Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த பால் வியாபாரி கைது - இதுபோன்ற அவலநிலை நடைபெறுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புதியதலைமுறை கண்ட சிறப்பு பேட்டி...

    • 0 replies
    • 357 views
  2. வட்ட செயலாளர் 'வண்டு முருகனும்' ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்! அந்தியூர்: உதயகுமாரை ஆரம்பத்திலேயே அடக்கி இருந்தால் கூடங்குளத்தில் இப்போது மின் உற்பத்தி தொடங்கி இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அதிக நேரம் பேச விடவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடும்பாவியை எரித்து அதிமுகவினர் அநாகரீமாக நடந்து கொண்டார்கள். இதை நாங்கள் திருப்பி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?. அந்த செயலை நாங்கள் செய்ய மாட்டோம்…

  3. இந்திராகாந்தி கொலையாளிக்கு மாவீரர் பட்டம்: அகாலி தளம் கவுரவம். அமிர்தசரஸ்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக்கொன்ற சீக்கிய காவலாளிக்கு அகாளிதளம் மாவீரர் பட்டம் வழங்கி கவுரவத்துள்ளது. சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது மெய்காப்பாளர்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி மா…

  4. 49 ஈரோ கொடுத்து ஐரோப்பாவிற்குள் பயணம் செய்யலாம்- எயர் பிரான்ஸின் அதிரடி அறிவிப்பு! Published on January 7, 2013-11:15 am · No Comments பிரான்சின் எயர் பிரான்ஸ் விமான நிறுவனம் இன்று அதிரடியாக விலைக்குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலையில் பயணங்களை நடத்தி வரும் விமான நிறுவனங்களிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விமான பயண சீட்டுகளை மலிவு விலையில் அறிவித்துள்ளது பிரான்ஸின் உள்ளுர் சேவைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான சேவைகள் மத்திய கடல் பிரதேச நகரங்கள் உட்பட 58 வழித் தடங்களிற்கான விமான பயண சீட்டுகளின் ஆரம்பவிலையாக 49 ஈரோவாக நிர்ணயித்துள்ளது. உள்ளுர் சேவையில் இரு வழி பயணத்திற்கும் இக்கட்டணமே அறவிடப்பட உள்ளது. இன்றிலிருந்து மலிவுவிலை பயண சீட்டுகளை பதிவு …

  5. அவுஸ்திரேலியாவின் டஸ்மானியாவில் காட்டுத் தீ: 100 பேரைக் காணவில்லை! By General 2013-01-07 10:24:00 அவுஸ்திரேலியாவின், டஸ்மானியா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அடுத்து அங்கு சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான வெயில் காரணமாக அங்கு வெப்பநிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிகமாகவுள்ளது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. அங்கு தொடர்ச்சியாக பரவிய இந்த காட்டித்தீ அருகில் உள்ள வீடுகளை தீக்கிரையாக்கியது. உடனே அப்பகுதி வீடுகளில் இருந்த 3000 பேரை மீட்புபடையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். பெரும்பான்மையான மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில உடல்கள் எரிந…

  6. அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக சக் ஹெகலை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமிப்பார் என அமெரிக்க மீடியா அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புதிய பாதுகாப்பு செயலாளராக ‌சக் ‌ஹெகலை ஒபாமா இன்று அறிவிக்க உள்ளதாகவும் குடியரசு கட்சி இதற்கான ஒப்புதல் இன்று அளித்து ஹெகலை பாதுகாப்பு செயலாளராக அறிவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. 66 வயதான சக் ஹெகல், முன்னாள் குடியரசுக்கட்சியின் பிரநிதிகள் சபையின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-004400436.html

    • 2 replies
    • 564 views
  7. 28 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் கடும் பனிப் பொழிவு Sunday, January 6th, 2013 at 18:42 சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் உறைபனியில் 1000 கப்பல்கள் சிக்கி தவிக்கின்றன. 28 ஆண்டுகளுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்கிறது. பொதுவாக அங்கு மைனஸ் 15.3 டிகிரி தட்பவெப்ப நிலை நிலவும். குளிர்காலத்தில் மைனஸ் 3.8 டிகிரியாக இருக்கும். இது கடந்த 42 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மைனஸ் 7.4 டிகிரியாக தட்பவெப்ப நிலை குறைந்துவிட்டது. எனவே எங்கும் பனிக்கட்டி மயமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக சீனாவின் சுற்றுலா துறை…

    • 0 replies
    • 495 views
  8. டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர். டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில்,23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, …

    • 3 replies
    • 1.1k views
  9. சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் நேற்று டமாஸ்கஸில் டி.வி., முன் பேசினார்.அப்போது பயங்கரவாதத்தை மட்டும் புரிந்து கொள்பவர்களுடனும், மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுபவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது, என, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் பேசினார். இதற்கு அமெரிக்கா அவரது பேச்சை தள்ளுபடி செய்ததாக அறிவித்துள்ளது.அவரது பேச்சு மீண்டும் அவர் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதில‌ேயே குறி்‌க்கோளாக இருப்பதை காட்டுகிறது என்றும் மக்களின் மாற்றத்திற்கு ஏற்றதாக இல்லை என வெளியுறவு பெண் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%9A-%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D…

  10. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை நான் எப்போ சொன்னேன்?; ஆனால் முன்மொழிவேன்: கருணாநிதி சென்னை: அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் எனக் கூறவில்லை; அப்படியே கூறினாலும் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி உள்ள கருணாநிதி, பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் என்று குழப்பமாகவே கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும் கட்சி வளர்ச்சிக்கு நிதி வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட…

  11. கொலம்பியாவில் உள்ள ஹொண்டியுராஸ் தூதரகத்தில், கிறிஸ்துமஸ் விருந்தின்போது பாலியல் தொழிலாளர்கள் வந்து அவ்விடத்தில் பொருட்களைத் திருடி அட்டூழியம் செய்தனர் என்று வெளியாகியுள்ள தகவல்களை விசாரிக்கப்போவதாக ஹொண்டியுராஸ் அரசாங்கம் கூறுகிறது. பொகோட்டாவில் உள்ள இந்த தூதரகத்தின் ஊழியர்கள் தமது கிறிஸ்துமஸ் விருந்திலே குடித்துவிட்டு களியாட்டம் போடுவதற்காக பாலியல் தொழிலாளர்களை அழைத்திருந்தனர் என்றும், அந்த விருந்தின்போது அங்கிருந்த கணிணிகள், கைத்தொலைபேசிகள் போன்றவை திருடுபோயுள்ளன என்றும் ஹொண்டியுராஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. களியாட்டம் போடச் சென்றவர்கள் தூதரின் அலுவலக அறைக்குள் மலம் கழித்துவிட்டுச் சென்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஹொண்டியுராஸ் மற்றும் கொலம்பியா இடையே போதைமர…

  12. கனடாவின் முக்கிய பகுதியான ரொறொன்ரோவின் மிக முக்கிய நீர் மின் உற்பத்தி நிலைய இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரொறொன்ரோவின் நகரப் பகுதிகளில் சில நாட்களுக்கோ , வாரங்களுக்கோ மின்தடை ஏற்படக் கூடும் என ரொறொன்ரோ ஹைட்ரோ அறிவித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் மிகப் பழமையானது என்பதால் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதாகவும், நாளுக்கு நாள் ரொறொன்ரோவில் மக்கள் பெருக்கம் அதிகமாகி வருவதால் இக்கட்டான இது போன்ற நிலையை சமாளிக்கும் பொருட்டு புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ரொறொன்ரோ ஹைட்ரோ அதிகாரிகள் விவாதித்தனர். இதற்காகவே $195 மில்லியன் செலவில் ரோஜர்ஸ் சென்ரர் அருகே New Bremner Transformer station அமைப்ப…

    • 0 replies
    • 485 views
  13. என்ன எல்லாரும் சுண்டல ஒரு மாதிரி பாக்கிறிங்க? அப்பிடின்னு நான் சொல்லலப்பா ........ மேற்கத்திய நாடுகளின் பழக்க வழங்கங்கள் நகரங்களில் அதிகம் கடைபிடிக்கப்படுவதால் இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. இதனால் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் கிராமங்களை காட்டிலும் நகரங்களிலேயே அதிகம் நடக்கிறது என்று ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். மேலும், பெண்களை தாயாக மதிக்கும் நம்நாட்டின் கலாச்சாரத்தையும் மதிப்பையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேணிக்காக்க வேண்டும். இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ். தரும் என்றும் அவர் கூறியிருந்தார். இக்கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பல்வேறு தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்…

    • 0 replies
    • 897 views
  14. சில வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ரஜினியின், "வாய்ஸ்' பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பிறந்தநாள் விழாவிலும், அதற்கு அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்தநாள் விழாவிலும் பரபரப்பை ஏற்படுத்திய களங்கள்.ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த விழாவில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, சக நடிகர்கள் அவரை உசுப்பேற்றி விட்டனர். ஆனால், விழாவில் பேசிய ரஜினியோ, "அரசியலுக்கு வருவேன் என, பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன்' என, குறிப்பிட்டார். அரசிலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, இந்த பேச்சால், ஏமாந்து போன ரசிகர்களுக்கு, அடுத்த நிகழ்ச்சியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார் ரஜினி. தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட, மத்திய அம…

  15. தேர்தலின் போது கேபிள் டிவியை முழுவதுமாக பயன்படுத்தி வென்ற ஒபாமா Posted by: Mathi Published: Sunday, January 6, 2013, 12:04 [iST] நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது கேபிள் டிவிதான் என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடப்பாண்டில் கேபிள் தொலைக்காட்சிக்கான விளம்பரமானது 650 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது 136 மில்லியன் டாலராக இருந்தது. மொத்தம் 6 லட்சம் கேபிள் விளம்பரங்களை ஒபாமாவும் 3 லட்சம் விளம்பரங்களை ராம்னியும் வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய சில வாரங்களில் ஒபாமா தரப்பு முழு வீச்சில் கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம்…

  16. The magnitude 7.5 earthquake that struck off the Alaska coast overnight posed a brief tsunami threat to parts of Alaska and Canada but not to California's coast, officials said. The temblor was too far north to cause major wave activity in California. Officials issued a tsunami alert for the immediate area but canceled it a few hours later. There were no reports of damage from the temblor near Craig, Alaska. The Alaska Tsunami Warning Center later said the waves were too small to pose a threat, reaching just six inches above normal sea level in places such as Sitka and Port Alexander, the Associated Press reported. "Initially, in the first 15 to 20 minutes, th…

  17. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிரின் காரணமாக குறைந்தது இருபது பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய குளிர் காலத்தில் மட்டும் இந்தியாவில் சீதோஷ்ண நிலையின் காரணமாக உயிரிழக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கை நூற்று முப்பதாக அதிகரித்துள்ளது. இந்த குளிர் காலத்தில் மிக அதிகமான வெப்ப நிலைச் சரிவைச் சந்தித்த மாநிலம் உத்தர பிரதேசம் ஆகும். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல ஊர்களிலும், தலைநகர் தில்லியிலுங்கூட கடுங்குளிர் தாக்கியது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான வெப்ப நிலை தில்லியில் சென்ற வாரம் தில்லியில் பதிவாகியிருந்தது. பல நகரங்களில் அடர்த்தியான மூடுபனியும் பரவியுள்ளதால் பொதுப்போக்குவரத்து சேவைகளும் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன…

  18. ஈழத்தில் தமிழினத்தை வேர​றுத்த சிங்கள அரசு, வெளிநாடுகளில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதர​வாகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்த நினைக்கிறது. உள விலும் அச்சுறுத்தும் சம்பவங்​களிலும் கைதேர்ந்த சிலரை இந்த அசைன்மென்ட்டுக்காக தமிழ கத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஈழப் போராட்டங்களுக்கும் புலிகள் ஆத ரவு நிலைப்பாட்டுடன் இருக்கும் முக்கியத் தலைவர்​கள் சிலர்தான் இந்த உளவு மனிதர்களின் குறி'' என்று அதிரவைக்கும் தகவலைச் சொன்னார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர். ஈழத்துடன் தொடர்பில் இருக்கும் உணர்வாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ''இலங்கையில் நடந்த நான்​காம் கட்ட ஈழப் போருக்குப் பிறகு, புலிகளின் செயல்பாடு அங்கே முற்றிலும் தடுக்கப்பட்டு​விட்டது. ஈழத்தைச் சிதைத்து விட்ட இலங்கை அரச…

    • 0 replies
    • 563 views
  19. ஆடையில்லாமல் சாலையில் கிடந்தபோது பொதுமக்களை வேடிக்கை பார்க்கவிட்ட பொலிசார்! - டில்லி மாணவியின் நண்பர் குற்றச்சாட்டு [saturday, 2013-01-05 08:24:41] பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரின் பேட்டியை ஒளிபரப்பிய ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 228(ஏ) (பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படையாக தெரிவித்தல்) பிரிவின் கீழ் ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என டில்லி மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டபோது உடன் சென்றிருந்த அவரது நண்பர் வெள்ளிக்கிழமை இரவு ஜீ…

  20. லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 10 கோடி டாலர், (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான சுவாமி நாராயணா கோயில் தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. புருஷோத்தம சுவாமிநாராயண சன்ஸ்தா அமைப்பு சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் இதுவரை 67 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் 68-ஆவது சுவாமிநாராயணா கோயில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள ஹாலிவுட் நகரத்துக்கு அருகே பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி பக்தர்களின் வழிப்பாட்டிற்காக கோயில் திறக்கப்பட்டது. இருபது ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் ஐந்து கோபுரங்களால் சூழப்பட்டு இரண்டு பெரிய குவி மாடங்கள், நான்கு மே…

  21. வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக்கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந்துள்ளது. தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது. மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும், புற்றுநோயின் பாதிப்புடன் மார்புச்சளி, காய்ச்சல், மூச்சுவிட இயலாத நிலையில் மேலும் பல சிக்கல்களை அவருடைய உடல் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. 58 வயதான ஸாவாஸ் பெரும் எண்ணெய் வளமுள்ள வெனிசியூலா நாட்டின் அதிபராக இருந்துகொண்டு அதி தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இ…

    • 3 replies
    • 666 views
  22. இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண், தான் ஆசை ஆசையாக வளர்த்த ஐந்து பூனைகள் இறந்துவிட்டதால், அதனை நினைவு கொள்ள, அந்த ஐந்து பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த நியூடவுன் நகரில் வாழும் 23 வயது Fran Bailey என்ற பெண், ஐந்து பூனைகளை தனது வீட்டில் வளர்த்து வந்தார். திடீரென ஐந்து பூனைகள் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து போனதால், பெருத்த வருத்தமடைந்த அப்பெண், பூனைகளின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் அந்த பூனைகளின் நினைவு தனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என கருதி, அந்த பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பெரிதாக பச்சை குத்திக் கொண்டார். இவரது பூனைப்பாசத்தைப் பார்த்து அப…

  23. அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ப்ளேபாய் பத்திரிகையின் நிறுவனர் 86 வயதான ஹக் ஹெப்னர் கடந்த 31-ம் தேதியன்று 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இதை உலகமே வியந்து பார்த்தது. இந்நிலையில், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸ் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தை விரிவாக்க 86 வயதான ஹக் ஹெப்னர் விரும்புகிறார். ஆனால், ஹக் ஹெப்னர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை கிறிஸ்டல் ஹாரிஸுக்கு இல்லை. தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இருக்கிறது என்பதையும் எந்த வேலையைச் செய்து முடிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை இதன்மூலம் உலகுக்கு நிரூபிப்பேன் என்று ஹக் ஹெப்னர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறிவருகிறார். …

    • 0 replies
    • 599 views
  24. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் குடிபோதையில் அருகிலுள்ள பெண்ணையும், மற்ற பயணிகளையும் தொந்தரவு செய்ததால், குடிகாரரின் வாயை பிளாஸ்டிக் டேப் ஒன்றால் கட்டியதோடு, அவரை அவருடைய சீட்டில் வைத்து கட்டி விமான பயணம் முடியும்வரை கட்டி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Andy Ellwood என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று முன் தினம் நீயூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில் குடிபோதையில் ஒருவர் விமானத்தின் உள்ளே பயங்கர கலாட்டா செய்ததாகவும், அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும், இதனால் சக பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த மனிதரை பிளாஸ்டிக் டேப் வைத்து வாயை க…

    • 0 replies
    • 518 views
  25. தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்…

    • 0 replies
    • 434 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.