Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சவுதி மன்னர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவுள்ளார் சவுதி மன்னர்கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பெண்களை ஒடுக்குமுறைக்குள்ளேயே இதுவரை காலமும் வைத்திருந்த சவுதி மன்னர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சவுதி நகரசபை தேர்தலில் பெண்கள் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சவுதியில் கடந்த வியாழன் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் 285 நகர சபைகளுக்கு 5000 ஆண்கள் போட்டி போட்டனர். இவர்கள் அரைப்பங்கு பதவிகளை பூர்த்தி செய்வார்கள், ஏனைய அரைப்பங்கு உறுப்பினர்கள் சவுதி மன்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் பின்தள்ளப்பட்ட காரணத்தால் 60 கல்வியியலாளர் தேர்தலில் இருந்து விலத…

  2. நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்திரம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல இன்னொரு முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஒருவரும் இதில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகன வசதிகள் உள்ளன. அதில் ஒன்று விமான பயணம். சிறிய ரக விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிக் காட்டுவார்கள். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது இது. எவரெஸ்ட் சுற்றுலா புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. அந்த சிற…

  3. சென்னை: மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் எனது அரசு ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்புதான், கூடங்குளம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், அந்தப் பகுதி மக்களின் வாக்குகளுக்கு தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குறி வைக்க ஆரம்பித்துள்ள நிலையில், கூடங்குளம் திட்டத்துக்கு இன்று திடீரென ஜெயலலி…

  4. Published By பெரியார்தளம் On Saturday, September 24th 2011. Under சென்னை, பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள். Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் பார்ப்பனர் சங்கம் நடத்திவரும் எஸ்.வி.சேகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று (24.09.11) விடுதலையாகி வந்த அவர்களுக்கு ராயப்பேட்டையில் ப​றை முழக்கத்துடன் வரவேற்பு…

  5. இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள், நாளை (23) பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி இந்திய ரூபா செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளிமண்டலத்தி…

  6. பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும். விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஸ்ட்ராஸ…

  7. தமிழக உள்ளாட்சித் தேர்தல் - உடைந்தது அதிமுக கூட்டணி 18 செப்டம்பர் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் களை தன்னிச்சையாக அறிவித் துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே இந்தக் கூட்டணி நீடிக்குமா? உடைந்து போகுமா? என்ற குழப்பம் நீடித்த நிலையில் இப்போது கூட்டணி கட்சிகளை மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. இதனால் கூட்டணி கட்சிகள் ஒட்டு மொத்தமாக திகைத்துப் போய் விட்டன, தமிழகத்தில் உள்ள பெரும் 10 மாநாகராட்சிகளுக்குமான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த ஜெயலலிதாவின் போக்கு கண்டு அதிருப்தியடைந்துள்ள அரசியல் கட்சிகள் தாங்கள் என்ன முடிவெடுப்ப…

  8. 'உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ எனத் தி.மு.க-வும் காங்கிரஸும் போட்டி போட்டு அறிவித்துவிட்டன. ஈழத்தில் போர் நடந்தபோதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஃபெவிக்கால் பிணைப்பாக வலம் வந்த விடுதலைச் சிறுத்தைகளின் நிலைதான் இப்போது புதிர்! தனித்துவிடப்பட்டிருக்கும் திருமாவளவனை சந்தித்தோம். ''தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்த்தீர்களா?'' ''இது எங்களை அதிரவைத்திருக்கும் அறிவிப்பு! கூட்டணி அமைக்க பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். 'தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சி யின் ஆலோசனைக் குழுவில் ஆராய்ந்துதான் எந்த முடிவும் எடுப்போம்’ என நாங்கள் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. திடீரென இப்படி அறிவித்து இரு…

  9. அன்னா ஹசாரே இன்று இந்தியா வின் ஹீரோ என்பதில் சந்தேகம் இல்லை. அன்னாவைப் போலவே இரோம் ஷர்மிளா என்கிற 38 வயது மணிப்பூர் மாநிலப் பெண்ணின் உண்ணாவிரதப் போராட்டமும். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர் உண்ணாவிரதம் இருந்து, கோமா நிலைக்குச் சென்று, படுத்த படுக்கையாக இருக்கிறார். அன்னாவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கும் இரோம் ” டெல்லியில் இருந்து போராடுவதால் அன்னாவுக்கு தேசிய ஆதரவு கிடைத்திருக்கிறது. இதையே அவர் ஒதுக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து செய்திருந்தால் யாரும் கண்டு கொண்டி ருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். இரோம் ஷர்மிளா ஒரு சிவில் உரிமைப் போராளி, அரசியல் சூறாவளி மற்றும் உணர்ச்சிகரமான கவிஞர். …

  10. சென்னை: சட்டசபைத் தேர்தலைப் போலவே தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்து வருவதால் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக தேமுதிகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து போட்டியிடலாமா என்ற ரீதியில் அவர்கள் யோசித்து வருகிறார்களாம். சட்டசபைத் தேர்தலின்போதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் புறம் தள்ளி விட்டு தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் கூட்டணிக் கட்சிகள் கொந்தளித்தன. பின்னர் இறங்கி வந்த ஜெயலலிதா, தொகுதி உடன்பாட்டை மேற்கொண்டார். தற்போதும் அதே கதையாகியுள்ளது. அடுத்தடுத்து அவர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதனால் கூட்டணிக் கட்சிகள் க…

  11. மெல்போர்ன் நகரில் அவமதிக்கப்படுகிறார் விநாயகர். கலாசார விழாவில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி. [Tuesday, 2011-09-20 13:37:42] ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில், இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில், ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல்கள், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில், அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா நடக்க உள்ளது. இதில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக, ஆஸ்திரேலியாவின் "பேக் டு பேக் தியேட்டர்' என்ற நாடக அமைப்பு, "தி கணேஷ் …

  12. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை தென் சீன எல்லை கடலோரப்பகுதிகளில் இந்தியா, ‌பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் இறையாண்மை தன்மையை மீறுவதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை எனவும் வியட்நாம் தான் இத்தகைய நடவடிக்கைகள‌ை மேற்கொள்கிறது என மறுப்பு தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=313934

  13. சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 18, 2011, 19:13 [iST] கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுக…

  14. வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருந்து வரும் 3 நாள் உண்ணாவிரதத்திற்கு குஜராத்தில் மட்டுமல்லாமல், குஜராத்துக்கு வெளியே அமெரிக்காவிலும் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அமெரிக்காவின் பல நகரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு காணப்படுகிறது. பெரும் திரளான முஸ்லீம்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருப்பது வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிலும் மோடி ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு இந்த உண்ணாவிரதத்திற்கு ஏ…

  15. பார்வையாளர்கள் மீது வீழ்ந்து நொறுங்கிய சாகச விமானம் : 3 பேர் பலி அமெரிக்காவின் நெவேடாவில் நடைபெற்றுவந்த தேசிய விமான சாகச நிகழ்வின் போது திடீரென விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த தரை பிரதேசத்ததில் வீழ்ந்து சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் புகழ்பெற்ற ஹாலிவூட் விமான ஸ்டண்ட் ஓட்டுனரும் பலியாகியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Era- P-51 எனும் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இயந்திர கோளாறே விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரான்ஸ்டான் எனும் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது…

  16. சென்னை, செப். 17- கனிமொழிக்கு ஜாமீன் கோரும் மனு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே தெரிகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணையில் சட்ட விவகாரம் சம்மந்தமாக தொடர்புடையவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் கூட அது சம்பந்தமாக விசாரணை எதுவும் நடைபெறாமல் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல், அதற்கான வழக்கு நடைபெறுகின்ற நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் கடத்தி கொண்டேயிருக்கிறார்கள். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட ஏடுகள் கூட, இந்த வழக்கைக் காரணம் காட்…

  17. சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்திற்கு எதிரான பாலியல் வழக்கொன்றின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றமொன்று அந்நாட்டின் பிறிதொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. சவூதி இளவரசரான அல் வாலிட் 2008 ஆம் ஆண்டு 20 வயது மொடல் அழகியொருவரை ஸ்பெயினின் லிபிஷா தீவுப்பகுதியில் சொகுசுப் படகொன்றினுள் வைத்து போதையூட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லையென்ற காரணத்தினால் அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கினை கடந்த வருடம் நிறைவு செய்தது. எனினும் தற்போது அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படியும் இளவரச…

  18. சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம் ஆந்திர மாநிலம் குண் டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார். சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் எ…

  19. அமெரிக்க நாசா விண்வெளி மையத்திற்குச் சொந்தமான ஐந்து தொன் எடையுள்ள 20 ஆண்டுகள் பழமையான செயற்கைக் கோள் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி நெருங்கி வரும் நிலையில்.. அது பூமியின் வாயு மண்டத்தில் பிரவேசிக்கும் போது.. துண்டுகளாகி.. பூமியில் மக்கள் வாழும் இடங்கள் உட்பட எங்கு வேண்டுமானாலும் விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இம்மாதம் (செப்டம்பர்).. வரும் 24ம் திகதி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக.. மக்கள் அதிகம் பரந்து வாழும்.. மத்திய கோட்டுக்கு.. வடக்குத்.. தெற்காக.. 57 பாகை விஸ்தீரணம் கொண்ட பூமியின் எப்பகுதியிலும் இது விழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாசா உலகிற்கு வழங்கியுள்ளது. இதற்கிடையே.. இந்த செயற்கை…

  20. இந்திய பதுங்குழிகளை சேதப்படுத்திய சீன ராணுவம் September 14, 2011 இந்திய எல்லைக்குள் சீன ராணுவப்படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமினை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்திய-திபெத் எல்லை கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள லே பகுதியிலிருந்து 300 கி‌.மீ. தொலைவில் உள்ள நையோபா செக்டரர் எல்லைப்பகுதி இந்திய-திபெத் மற்றும் சீன எல்லைப்பகுதியாகும். இந்த எல்லையில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் இங்குள்ள மிகவும் பழமையான இந்திய எல்லையை கண்காணிக்கும் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளன. இவற்றினை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து வடக்குப்பகுதியின் உதாம்பூரைச் சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர்…

  21. உள்ளாட்சி தேர்தலில் திமுக- அதிமுக இரண்டு பெரிய கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து நிர்வாகிகளுடன் கே.வி.தங்கபாலு இன்று சத்யமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், சோ. பாலகிருஷ்ணன், யசோதா, ஜே.ஆருண், யுவராஜ், உடபட பலர் கலந்துகொண்டனர். ஆலோசனையின் முடிவில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடுகிறது என்று தங்கபாலு அறிவித்தார். அவர் மேலும், ‘’செப்டம்பர் 18ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மனுவை ஒப்படைக்க 20ம் தேதி கடைசி நாள் ஆகும். மேயர் பதவி விருப்ப மனு கட்டணம் -ரூ.10ஆயிரம், நகராட்ச…

  22. ஈராக்கிற்கு போர் விமானங்களை விற்பனை செய்கின்றது அமெரிக்கா _ வீரகேசரி இணையம் 9/16/2011 11:01:12 AM Share அமெரிக்காவானது ஈராக்கிற்கு எப் 16 வகை போர் விமானங்கள் 18 ஐ விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி தகவலானது வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் மூலமே ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. ஈராக் மொத்தமாக 32 விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக அமெரிக்கா 18 விமானங்களை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் கொடுக்கல் வாங்கல்களின் மொத்தப் பெறுமதி 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லையெனவும் கூடிய விரைவில் இது தொடர்பான …

  23. சோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்! ஆக்கம்: ப.திருமாவேலன் சென்னை - டெல்லி - குமாரபாளையம் - டெல்லி - கோவை - சென்னை - ஆத்தூர்... நித்தமும் வேறு வேறு ஊர்கள். மூன்று தமிழர்களின் உயிர் காப்பு, முல்லைப் பெரியாறுக்காக உண்ணாவிரதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, போர்க் குற்ற விசாரணை... வைகோவுக்கு நித்தம் நித்தம் யுத்தம்தான்! ''ஜெயலலிதா, தனது 100 நாட்கள் ஆட்சியைச் சாதனை விழாவாகக் கொண்டாடிவிட்டார். இந்த 100 நாட்கள்பற்றிய உங்களது கருத்து என்ன?'' ''இலங்கையைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது, இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும் எனக் கேட்டது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்றது, மூன்று தமிழர்களின் உயிர் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்…

  24. முதலீட்டு வங்கியாளர் ஒருவர் காரணமாக இரண்டு பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் வங்கி ஒன்று அறிவித்தது. அனுமதி பெறப்படாது முதலீடுகளை மேற்கொண்ட தமது வங்கியின் முதலீட்டு வங்கியாளர் ஒருவர் காரணமாக, இரண்டு பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுவிற்சர்லாந்தின் UBS வங்கி அறிவித்தது. இந்த விடயம் தொடர்பாகத் தற்போது விசாரணை இடம்பெறுவதாகவும், இழப்புக்களின் அளவு மாற்றமடையலாமெனவும் வங்கி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. ஆனால், வங்கியில் முதலிட்டுள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகள் பாதிக்கப்படவில்லையென UBS குறிப்பிட்டது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வங்கியின் நிதி நிலை நட்டமாக அமையலாமெனவும் அது தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து, வங்கி…

  25. பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று இரவு (15.9.2011) மதிமுக திறந்தவெளி மாநாடு நெல்லை சீமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இந்த மாநாட்டில் சிறைப்புரையாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாநாட்டில் மூன்று தமிழர்களின் உயிர்காக்க, ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உறுதி, முல்லைப்பெரியாறு அணை, தமிழீழமே தீர்வு, கட்சத்தீவு மீட்பது, விலைவாசி கட்டுப்பாடு, கூடன்குளம் அணு உலையை மூடவேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.தாய்தமிழகத்தில் தரணி எங்கும் வாழுகின்ற தமிழர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.