Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம். ''ஆள் ரொம்ப டயர்டா இருக்கீங்களே... இந்த அளவுக்கு இன்னும் கஷ்டப்படணுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம்... ''நான் டயர்டா இல்லை சார்... டயட்ல இருக்கேன். 'ஒரு தலைக் காதல்’ படத்துக்காக உடம்பை டைட் பண்ணணும்னு தோணிச்சு. டீகூடக் குடிக்காம ஸ்ட்ரிக்ட் டயட் ஃபாலோ பண்றேன். உங்களுக்கே தெரியுமே... முன்னைக் காட்டிலும் இப்போ நான் எந்த அளவுக்கு இறுகி இருக்கேன்னு!'' என்கிறார் மேஜையில் உள்ளங்கையை முறுக்கி இறக்கி! ''பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் …

  2. . துபாய் நகரின் வெப்பம் நேற்று எறக்குறைய ஐம்பது பாகையளவை எட்டி சாதனை படைத்துள்ளது... உலகில் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களைக் கொண்ட துபாய் நகரம் ஜூலைக் வெப்பக் காற்றால் கடும் வெப்பத்தில் தகிக்கிறது. போதாக்குறைக்கு இம்மாத இறுதியில் தொடங்கும் ரமலான் நோன்பால் உணவு விடுதிகளும் பகலில் மூடப்பட்டுவிடும்... யாழ் 'மட்டு' நிழலியின் "பேரீச்சம்பழ ஆன்டி"கள், கண்ணில் தெரிந்தால், தகிக்கும் பகலில் நிலவைக்(??) கண்டு குளிரலாம்... Dubai: Bus shelters across Dubai have turned into virtual roadside ovens with the air conditioning out of order in many, an XPRESS survey has revealed. A sample survey done on Sunday in Dubai's highly popula…

  3. வெள்ளையும் சொள்ளையுமாக கதர் அணிந்தவர் கள் குறுக்கும் நெடுக்கு மாக நடக்க, குல்லா அணிந்த தியாகிகள் கையில் கத்தையான காகிதங்களோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் பரபரப்பாகவே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ட்ரேட் மார்க் சிரிப்போடு கும்பிடு போட்டு அமர்கிறார் தங்கபாலு. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி! (ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரையிலும்!) ''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?'' (சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப…

    • 0 replies
    • 452 views
  4. மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்! முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சி கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை. அதைப்போலத்தான் தயாநிதி மாறனும். கடந்த முறை 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்தாக வேண்டிய நெருக்கடி. இப்போது உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, ராஜினாமா செய்துள்ளார்! ஆ.ரா…

    • 0 replies
    • 539 views
  5. மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் : 13 ஜூலை 2011 மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயமடைந்தனர். மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் வரை காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன. தாதர் மேற்குப் பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் குண்டுவெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர். http:/…

  6. சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? 13 ஜூலை 2011 திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் .. சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? திரைப்பட விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி சக்சேனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதான திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் பாய்ந்துள்ளன. இந்நிலையில் சேலம் திரைப்பட விநியோகஸ்தகர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் அதிபரும், சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறனை விசாரணைக…

  7. மும்பாயில் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் - 21 பேர் பலி ! இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பாயின் மூன்று வெவேறு இடங்களில் சனநடமாட்டம் அதிகமுள்ளா நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர்வரை இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அம்மாநில ஆளுனர் கூறியிருக்கிறார். மேலும் 144 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் உள்நாட்டு அமைச்சர் "தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு " என்று வாய்மொழிந்தருளியிருக்கிறார். ஒரு நிமிட நேர இடைவெளியில் வெடித்துள்ள இந்த மூன்று குண்டுகளும் ஒன்றில் காரிலோ அல்லது மோட்டார் உந்துருளியிலோ வைத்தே வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. மும்பாயி…

  8. தோள்பட்டை வலியால் கனிமொழி அவதி கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியால் கனிமொழி அவதிப்படுகிறாராம். இதற்கு நிவாரணம் தேடுவதற்காக மருத்துவ முறையிலான தலையணை மற்றும் படுக்கை தருமாறு கோரி அவர் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி இருப்பதாகவும், அதை சரி செய்ய மருத்துவ ரீதியிலான படுக்கை மறறும் தலையணை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நேற்றுப் பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, சிறை விதிமுறைகளுக்குட்பட்டு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு திஹார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விரைவில் பரிசீலித்து திஹார் சிறை நிர்வா…

  9. ஒபாமா தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த விமானங்கள் அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க அதிபர் ஒபாமா, வாஷிங்டன் அருகே உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பயணிகள் விமானமும், நேற்று ஒரு சிறிய விமானமும் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இதைக் கண்ட அமெரிக்க போர் விமானங்கள் சீறி கிளம்பி அந்த விமானங்களை இடைமறித்து கேம்ப் டேவிட் பகுதியிலிருந்து துரத்தின. இதில், ஒரு விமானம் கரோல் பகுதியில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. மற்றொரு விமானத்தை பற்றி தகவல் இல்லை. அந்த விமானத்திடமிருந்து தகவல் த…

    • 2 replies
    • 426 views
  10. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரான பின்னர் மும்பையில் நடந்த முதல் தாக்குதல்! புதன்கிழமை, ஜூலை 13, 2011, 20:15 மும்பை: மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின்னர் மும்பையில் முதல் மற்றும் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இன்று நடந்துள்ளது. 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பதவி விலகினர். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரானார். அமைச்சர் பதவியேற்றது முதல் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் திறமையாக கையாண்டு வந்தார் ப.சிதம்பரம் என பாராட்டப்பட்டு வந்தது. உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியும் மிகத் திறமையாகவே அவர் செயல்பட்ட…

  11. தமிழர்கள் மத்தியில் மட்டு​மே ஒலித்துக்​கொண்டு இருந்த ஈழ மக்கள் ஆதர​வுக் குரல், இப்போது மாநில எல்லை கடந்து நாடு முழுக்க ஒலிக்​கத் தொடங்கி இருக்கிறது! இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 8-ம் தேதி, போரால் பாதிக்கப்பட்ட 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம்’ என அறிவித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. டெல்​லியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா உட்படப் பலர் பங்கேற்றனர். ஆந்திரத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் நகரங்களிலும், கேரளத்தில் 14 மாவட்டத் தலைநகரங்களிலும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள…

    • 0 replies
    • 490 views
  12. வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற நகரமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை மாறியுள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வர உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இம்மாதம் 19-ம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர் 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார். தென்னிந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சென்னை வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை சுற்றுப் பயணத்தின்போது அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று பொருளாதாரம…

  13. Tuesday, 12 July 2011 06:32 விலங்குகள் மீதான கொடுமைகளை அவுஸ்திரேலியர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.ஆட்கள் மீதான கொடூரத்தனம் தொடர்பான எமது சகிப்புத்தன்மையானது குறைந்தளவிலான தெரிவையே கொண்டுள்ளது.அல்லது பிரிட்டனின் ஆவணப்படம் கடந்த வாரம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட பின்னர் இறுக்கமான மௌனம் கடைப்பிடிக்கப்படுவதாய் ஒருவர் நினைக்கக் கூடும்.2009 இல் இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களை இலங்கை "விடுவித்தமை'கொடூரமான விவகாரமாக இருந்ததை ஆவணப்படம் நிரூபித்துள்ளது என்று இலங்கையில் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றிய கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் பற்றி கண்களை மூடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்ற தலைப்பில் கோர்டன் வைஸ் அபிப்பிராயத்தை…

  14. இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் துறையில் சர்ச்சைக்குரிய பல முடிவுகளை எடுத்ததாகக் கருதப்பட்ட ஜெயராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், இணை அமைச்சர் தனிப்பொறுப்பில் இருந்து காபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். ஜெயராம் வகித்துவந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மேற்குவங்க முதல்வரானதை அடுத்து, காலியாக இருந்த ரயில…

    • 1 reply
    • 595 views
  15. விரிசலடையும் அமெரிக்கா - பாக். உறவுகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருந்த பல மில்லியன் டாலர்கள் கணக்கான இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவுகளில் ஏற்பட்டுவரும் விரிசல்களையே காட்டுகின்றது. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் கடமையில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகின்றது. மறுபுறத்தில், பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனின் தங்குமிட வளாகத்துக்குள் அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய முற்றுகைத் தாக்குதல், இது தவிர அமெரிக்கப் படையினரின் சர்ச்சைக்குரிய ட்ரோன் தாக்குதல்கள், அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் அளவு கடந்த சுதந்திரத்துடன் செயற்படுவதாக அங்கு பெரும் கொந்தளி…

    • 1 reply
    • 526 views
  16. தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றதும் இளம் அமைச்சர், நிர்வாகத் திறன் மிக்கவர் என்றெல்லாம் அவரது ஊடகங்கள் மாநில வாரியாக அவரைப் பற்றி புகழாரம் சூட்டின. இப்போது 2ஜி ஊழலில் சிக்கி தன் பதவியை இழந்திருக்கிறார் தயாநிதி. அவரது கடந்த காலங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், அவரது ‘திறமை’ தெரிய வரும். தயாநிதி மாறனின் இத்தனை வளர்ச்சிக்கும் அவர் முரசொலி மாறனின் மகன் என்பதையும், கருணாநிதியின் பேரன் என்பதையும் தவிர எந்தத் தகுதியும் இல்லை. சென் னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர் தயாநிதி மாறன். ஆனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் என்கிற செல்வாக்கை வைத்துக் கொண்டு நண்பர்களோடு ச…

  17. பாஸ்... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...’’ இப்படியொரு ரிங் டோன் வைத்திருந்தார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்!. தேர்தலுக்கு முன்பு வரையில் அவர் பெயரைக் கேட்டாலே தி.மு.க.வினர் முதல் உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அத்தனை பேருக்கும் நடுங்கத்தான் செய்தார்கள். தமிழகத்தின் நிழல் முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வளர்ப்பு மகன் என்று இவரைச் சொன்னாலும், முதல்வருக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருந் தார் ஜாபர் சேட். அது எப்படி சாத்தியமானது என்பது மல்லிகை நடிகைக்குத் தெரியுமாம். அத்தனை அதிகாரங்களும் பொருந்திய முதல்வர் கருணாநிதியே கூட, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், “ஜாபர் கிட்ட சொல்லுய்யா’’ என்று சொல்லும் அளவுக்கு முழுக்க முழுக்க கருணாநிதியின் நம்பிக்…

  18. 2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்? மத்திய அமைச்சரவையில், இழந்த இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளைப் பெறுவதில், தி.மு.க., ஆர்வம் காட்டாமலிருப்பதால், பதவி தர முடியாது என, காங்கிரஸ் கைவிரித்துவிட்டதா அல்லது கட்சியில் யாருக்குமே தகுதி இல்லை என, தி.மு.க., தலைமை நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2009, மே, 22ம் தேதி அமைந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (சீசன் - 2) அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கு மூன்று கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இதில், அழகிரி, தயாநிதி என, இரண்டு கேபினட் பதவிகள், கட்சித் தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டன. மற்றொரு கேபினட் பதவியும், அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ராஜாவுக்கு கொடுக்கப்பட்டத…

  19. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு First Published : 11 Jul 2011 04:46:07 PM IST சென்னை, ஜூலை 11- தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை. மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், “அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக்…

  20. Monday, 11 July 2011 22:02 ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி ஒன்றினுள்ளிருந்து 222 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தென் பாக்தாத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பாரிய மனிதப் புதை குழியானது ஈராக்கில் முன்னாள் ஆட்சியாளரான சதாம் ஹுசைனின் ஆட்சிக்காலத்துக்கு உரியது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அங்கு காணப்பட்ட உடல்கள் குர்திஷ் இன மக்களுடையது எனவும் அவர்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர். டிவானியா நகருக்கு அருகே ஷனாபியா பகுதியில் கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறிதொரு பாரிய மனிதப் புதைகுழியினுள்ளிருந்து 900 உடல்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு கண்டெடுக்கப்பட்ட உடல்களில் அதிகமானவற்றில் சூட்டுக்காய…

  21. உடகங்களை தன் கையில் வைத்துக் கொண்டு, உலகமே தன் பக்கம் என்று நினைத்த மாறன் சகோதரர்களின் கனவை ஸ்பெக்ட்ரம் வழக்கு தகர்த்திருக்கிறது. தயாநிதி மாறனோடு, கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்கிற செய்திகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் சகோதரர்கள். 2ஜி விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக ஸ்பெக்ட்ரம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த தன்னுடைய 71 பக்க அறிக்கையை புதனன்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘தயாநிதி மாறன் மீதான புகார்களை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஏர்செல் நிறுவனத்தை விற்கச் சொல்லி சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்ப்பந்தித்துள்ளார்’’ என…

  22. கலைஞரின் குடும்பம் - சிதறிப் போன ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை- 11 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன் //ஒரு உரையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது// என்பது புகழ்பெற்ற பழமொழி. திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது .திமுக என்னும் ஒரு உரைக்குள் ஸ்டாலின், வைகோ என்ற இரண்டு வாள்களை வைத்திருக்க முடியாது என்பது கலைஞர் கருணாநிதியின் வாதம். கலைஞரே எனது போர்வாள் என்று சொன்ன வைகோ கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். கலைஞருக்குப் பின் என்ற விவாதத்தில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த வைகோ வெளியேறியதோடு திமுகவில் கலைஞருக்குப் பின் என்ற பேச்சு எழ வில்லை. கலைஞருக்குப் பின் ஸ்டாலின் என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர் வரை ஏற்றுக் கொண்டார்கள்.தமிழக மக்கள் மனதி…

  23. ஜ‌ப்பா‌னி‌ல் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம் - சுனா‌மி எ‌ச்‌ச‌ரி‌க்கை. ஐ‌ப்பா‌னி‌ல் இ‌ன்று காலை ஏ‌ற்ப‌ட்ட ச‌க்‌தி வா‌‌ய்‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் 7.1 ஆக ப‌திவா‌கியு‌ள்ளது. ஜ‌ப்பா‌னி‌ன் வட‌கிழ‌க்கு பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து 6 மை‌ல் தொலை‌வி‌ல் ‌உ‌ள்ள ஹோ‌ன்‌‌சு ‌தீ‌வி‌ல் ‌நிலநடு‌க்க‌ம் மைய‌ம் கொ‌ண்டிரு‌ந்ததாக பு‌வி‌யிய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இதன‌ா‌ல் சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. கட‌லி‌ல் அலைக‌ள் உயரமாக எழு‌ம்ப கூடு‌ம் எ‌ன்று‌ம் கடலு‌க்கு யாரு‌ம் செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஜ‌ப்பா‌ன் சுனா‌மி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌டு‌த்து‌ள்ளது. ‌நிலநடு‌க்க‌த்‌தினா‌ல் க‌ட்டிட‌ங்க‌ள் குலு‌ங்‌கியது. இதனா…

  24. ரஜனியை மிரட்டியது திமுக -உண்மையை உடைக்கிறார் ராதாரவி கடந்த ஆட்சியில் தி.மு.க. குடும்பத்தினரிடம் சிக்கித் தவித்த திரைப்படத்துறை ஆட்சி மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியிருக்கிறது. நடிகர்கள், இயக்கு நர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்த, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, பட்டாசு வெடி த்துக் கொண்டாடி இருக்கிறார்கள் திரைப்படத் துறையினர். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் ராதாரவியை சந்தித்து தமிழ்த் திரைப்படத்துறையின் இப்போதைய நிலை குறித்துக் கேட்டோம். சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டிருக்கிறாரே? ‘‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு…

  25. சன் டிவி தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா சென்னை விமான நிலையத்தில் கைது. 03 ஜூலை 2011 சன் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியும், கலாநிதிமாறனின் கல்லூரி நண்பருமாகிய ஹன்ஸ்குமார் சக்ஸ்ஷேனா மோசடி வழக்கொன்றில் சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சன் தொலைக்காட்சி சினிமாவிலும் கால் பதித்தது. சன் பிக்சர்ஸ் என்னும் பெயரில் திரைப்படங்களை வாங்கி விநியோகித்து வந்தது. சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்கங்களை சன் தொலைக்காட்சி குழுமம் தன் கட்டுப்பாட்டில் வைத்து வந்ததது, இதனால் இவர்களை மீறி எவரும் சினிமா தயாரிக்கவோ, எடுத்த திரைபப்டங்களை ரிலீஸ் செய்யவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். திரைப்படங்களை எடுத்தால் சன் தொலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.