Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷிய ஆயுதக் கிடங்கில் பயங்கரத் தீ: 28 ஆயிரம் பேர் வெளியேற்றம் ரஷிய ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் 28 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ரஷியாவில் உள்ள வோல்கா குடியரசில் உள்ள சுரங்கப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் டன் வெடிகுண்டுகள் உள்ளன. இதனால் ஏற்பட்ட பயங்கர தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியைச் சுற்றி வாழும் 28 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் ரஷியாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்படும் இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பஷ்க…

    • 0 replies
    • 556 views
  2. கனடாவுக்கான விசாவினை எடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் விரல் அடையாளங்களை காட்டுமாறு கேட்கும் திட்டம் ஒன்றை கனடா குடிவரவுப் பிரிவு கொண்டுவரப் போவதாக இன்று Toronto Star செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கு. மிகுதி NEW DELHI—Canada appears to be heading for another diplomatic dust-up with India. As part of an update of Canada’s immigration safeguards, the federal government is planning to begin demanding that Indian citizens applying to travel to Canada provide their fingerprints, a requirement that visitors from other countries, such as Mexico and China, are not going to face immediately. Canada has been eager for several years to introduce…

  3. தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை இந்தியாவில் முதல் முதலாக தமிழீழப் பிரச்சனை தமிழகத்தை விட்டு கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ளது. அதாவது தனித் தமிழீழத்திற்கு இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத் தமிழர்களும் மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வந்த நிலைமாறி முதன் முதலாக தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநில ஸ்ரீராம் சேனா, மராட்டிய மாநில சிவ சேனா, கன்னட பக்ச சமிதி, கன்னட பக்ச கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புக்கள் இணைந்து இன்று பெங்களூரில் உள்ள Freedom Fighter Circle என்னுமிடத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப…

  4. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது! வைகோ கருத்து தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள அ.தி.மு.க. அரசின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆளுநர் உரையில் இலவச அரிசி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்குதல், சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, அரசு கேபிள் திட்டம் மற்றும் மாநில நதிகள் இணைப்பு ஆகிய வரவேற்கத் தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் முக்கியமான பிரச்சினைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. முந்தைய அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல. சமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்படும் ஆய்வுக் குழுவுக்க…

  5. ஈழத் தமிழர்களுக்கு கெளரவமான வாழ்க்கை: தமிழக அரசுக்கு சீமான் நன்றி தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் இங்கேயே கெளரவமான ஒரு வாழ்க்கை வாழ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவித்துள்ளதை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரவேற்றுள்ளார். தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கை: புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு இன்று தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு …

  6. தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறுகள் எதுவும் நடந்தால் அதை சுட்டி காட்டுவோம். அதையும் மீறி, தமிழர்களுக்கு அநீதி ஏற்பட்டால் எதிர்ப்போம் என, வைகோ பேசினார். கரூரில் நடந்த திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய வைகோ, தமிழ் சமுதாயம் வாழ்வதற்கு ம.தி.மு.க. உழைத்து வருகிறது. ஆனால் அந்த உழைப்புக்கேற்ற உயர்வு இல்லை என்ற நிலை உள்ளது. இனிமேல் உழைப்பதும் நாமே. அதன் விளைச்சலை அறுவடை செய்வதும் நாமே என்ற நிலை வந்துள்ளது. மக்கள் சக்திக்கு முன்பு எதுவும் நிற்காது. முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். …

    • 1 reply
    • 449 views
  7. ஏணியில் ஏறும்போதே படியை பிடுங்குகிற வழக்கம் சினிமாவிலும் அரசியலும் Seeman - Vijayalaksmiசகஜம்தான். சீமான் விஷயத்திலும் அதுதான் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அண்மைகால நிகழ்வுகள். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது இன்னும் சில தினங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும். .ஆனால் விஜயலட்சுமியை து£ண்டி விட்டு சீமானின் புகழை சிதைக்கிற முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நேற்று மாலை நடந்த ஒரு சிறு சம்பவமே இதற்கு சாட்சி. அண்மையில் அதிமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர்தான் இந்த தகவலை மீடியாக்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பினார். அத…

  8. உலகில் மிகவும் சந்தோசமான மனிதர் - அரவிந்தன்(கனிமொழியின் கணவர்) ஏன்? 1) 214 கோடிப் பணம் 2) முக்கியமாக மனைவி சிறையில் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு அமைவது அரிது.

  9. தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை' நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன. இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளத…

  10. Thursday, June 2, 2011, 9:28சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார். இந்த புகார் தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் …

  11. மன்மோகன் சிங்குடனான கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ராசா முடிவு ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், தனக்கும் இடையில் இடம்பெற்ற 18 கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ள ராசா, இம்மனு தீமான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் போது இக்கடிதப் பரிமாற்றங்களை சமர்ப்பித்து தானே வாதாடவிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் இப் 18 கடிதங்களும்…

  12. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தாக 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராகவும் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார். நக்கீரன்.

  13. 2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ் செவ்வாய், 31 மே 2011( 21:28 IST ) மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார். எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், த…

  14. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கம்யூனிச நாடாக இருந்த யுகோஸ்லாவியாவில் இருந்து இன்று தனி நாடாகத் திகழும் போஸ்னியாவில் 1995ம் ஆண்டு ஜூலையில் இந்த இனப்படுகொலை நடந்தது. செர்பிய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து போராடிய போஸ்னிய மக்களை செர்பிய இனவெறி ராணுவம் ஒடுக்கி வந்த போது, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட போஸ்னிய முஸ்லீம்கள் 40 ஆயிரம் பேர் சிறிபிரீனிசா எனும் இடத்தில் ஐ.நா.அமைத்த பாதுகாப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த இடத்தை ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 400 வீரர்கள் பாதுகாத்து வந்தனர். இந்த முகாமைச் சுற்றி வளைத்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் தலைமையிலான செர்பிய படைகள், முகாமில் இருந்த பெண்களையும், குழந்தை …

    • 1 reply
    • 767 views
  15. எம்.கே.டி.சுப்பிரமணியம்...இவரைப் பற்றி தெரியாத திராவிடக் கழகத் தோழர்களே இருக்கமாட்டார்கள். பெரியாருடன் நெருக்கமாக இருந்த இவர், அந்தக் காலத்திலேயே அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். ஆஜானுபாகுவான எம்.கே.டி.சு. பகுத்தறிவு பிரசாரம் செய்ய என்.வி.நடராஜனுடன் பெரியாரால் அனுப்பப்பட்டவர். காமராஜரைப் ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பிரசாரம் செய்த காலகட்டத்தில் எம்.கே.டி.சு. அதை ஏற்று காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளரானார். ‘ஜவகரிசம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் வந்தார். தனது இறுதிக் காலங்களில் நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ்த்தேசிய அரசியலில் தடம் பதித்தார். இப்படிப்பட்ட எம்.க…

  16. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று தெம்பாக இருக்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற அவரை சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்தார். பண பலம், படைபலம் ஆகியவற்றை மீறி இரண்டு தொகுதிகளில் எப்படி வெற்றி பெற்றீர்கள்? ‘‘ 1977-ம் ஆண்டில் இருந்து கருப்பசாமிபாண்டியன் அரசியலில் இருக்கிறார். அதிலும் ஆளும் கட்சி வேட்பாளர் என்றால் சொல்லவே வேண்டாம். அ.தி.மு.க.வின் கூ ட்டணி பலம், நாங்கள் வகுத்த வியூகங்கள், ‘கரப்ட்’ ஆகிப்போன தி.மு.க. ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்கிற உணர்வு, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் க டுமையான உழைப்பு தென்காசியிலும், நாங்குனேரியிலும் வெற்றி பெறச் செய்திருக்கிறது.’’ தி.மு.…

  17. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா என ஏக்கத்தோடு காத்திருப்பவர்கள் தமிழக மீனவர்கள் தான். இலங்கைக் கடற்படை கு ருவிகளைச் சுடுவது போல் மீனவர்களை சுட்டுத்தள்ளும்போது, இந்திய அரசு அதைக் கண்டுகொள்வதே இல்லை. இலங்கையில் போர் நடைபெறும் காலங்களில் விடு தலைப் புலிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நிறுத்தப்படவில்லை. வெறும் கடிதங்களோடும், மௌனங்களோடும் அந்த மரணங்களைக் கடந்து போனது கடந்த அரசு. தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு பகை நாடுகளாக இருக்கும் ஈரான், ஈராக், குவைத் நாடுகளின் கடல் எல்லை மிகக் குறுகியது. கடலிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக…

  18. கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே செயல்பட முடியும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில் பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் க…

  19. மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் 28.5.2011 அன்று நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியபோது, ’’என் அன்பு சகோதர்களே ....நான் இப்போது ஒரு குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அதை வெளியிடப்போகிறேன். ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அந்த சேனல் -4’ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ....அந்த குறுந்தகட்டில் இல்லாத காட்சிகள்; அதில் இடம்பெறாத காட்சிகளை எடுத்து நான் குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும். 50 நிமிடங்…

  20. அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே... சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்த…

  21. டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..! 15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு, சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி! தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... என்ற சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் …

  22. ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு ஐஎஸ்ஐ அமைப்புக்கு, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர இந்தியா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ரபி கப்ரியல் மற்றும் அவரது மனைவி ரிபக்காவின் குடும்பத்தினர் ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிகக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு, மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐஎஸ்ஐக்…

    • 1 reply
    • 475 views
  23. தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார். சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது. இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார…

    • 3 replies
    • 1.3k views
  24. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. சென்னையில் பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் உள்ளது. தற்போது திருநின்றவூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. 1800 சதுர அடி மனையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை செய்து அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயத்தை எழுப்பி உள்ளனர். இந்த கோவிலுக்குள் எம்.ஜி.ஆர். உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நிர்மானிக்க எம்.ஜி.ஆரின் உருவச்சிலை தயாராகி வருகிறது. 5 அடி உயரத்தில் இந்த சிலை உருவாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில…

  25. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் திகார் சிறையில் இருக்கிறார். இவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. பின்னர் மறுதேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரின் ஜாமீன் மனு விசாரணை தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நக்கீரன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.