Jump to content

பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க நேரம் வந்துவிட்டது


Recommended Posts

பாலஸ்தீனம் தனிநாட்டை ஐ.நா. ஊடாக எடுத்து, அத உதவியுடன் பேச்சை தொடர விரும்புகிறது.

அமெரிக்கா உள்பட்ட பல மேலைத்தேய நாடுகளின் 'இரட்டை முகம்' கிழிபடப்போகின்றது.

ஐ.நா. = அமெரிக்கா

அமெரிக்கா + மேற்கத்தேய நாடுகள் = ஐ.நா.

அமெரிக்கா + மேற்கத்தேய நாடுகள் + ஐ.நா. = உலகம்

உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்கில்ல? :D:icon_idea::D

Link to comment
Share on other sites

பாலஸ்தீன தனிநாட்டு பிரேரணை இன்று திங்கள் டேனிஸ் நேரம் ஒன்பது மணிக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதத்திற்கு வந்துள்ளது. தற்போது வெளியான செய்திகள் அமெரிக்கா வீட்டோவை பாவிக்காது என்று தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளில் 9 நாடுகள் ஆதரவாக வாக்களித்தால் பாலஸ்தீனம் ஐ.நாவில் தனியான நாடாக இடம் பெற்றுவிடும். அமெரிக்கா வீட்டோவை பாவிக்காது என்ற செய்தி புதிய நம்பிக்கையை தந்துள்ளது. ஆனால் ஒன்பது நாடுகள் ஆதரிக்க வேண்டும், தற்போது சீனா, ரஸ்யா, பிரேசில், இந்தியா, தென்னாபிரிக்கா, லெபனான் ஆகியன ஆதரவாக வாக்களிக்க முன் வந்துள்ளன. மற்றய நாடுகள் இதுவரை முன்வரவில்லை. அப்படி முன்வராவிட்டால் அமெரிக்கா வீட்டோவை பாவிக்காமலே பிரேரணை தோல்வியடையவும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் தலையில் பழி விழாமல் நாடகம் வேறு விதமாக அரங்கேறப்போகிறதா என்ற பதட்டமும் உள்ளது. நிமிடங்கள் துடிக்கின்றன.

http://www.alaikal.com/news/?p=83589

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.