உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
சர்வதேச நிதிய தலைவர் மீது முறைகேடு விசாரணை பிரான்சின் முன்னாள் நிதியமைச்சரும், சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவருமான கிறிஸ்டியானே லாகர்டே தற்போது புதிய பிரச்சனைக்கு ஆளாகி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி இழந்த டொமினிசக் ஸ்டிராஸ்கானை தொடர்ந்து ஐ.எம்.எப் பின் தலைவராக ஜூலை மாதம் கிறிஸ்டியானே லாகர்டே, தலைவர் பதவிக்கு வந்துள்ளார். அவர், பிரான்ஸ் அமைச்சராக பதவியில் இருந்தபோது முறைகேடு செய்ததாக உள்ள குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. கிறிஸ்டியானே தனது அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர் பெர்னார்டு தர்பேஷக்கு 28 கோஎயே 50 லட்சம் யூரோ அளிக்க ஒப்புதல் அளித்தார் என்று விசாரணையாளர்கள் குற்றம் சாட்டினர். பெர்னார்ட…
-
- 1 reply
- 577 views
-
-
அழகிரியிடம் பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்து! - தெஹல்கா ஊடகம் செய்தி!! மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரிக்கு பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெஹல்கா எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வு குறித்த செய்திகளை வெளியிடும் இவ்வூடகம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து விரிவாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தியில் அழகிரி தனது உண்மையான சொத்துகளின் விபரங்களை முழுமையாக வெளியிடவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: '2009ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் ப…
-
- 0 replies
- 609 views
-
-
இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவியும்.. இந்திய அரசின் நிழல் தலைவியும்.. ஈழத்தில் தமிழினப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான சோனியா காந்தி.. வெளிப்படுத்தப்படாத (வெளியில் சொல்லப்படாத).. நோய் தாக்கம் ஒன்றின் காரணமாக இந்தியாவுக்கு வெளியில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-south-asia-14398994
-
- 4 replies
- 679 views
-
-
லிதுவேனியா நகரத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் பாதையில் கார்களை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேயர் ஆர்டுராஸ் ஜூக்காஸ் தானே களம் இறங்கினார். இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதைகளில் நிறுத்தியிருந்த விலையுயர்ந்த கார்களை புல்டோசர் மூலம் நொறுக்கி அதை வீடியோவும் எடுத்து மக்கள் முன்னிலையில் ஒளிபரப்பவும் செய்தார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் யாரும் இனி கார்களை அதற்கு உரிய இடங்களில் நிறுத்துவார்கள் என்றும், அவ்வாறு செய்யாதவர்கள் மீது அவர்கள் காரை நொறுக்குவதோடு, நிறுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இனிமேல் சைக்கிள்களில் செல்பவர்கள் இடையூறின்றி தங்கள் பாதைகளில் செல்ல உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று…
-
- 2 replies
- 696 views
-
-
நில அபகரிப்பு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கைது செயய்ப்பட்டார். ஈரோடு திமுக மாவட்டச் செயலாளரான என்.கே.கே.பி. ராஜாவுடன், மேயர் விஸ்வநாதனும் இன்று அதிகாலை கைதானர். பெருந்துறையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கொடுத்த நில அகபரிப்பு புகாரின் பேரில், என்.கே.கே.பி. ராஜா கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2007ம் ஆண்டு என்.கே.கே.பி. ராஜாவும், ஈரோடு மேயர் குமார் முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் உள்பட 11 பேர் தனது வீட்டுக்கு வந்து பெருந்துறையில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த தனக்கு சொந்தமான 60.5 ஏக…
-
- 0 replies
- 503 views
-
-
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாவன: * சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும். * ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும். * சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படுத்தப்படும். * நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும். * உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும். * மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்க…
-
- 0 replies
- 724 views
-
-
வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 02:01 GMT அண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்ற அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது. நியுயோர்க்கில் நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் செய்தியாளர்கள் இதுபற்றிக் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐ.நாவிடம் கையளிக்கப்பட்டதா என்பது குறித்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், இதுதொடர்பாக கருத்து எதையும் வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார். ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசிடம் இருந்து ஐ.நாவுக்கு அதிகாரபூர்வமான எந்தப் பதிலும…
-
- 0 replies
- 464 views
-
-
வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 02:12 GMT சிறிலங்காவில் இருந்து சென்ற சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது சென்னையில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எல்பிட்டியவில் இருந்து புத்தகயாவுக்கு சென்ற 84 பேர் கொண்ட சிங்கள சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா திரும்புவதற்காக சென்னை வந்திருந்தனர். நாளை இவர்கள் கொழும்பு திரும்பவிருந்த நிலையில் சென்னையில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சிறிலங்காவுக்கு எதிரான பேரணி ஒன்றை கடந்து கொண்டு சென்ற போதே தாம் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டு தம்மீது தாக்குதல் நடத்தியதாக இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரின்…
-
- 0 replies
- 544 views
-
-
முபாரக்கிடம் இன்று விசாரணை ஆரம்பம்: 3 ஆயிரம் பொலிஸ் குவிப்பு எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மக்கள் போராட்டம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பதவி இழந்தார். அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் முறைகேடு மற்றும் போராட்டக்காரர்களை படுகொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முபாரக், அவரது 2 மகன்கள் அலா மற்றும் கமால், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபிப் அல் - அட்லி மற்றும் முன்னாள் 6 அதிகாரிகள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணையின் போது சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகாடமியில் 3 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோ தா…
-
- 3 replies
- 485 views
-
-
பிரான்சை தொடர்ந்து இத்தாலியிலும் பர்தா அணிவதற்கு தடை முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடைக்கு பெல்ஜியம், பிரான்ஸ் தடை விதித்து உள்ளது. அந்த வரிசையில் இத்தாலியும் தற்போது இடம்பெறுகிறது. முகத்தை மூடும் பர்தா ஆடைகளால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுகிறது என தடைவிதிக்கும் நாடுகள் கூறுகின்றன. கோடைகால விடுமுறைக்கு பின்னர் பர்தாவுக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது. இத்தாலியின் மத்திய வலது கூட்டணியான பிரதமர் பெர்லுஸ்கோனி அரசு இந்த பர்தா தடைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி அரசியலமைப்பு விவகார கொமிட்டி கூறுகையில்,"இந்த பர்தா தடை மசோதா கருத்தை முதலில் குடியேற்றத்திற்கு எதிரான வடக்கு லீக் அமை…
-
- 3 replies
- 659 views
-
-
வீரகேசரி இணையம் 8/3/2011 1:04:03 PM அமெரிக்க கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 161 வாக்குகளுக்கு 269 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்படுவதற்கு அமெரிக்க செனட் சபையில் அது நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த சட்ட மூலமானது அமெரிக்க கடன் உச்ச வரம்பை 14.3 திரில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2.4 திரில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலரால் உயர்த்துகிறது. இதன் மூலம் 10 வருட காலப் பகுதியில் குறைந்தது 2.1 திரில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 684 views
-
-
புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 00:19 GMT தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கோருவது போன்று சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவோ அதனுடனான உறவுகளைத துண்டிக்கவோ முடியாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சிறிலங்கா மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும், அதனுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்கட்சிகள் கோரி வருகின்றன. இது தொடர்பாக மதிமுக பொதுசெயலர் வைகோவும் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசியிருந்தார். இதன்போதே சிறிலங்காவுடனான உறவுகளைத் துண்டிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர…
-
- 3 replies
- 624 views
-
-
U.N. Security Council set to meet Monday on Syria The U.N. Security Council scheduled closed door-consultations for later on Monday to discuss the worsening violence in Syria, diplomats said. Germany requested the meeting after human rights groups said government troops had killed 80 people on Sunday when they stormed the Syrian city of Hama to crush protests amid a five-month-old uprising against President Bashar al-Assad. http://in.reuters.com/article/2011/08/01/idINIndia-58564220110801 சிரியாவில் 140 பேர் படுகொலை சிரியாவில் போராட்டக்காரர்களை நசுக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 140 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சிரியாவில் ஜனநாயக ஆதரவு போராட…
-
- 2 replies
- 802 views
-
-
ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் மக்களின் நலன் இருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி எதைச் செய்தாலும் ‘தம் மக்கள் நலன்’ மட்டுமே பார்ப்பார் என்பார்கள். ‘தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து’ என்ற அறிவிப்பினால் மட்டும் கருணாநிதி குடும்பம் ஆயிரம் கோடி லாபம் அடைந்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் திரைத்துறையினரே ஆட்சி செய்து வருகின்றனர்.இதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் திரையுலகினருக்கு என்ன சலு கைகள் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்து வருகிறது. 91-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா வந்தபோது தமிழ்ப் படங்களுக்கு 25 சதவிகித கேளிக்கை வரி ரத்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின்பு முதல்வர…
-
- 0 replies
- 1k views
-
-
முதல்வரின் மகன், மத்திய அமைச்சர் என்கிற அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அழகிரியும், அவரது அடியாட்களும் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆட்சி மாறியதும் அடியாட்கள் ஒவ்வொருவராக, உள்ளே போய்க் கொண்டிருக்க, அடுத்த குறி அழகிரிதானாம். உளவுத்துறை ஏ.சி. ஒரு வரை வைத்து அழகிரியைக் கைது செய்ய வேலைகள் நடந்து வருகின்றன. ‘‘மதுரையை மீட்பேன்’’ என தேர்தலுக்கு முன்பு மதுரை பொதுக்கூட்டத்திலேயே ஜெயலலிதா முழங்கியபோது, அதற்கு மதுரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. கடந்த ஆட்சியில் காவல்துறை, அரசு அலுவலகங்கள் என எல்லாமும் மதுரையில் அழகிரி ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. அவரை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. மதுரை தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் உயிரோடு எரித்துக்…
-
- 1 reply
- 7.6k views
-
-
இணைய தள இளைஞர்களுடன் சந்திப்பு,கல்லூரி மாணவ, மாணவிகளிடம் குறுந்தகடு கொடுப்பது,கட்சி பொதுக்கூட்டம் என பிஸியாகவே இருக்கிறார் வைகோ. இவற்றுக்கு நடுவே தாயகத்தில் பேட்டிக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட அவர், சளைக்காமல் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவரது பேச்சில் நிதானமும் சாதுரியமும் தெரிந்தது. ஈழப்பிரச்னை பற்றி பேசிய போது, அவரது கோபம் வெளிப்பட்டது. இனி அவரிடம் பேசியதிலிருந்து... தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா? ‘‘அரசியலில் 48 ஆண்டுகளாக இருக்கிறேன். எங்கள் குடும்பம் காங்கிரஸ் இயக்கத்தை ஆதரித்து வந்தது. கல்லூரியில் சேர்ந்த பின்னர் அண…
-
- 0 replies
- 572 views
-
-
திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு மிஸ்டர் மருமகள் என்ற மலையாளப்படத்தில் திலீப்புடன் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. கேரளாவில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கலந்து கொண்டார். படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றார். இந்நிலையில் அதிமுக அரசுக்கு எதிராக 01.08.2011 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தா…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் …
-
- 5 replies
- 931 views
-
-
சோமாலிய நாட்டில் கடும் வறட்சி: பலி எண்ணிக்கை அதிகரிப்பு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சோமாலியா மக்கள் உயிர் பிழைக்க கென்யா, எத்தியோப்பியா அகதிகள் முகாம்களுக்கு வருகிறார்கள். சமீப வாரங்களாக எத்தியோப்பியா முகாமில் பல ஆயிரம் சோமாலியர்கள் புகலிடம் தேடி வந்துள்ளனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகமை பொதுசுகாதார பிரிவு தலைவர் பால் ஸ்பைகல் கூறுகையில்,"டோலோ அடோ முகாம் நிலைமை மோசமாக உள்ளது" என்றார். ஜுன் மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு 7.4 பேர் என ஒரு நாளைக்கு மரணம் அடைவதாக ஐ.நா முகமை தெரிவித்து உள்ளது. அடிப்படைக் கோட்டுக்கு 15 மடங்கு அதிகம் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக …
-
- 1 reply
- 1k views
-
-
பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன. இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை அயலுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தா…
-
- 8 replies
- 1.3k views
-
-
கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்? டெல்லி: கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார். கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலி…
-
- 6 replies
- 1.2k views
-
-
5 கி.மீ., ஆழத்தில் நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை கடலுக்கடியில் 3 மனிதர்களுடன் சுமார் 5057 மீட்டர் ஆழம் வரை நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. ஜியோலாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி, பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் நீர்மூழ்கியை சுமார் 5057 மீட்டர் ஆழம் வரை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. இதுவரை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே, 3500 மீட்டர் ஆழத்திற்கும் கீழே நீர்மூழ்கிகளை இயக்கி சாதனை படைத்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா இந்த வரிசையில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=282758
-
- 3 replies
- 762 views
-
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக சென்னை, ஜூலை.27: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தினர். பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.…
-
- 9 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் 7/27/2011 7:21:59 PM லிபியாவில் கடாபி அரசுக்கெதிரான கிளர்ச்சிக் குழுவை சட்டரீதியான அரசாங்கமாக தாம் ஏற்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை விடுவிக்கவுள்ளதாகவும் அவற்றின் மூலம் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாகவும் ஹோக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவிலுள்ள லிபியாவின் தூதரக அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லிபிய தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய கடாபி ஆதரவு ஊர்வலமொன்றில் லொக்கர் பீ விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி மொஹமட் அல் ம…
-
- 2 replies
- 672 views
-
-
பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார் கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்யவில்லை, என்று பா.ஜ., தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளதால், கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறியுள்ளன. சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில…
-
- 1 reply
- 421 views
-