உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு ஏமனில் அலி அப்துல்லாசலே கடந்த 32 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். அவரது ஆட்சியில் லஞ்சம் பெருகி விட்டது. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தியும், அரசியல் மாற்றம் தேவை என்றும் ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கூட்டத்தினர் மீது ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசியது. இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனவே, ராணுவம் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியது. இதில் 25-க் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். http://www.nakkh…
-
- 28 replies
- 2.4k views
-
-
கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம்இ உயர்குடிப் பிறப்புஇ செல்வ வளம்இ கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றிஇ விலாசமற்ற ஊரில் பிறந்துஇ ஏழ்மையில் வளர்ந்துஇ அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்துஇ ஏழையாக வளர்ந்துஇ ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்துஇ ஏழையாக வளர்ந்துஇ இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் …
-
- 3 replies
- 958 views
-
-
உலகில் முதலாவது பிளாஸ்டிக் தார் வீதிகள் இந்தியாவில் அறிமுகம்! Posted by admin On March 5th, 2011 at 1:57 am / No Comments இந்தியாவின் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் பிளாஸ்டிக் தார் மூலம் வீதி அமைக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.இப்புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்திய மத்திய அரசு அங்கீகாரம் வழங்யுள்ளதுடன் வர்த்தமாணியிலும் வெளியிட்டுள்ளது. மறுபயன்பாட்டிற்கு வாரத பொலித்தீன் கவர்கள் பிஸ்கட் சாக்லேட் கவர்கள் டீ கப் தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும் இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேராசிரியர் வாசுதேவன் 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படு…
-
- 4 replies
- 992 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் முன்னரும் பொதுமக்கள் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து சிறீலங்கா சிங்கள அரச படைகளுக்கு பயந்து ஒதுங்கிய போது புலிகளைப் பற்றி மேற்குலக ஊடகங்களும் சிங்கள மற்றும் அதன் சார்ப்பு நாட்டு ஊடகங்களோடு இணைந்து பொய்களை சொல்லி வந்தன. புலிகள் பொதுமக்களை பயணக் கைதிகளாகப் பயன்படுத்துவதாக குறை கூறியும் வந்தனர். இப்போ மேற்குலக ஊடகவியலாளர்களின் கண் முன்னாலேயே லிபிய அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி வன்முறையோடு போராடுபவர்கள் ஆயுதப் பயிற்சி அற்ற பல நூறு பொதுமக்களை போர்க்களத்துக்கு அழைத்துச் செல்வதை.. மேற்குலக ஊடகங்கள்.. அரசுக்கு எதிரான தொண்டாற்றல் என்று விபரிக்கின்றன. அப்பாவி மக்கள் புகலிடம் தேடி ஓடும் போது பயணக் கைதிகள் என்று சொல்லி அவர்களின் சாவுக்கு வித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
எம்.ஜி.ஆர். ஆவி சொல்லித்தான் அ.தி.மு.க.வுடன் கேப்டன் கூட்டணி வைத்தார்’ என்று கோவையில் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க... அவரது ‘ஜாலி’ பேச்சைக் கேட்க மேடை அருகே ஒதுங்கினோம்... இடியோசை இப்ராஹிம்தான் அந்த சுவாரஸ்யமான பேச்சுக்கு சொ ந்தக்காரர். அவரது பேச்சின் ஒரு பகுதி இதோ... “மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு ரத்தம் சிந்தினாரே எம்.ஜி.ஆர். அந்த ரத்தம்தான் அண்ணாவை முதல்வராக்கியது. பாவம், இரண்டரை ஆண்டுகளில் இறந்துவிட்டார் அண்ணா. அதன் பின்னர், கருணாநிதி கெஞ்சியதால் அவரை முதல்வராக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா செய்த தவறுகளால்... கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஆட்சி மாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது. எம்.ஜி…
-
- 0 replies
- 702 views
-
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முறிந்து விட்டதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வியாழனன்று காலையில் முதல்வரை சந் திப்பதாக இருந்த குலாம் நபி ஆசாத், திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றதுதான் இதற்குக் காரணம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவிடம், தி.மு.க.வினர் நக்கலாகப் பேசியதை அடுத்து, அந்தக் குழு டெல்லியில் சோனியாவை சந்தித்து நடந்த விவரங்களைச் சொன்னது. மேலும், ‘இனி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் போகமாட்டோம்’ என்றும் அவர்கள் சோனியாவிடம் சொல்லி விட் டனர். அந்தக் கூட்டம் முடிந்ததும், சிதம்பரத்திடம் முப்பது நிமிடங்கள் தனியாகப் பேசியிருக்கிறார் சோனியா. அதன்பிறகு வெளியே வந்த சிதம்பரம் மிக மகிழ்ச்ச…
-
- 8 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு 'அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான விளக்கம் இது'. வணக்கம் திரு ஞாநி அவர்களே. தன் கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் அரசுகள், அதிபர்கள் கூட தமக்கு நேர் எதிரான கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் குழுக்களிடமும், தனி நபர்களிடமும் விவாதமும், பேச்சு வார்த்தைகளும் நடத்தக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதே நாங்கள் அறிவிக்க வேண்டியது இல்லை. ஹிட்லரும் , முசோலினியும் சமீபத்திய ராஜபக்செக்களும் தவிர கிட்டத்தட்ட அனைவரும் பேச முற்பட்டு இருக்கின்றனர். பாசிஸ்டுகள் மற்றும் தமது கருத்து மட்டுமே உலகில் சரியானது என்று நம்ப…
-
- 0 replies
- 768 views
-
-
தோழர்களுக்கு, மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள். செப்டம்பர் 2009 லிருந்து இன்று வரை தொடர்ச்சியாக தமிழீழம் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் கருத்தியல் தளத்திலும், செயல்தளத்திலும் செயல்பட்டுகொண்டிருகிறோம். மேலும் அரசியல் தளத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னேறி செல்ல, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தை சார்ந்த சனநாயகவாதிகள், ஈழஆதரவாளர்கள் மற்றும் தோழர்கள் எங்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கும் நிகழ்வுகளுக்கான நிதிஉதவி அளிக்குமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். குறிப்பாக ஈழத்து புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இர…
-
- 0 replies
- 667 views
-
-
சென்னை : தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை, இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்கவேண்டுமென, அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதவிர, இலவச வினியோகங்களை கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. தமிழக அரசு, அனைத்து தரப்பினருக்கும் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கி வருகிறது. கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட, "டிவி'க்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வினியோகிக்கும் பணியில், ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் இம்மாதம் முதல் தேதியில் இருந்து தீவிரம் காட்டத் துவங்கினர். ஆனால், மார்ச் 1ம் தேதி, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதிகள் …
-
- 3 replies
- 707 views
-
-
கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், ' சீக்கியர்களுக்கான நீதி' என்ற அமைப்பின் சார்பில் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்கூறிய 'சீக்கியர்களுக்கான நீதி' (Sikhs For Justice - SFJ) அமைப்பில் 1984 கலவரங்களில் உயிர் பிழைத்து, அமெரிக்காவில் வசிப்பவர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அந்த நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. காங்கிரஸ…
-
- 0 replies
- 779 views
-
-
அரசு ஊழியர்களின் இதயத்தில், ஆண்டாண்டு காலமாக தி.மு.க. கட்டிவைத்திருந்த 'நண்பேன்டா’ இமேஜ், ஒரு லத்தி சார்ஜ் காரணமாக சுக்குநூறாக உடைந்துவிட்டது! கடந்த 23-ம் தேதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறளகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அரசு தரப்போ தொடர்ந்து பாராமுகம் காட்டியது. ஆவேசமான ஊழியர்கள், கடந்த 25-ம் தேதி போராட்டக் களத்தில் இருந்து திடீரென புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து குரல் எழுப்ப முயற்சிக்க... அவர்களை ஓட ஓட விரட்டி நையப்புடைத்தது காவல் துறை. இந்தக் களேபரத்தால், புதிய தலைமைச் செயலகம் அருகில் இருக்கும் வாலாஜா ரோடு போர்க் களமாகக் காட்சி அளித்தது. ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக்கிடந்த ஊழியர்களை, சங்க நிர்…
-
- 0 replies
- 727 views
-
-
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டி டை ஆகும் என்று முன்னாள் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சரியாகக் கணித்திருந்தார். அவர் துல்லியமாக எப்படி கணித்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது. கிரிக்கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது. ஆட்டமா? சூதாட்டமா? என்பது போல் கிரிக்கெட் தன் முகம் மாறி வருவதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பின…
-
- 4 replies
- 836 views
-
-
ஈரானிய ஜனாதிபதியின் கார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு ஏலம்_ வீரகேசரி இணையம் 3/2/2011 12:06:03 PM 6 ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டின் கார் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு விற்பனையாகியுள்ளது. இத் தொகையானது குறைந்த வருமானம் பெறும் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. சுமார் 25 பில்லியன் ரியால்களுக்கு இக்காரை வாங்கிய நிறுவனமானது அதன் பெயரை அறிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 8 நாடுகள் இந்த ஏலத்தில் பங்கு பற்றியிருந்தன. வெள்ளை நிற போர்ஜோ 504 ரக காரானது 1977 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். இக்காரானது அஹமட் நிஜாட் ஈரானிய நகரபிதாவாக இருந்த கலத்தில் அவரால்…
-
- 0 replies
- 408 views
-
-
கடந்த இரு வாரங்களாக கடும் விமர்சனங்களுக்குள்ளான ஜேர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ல் தியோடர் ஜீ குட்டன்பர்க் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல்கலைகழகம் தந்த பட்டத்தையும் அவர் திருப்பிக் கொடுத்தார். டாக்டர் பட்டம் பெற மற்றவர்களின் ஆய்வுகளை திருடினார் என்ற குற்றச்சாட்டு இவர் மேல் இருந்தது. இவரை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள கல்வித் துறை நிறுவனங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. குட்டனபர்க் இது பற்றி கூறியதாவது: என் வாழ்க்கையில் வருந்தத்தக்க முடிவு இது. என் பதவியின் உயர் பொறுப்புகளை நான் இனி மேலும் நிறைவேற்ற இயலுமா என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் போராட தயாராயிருக்கின்றேன் என்றாலும் என் எல்லைகளை நான் அறிந்துள்ளேன். மேலும் இந்த குற்றச்சாட்டு காரணமாக நா…
-
- 0 replies
- 590 views
-
-
ஒரு ஆற்றில் தன்னுடைய இரு குழந்தைகளை காரோடு மூழ்க வைத்த குற்றத்திற்காக தந்தை கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பெப்ரவரி 11 ல் நடந்த இச்சம்பவம் இப்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. கிம் ஸ்மித், கிறிஸ்டோபர் தம்பதியரின் குழந்தைகள் கேப்ரியில்லா மற்றும் ரையான். இவர் இரும்பு பட்டறை தொழிலாளியாகவும், போதிய பண வசதி இல்லாதவராகவும் இருந்துள்ளார். தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் தனது குழந்தைகளையும் காரில் அழைத்து கொண்டு ஆற்றில் காரை செலுத்தினார். குழந்தைகள் இருவரும் பின்பக்கம் வழியாக கதறிக் கொண்டு தப்பிக் முயன்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். காரில் மூ…
-
- 0 replies
- 492 views
-
-
பாகிஸ்தான்சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்…
-
- 0 replies
- 425 views
-
-
ஓமனில் மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பரவுவதை தடுக்க இராணுவ வீரர்கள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளனர். எகிப்து,லிபியா போன்று ஓமனிலும் மன்னராட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறது. சமீபத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட இடங்களில் இலேசான அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இருப்பினும் மக்களிடையே கனன்றுகொண்டிருக்கும் புரட்சி நெருப்பு எந்த நேரமும் பெரிய அளவில் பற்றிக்கொள்ளலாம் என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மஸ்கட் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளின் எல்லையையொட்டிய பகுதிகளில் இராணுவ வீரர்களை அதிக அளவில் நிறுத்தியுள்ளது. இராணுவ வாகனங்களில் வீரர்கள் ரோந்து சென்று நிலைமையை கண்காணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. htt…
-
- 0 replies
- 803 views
-
-
வட ஆப்பிரிக்க நாடான டுனீசியாவில், பிரதமர் முகமது கன்னவுச்சிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அல் செப்சி என்பவர் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. டுனீசியாவில் தான் அரசுக்கு எதிராக முதலில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜைன் அல் அபிதின் பென் அலி, சவுதிக்கு ஓடி விட்டார். அதையடுத்து, அவரது கூட்டாளியும் அப்போதைய பிரதமருமான முகமது கன்னவுச்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. கன்னவுச்சியே புதிய பிரதமராகத் தொடர்ந்தார். ஆனால், முன்னாள் அதிபர் அலியின் கூட்டாளிகள் எவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறக் கூடாது என்று, டுனீசிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கட…
-
- 0 replies
- 448 views
-
-
வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும். புதுச்சேரியிலும் இதே நாளில் தேர்தல் நடைபெறும். கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதியும் அசாமில் 2கட்டமாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளிலும் மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்18,ஏப்ரல் 23, ஏப்ரல் 27 மற்றும் மே 3 , மே 7 மே 10 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன…
-
- 0 replies
- 525 views
-
-
இங்கிலாந்தில் தற்போது நாகரீகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளிடம் “ மேக்கப்” மோகம் பெருமளவில் வளர்ந்து வருகிறது. முக அலங்காரம், கைவிரல் நகங்களில் ஒப்பனை செய்தல், கண் புருவங்களை சீரமைத்தல், உதட்டுக்காயம் பூசுதல், உடலில் ஒளிரும் தன்மையுடைய ஆடைகளை அணிதல், தற்காலிகமாக பச்சைகுத்தி கொள்ளுதல் போன்றவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த “மேக்கப்“ மோகம் 3 வயது குழந்தைகளில் இருந்து இளம் பெண்கள் வரை பரவியுள்ளது.அவர்களுக்கு பெற்றோர் அதிக அளவு செல்லம் கொடுப்பதும் தேவைக்கு அதிகமாக பணம் கொடுப்பதுமே காரணம் என்று கூறப்படுகிறது. இளம் பெண்கள் நாகரீகத்தில் அளவு கடந்த ஆர்வம் காட்டுவதால் அழகு சாதன பொருட்கள் அங்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. இளம்பெண்களின் மேக்கப் மோக…
-
- 0 replies
- 670 views
-
-
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின். இவர் பூமியின் மதிப்பை கணக்கிட்டார். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற சக்தி வாய்ந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. அது விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. இதன் மூலம் கிரகங்களின் தன்மைகள் அவை குறித்த அதிசய தகவல்கள் கிடைத்து வருகின்றன.அதன்படி பூமி மீது பறந்து கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பூமியின் மதிப்பை அவர் கணக்கிட்டுள்ளார். அதன்படி பூமியின் மதிப்பு ரூ. 210 ஆயிரம் லட்சம் கோடி என தெரிவித்துள்ளார். பூமியின் வயது, அதன் அளவு மற்றும் தட்டவெப்ப நிலை உள்ளிட்ட மற்ற தன்மைகளை கொண்…
-
- 0 replies
- 515 views
-
-
தென்அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ரோடுகள் சேதமடைந்துள்ளன. இந்த மழைக்கு மலை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லா பாஷில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 400 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இதனால் பலர் சேற்றுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் லாபாஷ் நகரில் இது போன்ற கடுமையான நிலச்சரிவு இதுவரை ஏற்பட்…
-
- 0 replies
- 555 views
-
-
பொதுமக்கள் மீது குண்டு வீசுவதை காரணம் காட்டி கடாபியை அகற்ற கோரும் அமெரிக்கா.. அதே குற்றம் புரிந்த கடாபியின் கூட்டை நட்பை வெளிப்படையாக இனங்காட்டிய ராஜபக்சவை மன்னிப்பது ஏன்..??! நாங்கள்.. கேணையங்கள் என்பதாலா...???! http://www.bbc.co.uk/news/world-europe-12601860 Hillary Clinton calls for Gaddafi to go Governments around the world have condemned attacks on Libyan civilians. Speaking at a UN human rights conference in Geneva, US Secretary of State Hillary Clinton said Libya's Col Muammar Gaddafi must "go now". "Gaddafi and those around him must be held accountable for these acts, which violate international legal obligations and common decency," …
-
- 2 replies
- 596 views
-
-
காஷ்மீரில் பரவுகிறதா எகிப்து தீப்பொறி? திங்கள், 28 பிப்ரவரி 2011( 18:57 IST ) எகிப்து, லிபியா என்று உலகின் பல நாடுகளில் உள்ள சர்வாதிகார தலைவர்களுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் ஆட்சி தலைமையையே ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் நிலையில்," தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் ..."என்ற கதையாக எகிப்தில் வெடித்த புரட்சி, காஷ்மீரிலும் கலகத்தை கிளப்பி விடுமோ என்று மத்திய அரசு கிலி பிடித்துபோயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது உண்மைதான் என்பதை காஷ்மீர் தெருக்களில் சரமாரியான எண்ணிக்கையில் களமிறக்கிவிடப்பட்டுள்ள மத்திய, மாநில உளவு பிரிவினரின் எண்ணிக்கை பறைசாற்றுகிறது. வியாபாரிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும், ஏஜென்சி முகவர்க…
-
- 5 replies
- 739 views
-