Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வீரகேசரி இணையம் 11/12/2011 11:45:52 AM ஐக்கிய நாடுகள் சபையில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்துக்கு 4 நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் 5-வது இடத்துக்கான நீதிபதி பதவி நிரப்பப்படவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராக உள்ள ஹிஸôஷிஒவாடா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 9 ஆண்டுக்காலம் இப்பதவியில் இருப்பர். 15 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் 193 பேரடங்கிய ஐ.நா. பொது சபை ஆகியவற்றுக்கான நீதிபதிகளாக இவர்கள் நியம…

  2. வீரகேசரி இணையம் 11/12/2011 11:25:39 AM இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா வைரச் சுரங்கத்தில் அந்நாட்டு பெறுமதிப்படி ரூ.5 கோடி மதிப்புள்ள 37.68 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களில் இது மிகப் பெரியதாகக் கருதப்படுகின்றது. மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய சுரங்க வளர்ச்சி கழகம் (என்எம்டிசி) பன்னா சுரங்கத்தில் இருந்து கடந்த 1968ம் ஆண்டு முதல் வைரம் வெட்டி எடுத்து வருகிறது.…

  3. 'கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்! - அப்துல் கலாம் கருத்து! கூடங்குளம் அணு மின் நிலையம் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளதாகவும், இத்திட்டம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் எனவும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். கூடங்குளத்தில் அணுசக்தி துறை அதிகாரிகள் மற்றும் அணு மின் கழக அதிகாரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அணு மின்நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை…

  4. கவின் / வீரகேசரி இணையம் 11/11/2011 10:12:20 AM ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் கல்விக்கான சமூக மாற்றம் (Social Change for Education in the Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே திடுக்கிடும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவ் ஆய்வறிக்கை…

  5. லண்டனில் வீட்டு வன்செயல், உளவியல் பாதிப்பு மற்றும் போதைஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பிறக்கும் குறைந்தது 2 லட்சம் குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் ஆபத்து காணப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஏனைய வயதினரிலும் பார்க்க ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இவ்வாபத்து எட்டு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக என்.எஸ்.பி.சி.சி என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இவ்வாறான வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்கூட்டியே அரசினால் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்து 44,000 குழந்தைகள் உளவியல் பாதிப்புக்குள்ளான பெற்றோருடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒரு இலட்சத்து 10ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளி…

  6. அணு ஆயுதமொன்றை விருத்தி செய்வதுடன் தொடர்புடைய பரிசோதனைகளை ஈரான் நடத்தியிருப்பதை வெளிப்படுத்தும் தகவல் தமக்குக் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்தது. அணு குண்டொன்றை விருத்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கணினி மாதிரிகள் என்பன ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தொடர்பான தனது பிந்திய அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அணுசக்தி முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இது மேற்படி அணுசக்தி முகவர் நிலையத்தால் ஈரான் தொடர்பில் இதுவரை வழங்கப்பட்ட அறிக்கைகளிலேயே மிகவும் கடுமையானதாக கருதப்படுகிறது. மேற்படி அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்றென ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. ""இந்த அறிக்…

  7. தமிழக அமைச்சரவையில் மாற்றம் தமிழக அமைச்சரவையிலிருந்து வெள்ளியன்று செய்யப்பட்டுள்ல மாற்றங்களில் அமைச்சர்கள் ஆறு பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ள்னர். அவர்களுக்கு பதிலாக வேறு ஆறு பேர் அமைச்சர்களாகின்றனர். அமைச்சர்கள் சிலரது இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெள்ளி மாலை வெளியான செய்திக் குறிப்பின்படி, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் சி.சண்முகவேலு , தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் , அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கால்நடை பராமரிப்பு அமைச்சர் என்.ஆர்.சிவபதி, செய்தி மற்றும் சட்ட அமைச்சர் ஜி.செந்தமிழன் , ம்ற்றும் உணவு அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர். கிணத்துக்கடவு எஸ்.தா…

  8. Published On: Thu, Nov 3rd, 2011 கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்- அதிர்ச்சியில் திமுக டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் கூடியிருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர். இந்தத் தீர்ப்பையொட்டி த…

  9. 06.11.11 மற்றவை திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறிப் பயணம் செய்து கொண்டு வீராப்புப் பேசி வந்த தமிழக கதர்த் தலைவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். தோல்வியால் துவண்டுபோன அவர்களின் கோபம் தற்போது ராகுல்காந்தி மீது திரும்பியிருக்கிறது. Ôதமிழகத்தில் கட்சியை வளர்க்க ராகுல் எந்த முயற்சியும் செய்யவில்லை' என்று கோபமாக குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளின் உண்மையான பலத்தை உணர்த்தியிருக்கிறது. 'அ.தி.மு.க., தி.மு.க.விற்கு அடுத்த மூன்றாவது கட்சி நாங்கள்தான்' என்று பில்டப் செய்து வந்த விஜயகாந்த், கிட்டத்தட்ட காணாமல் போயிருக்…

  10. தமிழில் புதியதாக ‘கிருஷ்ணா’ டி.வி. சானலை ஆரம்பித்திருக்கிறார் சுப்ரமணியசாமி. இது முழுக்க முழுக்க ஆன்மிக சானல். டி.வி.யைத் தொடங்கி வைத்துப் பேசிய சாமி, ‘‘ஜெயலலிதாவின் ஆட்சி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அது கருணாநிதியின் ஆட்சியைவிட மிக நன்றாகவே இருக்கும். ஜெயலலிதா எனக்கு அரசியல் எதிரியாக இருந்தாலும் என் சானலுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் என் நன்றி’’ என்றவர், ‘‘அன்னா ஹசாரேவுக்கு முன்னாலேயே நான் ஊழலுக்கு எதிராக இருக்கின்ற சட்டத்தை வைத்துக் கொண்டு போராடி வருகிறேன். ஹசாரே புதியதாக ஒரு சட்டம் வேண்டும் என்கிறார். எனக்கு இருக்கிற சட்டமே போதும், தவறு செய்தவர்களை கூண்டில் நிறுத்த’’ என்றார். - குமுதம்

  11. கேப்டன் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் வரிந்து கட்டிக் கொண்டு பிரசார பீரங்கியாக தேர்தல் களத்தில் முழங்கியும் கதைக்கு ஆகவில்லை. அவரின் செல்வாக்கு என்ன ஆனது? இந்தத் தேர்தல் ரிசல்ட் சொல்லும் செய்தி என்ன? கட்சி சாயம் இல்லாமல் மூன்று பேரிடம் கருத்தைக் கேட்டோம். “என்னைப் பொறுத்த அளவில் விஜயகாந்த் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது இலாபகரமான காரியமில்லை. அவர் சமரசம் செய்து கொண்டுவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். கடந்த ஐந்தாண்டுகளில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உருவெடுத்திருந்த தி.மு.க.வை வீழ்த்த அவர் மேற்கொண்ட சரியான காரியமாகவே பலருக்கும் அது மனதில் பட்டது. மக்களும் எதிர்க்கட்சி என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை அவருக்குக் கொடுத்து அழகு பார்த்தார்கள். ஆனால், அவரை அந்தப் பதவிய…

  12. | பாமக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம் var zflag_nid="1185"; var zflag_cid="767/186"; var zflag_sid="209"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9"; பாமக மாநில இணை பொதுச்செயலாளராக இருந்தவர் வேல்முருகன். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சனையால் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. …

  13. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லா பயண அனுமதிப் பத்திரங்களோடும் அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்ட.. நாம் தமிழர் கட்சி என்ற ஜனநாயக அமைப்பின் தலைவர் சீமான்.. அமெரிக்க அதிகாரிகளால் நியோர்க் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையானது எந்த வகையில் நியாயமானது. இது அமெரிக்காவின் தமிழர் விரோத போக்கையா இனங்காட்டுகிறது. சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை கொள்கை ரீதியாக ஆதரவளிப்பது எப்படி பயங்கரவாதமாகும். இந்த அடாவடித்தனமான செயலை அமெரிக்கா செய்யக் காரணம் என்ன..???! அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினரை சந்திப்பதில் இருந்து கிலாரி விலகிக் கொண்டார…

  14. ஈரான் மீதான தாக்குதல் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஜ்மடிநெஜாத், இஸ்ரேல் விரைவில் வீழ்ச்சியடைந்து முடிந்துபோய்விடும் எனவும் கூறியுள்ளார். எகிப்திய பத்திரிகையான அல் அக்பருக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி கூறியதன் பின்னர் ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத்தின் மேற்படி பேட்டி வெளியாகியுள்ளது. "ஈரானின் ஆற்றல் அதிகரித்து வருகிறது. அதனால்தான் அது உலகில் போட்டியிட முடிகின்றது. இப்போது இஸ்ரேலும் மேற்குலகும் குறிப்பாக அமெரிக்கா, ஈரானின் ஆற்றல்கள், பாத்திரங்கள் குறித்து அச்சமடைந்துள்ளன. அதனால் அவர்கள் ஈரானின் பாத்திரத்தை …

  15. ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது [ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 08:58.56 மு.ப GMT ] ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ந் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 22 ஆயிரம் பேர் பலியாகினர். புகுஷிமா அணு உலையும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணு உலைகள் வெடித்ததால் கதிர்வீச்சு வெளியானது. அதை குளிர்விக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே, பீதி அடைந்த மக்கள் …

  16. அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துவைக்கும் காட்சி தான் இது. நம்ம ஊர்களில் தான் இப்படியான செயல்கள் இடம்பெறுவது வழமை. தன்னை மதிக்காமல் கொம்பியூட்டரில் உட்கார்ந்து கொண்டு பாடல், வீடியோ கேம் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை செம சாத்து சாத்தியுள்ளார். அமெரிக்காவின் Texas நீதிமன்றின் நீதிபதியான வில்லியம் அடம்ஸ் என்பவரே மேற்படி தனது 16 வயது அங்கவீன மகளான ஹிலாரி அடம்ஸிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார். ஊருக்கே தீர்ப்புச் சொல்லும் ஒருவர் தனது சொந்த மக்கள் மீது இவ்வாறு மிருகத் தனமாக நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரே மகள் வீடியோவை வெளியிட்டுள்ளார். மகள் …

  17. ஜக்சன் மறைவிற்கு குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு _ வீரகேசரி இணையம் 11/8/2011 9:19:41 AM மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் மறைவிற்கு அவரது குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம் எனவும் அவர் கொலையாளி எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொப் இ‌சை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கல் ஜக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். அளவு அதிகமாக வலி நிவாரணி மருந்து உட்கொண்டதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஜாக்சனின் குடும்ப மருத்துவராக கன்ட்ராடு முர்ரே என்பவர் தான் சிகிச்சை அளித்…

  18. சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்! இந்தியாவின் பல்வேறுபட்ட தமிழ்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் சிறுவன் மூலம் திருட வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்தியப் பொலிஸார். இதில் வேடிக்கை என்னவெனில், வாகனம் இறுதியில் உரிமையாளரிடமே போய்ச் சேருகின்றது என்பதுதான். அதாவது இச் சிறுவன் மூலம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டு, உரிமையாளரிடம் தாம் உங்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு விட்டோம் என்று கூறி அவரிடம் அதனை ஒப்படைத்து விட்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் வாகன உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து திருட்டுப்பணிக்காக நியமிக்கப்பட்ட சிறுவனுக்கு 500 ரூபாயைக…

  19. பிரபாகரன் மீது ஆணையாக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் பரபரப்பு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்தியம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார். யார் இவர் என்று பார்ப்போம். …

  20. தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை 61பிரபல கடைகளிற்கு சீல் -பரபரப்பு சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை. இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் த…

  21. சுஹேல் சேத் Counselage-ன் மேனேஜிங் பார்ட்னர் இதில் நான் என வருவது சுஹேல் சேத். முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன். விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாத…

  22. தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்! திங்கள்கிழமை, நவம்பர் 7, 2011, 10:48 [iST] சென்னை: சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப…

  23. பாகிஸ்தானின் அணு ஆயுதமும் அதனால் உள்ள தலையிடிகளும் உலகின் அணு வல்லரசுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அங்கே பலமில்லாத ஒரு மக்களாட்சி நடக்கின்றது, இராணுவம் சர்வவல்லமை பொருந்திய அரச அமைப்பு. கிட்டத்தட்ட 100-120 வரையான அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன. ஒசாமா பின் லாடன் கொலைக்கு பின்னர், பாகிஸ்தான் இராணுவம் அமெரிக்கா மீது பயமும் வெறுப்பும் கொண்டுள்ளது. அதில் ஒன்று, 'அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை பறித்து விடும்' என்பது. அமெரிக்காவுக்கு இந்த ஆயுதங்கள் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புக்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் ஊடுருவி உள்ளன என்றும் அவரை இந்த ஆயுங்களை தமது கையில் எடுத்துவிடும் என்ற பயமும். அமெரிக்கர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அடிக்கடி இடங்களை இரவில் மாற்றும்பொழுது அவை தீ…

    • 0 replies
    • 501 views
  24. இங்கிலாந்து M5 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து- 10பேர் பலி- 43க்கும் மேற்பட்டவர்கள் காயம்!(video & Photos) Published on November 5, 2011-12:00 pm · No Comments நேற்றிரவு லண்டனில் எம்.5 நெடுஞ்சாலையில் இருபத்தேழு வாகனங்கள் மோதிய சம்பவத்தில் 10பேர் கொல்லப்பட்டனர் என்றும் 43 பேர் காயமடைந்தனர் என்றும் லண்டன் காவல்துறையினர் தெரிவித்தனர். டோன்டன், சோமர்செற் என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் வாகங்கள் மோதியபோது பெரும் தீப்பந்து தோன்றிது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அப்பகுதி பனிமூட்டம் மற்றும் பெரும் மழை பெய்ததாகவும் அவசரப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற 24 ஆவது மற்றும் 25 ஆவது சந்திகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.