உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு! டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த இரவு விடுத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விபத்தில் 500 முதல்…
-
- 4 replies
- 370 views
- 1 follower
-
-
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் எதிரொலி- ஈரானில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்- டிரம்ப் ஆதரவு உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகத்திற்கு வெளியே பெருமளவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனியை பதவி விலகுமாறும், விமானம் வீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர்களை தண்டிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டக்கார…
-
- 0 replies
- 466 views
-
-
உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலி…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
[size=4]கடந்த நிதியாண்டில் தலிபான்கள் பல்வேறு வழிகளில், 2,000 கோடி ரூபாயை, வசூல் செய்துள்ளனர் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. [/size] [size=4]பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஐ.நா., விதிக்கும் தடைகளை கண்காணிக்கும் பிரிவைச் சேர்ந்த வல்லுனர்கள், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு, தலிபான்களின் பணப்புழக்கம் குறித்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். [/size] [size=4]அதில் கூறியிருப்பதாவது: உள்ளூர் வியாபாரிகளிடம் வரி விதிப்பு, போதைப் பொருளான அபின் விளைச்சலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிடமும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடமும் அச்சுறுத்திப் பணம் பறிப்பது, போன்ற பல்வேறு செயல்கள் மூலம், தலிபான்களுக்குப் பணம் வருகிறது. கட…
-
- 0 replies
- 812 views
-
-
துனிசியா நாட்டின் தலை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லையென தெரிவித்த அதிகாரிகள் 5 பேர் மாத்திரம் காயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். இவ்வாறான தாக்குதல்கள் துன்சானியாவில் தொடர்ந்துள்ள நிலையில் சுற்றூலாப் பயணிகள் மீதும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மீதும் இத் தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை …
-
- 0 replies
- 276 views
-
-
இலங்கை தூதரகம் முற்றுகை;சென்னையில் போக்குவரத்து நெரிசல்! Posted Date : 12:30 (21/09/2012) சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்னர் முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் திருமாவளவன் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதேப்போன்று சென்னையில் உள்ள பா.ஜனதா அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டதிராவிடர் விடுதலைக் கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் [size="2"] [/…
-
- 0 replies
- 684 views
-
-
The former Italian prime minister has the right to appeal the ruling two more times. MILAN - An Italian court on Friday sentenced former prime minister Silvio Berlusconi to four years in jail for tax fraud in connection with the purchase of broadcasting rights by his Mediaset television company. Berlusconi has the right to appeal the ruling two more times before the sentence becomes definitive and will not be jailed unless the final appeal is upheld. Prosecutors had asked for a jail sentence of three years and eight months. The court also ordered damages provisionally set at 10 million euros ($12.96 million) to be paid by Berlusconi and his co-defendants to tax a…
-
- 0 replies
- 558 views
-
-
அடுத்த குறி ஏழு அதிசயங்களில் ஒன்று..! ஐஎஸ் வெளியிட்ட பகீர் வீடியோ உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் தான் எங்களின் அடுத்தகுறி என்பதை காட்டும் விதமாக ஐ.எஸ் அமைப்பினர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், ஈராக்கில் அமைந்துள்ள 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறது. தகர்க்கப்பட்ட இடத்தில் இருந்து புகைமூட்டம் கிளம்புகிறது. இதனை இரண்டு முறை எடுத்துரைக்கும் அந்த வீடியோவின் இறுதி காட்சியில், எகிப்திய பிரமிடின் புகைப்படம் இடம்பெறுகிறது. இதன் மூலம், இவர்களின் அடுத்தகுறி எகிப்து பிரமிடுதான் என்பதை உணர்த்துகிறது. http://www.vikatan.com/news/world/650…
-
- 0 replies
- 373 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - கேமரன் இந்த மாதத்தின் கடைசியில் நடைபெறும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட வாக்களித்தால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கிவிடும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - டேவிட் கேமரன் சுகாதாரம், ஓய்வூதியம் போன்வற்றில் செலவிடும் தொகை இதனால் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த எச்சரிக்கை தற்போதைய நிலையை சரியென காட்டுகின்ற, ஓய்வூதியம் பெறுவோரை பயமுறுத்தும், திகிலூட்டும் கடைசி முயற்சி என்று பிரிட்டன் ஐ…
-
- 0 replies
- 326 views
-
-
இந்தியாவை சுற்றிவளைத்திருக்கும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: ’ரா’ எச்சரிக்கை. டெல்லி: இந்தியாவை சுற்றி இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதாக வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா' எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மத்திய அரசிடம் சில வாரங்களுக்குமுன்பு ரா அமைப்பு அளித்திருக்கும் ரகசிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் நாசவேலைகளை செய்வதற்காக அயல் நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கில் நாசவேலை குழுவினருக்கு மறைவு இடங்களை ஐ.எஸ்.ஐ. உருவாக்கிக் கொடுத்து வருகிறது. நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இதற்கான வா…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஹூஸ்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் விலங்கிடப்பட்ட கைதிகள் சிறையினை உடைத்து கொண்டு வெளியே வந்து மாரடைப்பினால் உயிருக்கு போராடிய சிறை காவலர் ஒருவரை காப்பாற்றியுள்ளனர். போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். அவர் இன்று நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தபடி கைதிகளிடம் நகைச்சுவை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியினால் திடீரென சரிந்து விழுந்துள்ளார். கைதிகள் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் அங்கு ஒருவரும் இல்லை. அதேவேளையில், கைதிகளில் ஒருவர் சிறையின…
-
- 0 replies
- 413 views
-
-
கொரோனாவிலிருந்து மீள்வதற்குள் ரஷ்யாவில் உருவெடுக்கும் மற்றுமொரு ஆபத்து ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தல் நிறைவடையாத நிலையில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு தற்போது திணறி வருகிறது. கொரோனா பாதிப்பே முடியாத சூழலில், தற்போது ரஷ்யாவில் பரிணாம வளர்ச்சியில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் உருவாகியுள்ளது. இந்த உண்ணிகள் தற்போது ரஷ்யா, சைபீரியா நாடுகளில் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வருகிறது. இதுவரை சுமார் 8,215 பேர் இந்த இரத்தம் உறிஞ்சும் புதுவகை உண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2,125 பேர் குழந்தைகள் எனவும் ரஷ்ய மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மனிதர்களை கடிக்கும் …
-
- 0 replies
- 416 views
-
-
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3 அலகுகள் பதிவு- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது! Posted by: Mathi Updated: Friday, December 7, 2012, 14:59 [iST] டோக்கியா: ஜப்பான் நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகள் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சுலைமானி கொலை : தகவல்களை வழங்கியவருக்கு மரண தண்டனை - ஈரான் அறவிப்பு சுலைமானி கொலைச் சம்பவத்தில் அமெரிக்காவின் மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது. ஈரான் நாட்டின் குர்து படை கொமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார். இது ஈரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயைடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை…
-
- 0 replies
- 392 views
-
-
3 கிலோ தங்கத்தினை விட்டுசென்றவர் யார் - தேடுகிறது சுவிஸ் ரயில் பயணங்களில். போனை துளைக்கலாம், பெர்சினை பணத்துடன் துளைக்கலாம். தங்க கட்டிகளை, அதுவும் 3கிலோ சுத்தமான கட்டிகளை துளைத்து, அதாவது ரயிலில் விட்டு செல்வீர்களா? கடந்த அக்டோபர் மாதம் சுவிஸ் நாட்டில், செயின்ட் கலன் ஸ்டேஷனுக்கும், லூசெர்ன் ஸ்டேஷனுக்கும் இடையே ரயில் செல்லும் போது, அநாதரவாக கிடந்த பையினுள் இருந்த £152,000 ($191,000) பெறுமதியான 3கிலோ தங்க கட்டிகள் அதன் உரிமையாளர் வந்து பெற்றுக் கொள்ளும் வரை, லூசெர்ன் அரச வழக்குகள் தொடரின் அலுவலகத்தில் காத்திருக்கின்ற்ன. உரியவர்கள் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இடையில் வந்து பெற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னர் அது அனாதரவு சொத்தாக அரசு எடுத்துக் கொள்ளும்…
-
- 6 replies
- 866 views
-
-
இளையோர் தடுப்புக்காவல் மையத்தில் உரிமை மீறல்: புலனாய்வுக்கு ஆஸ்திரேலிய அரசு உத்தரவு ஆடை உரியப்படுதல், கழுத்தில் பிடித்து தூக்கி சிறைக்குள் வீசப்படுதல், தலை மூடப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு நாற்காலியில் அமர வைத்திருத்தல் போன்ற காட்சிகள் ஒளிபரப்பானதால், அரசு புலனாய்வுக்கு உத்தரவிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் இளையோர் தடுப்புக் காவல் மையத்தில், சிறை பாதுகாப்புப் பணியாளர்கள், பதின்ம வயது இளைஞர்களை தாக்குவதும், அவர்கள் மீது கண்ணர் புகை வீசுவதும் தொலைக்காட்சி ஆவணப்படத்தில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, அரசு அது பற்றிய புலனாய்வுக்கு ஆணையிட்டுள்ளது. சிறை கைதி ஒருவர் ஆடை உரியப்படுவது, இன்னொருவர் கழுத்தில் பிடித்து தூக்கி சிறைக்குள் வீசப்…
-
- 0 replies
- 166 views
-
-
கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது; அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்குனர் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் கூறி உள்ளார். பதிவு: ஜூன் 24, 2020 09:03 AM வாஷிங்டன் அமெரிக்காவில் 23 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 121,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 25 மாநிலங்களில் அதிக புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன அவை அரிசோனா, கலிபோர்னியா, கொளராடோ, டெலாவேர், புளோரிடா, ஜார்ஜியா, ஹவாய், இடாஹோ, கன்சாஸ…
-
- 0 replies
- 367 views
-
-
சவுதிஅரேபியாவில் ஜெட்டா நகரை சேர்ந்த பெண் அமீனா அல் ஜெப்ரி (18). இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ நகரில் பிறந்தார்.எனவே, மேற்கத்திய பாணியில் நாகரீகமாக வளர்ந்தார். அது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே 16-வது வயதில், வலுக்கட்டாயமாக சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்தார்.அங்கு தனது மத கொள்கைகளுக்கு ஏற்றபடி கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் அமீனா ஒரு சம்பவத்தில் ஆணுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை அவரை 4 வருடமாக வீட்டில் அடைத்து வைத்தார். தலையில் மொட்டையடித்து அவரது அழகை அலங்கோலப்படுத்தினார்.சரிவர உணவு, தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தினார். பாத்ரூம் பயன்படுத்தப்படவில்லை. இதற்கிடையே அங்கிரு…
-
- 1 reply
- 418 views
-
-
வெள்ள சேத பாதிப்பிலிருந்து அணு உலையை சரிசெய்துள்ள வட கொரியா, அணு ஆயுத சோதனைக்குத் தயாராக உள்ளது என்று அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் கூறியிருப்பதாவது: வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட அணு பரிசோதனை மையத்தை, வட கொரியா சீரமைத்து உள்ளது. இரண்டு வார முன்னறிவிப்புடன், அணு ஆயுத பரிசோதனை நடத்த அது தயாராக உள்ளது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா சமீபத்தில் நீண்ட தூர ஏவுகணையை பரிசோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் அமெரிக்கா …
-
- 0 replies
- 486 views
-
-
பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனி நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முயற்சித்திருந்தார் எனவும், இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியொவின் ளுவசயவாசழல ல் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் முயற்சியை முறிடியத்துள்ளனர். தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நபர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எவ்வாறான தாக்குதல் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. ht…
-
- 0 replies
- 191 views
-
-
மாஸ்கோ, சிரியாவில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில உலக வல்லரசுகள் தாக்குதல் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில், ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரானில் உள்ள விமான தளத்தில் இருந்து ரஷ்யாவின் 16 Tu-22M3, su-34 உள்ளிட்ட போர் விமானங்களை கிளம்பிச்சென்றது. இந்த விமானமானது, ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் ஜபத் அல் நுசாரா பயங்கரவாத குழுவினர் உள்ள எலோப்பா மாகாணத்தில் முழு வீச்சில் தாக்குதல் நடத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. http://www.dailythanthi.com/News/World/20…
-
- 0 replies
- 585 views
-
-
பேருந்தில் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வேறொரு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆண்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழாவது நபரைப் பொலிசார் தேடிவருகின்றனர். பேருந்தில் தனியொரு பயணியாக இந்தப் பெண் இருந்த சந்தர்ப்பத்தை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு, அப்பெண்ணின் கிராமத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குறமான வீடொன்றுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். தில்லியில் சென்ற மாதம் இதேபோல இளம் மாணவி ஒருவர் பேருந்தில் வைத்து பலரால் பாலியல் …
-
- 2 replies
- 458 views
-
-
மனைவியின் சடலத்தை சுமந்த மஜ்கியை தேடும் பஹ்ரைன் அரசர்! ஒடிஷாவில் கலாகண்டி மாவட்டத்தில் தானா மஜ்கி என்பவரின் மனைவி அமர்ந்தேயி காச நோய் காரணமாக பவானிபட்னா மருத்துவமனையில் இறந்து போனார். மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்ல மஜ்கியிடம் பணம் இல்லை. கெஞ்சி பார்த்தும் அமரர் ஊர்தி தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. வேறு வழியில்லாத நிலையில், இறந்து போன தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு தனது கிராமம் நோக்கி நடக்கத் தொடங்கினார் மஜ்கி. கூடவே மஜ்கியின் மகளும் அழுதபடியே சென்றார். தோளில் சடலத்துடன் ஒருவர் நடப்பதையும் சிறுமி ஒருவர் அழுதபடியே சென்றதையும் பார்த்த பின்னரும் யாரும் உதவிக்கு வரவில்லை. மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர்…
-
- 0 replies
- 551 views
-
-
இது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகாரி பீஜிங்: ஜி20 மாநாட்டிற்காக ஒபாமா சீனா வந்திறங்கிய போது, அமெரிக்க அதிகாரிகளிடம் இது எங்கள் நாடு என சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் ஜி20 மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வந்த ஒபாமாவை, அந்நாட்டி…
-
- 0 replies
- 609 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேரிலான்ட்மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். மேலும்சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கவர்னர்மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூ…
-
- 0 replies
- 326 views
-