உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
ருவாண்டாவில் இன அழிப்பு மற்றும் டூட்சி இனப் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவதற்காக தனி குழுக்களை அமைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி பேர்னாட் முன்யாகிசாரி கொங்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹூட்டு எனப்படும் பெரும்பாலும் ஆபிரிக்காவின் ருவாண்டா மற்றும் புரூண்டி நாட்டில் வாழும் இனக்குழுவைச் சேர்ந்தவர். பேர்னாட் முன்யாகிசாரி இண்டர்ஹெம்வேஎனப்படும் ஹூட்டு இராணுவத்தில் கட்டளையிடும் அதிகாரியாக இருந்த 1994 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலே ருவாண்டா இனப்படுகொலை இடம்பெற்றது. அக்காலப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் உட்பட சுமார் 800 000 பேர் கொல்லப்பட்டனர். பலர் ஊனமாக்கப்பட்டனர். சுமார் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்…
-
- 1 reply
- 735 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு சென்றுள்ளார். தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் தொடரும் தீவிரவாத தாக்குதல்கள் கவலை தருகின்றன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், இந்தியா திரும்பியதும் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், திமுக உடனான உறவில் மாற்றமில்லை என்றும் கூறினார். நக்கீரன்.
-
- 1 reply
- 639 views
-
-
தி.மு.க. மந்திரிகள் '2006-ல் என்ன சொத்து மதிப்பைத் தேர்தல் கமிஷனிடம் காட்டினார்கள்? 2011-ல் என்ன காட்டினார்கள்? அவர்களின் பினாமிகள், குடும்பத்தினர், நண்பர்கள்... எவ்வளவு சொத்து சேர்த்தனர்? எந்தெந்த வகைகளில் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்? என்பதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்வதில் முதல்வர் ஆர்வமாக இருக்கிறார்!’ என்ற தகவல் அதிகாரிகள் மத்தியில் பரவியது. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக, சென்னை தலைமைச் செயலகம் உட்பட வெளியூரில் உள்ள அரசுத் துறைகளில், ஊழல் தொடர்பான தகவல் சேகரிப்புப் படலம்தான் முழு வீச்சில் நடக்கிறது! ஊழல் புகார்கள் குவிகின்றன! உதாரணத்துக்கு ஒன்று - தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், கோடிக்கணக்கில் மின் திருட்டு செய்யும் இரண்டு முக்க…
-
- 0 replies
- 598 views
-
-
சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா...! நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பேச்சு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 27.05.2011 அன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி, மகள்கள்., மருமகன்கள் சென்றுள்ளனர். அவர் புறப்பட்டுப்போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக்காத்திருந்தனர். ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்புலன்ஸில் ரஜினியை அழைத்துச்சென்றதால் பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது குரலை பதிவு செய்து கொடுத்திருக்கிறார் ரஜினி. அந்த ஆடியோவில் ரஜினியின் குரல் மிகவும் தளர்ந்திருக்கிறது. அவர் உடல் நிலையை அவரின் கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சேர்பிய போர்க்குற்றாளியும் சிறீலங்கா போர்க்குற்றச் செயல்களும் ஓர் ஒப்பீடு.. May 27, 2011 சேர்பிய போர்க்குற்றவாளி றற்கோ மிலடிக்கிற்கு ஒரு சட்டம் சிறீலங்கா இனவாதத்திற்கு ஒரு சட்டமா..? கடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி றற்கோ மிலடிக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது. 1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவர் தளபதியாக இருந்தார். அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 பேரை படுகொலை செய்தார். இவருடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என…
-
- 0 replies
- 811 views
-
-
கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் ” இலவசங்களில்” பிரபலமானது, ” இலவச வண்ண தொலைக் காட்சி”.அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு என்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர் எல்லா “ரேஷன் அட்டைதாரர்களுக்கும்” என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது. …
-
- 1 reply
- 938 views
-
-
சிறைப் பறவைக்குத் துணையாக... ''மூன்று முறை தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சையை, சட்டசபைக்குள் காலடிவைப்பதற்கு முன்பே காலன் அழைத்துக்கொண்டானே...'' என்றபடியே 'உச்’ கொட்டி அமர்ந்த கழுகாரிடம், ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்குப் போயிருந்தீரா?'' என்றோம். ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே திங்கள்கிழமை அதிகாலையில் மந்திரி மரியம்பிச்சையின் மரணச் செய்தி வந்தது. அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட். சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார். முதல் நாள் சட்டசபைக்குச் செல்லும் நாளில் இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? 'சட்டசபையில் பதவி ஏற்பு நடக்குமா?’ என்று பேச்சுகள் கிளம…
-
- 0 replies
- 872 views
-
-
சென்னை காவல்துறைக்கு இன்று இ-மெயில் மூலம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் ’’இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அனைத்தையும் குண்டு வைத்து தகர்ப்போ’’ என்ற மிரட்டல் வாசகங்கள் இருந்தன. இந்த கடிதத்தின் நகல் மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நக்கீரன்.
-
- 0 replies
- 789 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார். ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் ர…
-
- 0 replies
- 763 views
-
-
பாகிஸ்தான் சென்றார் ஹில்லாரி கிளிண்டன் வெள்ளி, 27 மே 2011( 09:33 IST ) அமெரிக்கா அயலுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இன்று பாகிஸ்தான் சென்றார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்தித்து ஹில்லாரி பேச உள்ளார். அல் காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் முதன் முறையாக ஹில்லாரி கிளிண்டன் பாகிஸ்தான் சென்றுள்ளார். பின்லேடன் கொலையில் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய ஹில்லாரி முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1105/27/…
-
- 1 reply
- 479 views
-
-
டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..! 15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு, சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி! தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... என்ற சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் …
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
பொஸ்னிய போர்க்குற்றவாளி சேர்பியாவின் வடபகுதியில் கைது பொஸ்னியாவில் இடம்பெற்ற படுகொலைகளில் நெருங்கிய தொடர்புடையவரும், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஜெனரல் Ratko Mladic சேர்பியாவின் வடபகுதியில் இன்று (26.05.11) கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சேர்பிய ஜனாதிபதி Boris Tadic உறுதிப்படுத்தியுள்ளார். 1995ஆம் ஆண்டு Srebrenicaவில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலையில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 7,500 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னிய போர்க்குற்றங்கள் தொடர்பில் 2008ஆம் ஆண்டு, Radov…
-
- 4 replies
- 658 views
-
-
இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சிக்கு சிறந்த செய்திக்கான விருது! இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - 4 செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விரிவான - சிறந்த - செய்தியை தொகுத்தளித்த சனல் - 4 செய்திச்சேவைக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு: http://www.channel4.com/news/channel-4-news-awarded-by-amnesty-for-third-year-running
-
- 1 reply
- 560 views
-
-
தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘’காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீ…
-
- 0 replies
- 622 views
-
-
ஜெகத் கஸ்பார் ஊழல் வழக்கில் மாட்டுவாரா? Posted by சங்கீதா on 26/05/2011 in பிரதான செய்தி | 0 Comment (செய்தி தொகுப்பு – இளந்தி -26/05/2011) கனிமொழியை திகார் ஜெயிலில் இருந்து விடுவித்து அவரை 2ஜீ ஸ்பெக்ற்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கருணாநிதி குடும்பம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக திமுக அஞ்சுகிறது. தோண்டும் போது புதையல் வருவது போல் உலக வரலாற்றுச் சாதனையான ரூபா1.76 இலட்சம் கோடி வழக்கில் இன்னும் பலர் சிக்கவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சி இயக்குநரான கருணாநிதியின் மனைவி தயாளு அதில் முதலிடம் பிடிக்கிறார். அடுத்தவர் அரசியல் துறவி ஜெகத் கஸ்பார் அடிகளார் என்று விஷயம் அறிந்த வட்…
-
- 0 replies
- 757 views
-
-
தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.. இந்தியா மீதான அழுத்தங்கள் தொடரும்… செயற்பாட்டு ரீதியான விடையை தரவேண்டிய நிலையில் சோனியா அரசு.. இன்று அதிகாலை பிரிட்டனில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரான்ஸ் புறப்படுகிறார். பிரான்சில் இன்று நடைபெறும் ஜி-8 நாடுகளின் விசேட மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரிட்டனுடன் அவர் போராடிப் பெற்ற உடன்பாடுகளுடன் இன்று ஜி – 8 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படப்போவது மூன்று விடயங்கள். 1. லிபிய விவகாரம் 2. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலைக்கசிவு, மற்றும் வறிய நாடுகளின் அணு ஆயுதங்கள் மீதான பாதுகாப்பு 3. உலகப் பொருளாதாரம். இதற்குள் நேற்று மாலை கையெழுத்தான உலக ஜனநாயக மறுமலர்…
-
- 3 replies
- 858 views
-
-
இன்றைய விடிகாலை உலகமும் விடியலை நோக்கிய புதிய தீர்மானங்களும் உலகின் கொள்கைகள் மாற்றமடையும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.. பிரிட்டன் அமரிக்க புதிய நிலைப்பாடு சிறீலங்காவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.. இன்று அதிகாலை உலகில் முக்கியமாகப் பேசப்படும் விடயங்கள் மூன்று. முதலாவது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது இங்கிலாந்தில் பிரதமர் டேவிட் கமரோனுடன் பேச்சுக்களை நடாத்துகிறார். இது மிகவும் பாரதூரமான விடயங்களை உள்ளடக்கிய பேச்சு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லிபியா, மத்தியகிழக்கு, உலகப் பொருளாதாரம் ஆகிய மூன்று தலைப்புக்களில் இந்த விவகாரம் பேசப்பட இருக்கிறது. இதில் முக்கியமான விடயம் 2001 அமெரிக்கா வகுத்த உலகின் கொள்கைகள் முற்றாக மாற்றமடைகின்றன. இந்த மாற்றம்…
-
- 0 replies
- 541 views
-
-
அந்தக் காலத்து வீடு என்பதற்கு அத்தாட்சியாக வீட்டிற்கு முன் னால் நிற்கிறது ஒரு பழைய அம்பாஸிடர் கார். கதர் வேட்டி, முண்டா பனியனுமாக வெளியில் வந்து நம்மை வரவேற்கிறார் பழ.கருப்பையா. கடந்த தி.மு.க. ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தவர். முதிர்ந்த நாகரிகமான அரசியல்வாதி. உடுப்பில் சுத்தம் பழகுவதைப் போலவே வார்த்தையில் சுத்தம் பழகுபவர். தப்பென்றால் உடனே தட்டிக் கேட்கும் தைரியக் குரல் மனிதர். தற்போதைய அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர். அடுத்த சபாநாயகர் என்று பலரால் முணுமுணுக்கப்படுபவர். அவரைச் சந்தித்தோம். கலைஞரின் கணிப்பு எப்படி பொய்த்துப் போனது? ‘‘ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று அவர் நம்பினார். ஆகவே வெற்றி உறுதி என…
-
- 0 replies
- 568 views
-
-
சோனியாவை ஏன் சந்திக்கவில்லை : கலைஞர் சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும், டெல்லி சென்றும் சோனியாகாந்தியை சந்திக்காமல் திரும்பியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’’டெல்லி திகார் சிறையில் இருக்கும் எனது மகள் கனிமொழியையும், ராஜாவையும் பார்ப்பதற்காக சென்றேன். கனிமொழி 2ஜி வழக்கை துணிவோடும், உறுதியோடும் எதிர்கொள்வார். இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகலாம் என நம்புகிறோம். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது. அதனால் தான் சோனியாவை சந்திக்கவ…
-
- 1 reply
- 611 views
-
-
இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் கைது அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சிலராக இருக்கிறார் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா, நியூயார்க் குயின்ஸ் பள்ளியில் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியைப் பற்றி கிருத்திகா தரக்குறைவான இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருத்திகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் சிறையில் துன்புறுத்தியதாக கிருத்திகா தெரிவித்தார். இது தொடர்ப்பாக கடந்த 6-ந் தேதி நியூயார்க் நீதிமன்றத்தில் கிருத்தி…
-
- 1 reply
- 962 views
-
-
சிவன் கோவில் நிலத்திற்காகத் தாய்லாந்து- கம்போடியாச் சண்டை Posted by சங்கீதா on 25/05/2011 in பிரதான செய்தி | 0 Comment இரு நாட்டு இராணுவங்களும் ஒருவர் மீது ஒருவர் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதால் தாய்லாந்து- கம்போடியா எல்லையில் கடும் பதற்றம் நிலவுகிறது. இந்த எல்லையில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது பெரிய விகார் என்ற சிவாலயம். தனக்குச் சொந்தம் என்று தாய்லாந்தும் கம்போடியாவும் அதற்கும் அது அமைந்துள்ள நிலத்திற்கும் உரிமை கோருகின்றன. 1962ம் ஆண்டில் இந்த சர்ச்சை முதன் முறையாக வெடித்த போது இரு நாடுகளும் அனைத்துலக நீதி மன்றத்திடம் நீதி கேட்டு முறைப்பாடு செய்தன. விசாரணைக்கு பிறகு அனைத்துலக நீதி மன்றம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' தேர்தல் பரபரப்பு களைகட்டிய நேரம்... ஈழ ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்கிற நிலைமை. ஆனாலும், தி.மு.க-வுடனான நெருக்கத்தில் காங்கிரஸை சகித்துக்கொள்ள திருமாவளவன் தயாராகிவிட்டதாகத் தகவல் கசிய... நாம் அப்போது அவரிடம் ஒரு பேட்டி கேட்டோம். ''ஈழ அழிவுக்கு காங்கிரஸ்தான் காரணம் எனச் சொல்லும் நீங்கள், அதே கூட்டணியில் நீடித்தால் மக்கள் ஏற்பார்களா?'' இந்தக் கேள்வியை நாம் கேட்டதுதான் தாமதம். திருமாவுக்கு சிலுப்பிக்கொண்டு வந்தது கோபம். ''நீங்கள் எனக்கு நண்பர். உங்களுக்கு யாரோ ஓர் அயோக்கியன் நண்பர் என்றால், அதற்காக உங்களின் நட்பை நான் உதற முடியுமா? நான் தி.மு.க-வுடன்தான் கூட்டணி …
-
- 3 replies
- 944 views
-
-
-
- 3 replies
- 880 views
- 1 follower
-
-
மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார். ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்…
-
- 0 replies
- 465 views
-
-
ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு புதன், 25 மே 2011 01:39 இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார். இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒ…
-
- 2 replies
- 1.3k views
-