உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
மூன்று பெண்கள் இம்முறை நோபள் சமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். லைபீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், யேமனைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இம்முறை நோபள் சமாதான விருதினை பெற்றுக் கொள்கின்றனர். லைபீரிய ஜனாதிபதி இலன் ஜோன்சன் செர்லீப், லைபீரியாவின் லெய்மா குபோவீ மற்றும் யேமனின் தவாகுல் கார்மான் ஆகியோருக்கு இம்முறை நோபள் சாமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். பெண்கள் உரிமை, வன்முறைகளற்ற போராட்டத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக குறித்த பெண்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. செர்லீப் லைபீரியாவின் ஜனாதிபதியாகவும், குபோவீ சமாதான செயற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை, கார்மான் …
-
- 12 replies
- 1.2k views
-
-
13 October 2011 Last updated at 12:49 ET Raj Rajaratnam jailed for 11 years for insider trading Rajaratnam has been under house arrest in his Manhattan residence A former hedge-fund manager has been sentenced to 11 years in jail in New York for one of the biggest insider trading cases in American history. Raj Rajaratnam, 54, was also fined $10m (£6.4m). The Galleon Group founder made well over $50m from illegal trades, said the judge at the Manhattan federal court. Sri Lankan-born Rajaratnam was convicted of 14 counts of securities fraud and conspiracy charges in May after a two-month trial. The judge denied Rajaratnam bail and he must report…
-
- 1 reply
- 757 views
-
-
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேற்கூறிய மூவரின் சார்பிலும் 8000 க்கும் அதிகமான கருணை மனுக்கள் உள்துறை அமைச்சகத்திற்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன்,இலங்கையில் உள்ள 801 அரசியல் கைதிகளின் சார்பிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், தமிழர் அமைப்புகள், அனைத்துலக மன்னிப்புச்சபை உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பிரமுகர்களான முன்னாள்…
-
- 0 replies
- 399 views
-
-
கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் உங்களில் ஒருவராக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். தூத்துக்குடியில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தேடித்தந்தீர்கள். அது போல் இந்த தேர்தலிலும் மகத்தான வெற்றியை தருவீர்கள் என்றுநம்புவதாக கூறினார். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய ஜெயலலிதா,நில அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். கூடங்குளம் பிரச்சனையில் உங்களில் ஒருவராக இருப்பேன். உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அ…
-
- 1 reply
- 1k views
-
-
புதுடில்லி: "ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்க மாட்டோம் என சொல்வதா' என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர். மேலும் இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா என, கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். ஆனால், சி.பி.ஐ., தரப்பில் வாதாடியவர்கள், கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்கும் முடிவில் தொடர்ந்து இருப்பதாக விளக்கம் அளித்தனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ., கோர்ட், தொடர்ந்து மறுத்து விட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகருவதால், கனிமொழிக…
-
- 1 reply
- 594 views
-
-
16.10.11 ஹாட் டாபிக் ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். தூக்கை தற்காலிகமாக நிறுத்த உதவிய இந்த மக்கள் ஆதரவு தான், இப்போது மூவருக்கும் சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரி த்தது முதலே தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிப் பாகுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில், மூவருக்குமான மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று போராட்டங்களை நடத்…
-
- 1 reply
- 652 views
-
-
ஈரான் அமெரிக்காவில் சவூதி அதிகாரிகள் / தூதுவராலயம் மீது நடாத்த இருந்த பயங்கரவாத தாக்குதல்கள் - அமெரிக்கா சவூதி தூதுவரை கொள்ள, மற்றும் தூதுவராலயத்தை தாக்க திட்டமிட்டனர் என ஈரானை அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
-
- 4 replies
- 1.1k views
-
-
- 16.10.11 கவர் ஸ்டோரி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு சிக்கிக் கொண்டிருக்கிறார். இதோ அதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களின் வீடுகளில் ஒரு வழியாக ரெய்டு நடந்தே விட்டது. 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டதில் இருந்தே, தயாநிதி மாறன் சிக்குவாரா? மாட்டாரா? என்று ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை எ ழுப்பிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவன சி.இ…
-
- 0 replies
- 733 views
-
-
Oct 12, 2011 / பகுதி: உலக வலம் / இத்தாலியின் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் ! இத்தாலியின் சரக்குக் கப்பல் ஒன்று சோமாலியாவின் கடற்பிராந்தியத்தில் வைத்து ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பலில் 23 பணியாளர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் 10 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தக் கப்பலில் உள்ளவர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளை குறித்த கப்பல் நிறுவனம் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றது. சோமாலியக் கடற்கொள்ளையர்களால் அடிக்கடி கப்பல்கள் கடத்தப்பட்டு இலஞ்சம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 501 views
-
-
சென்னை: தனது மகன், மகளை ஆசிட் டேங்கரில் போட்டு உருத் தெரியாமல் அழித்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக, கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனின் மனைவி பத்மா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் தந்துள்ளார். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை விசாரணை புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந் நிலையில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்று பேரம் பேசியதாக ஜெயேந்திரருக்கு எதிராக ஒரு தொலைபேசி உரையாடல்…
-
- 0 replies
- 538 views
-
-
நியூயார்க்: ஐ.நா. ஏற்பாட்டின் பேரில், இந்தியப் பெருங்கடல் நாடுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் 9.2 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வரலாறு காணாத சுனாமி தாக்குதலை இந்தியப் பெருங்கடல் நாடுகள் சந்தித்தன. இரண்டரை லட்சம் பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர். இந்தத் தாக்குததலுக்குப் பிறகு சமீபத்தில் ஜப்பானிலும் சுனாமி தாக்கி பல ஆயிரம் பேர்களின் உயிரைப் பறித்தது. இந்த நிலையில், அதே 9.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கினால் அதிலிருந்து எப்படி மக்களைக் காப்பது என்பதற்காக ஒரு சுனாமி ஒத்திகை நிகழ்…
-
- 0 replies
- 686 views
-
-
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு இலங்கையிடம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை, இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் தொடர்ந்து தாக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழக மீனவர்களுக்கு பாக் ஜலசந்தி பகுதிதான் …
-
- 0 replies
- 488 views
-
-
இடிந்தகரை, அக். 11- கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக இடிந்தகரையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். முன்னதாக, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது செவ்வாய்க் கிழமைக்குள் மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருந்தது. அக்கெடு முடிவடைந்ததையடுத்து கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். http://www.koodal.co...s-as-talks-fail
-
- 0 replies
- 461 views
-
-
வேலூர் சிறையை முற்றுகையிடுவோம் - தேசிய லீக் அறிவிப்பு. முஸ்லீம் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் தேசிய லீக் கட்சி திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது. நேற்று வாணியம்பாடியில் செய்தியாளர்களிடையே பேசிய அதன் தலைவர் அப்துல்காதர் ‘’சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி 1 கோடி மக்களின் ஒத்துழைப்போடு வேலூர் மத்திய சிறையை முற்றுகையிட்டு சிறையை சிறைப்படுத்தும் போராட்டம் விரைவில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68483/language/ta-IN/article.aspx டிஸ்கி: இவனுங்கள் மண்டையன ஆதரித்து பிரச்சாரம் செய்வது ஒருபக்கம் இருக்…
-
- 1 reply
- 858 views
-
-
அமெரிக்கர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர்களான தோமஸ் சார்ஜன்ட் மற்றும் கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகிய இருவருக்கும், இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 'நிவ்யோர்க்' பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக சார்ஜன்ட் (68) பணியாற்றி வருகிறார்.சிம்ஸ் (68) இயங்கி வரும், 'பிரின்ஸ்டொன்' பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் இவர்கள் விரிநிலைப் பொருளாதாரம் (Macro Economics) தொடர்பில் விரிவாக ஆராய்ந்தமைக்காகவே இருவர்களுக்கு இப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் வட்டி வீதத்தில் திடீரென ஏற்படுகின்ற அதிகரிப்பானது பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் எவ்வாறான தாக்கத்தினை ஏ…
-
- 0 replies
- 493 views
-
-
தயாநிதி மாறன் வீட்டில் போராடி நுழைந்த சி பி ஐ! மாறன் குடுபத்தினர் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் இன்று காலை திடீரென நுழைந்த சி.பி.ஐ பல சோதனைகளை நடத்தியது தெரிந்ததே. இச்சோதணைக்காக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் சி.பி.ஐ. நுழைவதற்கு மிகவும் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது, பல முறை எச்சரித்தும் தயாநிதி மாறன் வீட்டின் காவலாளி சி.பி.ஐ. அதிகாரிகளை, உள்ளே விட அனுபம்திக்கவில்லை என கூறப்படுகிறது, இதனால் சுமார் முக்கால் மணி நேரம் தாமதமானதாகவும், இந்த இடைபட்ட நேரத்தில் தயாநிதி மாறன், சி பி ஐ வீட்டில் நுழைவதை தடுக்க பல வழிகளில் முயன்றுள்ளார், ஆனால் அதற்க்கு பயனளிக்கவில்லை, மேலும்,சி.பி.ஐ. உள்ளே நுழய போராடிக்கொண்டிருந்த நேரத்தில், வீட்டின் பின் வ…
-
- 1 reply
- 703 views
-
-
திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலைபேசிவருவதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்த…
-
- 4 replies
- 820 views
-
-
தனது எதிர்பாளர்களையும் எதிர்க் கட்சிகளையும் கொன்று குவித்து காட்டுமிராண்டித்தனத்தை ஏவிவிட்ட சிரியாவுக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தம் வீட்டோ அதிகாரத்தால் முறியடித்தன China and Russia veto UN resolution condemning Syria China and Russia have vetoed a UN Security Council resolution condemning Syria over its crackdown on anti-government protesters. The European-drafted resolution had been watered down to try to avoid the vetoes, dropping a direct reference to sanctions against Damascus. But Moscow and Beijing said the draft contained no provision against outside military intervention in Syria. The US envoy to the…
-
- 4 replies
- 635 views
-
-
ரியாத்: அக்டோபர் 09,2011,10:12 IST எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொன்றதாக , 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.இது தொடர்பாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கோர்…
-
- 5 replies
- 1.3k views
-
-
தெலுங்கான போராட்டம் வலுக்கின்றது: ஆந்ராவில் ஜனாதிபதி ஆட்சி? வீரகேசரி இணையம் 10/8/2011 3:47:30 PM ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி, 25வது நாளாக போராட்டம் தொடர்வதால், அங்கு சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் விவாதிக்க மாநில கவர்னர் நரசிம்மன், டில்லி விரைந்துள்ளார். ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கக் கோரி, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தெலுங்கானா பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் ஸ்டிரைக்கில்…
-
- 0 replies
- 385 views
-
-
ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு ஏமனில் அலி அப்துல்லாசலே கடந்த 32 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். அவரது ஆட்சியில் லஞ்சம் பெருகி விட்டது. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தியும், அரசியல் மாற்றம் தேவை என்றும் ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கூட்டத்தினர் மீது ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசியது. இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனவே, ராணுவம் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியது. இதில் 25-க் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். http://www.nakkh…
-
- 28 replies
- 2.4k views
-
-
ஹைதராபாத்: தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால் 18 வயது கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்தார். தெலுங்கானா விவகாரத்திற்காக இதுவரை 600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹயாத் நகரைச் சேர்ந்தவர் டி. பவானி (18). நகோலேவில் உள்ள நவோதயா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தெலுங்கானா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகின்றபோதிலும் இன்னும் தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படவில்லை. இதைக் கண்டித்து பவானி நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை வைத்துக் கொண்டார். இதில் பவானி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதா…
-
- 3 replies
- 673 views
-
-
கடாபியின் முக்கிய 'ஓயில்' குத நகரம் வீழ்ச்சியடைந்தது லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் முக்கியமான எண்ணெய்க் குதங்கள் இருக்கும் பிறீகா நகரம் இன்று லிபிய போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைநகர் திரிப்போலிக்கு கிறக்கே சுமார் 750 கி.மீ தொலைவில் இந்த நகரம் இருக்கிறது. மேற்கண்ட நகரத்தின் வீழ்ச்சி தமக்கு ஒரு பின்னடைவே என்று கடாபி ஆதரவுப் படைகள் தெரிவித்துள்ளன. அதேவேளை இன்று திரிப்போலிக்கு 160 கி.மீ தொலைவில் உள்ள சில்ரன் நகரமும் போராளிகள் கரங்களுக்கு வந்துள்ளது. ஆனால் கடுமையான நிலக்கண்ணி வெடிகளுக்குள்ளால் முன்னேறிய காரணத்தால் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டதாக போராளிகள் தரப்பு தெரிவிக்கிறது. இத்தனைக்குப் பிறகும் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பதவி விலகுவது எ…
-
- 57 replies
- 5.6k views
-
-
டெல்லி: கூடங்குளம் அணு மின் உலை விவகாரம் தொடர்பாக உயர் மட்டக் குழு அமைக்கப்படும். இக்குழு மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வைப் போக்கவும், வாழ்வாதாரம் குறித்த கவலைகளை நீக்கவும் உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மிழக அரசுக் குழு மற்றும் கூடங்குளம் போராட்டக் குழு ஆகியோர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை பிற்பகலில் சந்தித்துப் பேசினர். கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு குழுவும், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவும் பிரதமரை சந்தித்தன. தமிழக அரசின் குழுவில், அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை, வா.மைத்ரேயன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர…
-
- 1 reply
- 677 views
-
-
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 00:52 GMT ] [ கார்வண்ணன் ] ராஜிவ்காந்தி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தனு என்ற பெண்ணுக்கு மரணதண்டனை பெற்றுக் கொடுத்ததாக இந்திய மத்திய புலனாய்வுத்துறை தனது இணையத்தில் வெளியிட்டிருந்த தகவலை நீக்கியுள்ளது. இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் இணையத்தளத்தில் தற்கொலைக் குண்டுதாரியான தனுவுக்கு உயர்நீதிமன்றத்தின் மூலம் மரணதண்டனை பெற்றுக் கொடுத்தாக உரிமை கோரப்பட்டிருந்தது. சிபிஐயின் சாதனைகள் பற்றிய குறிப்பிலேயே இந்தத் தகவல் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தத் தவறான தகவல் குறித்து சுட்டிக்காட்டிய இந்திய ஊடகங்கள், இந்தியாவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான சிபிஐ குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன. …
-
- 3 replies
- 973 views
-