உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85…
-
- 0 replies
- 327 views
-
-
சிறிலங்காவுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய அரசின் தூதுக்குழு இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. . இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில விடயங்கள் தொடர்பில் இந்திய உயர்மட்டக் குழு இறுக்கமுடன் நடந்து கொண்டது என தகவலறிந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன. . வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய இந்திய குழுவினர், இந்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அசட்டைத்தனம் குறித்து தமது அரசின் அதிருப்தியையும் அமைச்சர் பீரிஸிடம் வெளிப்படையாகத் தெரிவித்தது என்றும் அந்த வட்டாரங்கள் எமக்குக் கூறின. . சிறிலங்கா அரசின் பிரதிநி…
-
- 4 replies
- 566 views
-
-
மைசூர் நகருக்குள் புதன்கிழமை காலை புகுந்த 2 காட்டு யானைகள், வங்கி காவலாளியையும், ரோட்டோரம் கட்டியிருந்த பசு மாட்டையும் குத்திக் கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மைசூர் நகரவாசிகளுக்கு புதன்கிழமை காலைப்பொழுது யானைகளின் அட்டகாசத்துடன் விடிந்தது. எச்.டி.கோட்டை காட்டில் இருந்து பன்னூர் வழியாக மைசூர் நகருக்குள் காலை 5 மணிக்கு ஒரு பெண் யானையும், அதன் ஆண் யானைக்குட்டியும் புகுந்தன. இவை இரண்டும் பம்பு பஜார், சரஸ்வதிபுரம், மகாராணி கல்லூரி, ஆட்சியர் அலுவகங்கம் ஆகியப் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மிதித்து துவம்சம் செய்தன. தலைதெறிக்க ஓடிய மக்கள்: ஒரு யானை, சயோஜிராவ் சாலையோரம் கட்டியிருந்த பசு மாட்டை தந்தங்களால் குத்திக் கொன்றத…
-
- 0 replies
- 591 views
-
-
கடந்த ஜூன் 1-ம் தேதி, பெல்ஜியம் நாட்டில், ஈழத் தமிழர் இனப் படுகொலை தொடர்பான விவாதக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய வைகோ, அதே சூட்டில் திருவாரூர் மாவட்டத்தில் முழங்கி னார்! மன்னார்குடி பந்தலடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, 'ராஜபக்ஷே போர்க் குற்றவாளி - ஐ.நா அறிக்கை விளக்க பொதுக் கூட்ட’த்தில் சிறப்புரை ஆற்றிய வைகோ, ''ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஈழத் தமிழர் இனப் பிரச்னை குறித்துப் பேச அழைப்பு வந்தபோது நான் சற்றுத் தயக்கத்துடன்தான் பெல்ஜியம் சென்று கலந்துகொண்டேன். ஈழக் கொடூரத்தை நாங்கள் சொல்லும்போது, 'மிகைப்படுத்துகிறார்கள்’ என்றார் கள். இப்போது, ஐ.நா. மன்றமே, பக்கம் பக்கமாகத் தமிழர்கள் படுகொலை பற்றிச் சொல்கிறது. கொடியவன் ராஜபக்ஷே போர்க் குற்றவாளிக் கூண்…
-
- 2 replies
- 824 views
-
-
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வரும் 13ஆம் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை 14ஆம் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார். இச்சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஜெயலலிதா ஆலோசிப்பார் என்று தெரிகிறது. இச்சந்திப்பு முடிந்ததும் அன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார். நக்கீரன்.
-
- 2 replies
- 754 views
-
-
பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் பாரா மிலிட்டரியால் சுட்டுக் கொலை – தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு:- 10 ஜூன் 2011 http://www.youtube.com/watch?v=JdF4RK1O5Mk&feature=player_embedded#t=0s பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவரை பாரா மிலிட்டரி படையினர் கொடூரமாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதனை அந்நாட்டு டி.வி. சானல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் நகரில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரேஞ்சர் எனும் பிரிவைச் சேர்ந்த பாரா மிலிட்டரி படையினர் ஒரு இளைஞனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் ஷர்பராஸ்ஷகா என்பதும் கொள்ளையடிக்கும் திட்…
-
- 0 replies
- 726 views
-
-
உலக வங்கியின் அடுத்த தலைவராக ஹிலரி கிளிண்டன்? வீரகேசரி இணையம் 6/10/2011 2:28:49 PM அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அடுத்தாண்டு தனது பதவிக்காலம் நிறைவடைந்தன் பின்னர் உலக வங்கியி்ன் தலைவர் பதவுக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் ஒபாமா இவரை இராஜாங்க செயலாளராக நியமித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்தாண்டு ஆரம்பமாகின்றது. இதனோடு தனது பதவிகாலத்தை நிறைவுசெய்யவுள்ள ஹிலாரி கிளின்டன் , உலகவங்கியின் அடுத்த தலைவராக அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக ரீடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பூர்…
-
- 1 reply
- 499 views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில்,இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’ இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறோம். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை என்பது ஓர் அடையாள நடவடிக்கைதான். ராஜபட்ச அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வலியுறுத்த வேண்டும். அது ஏற்கப்படாவிட்டால் மத்திய ஆட்சியிலிருந்த…
-
- 0 replies
- 404 views
-
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’8.6.2011 அன்று சட்ட மன்றத்தில் இலங்கையில் போர்க்குற்றம் செய்த மகிந்த ராஜபக்சேவை பற்றிய கண்டனத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. எதிர் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அதில் கலந்து கொண்டேன். இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றியும், அதை தடுக்க வாய்ப்பிருந்தும் தடுக்காமல் கடந்த கால தி.மு.க. அரசு துணை போனதைப் பற்றியும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் இடைவேளை உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றியும் சொன்னேன். கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்த பிறகுதான் இலங்கை ராணுவம் போரை மும்முரப்படுத்தி கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை அழித்தது. கலைஞர் இதைப் பற்றி கூறுகையில், மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். …
-
- 0 replies
- 418 views
-
-
முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மக்களைப் போராளிகளை சிங்கள அரச பயங்கரவாதம் கொன்று குவித்தது போல பாகிஸ்தானிலும் அதன் இராணுவமும் இராணுவக் கூலிக் குழுக்களும் அரச பயங்கரவாதம் கொண்டு பொதுமக்களைக் கொன்று குவிக்கும் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் சபையில் சிறீலங்கா மீதான மனித உரிமை மீறல்கள் மீதான விவாதத்தில் பாகிஸ்தான் கடுமையாக சிறீலங்காவிற்கு சார்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே போன்ற மனித உரிமை மீறல்களை காஷ்மீரிலும்.. மற்றும் மாவோயிட்டுக்களுக்கு எதிராகவும் இந்தியப் படைகளும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சீனாவிலும் இவ்வாறான மனித உரிமை மீறல்களில் அந்த நாட்டு அரச பயங்கரவாதம் ஈடுபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தமிழ் மக்கள் இப்படியா…
-
- 1 reply
- 515 views
-
-
சென்னை: போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இலங்கைப் பிரச்சினையில் அவர் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றினார். தமிழினப் பாதுகாவலர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது' என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். சட்டசபையில் நேற்று இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஜெயலலிதா. பின்னர் அதன் மீது விவாதம் நடந்தது. அதைத் தொடர்நது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்தினார்.அப்போது இ…
-
- 0 replies
- 508 views
-
-
. பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மரணம். லண்டன்: பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95. மராட்டிய மாநிலம் பதான்பூரில் 1915ம் ஆண்டு பிறந்த இவரது மாடர்ன் ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட ஹூசேன் சர்ச்சைகளில் சிக்குவதிலும் பேர் போனவர். கிறிஸ்டி பற்றி இவர் வரைந்த ஓவியம் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார். நட…
-
- 3 replies
- 640 views
-
-
இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையை சேர்ந்த அமெட்ஷிப்பிங் நிறுவனம் உல்லாச கப்பல் சேவையை தொடங்கி உள்ளது. இந்த கப்பல் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் உல்லாச கப்பலின் அரங்கில் நடந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கொடி அசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த உல்லாச கப்பல் சேவையை தொடங்கியதன் மூலம் இந்தியாவுக்கே அமெட்ஷிப்பிங் நிறுவனம் பெருமை சேர்த்துள்ளது. கடல்சார் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நவீன பயிற்சி அளிக்கும் வகையில் இந்த உல்லாச கப்பல் சேவையை அமெட் ஷிப்பிங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் வருவாய் ஈட்டும் வகையில் பொது மக்கள் பயணம் செய்யும் வகையிலும் உல்லாச கப்பலாக பயன்படுத்தப்பட உள்ளது என்றார். …
-
- 0 replies
- 2.9k views
-
-
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஈழத் தமிழர்களுக்காக 08.06.2011 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்மீது முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய உரை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 08.06.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன் மொழியப்பட்ட ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன; ஆதரவு தெரிவித்துள…
-
- 0 replies
- 486 views
-
-
''பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவோம்!'' அனல் கக்கும் அமீர் அணி இரா.சரவணன் மீனவர் பிரச்னையில் சிங்கள அரசுக்கு எதிராகப் பேசியதற்காக, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் அடைக்கப்பட்ட நேரம், 'சீமானின் பேச்சுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட பிரச்னை!’ எனக் கை கழுவினார் இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. அதற்கு பதிலடியாகப் பேசிய இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளர் அமீர், 'பாரதிராஜாவா... பசில்ராஜாவா?’ எனப் பேட்டி கொடுத்துப் பிரளயம் கிளப்பினார். பாரதிராஜாவுக்கும் அமீருக்கும் அன்றைக்கு வெடித்த மோதல், இயக்குநர் சங்கத் தேர்தல் வரை இன்றும் நீள்கிறது! வருகிற 19-ம் தேதி இயக்குநர்கள் சங்கத் தேர்தல். 'இதுவரை இயக்குநர்கள…
-
- 0 replies
- 652 views
-
-
காங்கிரஸால் முட்டிக் கொள்ளும் மாறன்களும், கோபாலபுரத்தார்களும்..! கடந்த சில நாட்களாக தயாநிதி மாறன் பற்றிய செய்திகள் வெளியாகிய நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் மந்திரி சபை மாற்றத்தில் தயாநிதி நீக்கப்படுவார் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. கனிமொழி கைது, கலைஞர் டெல்லி சென்று தனது அன்பு மகளை பார்த்த நாள் வரையிலும் தயாநிதி பற்றிய செய்திகளும், அவர் மீதான விசாரணைகளும் வேகமெடுக்காத நிலையில் திடீரென்று இந்தச் செய்திகள் பறந்து வந்ததற்கான காரணங்கள் என்ன..? இதற்குப் பின்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்று நான் நினைக்கிறேன். இப்போது ஜன்பத் வீட்டுக் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதி மாறன் செய்த முறைகேடுகள் பற்றிய சி.ப…
-
- 0 replies
- 569 views
-
-
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது. ஐநா பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றத்தை குறிப்பாக ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை அண்மையில் அம்பலப்படுத்தியது. அதன் அடிப்படையில் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசின் இதரப் போர்க்குற்…
-
- 2 replies
- 424 views
- 1 follower
-
-
மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஒரு பெண் முதுகெலும்பு முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித…
-
- 2 replies
- 561 views
- 1 follower
-
-
திமுக அமைப்பு செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரத்தின் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து தி.மு.க. தலைவர் கலைஞர் பேசினார். அவர், ‘’தி.மு.க.விற்கு தோல்வி என்பது தடை கல் அல்ல. ராஜீவ்காந்தி மறைந்த போது தி.மு.க. மீது பொய் பிரச்சாரம் கூறப்பட்டதால் அந்த காலக் கட்டத்தில் தி.மு.க. பெருவாரியான இடங்களில் தோல்வியுற்றது. இருந்தபோதிலும் துறைமுகம் தொகுதியில் நான் மட்டும் வெற்றி பெற்றேன். அதன் பிறகு படிப்படியாக தி.மு.க. பல இடங்களில் போட்டியிட்டு 185 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது தி.மு.க.தான். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்காது என்று சொல்கிறார்கள். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும். வெற்றி தோல்வி இய…
-
- 6 replies
- 949 views
- 1 follower
-
-
தயாநிதி மாறனுக்கு எதிராக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் புகார் கூறப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் அறிக்கையை குறிப்பிட்டுப் பேசிய சுவாமி, ஏர்செல் விவகாரத்தில் பயனாளிகள் நேரடியாக பலனடையவில்லை. ஆனால் நேரடியாக பலனடைந்தவர்களிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் தன்னை நிர்பந்தித்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் குற்றம்சாட்டியதையடுத்து தயாநிதி மாறன் சர்ச்சையில் சி…
-
- 0 replies
- 697 views
-
-
லிபியா நாட்டு அதிபர் கடாபியின் வீடு அந்த நாட்டு தலைநகர் திரிபோலியில் உள்ளது. இந்த வீட்டு வளாகத்தின் மீது நேட்டோ ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில் அந்த வீட்டு வளாகம் தீ பற்றி எரிகிறது. திரிபோலியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குண்டுகள் வீசப்பட்டன. இன்று காலையில் குண்டு வெடிக்கும் சத்தம் திரிபோலி நகரில் பலமாக கேட்டது. இந்த குண்டுவீச்சில் தொலை தகவல் தொடர்பு மையங்கள் பலத்த சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள யப்ரான் நகரை கைப்பற்றினார்கள் nakheeran.in
-
- 0 replies
- 516 views
-
-
கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. சி.பி.ஐ. கோர்ட் சம்மனை ஏற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23ந் தேதி மனுதாக்கல் செய்தனர். இருவர் தரப்பிலும் கோர்ட்டில் வாதிடப்பட்டது. அவர்களை ஜாமீனில் விடுவிக்க சி.பி.ஐ. வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்க…
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று தனது பிறந்த நாள் செய்தியாக கட்சித் தொண்டர்களுக்கு கூறியி ருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. யாருடைய நட்பை, ‘கூடா நட்பு’ என்று சொல்கிறார் என்பதுதான் அரசியலில் இப்போது பரபரப்பு டாக். பிறந்த நாளின்போது எப்போதும் உற்சாகமாக இருப்பவர், கருணாநிதி. பல மணி நேரம் தொண்டர்களைச் சந்தித்து கட்சியினரை உற்சாகப்படுத்துவார். கடந்த 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் மிகச் சாதாரணமாக முடிந்திருக்கிறது. தனது மகள் கனிமொழி சிறையில் இருக்கும் போது பிறந்த நாள் வேண்டாம் என்று கருணாநிதி சொல் லவே, கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியானார்கள். பேராசிரியர் அன்பழகன்தான், ‘மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் வேளையில் பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தால…
-
- 0 replies
- 1.1k views
-
-
June 7, 2011 கருணாநிதிக்கு மக்கள் கொடுத்திருப்பது விருப்ப ஓய்வு கிடையாது; கட்டாய ஓய்வு. அதனால் தான், அவரது கட்சி எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது,” என, அ.தி.மு.க., உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:முந்தைய ஆட்சியில், முதல்வரின் குடும்ப வாரிசுகள் எனக்கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கேற்று, தமிழகத்தை சீர்குலைத்தனர். 14வது சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டும் என்பதற்காக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கினர். 2006ல், மக்கள் தெளிவான தீர்ப்பை வ…
-
- 1 reply
- 527 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யிடம் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி மாறன் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தயாநிதிமாறன் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன் என்றார். இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ.க., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன. …
-
- 1 reply
- 669 views
- 1 follower
-