உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை இன்னும் ஓரிரு தினங்களில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு சக்தித் துறையின் முதன்மை ஆலோசகர் ரவி பூஷன் குரோவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட தொடர் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முதல் அணு உலை முழு வீச்சில் இயங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அணு உலையின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிய குரோவெர், அதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கப்படவில்லை என்றார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அணு உலைகளும் தலா ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. http://puthiyathalaimurai.…
-
- 4 replies
- 380 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! சீமான் உண்ணாவிரதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27ஆம் திகதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வேண்டி நாம் தமிழர் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 4ஆம் திகதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சீமான் நேற்று இர…
-
- 1 reply
- 384 views
-
-
சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக சென்னையில் திமுக தலைவர்கருணாநிதி தலைமையில் கருப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர். ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான 'டெசோ'வின் சார்பில் கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கருப்பு உடையில் குவிந்தனர். டெசோ அமைப்பை சேர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தி…
-
- 12 replies
- 805 views
-
-
பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் தாக்குதல் : 7 பயங்கரவாதிகள் சாவு பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் நடத்திய குண்டு வீச்சில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.வடமேற்கு பாகிஸ்தானில் வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில், பாபர் கர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இரண்டு குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் அந்த வீடு தரைமட்டமானதாகவும் அதில் இருந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியதாக தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தன.இத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வானொலி கூறியது. தாக்குதல் நடைபெற்ற பகுதி, தலிபான் மற்றும் அல்காய்தா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செ…
-
- 0 replies
- 343 views
-
-
உலகின் தங்கம் தயாரிக்கும் நாடுகளில் சீனா தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. தங்கத்தை வாங்கும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி சீனாவின் தங்கம் உற்பத்தி கடந்த ஆண்டை விட 11.66 சதவீகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி சுமார் 403 டன் தங்கத்தை உற்பத்தி சீனா உற்பத்தி செய்கிறது. சீன கோல்ட் கூட்டமைப்பின் அறிக்கைப்படி 1949 ஆண்டைவிட இந்த ஆண்டு சீனாவின் தங்க உற்பத்தி நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது சீனாவின் தங்க உற்பத்தி அளவு என்பது வெறும் 4.07 டன்னாக இருந்தது. இதன் மூலம் தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்காவை விட தங்க உற்பத்தியில் சீனா உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ளது. தங்கத்தை வாங…
-
- 0 replies
- 302 views
-
-
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது: பான் கி மூன் வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி- மூன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது. மாறாக, மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் தன் நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய ஐ.நா. முயற்சி செய்கிறது. ஆனால், அந்நாட்டின் அணு ஆயுதச் சோதனை அறிவிப்பு காரணமாக, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டுவதால், நிதிப்பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, ஐ.நா. அவசரகால நிவாரண நிதியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில…
-
- 0 replies
- 216 views
-
-
நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குரு இன்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 23ம் தேதி அவரது கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து அப்சல் குருவின் மரண தண்டனை இன்று காலை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் 5 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் டெல்லி காவல் துறையை சேர்ந்த 5 போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண்…
-
- 1 reply
- 360 views
-
-
பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்ட்ட ராஜஸ்தான் சிறுமி கவலைக்கிடம் ராஜஸ்தானில் ஒரு கொடூர கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.ராஜஸ்தானில் உள்ள சிகாரில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 6 பேர் கும்பல் கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, ஜெய்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அடிவயிற்றில் இதுவரை 6 ஆபரேஷன்கள் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று மாலை சிற…
-
- 0 replies
- 362 views
-
-
டெல்லியில் மீண்டும் கொடூரம்: ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வல்லுறவு Posted by: Siva Published: Friday, February 8, 2013, 9:12 [iST] டெல்லி: டெல்லியில் 24 வயது பெண்ணை 4 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் தலைநகரில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் 24-பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் டெல்லி ரோகினி பகுதி செக்டர் 16ல் வசிக்கும் தனது உறவினருடன் தங்கியுள்ளார். அவர் கடந்த புதன்கிழமை இரவு தனக்கு பழக்கமான முகமது ஷாகில்(எ) அலியை(23) சந்திக்க ஸ்வரூப் நகர…
-
- 6 replies
- 731 views
-
-
குஜராத்தில், சமீபத்தில் நடந்த, சட்டசபை தேர்தலின் முடிவுக்கு பின்,அம்மாநில முதல்வர், நரேந்திர மோடி மீதான விவகாரத்தில், புதிய பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம், என, ஜெர்மன் தூதர், மைக்கேல் ஸ்டெயினர் கூறினார். குஜராத்தில், 2002ல், ஏற்பட்ட கலவரத்தில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானோர், முஸ்லிம்கள். இதையடுத்து, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடியை, அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், தவிர்க்க துவங்கின.அவருடனான, தொடர்புகளையும் துண்டித்தன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த, குஜராத் சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடி, மீண்டும் வெற்றி பெற்று, முதல்வரானார். தற்போது, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின், பிரதமர் வேட்…
-
- 6 replies
- 661 views
-
-
ஒரே ஏவுகணையில், பல இலக்குகளை தாக்கும், நீண்ட தூர, அக்னி-6 ஏவுகணை தயாரிப்பில், இந்திய ராணுவம் மும்முரமாக உள்ளது, என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர், வி.கே.எஸ்.சரஸ்வத் கூறியுள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:அக்னி-5 ஏவுகணை, 5,500 கி.மீ., தாக்குதல் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அந்த ஏவுகணை, கடந்த, ஏப்ரலில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இப்போது, ராணுவ விஞ்ஞானிகள், அக்னி - 6 ஏவுகணை தயாரிப்பில் மும்முரமாக உள்ளனர்.அக்னி-5 ஏவுகணையை விட, இந்த ஏவுகணை, அதிநவீனமானது. அதை விட, அதிக தூரம் பறந்து, இலக்கை தாக்க கூடியது. மேலும், ஒரே ஏவுகணையிலிருந்து, பல இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சோதனை வெற்றி பெறுமானால்,…
-
- 2 replies
- 638 views
-
-
இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை பிப் 7, 2013 அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் புதுவிதமாக ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதற்காக பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. பிறந்த குழந்தையை வளர்ப்பதில், தந்தைக்கும் பங்கு உண்டு என்பதால் தாயுடன் அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க இச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/26651/64//d,fullart.aspx
-
- 20 replies
- 1.1k views
-
-
நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாகத்தான் இருக்கும் என அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இது மெய்ப்பிக்குமானால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் குறைவான வளர்ச்சி கண்ட ஆண்டாக இவ்வாண்டு அமையும். பணவீக்கத்தின் அளவு அதிகரித்தது, ஏற்றுமதிகளின் அளவு குறைந்தது மற்றும் உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்பட்டது போன்றவை இந்த நிலைக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பவரான பிரதமர் மன்மோகன் சிங், சீர்திருத்தங்கள் காரணமாக பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. http://www.b…
-
- 3 replies
- 642 views
-
-
டொரண்டோ மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி நிலவுவதால், சில பள்ளிகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்றும் சில பள்ளிகள் வகுப்புகளை ரத்து செய்துள்ளன. மேலும் சாலையில் பனி அடர்ந்து காணப்படுவதால், சில பள்ளிகளின் பேருந்துகள் இயக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே டொரண்டோ பகுதிகளில் பல பள்ளிகளின் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. The Catholic and public district school பள்ளி நிர்வாகம், தங்களது அனைத்து பள்ளி பேருந்துகளையும் இன்று ரத்து செய்துள்ளன. ஆனாலும் பள்ளி வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோலவே York and Durham பகுதி பள்ளியும் மற்றும் Trillium Lakelands District School Board பள்ளி நிர்வாகமும் அறிவிப்பு செய்துள்ளன. University of To…
-
- 7 replies
- 715 views
-
-
அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை கிடையாது ஈரான் தலைவர் அயதுல்லா காமெனி உறுதி அமெரிக்காவுடன், அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் தயாராக இல்லை,” என, அந்நாட்டின் தலைவர் , தெரிவித்துள்ளார். ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா, குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், “அணு ஆயுதம் தொடர்பான பிரச்னையை தீர்க்க, ஈரான் பேச்சு வார்த்தைக்கு முன் வரவேண்டும்’ என, தெரிவித்திருந்தார்.இது குறித்து, ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறியதாவது:மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவின் திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே,எப்படியாவது வெற்றி பெறும் நோக்கில், அந்நாடு, ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஒருபுறம் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு, மறுபுறம் பேச்…
-
- 0 replies
- 356 views
-
-
பயணிகளை நோக்கி.. நடுவிரலைக் காட்டிய, பணிப்பெண்... ரஷ்யாவில் களேபரம்! மாஸ்கோ: ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம் வெளியான காரணத்தால். அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான ஏரோபிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது காட்டுத் தீ போல பரவி விட்டது. பலர் இதை எடுத்து ட…
-
- 9 replies
- 837 views
-
-
இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ஃப்ளு) தொற்று நோயினால் 94 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்துவருகின்றனர். மோசமான குளிர்காலநிலையே பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருகின்றமைக்கு காரணம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான எச்1 என்1 வைரஸ் தொற்று முதன்முதலில் 2009-ம் ஆண்டில் மெக்சிக்கோவிலேயே கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகெங்கிலும் வேகமாக பரவியது. இந்தியாவில் 20…
-
- 1 reply
- 385 views
-
-
வாக்கு வங்கி அரசியல், நாட்டைச் சீரழித்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லி சென்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் புதன்கிழமை உரையாற்றினார். கல்லூரிக்கு வெளியே தம்மை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கண்டுகொள்ளாமல் மோடி பேசியது: நாட்டில் ஒருவித அவநம்பிக்கை நிலவுகிறது. இங்கு எதுவுமே மாறாது என்று மக்கள் கருதுகின்றனர். அனைவரும் திருடர்கள் என்றும் அனைத்துமே வீண் என்றும் அவர்கள் விரக்தியோடு நினைக்கின்றனர். இந்தியாவில் பிறந்ததே சாபக்கேடு என்று மக்கள் நொந்து கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு நாட்டை விட்டே வெளியேற விரும்புகின்றனர். ஆனால் எனது எண்ணம், இதற்கு மாறாக இருக்கிறது. நான் ந…
-
- 1 reply
- 474 views
-
-
டெல்லி: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் சுட்டதில் படுகாயமடைந்த போலீஸ்காரரையும், ஹெலிகாப்டர் மற்றும் ஆயுதங்களை விட்டுவிட்டு ஓடிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டிமில்வாடாவில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் டிமில்வாடா வந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது மாவோயிஸ்டுகள் சுட்டதில் 19 குண்டுகள் அதில் பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் தரையில் விழுந்தது. அப்போ…
-
- 5 replies
- 547 views
-
-
அமெரிக்காவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 5 பேர் உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியாக இது கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி அடையாள அட்டைகள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். வரவுசெலவு விவரங்களையும் போலியாகக் காட்டி, கிரெடிட் கார்டின் செலவு செய்யும் வரம்பையும் அதிகரித்துள்ளனர். இவ்வகையில், 20 கோடி அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.1,063 கோடி) அதிகமாக மோசடி செய்துள்ளனர். பணத்தை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக, அமெரிக்க அரசு வழக்குரைஞர் பால் பிஷ்மேன…
-
- 1 reply
- 721 views
-
-
சந்திரசேகர்-ஸ்டாலின் | சந்திரசேகர்-சத்யராஜ்1 | சந்திரசேகர்-சத்யராஜ்2 | சந்திரசேகர்-நந்தனா சற்றும் சம்பந்தம் இல்லாமல் தன்னிடம் பாசம் காட்டிய நாய் மீது அன்பு கொண்ட நடிகர் சந்திரசேகர் அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார். வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த…
-
- 0 replies
- 472 views
-
-
ஈரான் ஜனாதிபதி மீது கெய்ரோவில் சப்பாத்து வீச முயன்றவர் கைது கெய்ரோ: எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு விஜயம் செய்திருந்த, ஈரானிய ஜனாதிபதி முகமட் அகமதி நிஜாத் மீது சப்பாத்து வீச முயன்றவரை அவருடைய பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரு ‘கோழை’ எனக் கத்திக்கொண்டு சப்பாத்து ஒன்றை ஈரானிய ஜனாதிபதி மீது எறிந்தவரை, பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கும் காட்சியடங்கிய ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவராத போதிலும், சப்பாத்து வீசியவர் ஈரானுக்கு எதிரியானவர் எனவும், சிரிய அரசிற்கு ஆதரவாகச் செயற்படுபவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் பின் முதன்முதலாக ஈரான் ஜனாதிபதியாக முகமட் அகமதி நிஜாத் எகிப்திற்கு …
-
- 1 reply
- 463 views
-
-
உத்திர பிரதேச மாநில அமைச்சர் மேடையில் மாவட்ட பெண் நீதிபதியின் அழகை வர்ணித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தின் காதி மற்றும் கிராமோத்யோக் துறை அமைச்சரான ராஜாராம் பாண்டே அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் சுல்தான்பூரின் மாவட்ட பெண் நீதிபதி தனலட்சுமியின் அழகை வர்ணித்தார். ராஜாராமின் இச்செயல் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சுல்தான்பூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜாராம் பாண்டே, மாவட்ட நீதிபதி தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் ராஜாராம், இந்த மாவட்டத்திற்கு ஏற்கனவே ஒரு பெண் மாவட்ட நீதிபதியாக (முன்னாள் மாவட்ட நீதிபதி காமினி சௌஹன்) இருந்தது இம்மாவட்டத்தில் அதிர்ஷ்டம், ஆனால் தற்போதைய மாவட்ட நீதிபதி (தனலட்…
-
- 9 replies
- 865 views
-
-
அலகாபாத்: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு போன்று பிரபலமானவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்று விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். அலகாபாத் வந்த விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் நாட்டில் பிரபலமாக உள்ளார். இந்து சமுதாயத்தின் நலன் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று சில பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சிங்கால் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் விஸ்வ இந்து பரிசத் தலைவர்களை விரைவில் சந்திக்கப் போவதாக அறிவித்ததையடுத்து ச…
-
- 1 reply
- 459 views
-
-
சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013 11:02 0 COMMENTS பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நில ந…
-
- 4 replies
- 1.5k views
-