Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரியாத்: அக்டோபர் 09,2011,10:12 IST எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொ‌ன்றதாக , 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.இது தொடர்பாக வங்கதேச நா‌ட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கோர்…

  2. ஹனோய்:அக்டோபர் 09,2011,19:55 IST "வியட்நாம் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிகளில் இந்தியா மற்றும் பிற வெளிநாடுகள், எண்ணெய் மற்றும் வாயு வளத்தைக் கண்டறிய வியட்நாம் அரசு அழைக்கிறது' என, அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். வியட்நாம் எல்லைக்குட்பட்ட தென் சீனக் கடலில், இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, தென் சீனக் கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியா தனது பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்தது. ஆனால், இந்தியாவும், வியட்நாமும், சீனாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டன. இந்நிலையில், நாளை மறுநாள் முதன் முறையாக இந்தியா வர உள்ள வியட்நாம் அதிபர் ட்ரூவாங் டன் சங், இருதரப்பு உறவுகள் மேலும…

    • 81 replies
    • 5.8k views
  3. தெலுங்கான போராட்டம் வலுக்கின்றது: ஆந்ராவில் ஜனாதிபதி ஆட்சி? வீரகேசரி இணையம் 10/8/2011 3:47:30 PM ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி, 25வது நாளாக போராட்டம் தொடர்வதால், அங்கு சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் விவாதிக்க மாநில கவர்னர் நரசிம்மன், டில்லி விரைந்துள்ளார். ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கக் கோரி, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தெலுங்கானா பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் ஸ்டிரைக்கில்…

  4. திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலைபேசிவருவதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்த…

    • 4 replies
    • 822 views
  5. மூன்று பெண்கள் இம்முறை நோபள் சமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். லைபீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், யேமனைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இம்முறை நோபள் சமாதான விருதினை பெற்றுக் கொள்கின்றனர். லைபீரிய ஜனாதிபதி இலன் ஜோன்சன் செர்லீப், லைபீரியாவின் லெய்மா குபோவீ மற்றும் யேமனின் தவாகுல் கார்மான் ஆகியோருக்கு இம்முறை நோபள் சாமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். பெண்கள் உரிமை, வன்முறைகளற்ற போராட்டத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக குறித்த பெண்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. செர்லீப் லைபீரியாவின் ஜனாதிபதியாகவும், குபோவீ சமாதான செயற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை, கார்மான் …

  6. டெல்லி: கூடங்குளம் அணு மின் உலை விவகாரம் தொடர்பாக உயர் மட்டக் குழு அமைக்கப்படும். இக்குழு மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வைப் போக்கவும், வாழ்வாதாரம் குறித்த கவலைகளை நீக்கவும் உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மிழக அரசுக் குழு மற்றும் கூடங்குளம் போராட்டக் குழு ஆகியோர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை பிற்பகலில் சந்தித்துப் பேசினர். கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு குழுவும், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவும் பிரதமரை சந்தித்தன. தமிழக அரசின் குழுவில், அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை, வா.மைத்ரேயன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர…

  7. [ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 00:52 GMT ] [ கார்வண்ணன் ] ராஜிவ்காந்தி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தனு என்ற பெண்ணுக்கு மரணதண்டனை பெற்றுக் கொடுத்ததாக இந்திய மத்திய புலனாய்வுத்துறை தனது இணையத்தில் வெளியிட்டிருந்த தகவலை நீக்கியுள்ளது. இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் இணையத்தளத்தில் தற்கொலைக் குண்டுதாரியான தனுவுக்கு உயர்நீதிமன்றத்தின் மூலம் மரணதண்டனை பெற்றுக் கொடுத்தாக உரிமை கோரப்பட்டிருந்தது. சிபிஐயின் சாதனைகள் பற்றிய குறிப்பிலேயே இந்தத் தகவல் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தத் தவறான தகவல் குறித்து சுட்டிக்காட்டிய இந்திய ஊடகங்கள், இந்தியாவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான சிபிஐ குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன. …

  8. [ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 02:46 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் நடத்தப்படும் வார இறுதிப் பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரவாத முறியடிப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேசிய இணைப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஐவோ ஒப்ஸ்ரெல்ரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் 21 வார இறுதிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருதாகவும்,இங்கு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி தமிழ்ச் சிறுவர்களுக்குப் போதிக்கப்படுவதாகவும் டச்சு காவல்துறையினரின் அறிக்க…

  9. கணணி உலகத்தின் தாமஸ் அல்வா எடிசன் என வர்ணிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் அதன் நீண்ட கால இயக்குனருமான ஸ்டிவ் ஜொப்ஸ் அவர்கள் இன்று பலகாலம் பாதிக்கப்பட்ட புற்றுநோயால்n (எட்டு வருட காலமாக இவருக்கு புற்றுநோய் இருந்தது ) இறந்தார். ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள…

    • 20 replies
    • 2.1k views
  10. ஒழுங்காக கவனிக்கப்படாவிடின் தாஜ்மஹால் 5 வருடத்தில் உடைந்து விழும் அபாயம் _ கவின் / வீரகேசரி இணையம் 10/5/2011 5:07:24 PM சரியாகக் கவனிக்கப்படாவிடில் தாஜ்மஹால் இன்னும் 5 வருடங்களில் உடைந்து வீழ்ந்து விடுமென சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். அதன் அஸ்திவாரம் சிதைவடைந்து வருவதாகவும் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தாஜ்மஹாலின் தூபிகளும் உடைந்து விழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மொகலாயப் பேரரசினால் நிர்மாணிக்கப்பட்ட தாஜ்மஹால் 358 வருடங்கள் பழமை வாய்ந்தது. காதலின் சின்னமாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளமாகவும் இது திகழுகின்றது. வருடாந்தம் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்வையிட இந்தியாவ…

  11. [ புதன்கிழமை, 05 ஒக்ரோபர் 2011, 11:02 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வுப் பணியகமானது [the Central Bureau of Investigation - CBI] இன்னமும் சரியானதொரு முடிவை எடுத்தது போல் தெரியவில்லை. இவ்வாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வானது தனக்கு மிகவேண்டிய 50 பேரின் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதில் தவறிழைத்ததன் பின்னர் தற்போது மீண்டும் மிகப் பெரிய தவறொன்றை இழைத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் கொலைவழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தனு என அழைக்கப்படும் தேன்மொழி இராஜரட்ணத்திற்கு விசாரணை மன்றாலும், உச்ச நீதிமன்றாலும் மரணத…

  12. தனது எதிர்பாளர்களையும் எதிர்க் கட்சிகளையும் கொன்று குவித்து காட்டுமிராண்டித்தனத்தை ஏவிவிட்ட சிரியாவுக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தம் வீட்டோ அதிகாரத்தால் முறியடித்தன China and Russia veto UN resolution condemning Syria China and Russia have vetoed a UN Security Council resolution condemning Syria over its crackdown on anti-government protesters. The European-drafted resolution had been watered down to try to avoid the vetoes, dropping a direct reference to sanctions against Damascus. But Moscow and Beijing said the draft contained no provision against outside military intervention in Syria. The US envoy to the…

    • 4 replies
    • 636 views
  13. 09.10.11 ஹாட் டாபிக் அதிகாரம் கையில் இருந்தால், எளியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்கிற அரசுத்துறை அதிகாரிகளின் நினைப்பிற்கு சவுக்கடி வழங்கியுள்ளது ‘வாச்சாத்தி’ தீர்ப்பு. காலங்கடந்து கிடைத்தாலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கிறது சித்தேரி வனப்பகுதி. இங்குதான் வாச்சாத்தி கிராமம் அமைந்துள்ளது. 1992 ஜூன் மாதம் 20-ம் தேதி காலை எழும்போது இவ்வளவு பெரிய பிரச்னைகளை சந்திக்கப் போகிறோம் என வாச்சாத்தி மக்கள் அறிந்திருக்கவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் இயற்கையோடு இண…

  14. (இத்தாலியில் பரபரப்பு) தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார். இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மர…

  15. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 4 தமிழர்கள் பலி குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பலியாயினர். குவைத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று மினா அல் அகமதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 4,60,000 பேரல் எண்ணெய் சுத்திகரிக்கப்படும் நிலையில், நிலையத்தில் உள்ள எரிவாயு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது கேஸ் பைப் தீடீர் என வெடித்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லக்ஷ்மையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராமன் அர்ஜுனன் மற்றும் சிவச்சந்திரன்ஷண்முகம் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனை உறுதிபடுத்தியுள்ள இந்திய தூதரக…

  16. ஆந்திராவில் தனித்தெலுங்கானா கேட்டு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஐதராபாத்தில் 22-வது நாளாக முழு அடைப்பு நீடிக்கிறது. இதனால் ஐதராபாத் நகரம் வெறிச்சோடியது. அரசு பஸ்கள் ஓடவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மற்றும் ஐதராபாத்துக்குள் நுழையும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் தெலுங்கானா பகுதியில் ஆங்காங்கே பஸ்கள் நடுவழியில் நிற்கின்றன. அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கிக் கிடக்கின்றன. நேற்று முன்தினம் விஜய வாடாவில் இருந்து 250 தனியார் பஸ்கள் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்தன. வாரங்கல் மாவட்டம் நஜ்ரேகல் என்ற இடத்தில் பஸ்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் தேசி…

  17. ‘கொழுப்புக்கு வரி’- டென்மார்க்கில் சட்டம் கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுக்கு வரி உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்மார்க் அறிவித்துள்ளது. ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக அளவில் கொண்ட உணவுப் பொருட்களே இந்த புதிய வரிவிதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வெண்ணெய், பால், பாலாடை, பிட்சா, இறைச்சி, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் 2.3 சதவீதத்துக்கு மேலாக உடலில் கரையாத, சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கு…

  18. பூமிக்கு அருகில், சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்களில், 90 சதவீதத்தை அமெரிக்காவின் “நாசா’ கண்டறிந்துள்ளது. மேலும், இந்த விண்கற்களால், பூமிக்கு ஆபத்தில்லை என்றும், “நாசா’ தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் “நாசா’ ஆய்வு மையம், “வைஸ்’ என்ற விண்கலம், 2009ல் ஏவியது. பூமிக்கு வெகு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்கள், கேலக்சிகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வதற்காக, இது அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, அந்த விண்கலம், மொத்தம், 981 விண்கற்கள் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த 981 கற்களில், 911 கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை. இதற்கு முன்பு நடந்த ஆய்வுகளின்படி, 3,300 அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட, இந்த கற்கள் எந்நேரம் வேண்டுமானாலும், பூமியைத் தாக்க…

  19. சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக வழக்குப் பதிவு; விரைவில் கைது? ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். பத்திரிகி ஒன்றில் அண்மையில் சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். 2ஜி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து மத்திய அரசுக்கும், சிபிஐ-க்கும் சுவாமி பல்வேறு குடைச்சல்களை கொடுத்து கொண்டிருப்பதால் காங்கிரஸ் தலைமை அவர் மீது ஏக கடுப்பில் உள்ளது. இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர…

  20. புற்று நோய்க்கு புதிய மருந்து; 3 பேருக்கு நோபல் பரிசு! புற்று நோய்க்கான புதிய மருந்து மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக, உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ரகசியங்களை கண்டறிந்து வெளியிட்ட மூன்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புரூஸ் பெட்லர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜூலேஸ் ஹாஃப்மேன் மற்றும் கனடாவை சேர்ந்த ரேல்ப் ஸ்டெய்ன் மேன் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த விருதை பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் புரூஸ் மற்றும் ஜூலேஸ் ஆகிய இருவரும் நோய் தாக்கியவுடன் நோய் எதிர்ப்பு மண்டலம் எவ்விதமாக எதிர்வினையாற்றுகிறது என்பதன் முதல்கட்ட ஆய்வை கண்டறிந்தனர். கனடா விஞ்ஞானியான ரால்ப் கண்டறிந்த உயிர…

    • 3 replies
    • 693 views
  21. ஹைதராபாத்: தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால் 18 வயது கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்தார். தெலுங்கானா விவகாரத்திற்காக இதுவரை 600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹயாத் நகரைச் சேர்ந்தவர் டி. பவானி (18). நகோலேவில் உள்ள நவோதயா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தெலுங்கானா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகின்றபோதிலும் இன்னும் தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படவில்லை. இதைக் கண்டித்து பவானி நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை வைத்துக் கொண்டார். இதில் பவானி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதா…

  22. அமெரிக்காவின் பொருளாதார மையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் பொருளாதார மையமான நியோயூர்க்கின் பங்குச்சந்தை உட்பட்ட முக்கிய வீதியான வால் ஸ்டீர்ட் இனை முடக்கும் போராட்டங்கள் மக்களால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்றது. இந்த வார இறுதியில் பேர் 700 வரை கைது செய்யப்பட்டனர். வங்கிகளுக்கு அரசு தொடர்ந்து அளிக்கும் உதவிகளுக்கு எதிராகவும் வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து மக்கள் போராடுகின்றனர்.

    • 4 replies
    • 1.2k views
  23. சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.! - சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள் சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான்…

  24. இந்தியத் தேசபிதா மகாத்மா காந்தியின் 143வது பிறந்ததினம் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தியத் தேசபிதா எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 143வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகின்றது. பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்கொட்டிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் பிரதமர் மன்மோகன்சிங், கொங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்கள். டெல்லி முதலமைச்சர் ஷீலா டிக்ஷித், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீட் அன்சாரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதேவேளை மகாத்மா கர்நதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுனர் ரோசய்யா மற்றம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.…

  25. 'தொழிலுக்கு வயதில்லை'- பிரிட்டனில் சட்டம் பிரிட்டனில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒருவர் தொழிலொன்றிலிருந்து ஓய்வு பெற வேண்டிய (65 வயது) சட்ட ரீதியான வயது உச்ச வரம்பு முற்று முழுதாக நீக்கப்பட்டுவிட்டது. ஒருவர் 65 வயதை அடைந்தவுடன் வயதைக் காரணம் காட்டி அவரை தொழிலிருந்து நீக்குவதற்கு தொழில் வழங்குநருக்கு இருந்த அதிகாரத்தை இந்தப் புதிய சட்டம் இத்துடன் ஒழித்துவிட்டது. ஆனாலும், பிரிட்டனில் உள்ள தொழில் ஸ்தாபனங்களில் பத்தில் ஒரு நிறுவனம், ஊழியர்களை குறித்த ஒரு வயதில் ஓய்வு பெறச் செய்வதற்காக ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதாக நோர்ட்டன் ரோஸ் என்ற சட்ட நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.