உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26633 topics in this forum
-
Published On: Thu, Nov 3rd, 2011 கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்- அதிர்ச்சியில் திமுக டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் கூடியிருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர். இந்தத் தீர்ப்பையொட்டி த…
-
- 6 replies
- 1.5k views
-
-
06.11.11 மற்றவை திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறிப் பயணம் செய்து கொண்டு வீராப்புப் பேசி வந்த தமிழக கதர்த் தலைவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். தோல்வியால் துவண்டுபோன அவர்களின் கோபம் தற்போது ராகுல்காந்தி மீது திரும்பியிருக்கிறது. Ôதமிழகத்தில் கட்சியை வளர்க்க ராகுல் எந்த முயற்சியும் செய்யவில்லை' என்று கோபமாக குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளின் உண்மையான பலத்தை உணர்த்தியிருக்கிறது. 'அ.தி.மு.க., தி.மு.க.விற்கு அடுத்த மூன்றாவது கட்சி நாங்கள்தான்' என்று பில்டப் செய்து வந்த விஜயகாந்த், கிட்டத்தட்ட காணாமல் போயிருக்…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழில் புதியதாக ‘கிருஷ்ணா’ டி.வி. சானலை ஆரம்பித்திருக்கிறார் சுப்ரமணியசாமி. இது முழுக்க முழுக்க ஆன்மிக சானல். டி.வி.யைத் தொடங்கி வைத்துப் பேசிய சாமி, ‘‘ஜெயலலிதாவின் ஆட்சி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அது கருணாநிதியின் ஆட்சியைவிட மிக நன்றாகவே இருக்கும். ஜெயலலிதா எனக்கு அரசியல் எதிரியாக இருந்தாலும் என் சானலுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் என் நன்றி’’ என்றவர், ‘‘அன்னா ஹசாரேவுக்கு முன்னாலேயே நான் ஊழலுக்கு எதிராக இருக்கின்ற சட்டத்தை வைத்துக் கொண்டு போராடி வருகிறேன். ஹசாரே புதியதாக ஒரு சட்டம் வேண்டும் என்கிறார். எனக்கு இருக்கிற சட்டமே போதும், தவறு செய்தவர்களை கூண்டில் நிறுத்த’’ என்றார். - குமுதம்
-
- 2 replies
- 899 views
-
-
கேப்டன் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் வரிந்து கட்டிக் கொண்டு பிரசார பீரங்கியாக தேர்தல் களத்தில் முழங்கியும் கதைக்கு ஆகவில்லை. அவரின் செல்வாக்கு என்ன ஆனது? இந்தத் தேர்தல் ரிசல்ட் சொல்லும் செய்தி என்ன? கட்சி சாயம் இல்லாமல் மூன்று பேரிடம் கருத்தைக் கேட்டோம். “என்னைப் பொறுத்த அளவில் விஜயகாந்த் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது இலாபகரமான காரியமில்லை. அவர் சமரசம் செய்து கொண்டுவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். கடந்த ஐந்தாண்டுகளில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உருவெடுத்திருந்த தி.மு.க.வை வீழ்த்த அவர் மேற்கொண்ட சரியான காரியமாகவே பலருக்கும் அது மனதில் பட்டது. மக்களும் எதிர்க்கட்சி என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை அவருக்குக் கொடுத்து அழகு பார்த்தார்கள். ஆனால், அவரை அந்தப் பதவிய…
-
- 0 replies
- 442 views
-
-
| பாமக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம் var zflag_nid="1185"; var zflag_cid="767/186"; var zflag_sid="209"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9"; பாமக மாநில இணை பொதுச்செயலாளராக இருந்தவர் வேல்முருகன். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சனையால் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. …
-
- 3 replies
- 4.9k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லா பயண அனுமதிப் பத்திரங்களோடும் அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்ட.. நாம் தமிழர் கட்சி என்ற ஜனநாயக அமைப்பின் தலைவர் சீமான்.. அமெரிக்க அதிகாரிகளால் நியோர்க் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையானது எந்த வகையில் நியாயமானது. இது அமெரிக்காவின் தமிழர் விரோத போக்கையா இனங்காட்டுகிறது. சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை கொள்கை ரீதியாக ஆதரவளிப்பது எப்படி பயங்கரவாதமாகும். இந்த அடாவடித்தனமான செயலை அமெரிக்கா செய்யக் காரணம் என்ன..???! அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினரை சந்திப்பதில் இருந்து கிலாரி விலகிக் கொண்டார…
-
- 13 replies
- 1.7k views
-
-
ஈரான் மீதான தாக்குதல் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஜ்மடிநெஜாத், இஸ்ரேல் விரைவில் வீழ்ச்சியடைந்து முடிந்துபோய்விடும் எனவும் கூறியுள்ளார். எகிப்திய பத்திரிகையான அல் அக்பருக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி கூறியதன் பின்னர் ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத்தின் மேற்படி பேட்டி வெளியாகியுள்ளது. "ஈரானின் ஆற்றல் அதிகரித்து வருகிறது. அதனால்தான் அது உலகில் போட்டியிட முடிகின்றது. இப்போது இஸ்ரேலும் மேற்குலகும் குறிப்பாக அமெரிக்கா, ஈரானின் ஆற்றல்கள், பாத்திரங்கள் குறித்து அச்சமடைந்துள்ளன. அதனால் அவர்கள் ஈரானின் பாத்திரத்தை …
-
- 0 replies
- 578 views
-
-
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது [ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 08:58.56 மு.ப GMT ] ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ந் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 22 ஆயிரம் பேர் பலியாகினர். புகுஷிமா அணு உலையும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணு உலைகள் வெடித்ததால் கதிர்வீச்சு வெளியானது. அதை குளிர்விக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே, பீதி அடைந்த மக்கள் …
-
- 0 replies
- 562 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துவைக்கும் காட்சி தான் இது. நம்ம ஊர்களில் தான் இப்படியான செயல்கள் இடம்பெறுவது வழமை. தன்னை மதிக்காமல் கொம்பியூட்டரில் உட்கார்ந்து கொண்டு பாடல், வீடியோ கேம் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை செம சாத்து சாத்தியுள்ளார். அமெரிக்காவின் Texas நீதிமன்றின் நீதிபதியான வில்லியம் அடம்ஸ் என்பவரே மேற்படி தனது 16 வயது அங்கவீன மகளான ஹிலாரி அடம்ஸிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார். ஊருக்கே தீர்ப்புச் சொல்லும் ஒருவர் தனது சொந்த மக்கள் மீது இவ்வாறு மிருகத் தனமாக நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரே மகள் வீடியோவை வெளியிட்டுள்ளார். மகள் …
-
- 1 reply
- 838 views
-
-
ஜக்சன் மறைவிற்கு குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு _ வீரகேசரி இணையம் 11/8/2011 9:19:41 AM மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் மறைவிற்கு அவரது குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம் எனவும் அவர் கொலையாளி எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொப் இசை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கல் ஜக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். அளவு அதிகமாக வலி நிவாரணி மருந்து உட்கொண்டதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஜாக்சனின் குடும்ப மருத்துவராக கன்ட்ராடு முர்ரே என்பவர் தான் சிகிச்சை அளித்…
-
- 0 replies
- 520 views
-
-
சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்! இந்தியாவின் பல்வேறுபட்ட தமிழ்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் சிறுவன் மூலம் திருட வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்தியப் பொலிஸார். இதில் வேடிக்கை என்னவெனில், வாகனம் இறுதியில் உரிமையாளரிடமே போய்ச் சேருகின்றது என்பதுதான். அதாவது இச் சிறுவன் மூலம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டு, உரிமையாளரிடம் தாம் உங்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு விட்டோம் என்று கூறி அவரிடம் அதனை ஒப்படைத்து விட்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் வாகன உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து திருட்டுப்பணிக்காக நியமிக்கப்பட்ட சிறுவனுக்கு 500 ரூபாயைக…
-
- 1 reply
- 873 views
-
-
-
பிரபாகரன் மீது ஆணையாக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் பரபரப்பு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்தியம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார். யார் இவர் என்று பார்ப்போம். …
-
- 4 replies
- 1k views
-
-
தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை 61பிரபல கடைகளிற்கு சீல் -பரபரப்பு சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை. இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் த…
-
- 4 replies
- 1k views
-
-
சுஹேல் சேத் Counselage-ன் மேனேஜிங் பார்ட்னர் இதில் நான் என வருவது சுஹேல் சேத். முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன். விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாத…
-
- 0 replies
- 667 views
-
-
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்! திங்கள்கிழமை, நவம்பர் 7, 2011, 10:48 [iST] சென்னை: சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப…
-
- 0 replies
- 561 views
-
-
பாகிஸ்தானின் அணு ஆயுதமும் அதனால் உள்ள தலையிடிகளும் உலகின் அணு வல்லரசுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அங்கே பலமில்லாத ஒரு மக்களாட்சி நடக்கின்றது, இராணுவம் சர்வவல்லமை பொருந்திய அரச அமைப்பு. கிட்டத்தட்ட 100-120 வரையான அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன. ஒசாமா பின் லாடன் கொலைக்கு பின்னர், பாகிஸ்தான் இராணுவம் அமெரிக்கா மீது பயமும் வெறுப்பும் கொண்டுள்ளது. அதில் ஒன்று, 'அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை பறித்து விடும்' என்பது. அமெரிக்காவுக்கு இந்த ஆயுதங்கள் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புக்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் ஊடுருவி உள்ளன என்றும் அவரை இந்த ஆயுங்களை தமது கையில் எடுத்துவிடும் என்ற பயமும். அமெரிக்கர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அடிக்கடி இடங்களை இரவில் மாற்றும்பொழுது அவை தீ…
-
- 0 replies
- 499 views
-
-
இங்கிலாந்து M5 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து- 10பேர் பலி- 43க்கும் மேற்பட்டவர்கள் காயம்!(video & Photos) Published on November 5, 2011-12:00 pm · No Comments நேற்றிரவு லண்டனில் எம்.5 நெடுஞ்சாலையில் இருபத்தேழு வாகனங்கள் மோதிய சம்பவத்தில் 10பேர் கொல்லப்பட்டனர் என்றும் 43 பேர் காயமடைந்தனர் என்றும் லண்டன் காவல்துறையினர் தெரிவித்தனர். டோன்டன், சோமர்செற் என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் வாகங்கள் மோதியபோது பெரும் தீப்பந்து தோன்றிது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அப்பகுதி பனிமூட்டம் மற்றும் பெரும் மழை பெய்ததாகவும் அவசரப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற 24 ஆவது மற்றும் 25 ஆவது சந்திகள…
-
- 1 reply
- 646 views
-
-
இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவாவில் ஏற்பட்ட கடும் மழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வெள்ளத்திற்கு அவர்கள் தஞ்சம் அடைந்திருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். http://youtu.be/aJLb2rg_Ztg வெள்ளநீரில் அள்ளுப்பட்ட வந்த கார்களில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். http://youtu.be/mfrl4VF39N0 வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மாடிக்கட்டடங்களில் ஏற வேண்டாம் என்றும் ஜெனோவா நகர பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நகரிலிருந்து பலர் காணாமற்போய்விட்டதாகவும் கூறப்படுகின்றது. இது எதிர்பாராத துக்ககரமான சம்பவம் என்று நகர மேயர் மார்த்தா விசென்சி தெரிவித…
-
- 0 replies
- 669 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/5/2011 11:02:45 AM 4Share அல் கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் வெறும் 90 வினாடிகளுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பரப்பான தகவலை அமெரிக்க சீல் படையின் முன்னாள் அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளார். சக் பாரர் என்ற அமெரிக்க நேவி சீல் படையின் முன்னாள் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியவரே இப்புத்தகத்தினை எழுதியுள்ளார். அவர் தற்போது வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். பாரர் இத்தாக்குதலில் நேரடியாக பங்குபற்…
-
- 1 reply
- 849 views
-
-
சீனாவில் திபெத் பெண் துறவி தீக்கொளுத்தி மாண்டார் சீனாவின் மேற்குப் பகுதியில் திபெத்திய பௌத்த பெண் துறவி ஒருவர் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டு உயிரிழந்ததுள்ளார் என்று சீனாவிலிருந்தும், திபெத்திலிருந்தும் வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் பிராந்தியத்தில் உள்ள டாவு என்ற ஊரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நின்று இந்த 35 வயது பெண் துறவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய பெயர் கியு சியாங் என்றும், இவர் ஏன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் சீன அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறுகிறது. ஆனால் உயிர் விடும் நேரத்தில் தலாய் லாமாவை திபெத்துக்கு திரும்பி வர அனுமதியுங்கள் என்று இவர் கத்தியதை மற்றவர்கள் கேட்டுள்ள…
-
- 1 reply
- 554 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/4/2011 11:18:19 AM எந்நேரத்திலும் ஈரான் யுத்தத்துக்கு தயாராகவுள்ளதாகவும், இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சாலி தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டு ஊடகமொன்றுக்கே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இஸ்ரேலிடம் இருந்து கடந்த 8 வருட காலத்துக்கும் மேலாக எமக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. எமது நாடு ஒற்றுமையானது. எமக்கு இத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சீனாவின் ஏவுகணை இந்தியாவுக்கு ஆபத்து அமெரிக்கா எச்சரிக்கை சீனாவின் 4 அணு ஆயுத ஏவுகணையால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் குழு சீனாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி ரகசிய ஆய்வு நடத்திய நிலையில், அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை குவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சீனா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது.இவை 7200 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.அதில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு போர்க் கப்பல்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது போல் அணு ஆயுதங்களுடன் கூடிய 4 ஏவு…
-
- 3 replies
- 720 views
-
-
சஹாரா பாலைவனத்தில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் மகன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடாபியின் மகன்களில் ஒருவர் செய்ப் அல் இஸ்லாம் கடாபி. லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்த போது சில முக்கிய ராணுவத் தலைவர்களுடன் லிபிய எல்லையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. டுயெரக் பழங்குடி இன மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர். தப்பியோடியுள்ள கடாபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டுப் போரின் போது சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொது ம…
-
- 1 reply
- 903 views
-
-
உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: ஒபாமா முதலிடம் Friday, November 4, 2011, 12:51 உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார். கடந்தாண்டு வெளியான பட்டியலில் ஒபாமா முதல் இடத்தை இழந்திருந்தார். ஆனாலும் பின்லேடன், கடாபி ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு பட்டியலில் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. ரஷ்யாவின் விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் நான்காவது இடத்திலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 16வது இடத்திலும் உள்ளனர். http:…
-
- 0 replies
- 595 views
-