உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்களின் ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களின் தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் 3ஆவது அணு ஆயுத சோதனையை நடத்தி முடித்துள்ள வட கொரியா, அமெரிக்கா தனது தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா தேசிய அமைதிக் குழு உறுப்பினரான யூரிமின் ஜோக்கிரியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்துக் கூறியிருப்பதாவது: ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக வட கொரியா மாறியுள்ளது. அமெரிக்கா இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்களின் அணு ஆயுதம் மற்றும் ராக்கெட்டுகளின் தாக்குதல் எல்லைக்குள்தான் அந்நாடு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை இலக…
-
- 0 replies
- 1.6k views
-
-
அல்,கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து அவரது பெயரை ஐ.நா. நீக்கியுள்ளது. இருப்பினும், பின்லேடனின் சொத்துகள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த விடாமல் முட க்கி வைக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து மேற்கொள்ளும்.பின்லேடன் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை தற்போது ஐ.நா. நீக்கியுள்ளது. அல்,கொய்தாவினருக்கு ஐ.நா. விதித்துள்ள தடை பட்டியலில் இப்போதும் 233 தீவிரவாதிகள், 63 அமைப்புகள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் உள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=76992&category=WorldNews&language=tamil
-
- 9 replies
- 588 views
-
-
வங்கதேச இஸ்லாமியக் கட்சியின் உபதலைவருக்கு மரண தண்டனை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 10:41 ஜிஎம்டி வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. மனிதப் படுகொலை, சித்ரவதைகள் ஆகியவைகள் உட்பட பல குற்றங்களுக்காக ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் உபதலைவரான டெல்வார் ஹொசைன் சைதீ அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பக்கசார்பானது என்று இந்த வழக்கு விசாரணையை விமர்சிக்கும் ஜமாத் கட்சியி…
-
- 0 replies
- 276 views
-
-
உலக நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட முடியாது: புதிய பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் புதிய மந்திரியாக சக் ஹேகல் நேற்று பதவி ஏற்றார். பின்னர் பென்டகனில் பணிபுரிபவர்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-நாம் உலகின் பலம் மிக்க நாடாக இருக்கிறோம். அந்த பலத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். நாம் மற்ற நாடுகளுக்கு உத்தரவிட முடியாது. நட்பு நாடுகளுடன் இணைத்து, தலைமை ஏற்று செயல்பட வேண்டும். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இதனை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளை நாம் புத்திசாலித்தனமாக வழிநடத்த வேண்டும். நமது நாட்டிற்காகவோ, நமது நட்பு நாடுகளுக்காகவோ வளங்களைப் பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ந…
-
- 0 replies
- 517 views
-
-
காவிரிநீரை பங்கீடு செய்வது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு அளித்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது. இதை தொடர்ந்து கர்நாடக அரசின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் கெடு முடியும் நாளன்று மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். வாரியம் அமைப்பதை தடுத்து நிறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர…
-
- 0 replies
- 352 views
-
-
பாதுகாப்புத்துறைக்கு ரூ. 43,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு- வரி ஏதும் இல்லை ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை- 10% வரி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை- 20% வரி 20 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்களுக்கு -30% வருமான வரி 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு- 30 சதவீதம் பிளஸ் 10 சதவீதம் வரி கூடுதல் நேரடி வரிகள் மூலம் ரூ. 30,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும் கூடுதல் மறைமுக வரிகள் மூலம் ரூ. 4,700 கோடி கூடுதலாகக் கிடைக்கும் ஏசி ஹோட்டல்கள் அனைத்துக்கும் சேவை வரி விதிப்பு மார்பிள் மீதான வரி சதுர மீட்டருக்கு 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக அதிகரிப்பு ரூ. 2000க்கு மேல் அதிக மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 6 சதவீதம் அதிகரிப்பு …
-
- 0 replies
- 484 views
-
-
இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு 15 வயது சிறுவன் தொடர்ந்து பல மாதங்களாக இண்டர்நெட்டில் ஆபாச இணையதளங்கள் பார்த்ததால், செக்ஸில் அதிக ஆர்வமாகி, 14 வயது சிறுமியை தன்னுடைய நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். Hartlepool நகர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி Judge Bourne-Arton அவர்கள் அளித்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து காவல் காக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சிறுவனை மிகவும் கண்டித்த நீதிபதி, இந்த சிறிய வயதில் இணையத்தின் ஆபாச இணையதளங்களை பார்த்து பாலியல் குற்றங்கள் புரியும் நிகழ்வை தடுக…
-
- 1 reply
- 574 views
-
-
அமெரிக்காவில் G20 கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்து நொறுக்கிவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்த ஒருவர் டொரண்டோவில் கைது செய்யப்பட்டார். Quinn McCormic, என்ற 25 வயது அமெரிக்க நபர் G20 கட்டிடத்தின் கதவு ஜன்னல்களை சேதப்படுத்தியது உள்பட நான்குவித குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தான். அவனை பிடிக்க அமெரிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் அவன் கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக வந்த தகவலை அடுத்து, கனடாவின் காவல்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டது. நேற்று டொரண்டோவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் Quinn McCormic என்ற நபரை அடையாளம் கண்ட டொரண்டோ காவல்துறையினர் அவனை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். Quinn McCormic…
-
- 0 replies
- 402 views
-
-
டொரண்டோ கல்வித்துறை இயக்ககம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்வித்துறை தங்களது பட்ஜெட்டில் $55 மில்லியன் டாலர்கள் மதிப்பில் தற்போது ஆசிரியர்கள் அனுபவித்து வரும் சலுகைகளை அதிரடியாக நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கல்வித்துறையின்சலுகை பறிப்பு நடவடிக்கையால் 115 முழுநேர ஆசிரியர்கள், 133 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், பிரின்சிபால் மற்றும் சில கல்வித்துறை அலுவலர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிகிறது. பள்ளி கல்வித்துறையின் பட்ஜெட்டில் மற்ற எல்லா செலவினங்களை விட ஊழியர்களுக்கு சம்பள் வகையில்தான் அதிக செலவு…
-
- 0 replies
- 397 views
-
-
கனடாவின் North York பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது நபர் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். GreenBush Road, in the Yonge Street and Steeles Avenue area என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது சிறுமியை அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திறாக அவன் கைது செய்யப்பட்டான் என டொரண்டோ காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவனின் பெயர் Cyril Gayola என்றும் அவனுடைய வயது 24 என்றும், தெரிவித்த அவர்கள், இன்று காலை அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். அவன் மீது பாலியல் தொடர்பான மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்லது. கைது செய்யப்பட்டவனின…
-
- 0 replies
- 459 views
-
-
எகிப்து நாட்டின் இளவரசியாக இருந்த உலக பேரழகி கிளியோபாட்ராவின் தங்கை Arsinoe அவர்களின் எலும்புகள் கிரேக்க நாட்டில் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். இளவரசியின் எலும்புகளை கண்டுபிடித்ததற்காக தங்கள் குழுவினர் பெருமைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் எலும்புகளின் DNA டெஸ்ட் செய்து பார்த்து உறுதி செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, கிரேக்க நாட்டின் மிகப் பழமையான Ephesus என்ற நகரத்தில் உள்ள பாழடைந்த கோவில் ஒன்றில் இருந்து இளவரசி Arsinoeஅவர்களின் எலும்புகள் கிடைத்ததாகவும், அதன் DNA வை வைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் அவருடைய தோற்றத்தை வரைந்து தற்போது ஊடகங்களுக்கு வெளியிடுவதாகவும் தெரிவித்தனர். கிளியோபாட்ரா தங்கையின்…
-
- 0 replies
- 551 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக சக் ஹேகல் புதன்கிழமை பதவியேற்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள லியோன் பனெட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, சக் ஹேகல் புதிய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, இப்பதவிக்கு, சக் ஹேகலின் பெயரை ஒபாமா பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரை மீதான வாக்கெடுப்பு செனட் சபையில் நடைபெற்றது. இதில், ஹேகலுக்கு ஆதரவு தெரிவித்து 58 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின. ஹேகல், வியத்நாம் போரில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. "நமது நாட்டுக்கு ஹேகல் போன்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்கள்தான் தேவை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, எந்த நேரத்திலும் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் விதத்த…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு: இன்று மாநிலங்களவையில் விவாதம் பதிவு செய்த நாள் - பெப்ரவரி 27, 2013 at 7:27:03 AM ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வரவுள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலையில், ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அது இன்று மாநிலங்களவையிலும் எதிரொலிக்க உள்ளது. …
-
- 10 replies
- 2.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பபடுத்தப்பட்டார் 27 பெப்ரவரி 2013 இலங்கையை சேர்ந்த இளைஞர் கைது அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை நியூசவுத்வேல் காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். 21 வயதான சந்தேக நபர் அரசியல் தஞ்சம் கோரி அந்த நாட்டுக்கு சென்றவர் என அந்த நாட்டின் குடிவரவு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த மாணவி கடந்த 20 ஆம் திகதி இரவு மெகாரி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் மேலும் சில இலங்கை அகதிகளுடன் குறித்த பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக கூறப்ப…
-
- 0 replies
- 354 views
-
-
சிரியாவில், அரசு படைகள், ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 140 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அரசு படைகள், கடந்த வாரம், அலெப்போ நகரில், நான்கு ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில், 20 கட்டடங்கள் தரைமட்டமாயின. 70 குழந்தைகள் உள்பட, 140 பேர் இந்த தாக்குதலில் பலியானதாக, சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தலைநகர் டமாஸ்கசில் உள்ள ராணுவ சோதனை சாவடியில், நேற்று கார் வெடிகுண்டு வெடித்ததில், ஐந்து வீரர்கள் பலியாயினர். காபூன் மற்றும் ஜோபார் மாவட்டங்கள் தற்போது கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இதை மீட்க அரசு படை, கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களும் பத…
-
- 0 replies
- 311 views
-
-
ம.பி.,யில் ரயில்வே ஊழியர் எரித்து கொலை: 2 குழந்தைகள் பலியானதால் மக்கள் ஆத்திரம் போபால்: மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகள் ரயிலில் அடிபட்டு இறந்ததால் ஆத்திரமுற்ற அவர்களது குடும்பத்தினர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தீ வைத்தனர். 2 ஊழியர்களை எரித்து கொல்ல நடந்த முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மணித்துளிகளில் இந்த வன்முறைச்சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ம.பி., மாநிலம் குல்பஞ்ச் ரயில் நிலையம் அருகேயுள்ள விதிஷா கிராமத்தில் ரயில் மோதியதில் இரண்டு குழந்தைகள் பலியானார்கள். மக்கள் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் நிலையத்தில் ரயில் கிளம்புவதாக தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டேஷன்…
-
- 0 replies
- 601 views
-
-
தென் கொரியாவின் முதல் பெண் அதிபரானார் பார்க் தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன்-ஹை (61) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பின்னர் துவக்க உரையாற்றிய அவர், வடகொரியா உடனடியாக அணு ஆயுத சோதனையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.தலைநகர் சியோலில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு கூடியிருந்த சுமார் 70,000 மக்கள் முன்னிலையில் பார்க் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, ராணுவம் சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய துவக்க உரையில் கூறியதாவது: சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு, வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக வேலை வாய்ப்பு உ…
-
- 0 replies
- 303 views
-
-
அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்: சீக்கியர் மீது துப்பாக்கி சூடு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் கன்வல்ஜித்சிங் (46). சீக்கியரான இவர், லாரி டிரைவராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இவர் தனது மகனுடன் டேடோனா கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுனர்கள் அவரையும், மகனையும் கடுமையாக தாக்கினார்கள். மேலும் துப்பாக்கியால் சுட்டனர். அதில், கன்வல்ஜித்சிங் தொடை மற்றும் உடலில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் கன்வல்ஜித்சிங்கின் மகன் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போர்ட் ஆரஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்களுக்கு இடையே முன்விரோதம் எது…
-
- 0 replies
- 280 views
-
-
போர்க்குற்ற மற்றும் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், பொருளாதாரத்தடை விதிக்கபட வேண்டும் என்றும், இலங்கை வடகிழக்கு மாவட்களில் மற்றும் தமிழ் வாழ்விடகளில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறித்தி உலகத் தமிழ் அமைப்பினர் (GTO) பெங்களூர் மாநகரின் டவுன் ஹால் (Town Hall) முன்பு நடத்திய போராட்டம். https://www.facebook.com/media/set/?set=a.10151455508574795.509810.610959794&type=1
-
- 1 reply
- 330 views
-
-
அமெரிக்க பிரேரணை குறித்து இலங்கை பீதியடையவே தேவையில்லை!- சுப்பிரமணியசுவாமி [ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 12:27.06 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ரீதியில் இந்தியா எடுக்கின்ற அநேகமான தீர்மானங்களின் பின்னணியில் இருப்பது அரசியல் நோக்கங்கள் என்று கூறிய அவர், அவ்வாறான நோக்கங்களில் தெளிவைக் கா…
-
- 4 replies
- 674 views
-
-
24 February 2013 07:14:44 PM படித்தவர்கள்: 55 கனடாவில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் பிரபல நிறுவனத்தின் தேயிலை பவுடரில் விஷத்தன்மை கலந்துள்ளதால் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் விற்பனையான அனைத்து தேநீர் பவுடரையும் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. The Canadian Food Inspection Agency இன்று விடுத்துள்ள ஒரு எச்சரிக்கை அறிக்கையில், Tega brand Organic Lemon Hibiscus Green Rooibos Herbal Tea என்ற நிறுவனத்தின் தேநீர் பவுடரில் விஷத்தன்மை கலந்துள்ளதால், அதை உடனே வாடிக்கையாளர்களிடம் இருந்தும், கடைகளில் இருந்தும் உடனே திரும்பப்பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தேநீர் பவுடர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெ…
-
- 15 replies
- 808 views
-
-
ரஷ்யாவில் எரிகல் விழுந்து 1500 பேர் படுகாயம் அடைந்தது குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்காதான் ஆயுத சோதனை நடத்தியிருக்கும் என்று பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கி.மீ. கிழக்கில் உள்ள யூரல் மலைப் பகுதியில் விண்ணில் இருந்து சக்திவாய்ந்த எரிகல் விழுந்து சிதறியது. இதில் வீடு, கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் 1200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். விண்ணில் இருந்து ரஷ்யா மீது சிதறியது உண்மையில் எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோவில் இருந்து வெளிவரும் நோவியி இஸ்வெஸ்ஷியா என்ற நாளிதழ் தனது வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. இதில் வாசகர்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.ரஷ்யா …
-
- 4 replies
- 662 views
-
-
இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் பரபரப்பு! கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் நேற்று (26.03.2013) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விடுதலைப்பு புலிகளின் தலைவர் பிரபாரகன் அவர்களின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை சிங்களப் பயங்கரவாத அரசு காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதற்கான புகைப்படங்கள் உட்பட இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் வெளிவந்ததையடுத்து உலகின் பல நாடுகளில் தமிழர்கள் கொதித்தெழுந்துள்ளனர். மலேசியாவில் உள்ள …
-
- 2 replies
- 704 views
-
-
ராஜஸ்தானில் இந்திய ராணுவத்தினர் நடத்திய போர் பயிற்சியை வேவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனப் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் போர் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அண்மையில் விமானப்படையினர் இரும்புக்கரம் என்ற பெயரில் போர் பயிற்சி செய்தனர். இந்த நிலையில், பொக்ரானில் இருந்து பாகிஸ்தானுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை உளவுத் துறையும், ராணுவ உளவுப் பிரிவும் கண்டுபிடித்தன. இதையடுத்து அடிக்கடி பாகிஸ்தானுக்கு தொலைபேசியில் பேசிய சுமீர் கான்(34) என்பவரை நேற்றுமுன்தினம் பிடித்து விசாரித்தனர். அப்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐக்கு உளவாளியாக அவர் செயல்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானில…
-
- 0 replies
- 671 views
-
-
கடைசி பிரார்த்தனை கூட்டத்தில் போப் பெனடிக்ட் உருக்கம் போப் 16-வது பெனடிக்ட், வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி ஞாயிறு பிரார்த்தனை என்பதால் சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர். அவரைப் புகழ்ந்தும், ஆதரவு தெரிவித்தும், வழியனுப்பும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மக்கள் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மத்தியில் போப் மிகவும் உருக்கமாகப் பேசினார். “ஓய்வு பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டுள்ளேன். இனிமேல் தொடர்ந்து அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் எனது நேரத்தை செலவிடப் போகிறேன். நான் இந்த தேவாலயத்தை கைவிட்டுச் செல்லவில்லை.…
-
- 0 replies
- 356 views
-