று சொல்லி உள்ளனர். இதற்க்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆட்சேபனையை , இந்திய வெளியுறவு துறை அலுவலர் ரஞ்சன் மதாய் (India's foreign secretary Ranjan Mathai) மூலம் இத்தாலி தூதர்,டானிலி மன்சினி ( Italian Ambassador to India Daniele Mancini)என்பவருக்கு சம்மனாக, நேரில் நேற்று கொடுக்கப்பட்டாது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டானிலி மன்…
-
- 1 reply
- 493 views
-
-
சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: சிவசேனா, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம், புலித் தலை. இதுவும், பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான், சிவசேனாவுக்கு சொந்தமான புலி தலையை, கட்சி கொடிகளில் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார்.…
-
- 0 replies
- 612 views
-
-
இந்தியாவை விட்டு வெளியேற இத்தாலி தூதர் மறுப்பு: வழக்கிலிருந்து வக்கீல் விலகல். டெல்லி: நேற்று பாராளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இத்தாலி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இந்திய மீனவர்களை, சுட்டுக் கொலை செய்த இத்தாலியர்கள் இந்தியா திரும்பாதது குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். அதற்கு பதிலலிக்கும் விதமாக, பிரதமர் மன்மோகன் சிங் இத்தாலி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இத்தாலிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த பிரச்சினையில் கடும் விளைவுகளை இத்தாலி சந்திக்க வேண்டும் என எச்சரித்தார்என்று கூறினார்.இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இத்தாலி தூதர் டேனியல் மன்சினி, ‘…
-
- 6 replies
- 909 views
-
-
உலகத்தின் நம்பர் வண் யார்… முதலிடத்தைக் கைப்பற்ற வான்வெளியில் வெடித்திருக்கிறது அமெரிக்கா – சீனா இரண்டு நாடுகளுடைய சைபர் யுத்தம்.. 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பயங்கரவாதம் என்று வார்ணிக்கப்படும் சைபர்கிரைம் மோதல் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் அவசரமாகவும் அவசியமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பேள்காபர் துறைமுகத்தை ஜப்பானியர் தாக்கியதைப் போல இப்போது சீனா அமெரிக்கா மீது நடாத்தியிருப்பது சைபர் பேள்காபர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இதுவரை சைபர்கிரைம் நடக்கிறது என்று பேசி வந்த அமெரிக்க அதிபர் முதல் தடவையாக சீனாவை நோக்கி கோபமாக கையை நீட்டியுள்ளார். சைபர் கிரைம் என்றால் என்ன..? இது சற்லைற் போர்.. சற்லைற்றை பயன்படுத்தி இணையம் மூலமாக நடைபெறும் போர…
-
- 1 reply
- 1.8k views
-
-
ரோம்: புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு, புதிய போப்தேர்வு செய்யப்பட்டு விடுவார், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான மக்கள், சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே கூடி, புகைபோக்கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது. கார்டினல்கள…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்க கம்ப்யூட்டர்களில் உள்ள ரகசிய தொழில் தகவல்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான தொழில்நுட்ப தகவல்கள், சீனாவிலிருந்து திருடப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் இணைய பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அந்நாட்டின் தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது. இணையதள திருட்டு பிரச்சினைகளை அரசும் தனியாரும் இணைந்து எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் தங்கள் யோசனைகளை தெரிவிக்க உள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் கூறுகையில், இணையத்தின் மூலம் த…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய பேச்சுக்களின்போது, பாகிஸ்தானும், இந்தோனீசியாவும் ''இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது'' என்ற வகையில் பேசியதாக கூறிய அசாத் சாலி அவர்கள், அது தவறு என்றும் ஆகவே அவர்களுக்கு அது குறித்து விளக்கும் வகையில் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரைக் கண்டு தாம் பேசியதாகக் கூறியுள்ளார். இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் போது, அவர்கள் ஹலால் போன்ற பல பிரச்சினைகள் எதிர்கொள்ளு…
-
- 6 replies
- 495 views
-
-
பிராம்டன் நகரில் உள்ள இரவு விடுதியில் இன்று புதன்கிழமை அதிகாலையில் மூன்று பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்பாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு அந்த பெண்களை குறிவைத்து சுடப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் வைத்து குறிக்கு இவர்கள் தாக்கப்பட்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது. பிராம்டன் நகரில் மிகவும் புகழ்பெற்ற இரவு கிளப் The Office Gentleman Club ஆகும். இங்கு வழக்கமாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் நடைபெறும் Twerk it Tuesdays என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று விழா நடந்துகொண்டிருந்தபோது அதிகாலை 1.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் விடுதி பரபரப்புக்கு…
-
- 0 replies
- 493 views
-
-
சிறு பிராயத்தில் கொள்ளை: சவுதியில் 7 பேருக்கு மரண தண்டனை! சிறு வயதில் நகைக் கடை ஒன்றைக் கொள்ளை அடித்ததற்காக 7 பேருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேந நாடுகளிடையே கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சர்ஹான் அல் மஷைக், சயீத் அல் ஜஹரானி, அலி அல்-ஷாரி, நாசர் அல் கடானி, சயீத் அல் ஷரானி, அப்துல் அஜீஜ் அல் ஆம்ரி, மற்றும் அலி அல் கடானி ஆகிய 7 பேர் தலையும் வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2006ஆம் ஆண்டு இவர்கள் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு அபா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைவாத நாடாகையால் ஷரியா சட்டத்தைக் கடைபிடித்து வருகிறது. இந்த சட்டத்தின் படி, கொலை, பாலியல் வல்ல…
-
- 0 replies
- 450 views
-
-
கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு மலேசியாவில் தமிழர்கள் கர்ச்சனை. [படங்கள்] மலேசியா தலை நகரம்கோலாலம் பூரில் அமைந்துள்ள இந்தியா தூதரகம் முன்பு தமிழர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதில் ஈழ தமிழருக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என போராட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13325:malesiya-news-13-03-2013&catid=37:india&Itemid=103 Share this post
-
- 3 replies
- 586 views
-
-
விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை புதுடெல்லி: வாக்குறுதியை காப்பாற்றாவிடில் அதற்கான விளைவை இத்தாலி சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதியோடு இத்தாலி வீரர்கள் இரண்டு பேர் நாடு சென்றனர். இதனிடையே, இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இரண்டு வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இத்தாலி தூதரை நேரி்ல் வரவழைத்து இந்தியா கண்டித்தது. இந்த நிலையி்ல், மக்களவை இன்று காலை கூடியதும் இத்தாலி வீரர்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.…
-
- 11 replies
- 646 views
-
-
பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து…
-
- 3 replies
- 693 views
-
-
நடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்ட இந்தியாவின் நிர்பயா இந்திய வடிவமைத்துத் தயாரித்துள்ள ´நிர்பயா´ என்ற ஏவுகணையின் சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒலியின் வேகத்தைவிட குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையின் சோதனை இன்று ஒரிஸ்ஸாவின் பாலாசூர் பகுதியில் சண்டிபூர் ஏவுகணை மையத்தில் நடந்தது. டிஆர்டிஓ தயாரித்துள்ள இந்த ஏவுகணை காலை 11.50 மணிக்கு ஏவப்பட்டது. ஆனால், அது இலக்கை விட்டுத் தவறி பாதை மாறிச் சென்றது. இதையடுத்து அந்த சோதனை நடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பாதை மாறிய இந்த ஏவுகணை கடலோரப் பகுதியில் வந்து விழுந்து வெடிக்கலாம் என்று தெரியவந்ததால் அதை வழியிலேயே விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்தனர்.…
-
- 12 replies
- 818 views
-
-
ராம் சிங்கின் மரணம் தற்கொலையே : பரிசோதனையில் உறுதி இந்தியாவின் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஈவிரக்கமற்ற முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பஸ் சாரதி ராம்சிங் உள்பட 6 பேரை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளில் 5 பேர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டவன் என்பதால் அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பஸ் சாரதி ராம்சிங், நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராம்சிங்கின் பிரேத பரி…
-
- 0 replies
- 428 views
-