உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர்,மைக்கேல் ஃப்ளூரி பதவி,வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா 7 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மார்ச் 2024 உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்த…
-
- 0 replies
- 600 views
-
-
Published By: SETHU 08 MAR, 2024 | 11:41 AM நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன. பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டது. நேட்டோவில் சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என க…
-
- 0 replies
- 459 views
- 1 follower
-
-
ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி பாராளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தனிநபர், சட்டம் கொடுத்த உரிமையுடன் வீட்டிலேயே 3 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். மேலும், ஒருவர் சுமார் 25 கிராம் வரை கஞ்சாவை தினமும் எடுத்துகொள்ளலாம். கஞ்சா எடுத்துகொள்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும் அதில் உறுபினர்கள் மட்டுமே சட்டபூர்வம…
-
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
உக்ரைனின் துறைமுக நகரான ஒடிசாவுக்கு கிறீஸ் நாட்டு அதிபருடன் விஜயம் மேற்கொண்டிருந்த உக்ரைன் அதிபர் அங்கு ரஷ்சியாவின் ஏவுகணைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ரஷ்சிய ஏவுகணை இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய இடத்தில் இருந்து சும்மார் 150 மீட்டர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளது. இருந்தாலும் இரு தலைவர்களும் உயிர்பிழைத்திருக்கின்றனர். இதனிடையே இத்தாக்குதல்.. உக்ரைனின் கடல் ரோன்களின் காப்பிடம் மீது நடத்தப்பட்டதாக ரஷ்சியா கூறியுள்ளது. மேலும் இலக்கு சரியாக தாக்கப்பட்டதாகவும் அறிவித்திருக்கிறது. உக்ரைன் கடற்படை இத்தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிறீஸ் அதிபரோ.. சைரன் ஒலியும் கேட்டது.. ஏவுகணை வெடிப்பும் கேட்டது...நமக்கு அருக…
-
- 1 reply
- 515 views
-
-
Published By: RAJEEBAN 27 FEB, 2024 | 09:55 AM உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பாரிசில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பில் உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் படையினரை அனுப்புவது குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை வரை படையினரை உக்ரைனிற்கு அனுப்புவது குறித்து எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை ஆனால் இதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஸ்யா யுத்தத்தில் வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வ…
-
-
- 5 replies
- 699 views
- 1 follower
-
-
சர்வதேச மகளிர் தினம் 2024: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்? ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும்…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற நவல்னி தளது இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
-
- 18 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது. லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜேர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயற்பட்டு வருகின்றன. பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது இந்நிலையில் ஜேர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து…
-
- 1 reply
- 341 views
- 1 follower
-
-
Published By: SETHU 06 MAR, 2024 | 05:08 PM சந்திரனில் அணு உலையொன்றை அமைப்பது குறித்து சீனாவும் ரஷ்யாவும் ஆராய்கின்றன. 2033 -2035 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சந்திரனில் அணுஉலை அமைப்பதற்கு இவ்விரு நாடுகளும் விரும்புவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொஸ்கொஸ்மோஸின் தலைவர் யூரி பொரிசோவ் தெரிவித்துள்ளார். 'இப்போது நாம் இத்திட்டத்தை தீவிரமாக ஆராய்கிறோம் என அவர் கூறினார். சந்திரனில் அணுசக்தி ஆனது. எதிர்க்கால சந்திரமண்டல குடியிருப்புகளுக்கான மின்சக்தியை அளிக்கும். சூரியத் தகடுகள் போதுமான அளவு மின்சாரத்தை வழங்க மாட்டாது என அவர் கூறினார். இத்திட்டம் மிக சவாலானது. மனிதர்களின் பிரசன்னமின்றி, த…
-
- 0 replies
- 441 views
- 1 follower
-
-
Published By: SETHU 05 MAR, 2024 | 12:23 PM அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது என என அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொலராடோ மாநில குடியரசுக் கட்சி உட்கட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற முடியாது என கொலராடோ மாநில நீதிமன்றம் கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், கொலராடோ உயர் நீதிமன்றத்த…
-
-
- 11 replies
- 973 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக…
-
- 0 replies
- 169 views
-
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை! பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ் மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372228
-
-
- 13 replies
- 833 views
- 1 follower
-
-
இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையின் தலைவிதி மேலும், அவுஸ்திரேலியாவிலுள்ள கன்பரா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம…
-
- 2 replies
- 610 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 02:55 PM செங்கடலில் கடலுக்கடியில் உள்ள பல தகவல் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே இணைய சேவை 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார். ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய வழங்குனர்களின் கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து இணையச் சேவை தடைபட்டுள்ளது. 15 கேபிள்களில் நான்கு சமீபத்தில் துண்டிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட எச்.ஜி.சி குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தொலை தொடர்பு ந…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள் – டிரம்பின் ஆதரவாளர்கள் சர்ச்சை நடவடிக்கை போலியான செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்துவருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலிவீடியோக்கள் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவது தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. 2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் டிரம்ப் தற்போது அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையா…
-
- 0 replies
- 193 views
-
-
பட மூலாதாரம்,COLOMBIAN GOVERNMENT படக்குறிப்பு, கொலம்பிய ஆட்சித்தலைவர் குஸ்டாவோ பெட்ரோ, இக்கப்பலை மீட்டெடுப்பது தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகஸ் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இக்…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
ரோத்ஸ்சைல்ட்ஸ்: பிரிட்டன் போன்ற வல்லரசுகளுக்கே கடன் கொடுத்த இந்த யூத குடும்பம் 'இஸ்ரேல்' உருவாக என்ன செய்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட், இந்த வாரம் தனது 87ஆம் வயதில் இறந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ் பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு 4 மணி நேரங்களுக்கு முன்னர் திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு பதிலாக, உலகின் மிகவும் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் & கோ எனும் தனியார் வங்கி சாம்ராஜ்யத்தை அவர் நிற…
-
- 0 replies
- 725 views
- 1 follower
-
-
ஆபத்தான குளிர்கால புயல் கலிபோர்னியாவை வந்தடைந்துள்ளது மற்றும் வார இறுதியில் மலைகளில் பனி, சக்திவாய்ந்த காற்று மற்றும் அரிதான பனிப்புயல் நிலைகளை இறக்கும். இந்த புயல் கலிபோர்னியாவை இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவின் கீழ் புதைக்கும், பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் - ஆனால் மாநிலத்தின் நீர் வழங்கல் மற்றும் சுற்றுலாவிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. சியாரா நெவாடாவின் மிக உயர்ந்த சிகரங்களில் வியாழன் அன்று கடும் பனியுடன் 140 மைல் வேகத்தில் காற்று வீசியது. சக்திவாய்ந்த புயல் இந்த தீவிர காற்றையும், வார இறுதியில் கடுமையான பனியையும் இறக்கி, நீண்ட கால பனிப்புயல் நிலைமைகளை உருவாக்கும். "சியரா பாஸ்களில் பயணம் செய்வது ஏற்கனவே துரோகமாகிவிட்…
-
-
- 9 replies
- 835 views
- 1 follower
-
-
ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் - உங்களை நாங்கள் மறக்கமாட்டோம் - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம் Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 12:43 PM கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர் ரஸ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த அலெக்ஸி நவால்னி 16 ம் திகதி சிறையில் உயிரிழந்தார். இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நவால்னியின் பெயரை குறிப்பிட்…
-
-
- 2 replies
- 525 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார். இதற்கு இரண்டு நாட…
-
- 3 replies
- 714 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 04:26 PM ஹெஸ்புல்லா அமைப்பை இஸ்ரேலுடனான வடபகுதி எல்லையிலிருந்து அகற்றுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டால் இஸ்ரேல் வசந்தகாலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடைகால ஆரம்பத்தில் லெபனானிற்குள் தரைவழியாக நுழைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருகின்றது என வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் புலனாய்வாளர்கள் மத்தியில் கவலை நிலவுகின்றது. சிஎன்என் இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு புலனாய்வு பிரிவினர் இஸ்ரேல் லெபனானிற்குள் தரைவழியாக நுழையலாம் என்பது குறித்து தகவல்களை வழங்கியுள்ளனர். கோடைகாலத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை ஆரம்பிக்கும் என…
-
-
- 4 replies
- 679 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிறதா பிரான்ஸ்? நேட்டோ ராணுவக் கூட்டணி என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இமானுவேல் மக்ரோங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் தங்கள் துருப்புக்களை அனுப்பும் யோசனையை தவிர்க்கக் கூடாது என பேசியிருந்தார். அவருடைய இக்கருத்து ஐரோப்பா முழுவதும் அதனைக் கடந்தும் எதிர்வினைகளை பெற்று வருகிறது. பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள், நேட்டோ உறுப்பினர்கள் ஆகியோர், இதுகுறித்து தங்கள் கருத்து வேறுபாடுகளை பரவலாக வெளிப்படுத்த வழிவகுத்தது. யுக்ர…
-
- 1 reply
- 404 views
- 1 follower
-
-
Published By: SETHU 29 FEB, 2024 | 03:43 PM இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐக கடந்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல்களையடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இத்தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளது என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 30,035 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 70457 பேர் காயமடைந்துள்ளனர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கா…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி நாட்டை காட்டிக்கொடுத்தார் - அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவின் தலைவர் திடுக்கிடும் தகவல் Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 12:15 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் நாட்டை வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடீம் என்ற வெளிநாட்டு புலனாய்வு குழுவினருடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு புலனாய்வாளர்களை பிரதமரின் அலுவலகம் வரை அழைத்துச்சென்றார் என தேசிய புலனாய்வுபிரிவின் தலைவர் மைக…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம் Published By: RAJEEBAN 28 FEB, 2024 | 11:29 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மிசெல் ஒபாமா டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புகின்ற…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-