உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
பெர்லின் தாக்குதல் எதிரொலி: உலகெங்கும் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெர்லின் நகர தாக்குதலை தொடர்ந்து உலக அளவில் பல நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நியூ யார்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லண்டன் நகர பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில், கனடாவில் உள்ள டொராண்டோ மற்றும் மான்டிரியால் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிகாகோ கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பாதுகாப்பு சோதனை முன்னதாக, கடந்த திங்கள்கிழமை…
-
- 0 replies
- 300 views
-
-
பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து பெர்லின் லாரி தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் இந்த தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் மற்றும் அறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்படும்படி ஜெர்மன் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு முகமை அதிகாரிகளை கேட்டிருப்பதாக மெர்கல் தெரிவித்துள்ளார். அனிஸ் அம்ரி இந்த தாக்குதல் திட்டத்துக்கு உதவினாரா மற்றும் தாக்குதலை செயல்படுத்தினாரா மற்றும் தாக்குதல் முடிந்தவுடன் தப்பித்து சென்றாரா என்பது குற…
-
- 0 replies
- 284 views
-
-
பெர்லின் தாக்குதல் சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொலை பெர்லினில் லாரி மூலம் பலரைக்கொன்ற சந்தேக நபர் இத்தாலியின் மிலன் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளதுறை அமைச்சர் அறிவிததுள்ளார் BBC
-
- 4 replies
- 607 views
-
-
பெர்லின் தாக்குதல் திட்டம்: இஸ்லாமியவாத மதகுரு மீது சிரிய அகதியின் சகோதரர் குற்றச்சாட்டு பெர்லின் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட சிரியா அகதி, ஜெர்மன் தலைநகரத்தில் உள்ள இஸ்லாமியவாத போதகரால் தீவிர உணர்வுமிக்கவராக மாற்றப்பட்டதாக அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார். லெயிப்ஸிக் சிறைச்சாலை டேர் ஷ்பீகல் என்ற நாளிதழுக்கு அவருடைய சகோதரர் அளித்துள்ள பேட்டியில், ஜபர் அல் பக்ர் 2014 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து தப்பி வந்து ஜெர்மனியில் வசித்த போது இஸ்லாமிய மதகுரு ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு மீண்டும் திரும்ப ஜபர் மதகுருவால் ஊக்கப்படுத்தப்பட்டதாகவ…
-
- 0 replies
- 239 views
-
-
பெர்லின் தேர்தல்: ஏங்கெலா மெர்கலின் கட்சி மீண்டெழுமா? ஜெர்மனியின் தலைநகர் பெர்லினின் புதிய சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, இன்று பெர்லின் நகர மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஏங்கெலா மெர்கல் (கோப்புப் படம்) அண்மைய தேர்தலில், குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி கட்சியுடன் நடந்த போட்டியில் மக்களின் ஆதரவினை ஏங்கெலா மெர்கலின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி இழந்துள்ளதால், அக்கட்சியின் தற்போதைய தேர்தல் செயல் பாடு குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேறிகளை அனுமதிப்பது என்ற முடிவினை கடந்த வருடம் எடுத்ததிலிருந்து ஏங்கெலா மெர்கலின் புகழ் ஜெர்மனியில் குறைந்து வருவது …
-
- 3 replies
- 700 views
-
-
பெர்லின் பேரணி: மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்! ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்க்கஸுக்கு அவர்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருதரப்பு தூதரக உறவுக்கு…
-
- 0 replies
- 250 views
-
-
பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் ’பிக் மேப்பிள் லீஃப்’ என்ற 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம் களவாடப்பட்டது. | படம். ஏ.பி. பெர்லினில் உள்ள போட் மியூசியத்திலிருந்து 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் களவாடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்களாகும், இது 53 செமீ (21 அங்குலங்கள்) அகலமும், 3 செமீ அடர்த்தியும் கொண்டது, இதில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபத் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்கள் என்றாலும் சந்தை மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருடர்கள் மியூசியத்திற்கு அருகில் இருக்கும் ரயில்வே இர…
-
- 2 replies
- 741 views
-
-
பெர்லின் வகை தாக்குதல்கள் ’மத அச்சுறுத்தல்' தான்: ட்ரம்ப் டொனால்டு ட்ரம்ப் | படம்: ஏபி பெர்லின் வகை தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெர்மனியின் பெர்லின் நகரில் மக்களை கொல்வதற்கு முன்னர் அந்த நபர் வீடியோவில், கடவுளின் விருப்பத்தின்படி நாங்கள் உங்களைக் கொல்கிறோம் என்று கூறியுள்ளார். பெர்லின் போன்ற தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இத்தகைய வெறுப்புகளுக்கு எதிராக எப்போது அமெரிக்காவும், பிற நாடுகளும் போராடப் போகிறது?" என்று பதிவிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 338 views
-
-
பெர்லின் விமான நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தம்: விமானச் சேவைகள் ஸ்தம்பித்தன ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகர விமான நிலைய பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் அனைத்து விமான சேவைகளும் முடங்கிப்போய் ஸ்தம்பித்துள்ளது. பெர்லின்: பெர்லின் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய பணியாளர்களுக்கு ஒருமணி நேர சம்பளமாக 11 யூரோக்கள் அளிக்கப்படுகிறது. இந்த சம்பளத்தை 12 யூரோக்களாக (ஒரு யூரோ என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 70 ரூபாய்) உயர்த்தி அளிக்க வேண்டும் என பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மு…
-
- 0 replies
- 261 views
-
-
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் மேரி கமெரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் கமெரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ளChieveley மற்றும் Area என்ற இரு குழந்தைகள் மையத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் கமெரூன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். நகரங்களில் உள்ள நிர்வாக கவுன்சில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது அளிக்கப்படும் நிதியை விட 24 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்…
-
- 0 replies
- 324 views
-
-
இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை…
-
- 2 replies
- 1.8k views
-
-
பாகிஸ்தானில் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார். அவருக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்தக் கொலையைச் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அந்தக் கொலைக்காக தான் இப்போது வருந்துவதாக அவர் கூறுகிறார். பெண் குழந்தை என்ற காரணத்துக்காக அவர்களை கொல்லுகின்ற, தெற்காசியாவில் பெரிதாக காணப்படுகின்ற இந்தப் பிரச்சினையை, இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130912_pakisinfant.shtml
-
- 0 replies
- 434 views
-
-
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகேயுள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி காளீஸ்வரி (27). இவர்களுக்கு 1 1/2 வயதில் சவுந்தர்ராஜ் என்ற குழந்தை இருந்தது.நேற்று தாத்தூரை அடுத்த ராஜீவ் நகர் பாறைக்குழி அருகேயுள்ள கிணற்றில் குழந்தை சவுந்தர்ராஜ் பிணமாக மிதந்தான். தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றினார்கள். நேற்று ஆனைமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக காளீஸ்வரி தனது குழந்தையுடன் சென்றார். இந்த நிலையில் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காளீஸ்வரியிடம் விசாரணை நடத்தியபோது ஆஸ்பத்திரியில் உறவினரை பார்த்துவிட்டு தாத்தூர் எல்.ஆர…
-
- 0 replies
- 718 views
-
-
-
பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE எழுதியவர், ஃபே நர்ஸ் பதவி, பிபிசி செய்திகள் தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார். தன்னைப் பெற்ற தாயாக இருக்கலாம் என்று நினைத்த பெண்ணை கடைசியில் கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது தெரிந்தே இருந்தது. ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. "தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினா…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
பீஜிங்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் 1970ம் ஆண்டுகளில் அமலுக்கு வந்தது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் ஒரேயொரு வாரிசு மட்டுமே உள்ளார்கள். அவர்களும் இப்போது வேலைவாய்ப்பு தேடி வேறு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். இளையவர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100ல் 14 பெற்றோர்கள் இதுபோன்று கவனிப்பாரின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் உள்ளனர். 2050ம் ஆண்டு மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 296 views
-
-
புதுடெல்லி, டிச. 31- டெல்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிய கடைசி 8 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. மாணவியுடன் அவரது பெற்றோர் மற்றும் 2 தம்பிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவி அருகிலேயே இருந்தனர். வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. கிருமி தொற்றும் உடல் முழுக்க பரவி விட்டதால் டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மாணவி பெற்றோரை சந்தித்த டாக்டர்கள் வருத்தம் தெ…
-
- 4 replies
- 902 views
-
-
பெற்றோர், தாத்தா,பாட்டியை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம் ஆரம்பம்.! பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான குலுக்கல் முறையிலான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் இந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கொரோனா பெரும் தொற்றால் தாமதமடைந்த இந்தப் புதிய திட்டம் குறித்த விபரங்களை கனடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ (Marco Mendicino) நேற்று அறிவித்தார். கனடாவுக்கு பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை அழைக்க விரும்பும் கனடியர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் இணையத்தில் https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html படிவத்தை பூர்த்தி செய்யலாம் என அமைச்சர் மார்கோ மெண்டிசினோ கூறினார். கனடாவிற்கு தங்க…
-
- 0 replies
- 556 views
-
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். ரஷ்யாவில் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. ரஷ்யா ஒரு நாளைக்கு 9 இலட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 6…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
பெலரஸூக்கு... குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக, ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு. ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 500 கிலோமீற்றர் வரம்பை கொண்ட குறித்த அணுசக்தி அமைப்புகள் எதிர்வரும் மாதங்களில் அங்கு அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து பெலரஸ் உத்தியோகப்பூர்வ போரில் ஈடுபடவில்லை. எனினும் ரஷ்யாவுக்கான உதவிகளை பெலரஸ் தொடர்ந்தும் வழங்கிவருகிற நிலையில் பெலரஸ் பகுதியிலிருந…
-
- 4 replies
- 562 views
-
-
பெலரோஸ் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தில்11 பேர் பலியாயினர்.90 பேர்படுகாயமடைந்தனர். பெலரோஸ் நாட்டின் மனி்சிக் நகரில் உள்ள ஒகாயாபிரஸ்காய மெட்ரோ ரயில்நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.அப்போது பணிமுடித்து விட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு ரயில்கள் சேதமடைந்தனர். மேலும் பயணிகள் உபயோகப்படுத்தும் எஸ்கலேட்டர் சேதமடைந்தது. 90 பேர் படுகாயமடைந்ததாகவும், இதில் 50 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து அதிபர் அலெக்ஸாண்டர்லுகோஸ்வகி, அவரசமாக மந்திரிசபையினை கூட்டி விவாதித்தார். குண்டுவெடிப்பு சம்பவத்த…
-
- 0 replies
- 517 views
-
-
Published By: RAJEEBAN 18 AUG, 2023 | 12:53 PM பெலாரசினை வலுச்சண்டைக்கு இழுத்தால் அந்த நாடு ரஸ்யா வழங்கிய அணுவாயுதங்களை பயன்படுத்தும் என அந்த நாட்டின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ மீண்டும் தெரிவித்துள்ளார். பெலாரசிற்கும் அதன் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே பெலாரஸ் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைன் தனது எல்லைகளை கடந்தால் தவிர உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் பெலாரஸ் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் ரஸ்யாவிற்கு உதவுகின்றோம் அவர்கள் எங்கள் சகாக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெலார…
-
- 2 replies
- 383 views
- 1 follower
-
-
பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை! சர்ச்சைக்குரிய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை நடத்திய பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக பெலாரஷ்ய அரச செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது. மற்ற மூன்று எதிர்க்கட்சி பிரமுகர்களான, மைகோலா ஸ்டாட்கேவிச், இகோர் லோசிக், விளாடிமிர் சைகனோவிச் இதே விசாரணையின் ஒரு பகுதியாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார் என பெல்டா தெரிவித…
-
- 0 replies
- 233 views
-
-
Published By: RAJEEBAN 29 MAY, 2023 | 03:24 PM ரஸ்யாவில் பெலாரஸ் ஜனாதிபதிக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாக பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த பின்னர் பெலாரஸ் ஜனாதிபதியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்ற நிலையிலேயே கிரெம்ளின் அவருக்கு நஞ்சூட்டியுள்ளது என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவின் உடல்நிலை பாதிப்பிற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் ரஸ்யாவிற்கான விஜயத்தின்போதுஅவருக்கு நஞ்சூட்டப்பட்டது என பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/156449
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்: தங்கள் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியா வேண்டுகோள்! ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை கைதுசெய்வதற்காக பெலராஸ் எடுத்த விபரீத முடிவு, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என பிரித்தானியா தங்கள் விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்’ என தெரிவித்துள்ளார். வெளிநாட்டுத்துறை செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரஸின் லூகாஷென…
-
- 0 replies
- 241 views
-