Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நேற்று நெதர்லாந்தில் 5 தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில்.. அச்சுறுத்தி பணம் பெற்றது.. மற்றும் கிரிமினல் செயற்பாடு.. மற்றும் மூளைச் சலவை செய்தல் என்பதற்காக.. 6 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகளுக்கு.. பயங்கரவாதத்திற்கு.. ஆதரவளித்தது தவறல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்ன என்றால்.. மூளைச் சலவை செய்யும் வடிவில்.. நெதர்லாந்தில் தமிழ் பிள்ளைகளை சித்திர வடிவில் குண்டுகள்.. கிரேனேட் செய்ய பயிற்றுவித்தது குற்றமாம். அப்படி என்றால்.. நெதர்லாந்தில்.. பிள்ளைகளின் மூளையில்.. வன்முறை.. துப்பாக்கிப் பயன்பாடு.. குண்டு பயன்பாடு.. தயாரித்தல்.. போன்றவற்றை உள்ளடக்கிய பல.. அமெரிக்க மற்றும் மேற்குலக.. ஜப்ப…

  2. ஈராக் போர் முடிந்தது ஒபாமா அறிவிப்பு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து, இந்தாண்டின் இறுதிக்குள்ளாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி உடனான வீடியோ கான்பரன்சிங்கிற்கு பிறகு, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை அதிபர் ஒபாமா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவின் போதிலிருந்து அங்கே அமைதி திரும்பத் துவங்கி விட்டது. ஆனால், ஈரான் <மற்றும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளால் ஈராக்கிற்கு அச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. அதற்காகவே, அமெரிக்கப் படைகள் அங்கு தங்க…

  3. லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும், இலங்கையின் வெள்ளைக் கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சேர்ட் நகரில் கேணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

    • 2 replies
    • 1.2k views
  4. கிட்டத்தட்ட 42 வருடங்கள் லிபியாவை ஆண்ட கடாபி இன்று மேற்குலக ஆதரவுடன் கிளர்ச்சியார்களால் கொல்லப்பட்டார். இதனுடன் எட்டு மாத மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வரலாம். ஆனாலும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? ஒரு தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒரு கருத்துக்கணிப்பை/கருத்துக்களை பரிமாறுங்கள் - நன்றி. லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்: http://www.yarl.com/...showtopic=93229 கடாபியின் கடைசி நாட்கள்? : http://www.yarl.com/...showtopic=90591 லிபியாவை கையளிக்கமாட்டேன்: கடாபி : http://www.yarl.com/...showtopic=91691 எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்: http://www.yarl.com/...showtopic=81917

  5. புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் அபார வெற்றி பெற்றார். அத்தொகுதியில் காங்கிரஸ் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற்றது. அதிமுக உள்பட 5 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்று இந்திரா நகர். ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திரா நகர் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தனது அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை வேட்பாளராக நிறுத்தினார் ரங்கசாமி. காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம், அதிமுக சார்பில் பாஸ்கரன் ஆகியோ…

  6. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14,694 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. அங்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளர் மு.பரஞ்சோதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டதிமுகவின் கே.என்.நேருவை 14,694 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் 2வது முறையாக அவர் சட்டசபைக்குச் செல்கிறார். திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிட்டனர். பிற முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரசாரம் செய்யவும் இல்லை. 16 …

  7. உலகத்தின் எந்த பகுதி மக்கள் வேண்டுமானாலும் திரண்டு வந்து போராடிவிடுவார்கள். ஆனால், அமெரிக்காவில் மட்டும் அது நடக்கவே நடக்காது. காரணம், முதலாளித்துவத்தை ஆதரிக்கிற குணம் அமெரிக்கர்களின் ஜீனிலேயே உண்டு என்று சொல்வார்கள். ஆனால், அடி மேல் அடி விழும் பட்சத்தில் அமெரிக்க மக்கள்கூட நடுத்தெருவுக்கு வந்து போராடத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் 'வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்' (Occupy Wall Street) போராட்டம் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், ஏதேதோ முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை போட்டு பணத்தை இழந்தவர்கள், வருமானம் இல்லாததால் வீட்டை விற்றவர்கள், கல்லூரிப் படிப்பை மேற்கொண்டு தொடர முடியாதவர்கள், இத்தனை நாளும் கிடைத்த வந்த அரசு வசதிகள் இன…

  8. "உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை! பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஆஃப்கானிலிருந்து வடக்கு வஜீரிஸ்தானில் நுழையும் முன் ஒன்றுக்குப் பத்தாக யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடு. அது ஒன்றும் ஆஃப்கனோ, இராக்கோ அல்ல" என்றார் கயானி. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டி முன்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் பாகிஸ்தான் …

  9. புதிய மலேரியா மருந்து 56 வீதம் பாதுகாப்பு மிக்கது உலகத்தின் புகழ் மிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜி.எஸ்.கே வெளியீடு செய்துள்ள மலேரியா தடுப்பூசி மருந்து முன்னைய மருந்துகளைவிட வீரியம் கூடியது என்றும், உயிர் காப்பதில் 56 வீதம் முன்னேற்றம் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுளம்பு கடியினால் ஏற்படும் கொடிய மலேரியா காய்ச்சல் ஆபிரிக்க நாடுகளில் மட்டும் வருடாந்தம் எட்டு இலட்சம் சிறு பிள்ளைகளின் உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தடுப்பூசி ஏழு ஆபிரிக்க நாடுகளில் உள்ள 11 மையங்களில் பரீட்சார்த்தமாக போடப்பட்டது. பிறந்து 5 மாதங்கள் முதல் 17 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு மூன்று தடவைகள் இந்த மருந்தை ஏற்றப்பட்டது. சுமார் 15.000 குழந்தைகளுக்கு போடப்ப…

  10. ரஜீவ் கொலை பிரேமதாசவுக்கு தொடர்புண்டா..? October 17, 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம முடிச்சுகள் பற்றி அவர் வழங்கிய சிறப்பு பேட்டி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்தாகுமா? சென்னை உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர்ந்திருந்தோம். இந்த மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து ஏறக்குறைய 11 ஆண்டு காலமாகிவிட்டது. ஏற்கெனவே உ…

  11. அமெரிக்காவின் பொருளாதார மையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் பொருளாதார மையமான நியோயூர்க்கின் பங்குச்சந்தை உட்பட்ட முக்கிய வீதியான வால் ஸ்டீர்ட் இனை முடக்கும் போராட்டங்கள் மக்களால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்றது. இந்த வார இறுதியில் பேர் 700 வரை கைது செய்யப்பட்டனர். வங்கிகளுக்கு அரசு தொடர்ந்து அளிக்கும் உதவிகளுக்கு எதிராகவும் வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து மக்கள் போராடுகின்றனர்.

    • 4 replies
    • 1.2k views
  12. நெருப்போடு விளையாடுகிறது இந்தியா தென் சீனக் கடலில், எண்ணெய் துரப்பண பணிக்காக, வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தப் பணியில் இருந்து உடனடியாக இந்தியா பின்வாங்க வேண்டும்’ என, சீன பத்திரிகைகள் மிரட்டியுள்ளன. வியட்நாம் அதிபர் ட்ருவாங் டன் சங் கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது, அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனுக்கும், வியட்நாமின் பெட்ரோ வியட்நாம் நிறுவனத்துக்கும் இடையில், எண்ணெய் துரப்பண பணி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த ஒப்பந்தங்களின்படி, வியட்நாமின் தென் கடற்பகுதியில் உள்ள நாம் கோன் சன் என்ற எண்ணெய் வளப் பகுதியில், எண்ணெய் துரப்பணி மேற்கொள்ளப்படும்.தென் சீன கடலில் எண்ணெய் வளம் அதிகமாக…

    • 0 replies
    • 676 views
  13. வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் மாட்டுண்டுள்ள இத்தாலிய அரசு பாரிய பொரளாதார மீதம் பிடித்தல்களை கொண்டுவர இருப்பது தெரிந்ததே. இந்த மீதம் பிடிப்புக்கள் ஏழைகளை பரம ஏழைகளாக்கி முதலாளிகளை மேலும் முதலாளிகளாக்கும் மோசமான கொள்கை சார்ந்தது என்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் இத்தாலி ரோம் நகரில் வெடித்து மோசமான புள்ளிக்கு திரும்பியது. நேற்று நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 70 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆர்பாட்டக்காரரில் ஒரு பகுதியினர் இத்தாலி பாதுகாப்பு அமைச்சுக்கு பக்கத்தில் உள்ள கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தினார்கள். இதன் தீக்கங்குகள் சன்னல் வழியாக வளர்ந்து கூரையைத் தொட்டது. இதுபோல பல்வேறு அமைச்சகங்களுக்கும் முன்னால் மக்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார…

  14. அரசியல்வாதிகளின் சூதாட்டங்களுக்கு எதிராக உலக மக்கள்.. மக்களால் உலகத்தை புரட்டிப்போட முடியுமா..? தமிழ் மக்கள் ஆழமாக அவதானிக்க வேண்டிய உலகப் பொருளாதார சூறாவளிக்கண்.. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள்,( occupy wall street ) முதலாளித்துவம், கம்யூனிசம், பயங்கரவாதம் ஆகியவற்றைத் தாண்டி உலக அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைக்கு எதிராக திசை திரும்பிவருகிறது. உலக முதலாளித்துவம் தற்போது அறிவித்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் உண்மையாகவே ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் திட்டங்கள் அல்ல என்ற உண்மையை புரிந்து கொண்டு, பொருளியல் அறிவுள்ள மக்கள் உலகம் முழுவதும் வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். இன்ற…

    • 2 replies
    • 721 views
  15. பாங்காக்: தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய சுற்றுலா பயணிகள், அங்கு தற்போது நிலவி வரும் கடும் வெள்ளம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுமாறு இந்திய தூதரகம் கேட்டு கொண்டுள்ளது. சமீபகாலமாக தொடர் மழையினால் தாய்லாந்து நாட்டில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள எல்லா ஆறுகளும் நிரம்பி அபாய நிலையில் உள்ளன. முக்கியமாக தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து தகவல்கள் அவ்வப்போது விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். பல அணைகள…

  16. உலக அதிசயத்துக்கே இந்நிலைமையா? _ வீரகேசரி இணையம் 10/16/2011 11:56:41 AM உலக அதிசயத்தில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் தனது இருப்பிடத்தையே தக்க வைத்துக்கொள்ள முடியாத அழிவு நிலை ஏற்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. உலகப் புகழ்பெற்ற சீனப்பெருஞ்சுவர் இருக்கும் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலப்பகுதிகள் தோண்டப்படுவதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது. கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. …

  17. ஹனோய்:அக்டோபர் 09,2011,19:55 IST "வியட்நாம் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிகளில் இந்தியா மற்றும் பிற வெளிநாடுகள், எண்ணெய் மற்றும் வாயு வளத்தைக் கண்டறிய வியட்நாம் அரசு அழைக்கிறது' என, அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். வியட்நாம் எல்லைக்குட்பட்ட தென் சீனக் கடலில், இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, தென் சீனக் கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியா தனது பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்தது. ஆனால், இந்தியாவும், வியட்நாமும், சீனாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டன. இந்நிலையில், நாளை மறுநாள் முதன் முறையாக இந்தியா வர உள்ள வியட்நாம் அதிபர் ட்ரூவாங் டன் சங், இருதரப்பு உறவுகள் மேலும…

    • 81 replies
    • 5.8k views
  18. கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜெகன், சேவியர், தோமா, அவுசேப், பிளாபின், விஜயன், குறும்பனையை சேர்ந்த பிரபு, பொழியூரை சேர்ந்த ஜான்சன் ஆகிய 8 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு திரும்ப வரும் போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக லட்சத்தீவை சேர்ந்த போலீசார், மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் லட்சத்தீவில் உள்ள மரைன் போலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து, மீனவர்கள் செல்போன் மூலம் தங்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்…

  19. முன் ஜாமின் நிராகரிப்பு - எடியூரப்பா சரணடைந்தார் எடியூரப்பாவுக்கு எதிராக இரண்டு நில ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விரு வழக்குகளிலும் தமக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அவற்றை இன்று விசாரித்த லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே. சுதிந்தீர ராவ், இரு ஜாமீன் மனுக்களையும் நிராகரித்ததோடு, எடியூரப்பாவை கைது செய்யும் உத்தரவையும் பிறப்பித்தார். இதை தொடர்ந்து கைது வாரண்டுடன் போலீஸார் எடியூரப்பா வீட்டிற்கு சென்றனர் , அங்கு அவர் இல்லாத காரணத்தால் அங்கேயே காத்திருந்தனர். எடியூரப்பா பெங்களுரில் இல்லை என்று செய்திகள் வெளிவர தொடங்கின. இந்நிலையில், எடியூரப்பா சிறப்பு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்…

  20. கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு செயலாளருக்கும், அவரின் தனிப்பட்ட ஆலோசகர் அடம் வெரிற்றிக்கும் உள்ள தொடர்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் சர்ச்சையினைக் கிளப்பியிருந்தன. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் தமது பதவியில் இருந்து விலகினார். ராஜதந்திர முறையிலான பல்வேறு சந்திப்புக்களின் போது, லியம் பொக்ஸ், அடம் வெரிற்றியையும் தன்னுடன் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.ராஜதந்திர அந்தஸ்து இல்லாத நிலையிலும், அடம் வெரிற்றி, பாதுகாப்பு செயலாளருடன் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லியம் வொக்ஸ் அண்மையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை இலங்கையில் சந்தித்த போதும்…

  21. மூவர் தூக்கு மத்திய கேபினெட்டில் ஏற்கப்பட்டதா? அம்பலப்படுத்தும் ஆதாரக் கடிதம் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி. 'இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த இழு…

    • 3 replies
    • 806 views
  22. லியாம் பொக்ஸ் அமைச்சு ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டாரா? விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் 14 அக்டோபர் 2011 பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக லியாம் பொக்ஸ் மீது அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பதும் தெளிவற்றதாகிப்போக தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். லியாம் பொக்ஸ் தமது நெருங்கிய நண்பர் ஒருவரை உத்தியோகபூர்வ கடமைகளின் போது தொடர்புபடுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான மின்னஞ்சல் மற்றும் வீட…

  23. கூடங்குளம் போராட்டக் குழுவினருக்குத் துணையாக தமிழகம் திரண்டெழ வேண்டும்! - பழ. நெடுமாறன் வேண்டுகோள். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் குறிப்பிட்டபடி நிறைவேற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் இந்தப் போக்கு மக்களின் உணர்வுகளையும் தமிழக அரசின் வேண்டுகோளையும் மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத் தூதுக்குழுவினர் பிரதமரைச் சந்தித்தபோது அணுமின் நிலைய திட்டம் குறித்து நிபுணர்குழு ஒன்றை அமைப்பதாக பிரதமர் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மக்களின் அச்சம் போக…

  24. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களின் பிரதிநதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தப் பிறகும், முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்டமாக தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 09.10.2011 அன்று தொடங்கினர். உண்ணாவிரதம் ஒரு பக்கம் நடைபெற்றாலும், அதோடு தொடர்புடைய தங்களது எதிர்ப்பை மற்றொரு வழியில் தெரிவிப்பதற்காக தீவிரம் ஆனார்கள். அதன் ஒரு அங்கமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எந்த ஒரு பணியும் நடக்கக் கூடாது என்பதற்காக முற்றுகை போராட்டத்தில் இறங்கினார்கள். ஒரு பக்கம் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், போராட்டக் குழுவின் மற்றொரு பிரிவினர், அணுமின் நிலையம் செல்லும் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் தினக்கூலி தொழிலார்களை கூடங்குளம் எஸ்எஸ்.புரத்…

  25. மூன்று பெண்கள் இம்முறை நோபள் சமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். லைபீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், யேமனைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இம்முறை நோபள் சமாதான விருதினை பெற்றுக் கொள்கின்றனர். லைபீரிய ஜனாதிபதி இலன் ஜோன்சன் செர்லீப், லைபீரியாவின் லெய்மா குபோவீ மற்றும் யேமனின் தவாகுல் கார்மான் ஆகியோருக்கு இம்முறை நோபள் சாமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். பெண்கள் உரிமை, வன்முறைகளற்ற போராட்டத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக குறித்த பெண்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. செர்லீப் லைபீரியாவின் ஜனாதிபதியாகவும், குபோவீ சமாதான செயற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை, கார்மான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.