உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம் 09 January 2026 ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்க…
-
-
- 14 replies
- 898 views
- 1 follower
-
-
🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்…
-
- 0 replies
- 148 views
-
-
[size=4]சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதில் திமுகவிற்கு தயக்கமிருக்கிறது என மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.[/size] [size=4]பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அத்தகைய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துவிட்டாலும் அகில இந்திய அளவில் அந்நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.[/size] மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தே வெளியேறிவிட்டது. [size=3][size=4]18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திர…
-
- 3 replies
- 732 views
-
-
சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல் சவுதி அரேபியா,ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை நடத்திய தற்கொலை தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே இன்று அதிகாலை தனது காரை நிறுத்திவிட்டு நடந்துவந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று அதிகாலை ஜெட்டாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தின் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 565 views
-
-
ரன்வேயில் உரசிய விமான இறக்கை-தப்பிய பயணிகள் வெள்ளிக்கிழமை, நவம்பர் 7, 2008 மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கை ரன் வேயில் உரசி விபத்துக்குள்ளானது. இருப்பினும் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஏர் இந்தியா ஏர்பஸ் விமானம் இன்று ஜெட்டாவிலிருந்து காரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 161 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது விமானம் வலதுபக்கமாக அதிகமாக சாய்ந்தது. இதில் வலது பக்க இறக்கை ரன்வேயில் பட்டு உரசி, நொறுங்கியது. இதனால் விமானம் தடுமாறியது. ஆனால் பைலட்டின் சுதாரிப்பான செயல்பாட்டால் விமானம் ரன்வேயில் விழாமல் பத்திரமாக…
-
- 1 reply
- 819 views
-
-
சிரியாவில் மோதல் நிலை உக்கிரமடைந்து வரும் நிலையில் இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரச படையினரால் கிளர்ச்சியாளர்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. இதேவேளை டமஸ்கஸ் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல விமான சேவை நிறுவனங்கள் தங்களது பயணத்தினை இரத்துச் செய்துள்ளன. அசாத் ஆதரவுப் படையினர் கடந்த சில வாரங்களாக சிறிது பின்னடைவைச் சந்தித்துள்ளன. சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவிவிலகக்கோரி இடம்பெற்ற அமைதியான மோதல்கள் தற்போது உள்நாட்டுப் போராக மாறியுள்ளது. இதனால் சுமார் 50,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்…
-
- 0 replies
- 454 views
-
-
ஜார்ஜ் பிளாய்ட் கொலை- இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். முழங்காலிட்டு ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்திய கனடா பிரதமர் ட்ரூடோ ஒட்டாவா: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. போ…
-
- 3 replies
- 1k views
-
-
"பொட்டி"யைக் கட்டினார் கேமரூன்.. பழைய படத்தை போட்டு வைரலாக்கிய குசும்பர்கள்! லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு நேற்றுடன் கேமரூன் டாட்டா காட்டி விட்டார். இந்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட ஒரு பழைய படத்தைப் போட்டு சில குசும்பர்கள் சமூக வலைதளங்களி்ல அவரை கலாய்த்து விட்டனர். அந்தப் படமும் வைரல் ஆகி விட்டது. ஒரு பெரிய அட்டைப் பெட்டியை தூக்கிக் கொண்டு கேமரூன் வீட்டை விட்டு வெளியேறும் படம் இது. இதை வைத்து பாருங்கள்,எவ்வளவு அமைதியாக தனது சாமான்களை தானே தூக்கிக் கொண்டு தனது 10, டவுனிங் தெரு வீட்டைக் காலி செய்து செல்கிறார் பாருங்கள் என்று கொளுத்திப் போட்டு விட்டனர். இன்னும் சிலர் பாருங்கள், நாட்டுக்கே இவர் அமைதியான முறையில் ஒரு செய்தியை விட்டுச…
-
- 1 reply
- 470 views
-
-
16வது நாடாளுமன்றம் துவங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சோனியா, அவரது மகன் ராகுல் இதுவரை ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் செய்த ஆய்வறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத்தின் 8 கூட்டத் தொடர்களில் ஒரே ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவையில் 128 கேள்விகளை எழுப்பியுள்ளார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ர…
-
- 2 replies
- 1k views
-
-
டெல்டா ஏர் நிறுவன கணினி அமைப்புகள் பழுது; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு கணினி அமைப்புகள் பெரிய அளவில் பழுதான காரணத்தால், தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்ட டெல்டா ஏர் விமான நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளில், தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் இயங்க தொடங்கியுள்ளன. ஆனால் இந்த அமெரிக்க விமானச் சேவை நிறுவனம், அதன் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் தாமதம் ஆகலாம் எனவும் எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள், விமான நிலையத்தில் பயணச் சீட்டைக் காட்டி நுழையும் இடங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அட்லாண்டாவில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பட்ட மின் தடை காரண…
-
- 0 replies
- 363 views
-
-
By J.Stephan 2013-01-10 22:34:26 சர்வதேச நாடுகளினதும் ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையினதும் கவனத்தை ஈர்த்துள்ளதான நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரம் அங்கு வதிகின்ற வெளிநாட்டுப் பெற்றோரை வெகுவாகப் பாதித்துள்ளது. தமது பிள்ளை பலவந்தமாக தம்மிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தம்மை மனதளவில் பாதிப்படையச் செய்யும் மறைமுக சதியில் நோர்வே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அந்த பெற்றோர் குமுறுகின்றனர். இது இவ்வாறிருக்க இன்னும் சில தினங்களில் நோர்வே சிறுவர் காப்பகங்கள், நோர்வே அரசாங்கம் ஆசிய தரப்புக்கள் எதிர்பாராத சில விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படப் போவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனினும் எத்தகைய அதிர்ச்சிகளை …
-
- 0 replies
- 490 views
-
-
'ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்தே கசிந்தது' படம்: ராய்ட்டர்ஸ். ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பிரான்சிலிருந்தே கசிவானதாகவும், இந்தியாவிலிருந்து அல்ல என்றும் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் தெரிவித்துள்ளார். ஸ்டீவர்ட் கேமரூன் என்பவர் ஆஸ்திரேலியாவின் முன்னணி புலனாய்வு நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது. 22,400 பக்கங்கள் கொண்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலின் ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை. 'Restricted Scorpene India' என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில் மிக மிக நுட்பமான போர் யுக்திக…
-
- 0 replies
- 345 views
-
-
சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்டவரைபை நிறைவேற்றியது துருக்கி துருக்கிய நாடாளுமன்றம் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்ட வரைபொன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்களிடையே கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டம் இன்று (புதன்கிழமை) அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இந்த சட்டத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் ட்விற்றர் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் துருக்கியில் உள்ளூர் பிரதிநிதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த சட்ட வரைபை ஆளும் AKP மற்றும் அதன் தேசிய பங்காளியான MHP ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை…
-
- 0 replies
- 412 views
-
-
இதுவரை ரகசியமாக கணக்குகளைப் பராமரித்து வந்த சுவிஸ் வங்கிகள் மற்ற சாதாரண வங்கிகளைப் போல செயல்படத் திட்டமிட்டுள்ளன. இவ்வகையில் 2 வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன. சுவிட்ஸர்லாந்து வங்கிகளின் கணக்கு விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. அவ்வங்கிகள், பங்குச் சந்தைகளில் கூட பட்டியலிடப்படுவதில்லை. ஆனால், தற்போது இந்நிலையில் சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 200 ஆண்டு பழமையான பிக்டெட் மற்றும் லொம்பார்டு ஒடியர் என்ற இரு வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக (லிமிடெட்) செயல்பட முடிவு செய்துள்ளன. தங்களின் கணக்கு விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளன. பிக்டெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "வங்கியின் பெயர் பங்குச் சந்தைப் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
கூடங்குளம் செய்திகள் விழித்துக்கொண்ட மலையாளிகளும், வங்காளி களும் அவர்கள் மண்ணில் அணு மின் நிலையமும் வேண்டாம், அணு குண்டுத் தொழிற்சாலைகளும் வேண்டாம் என உறுதிபடச் சொல்கின்றனர். தடுக்கின்றனர். ஆனால் தமிழன்? வாய்ச் சொல் வீரர்களையும், கடிதம் எழுதுபவர்களையும், சினிமா நடிகர்களையும் நம்பிக்கொண்டு நடுத் தெருவில் நிற்கிறான்! மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சாதாரண மக்களுக்காக சாதாரண மக்களால் நடத்தப்படும் சாதாரண மக்களின் சாதாரண அகிம்சைப் போராட்டமாக கூடங்குளம் போராட்டம் உருவெடுத்து இருக்கிறது. சாதாரண இந்தியர்களின், தமிழர்களின் உயிட்களுக்கும் விலை இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு இருக்கிறது, அவர்களின் உரிமைகளுக…
-
- 2 replies
- 708 views
-
-
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கவலை இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறி;த்து ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கவலை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றில் அவர் தனது கவலைகைளை வெளியிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் இன்று கையளிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் கரிசனைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கையிலும் ஜெனீவாவிலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் ஏனையவர்கள் கண்காணிக்கப்படுவது குறித்த தனது கவலையை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தனதுஅறிக்கையி;ல் பதிவு செய்துள்ளார். மனித உரிமை பேரவையின் 43 வது அமர்வில் கலந்துக…
-
- 3 replies
- 805 views
-
-
24 February 2013 07:14:44 PM படித்தவர்கள்: 55 கனடாவில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் பிரபல நிறுவனத்தின் தேயிலை பவுடரில் விஷத்தன்மை கலந்துள்ளதால் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் விற்பனையான அனைத்து தேநீர் பவுடரையும் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. The Canadian Food Inspection Agency இன்று விடுத்துள்ள ஒரு எச்சரிக்கை அறிக்கையில், Tega brand Organic Lemon Hibiscus Green Rooibos Herbal Tea என்ற நிறுவனத்தின் தேநீர் பவுடரில் விஷத்தன்மை கலந்துள்ளதால், அதை உடனே வாடிக்கையாளர்களிடம் இருந்தும், கடைகளில் இருந்தும் உடனே திரும்பப்பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தேநீர் பவுடர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெ…
-
- 15 replies
- 810 views
-
-
ரூ.2000 நோட்டில் எழுத்துப் பிழை: சிரிப்பாய் சிரிக்கும் ட்விட்டர் சென்னை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை இருப்பதை கண்டுபிடித்து மக்கள் அதை ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை உள்ளதை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். பிழை புதிய 2000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை. இந்தியில் தோன் ஹஜார் ருபியா என்று உள்ளது. உருது மொழியிலும் பிழை உள்ளது என்று கேள்விப்பட்டேன். இந்தி 2000 ரூபாய் நோட்டில் இந்தி மொழியில் எழுத்துப் பிழை.…
-
- 3 replies
- 452 views
-
-
உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கப்ரியேசுஸ் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அறிகுறிகள் ஏதுமற்று உள்ள அதேவேளை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், நாம் அனைவரும் சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்க வேண்டியது அவசி…
-
- 0 replies
- 318 views
-
-
A tsunami warning is in effect for Japan's Fukushima Prefecture after a 7.3-magnitude earthquake struck off Honshu at 5:59 a.m. Tuesday (3:59 p.m. Monday ET), according to the Japan Meteorological Agency. A tsunami wave of 1-3 meters (3-10 feet) is possible, according to the agency. The US Geological Survey put the magnitude at 6.9, striking 37 kilometers (23 miles) east-southeast of Namie off the country's east coast at a depth of 11.4 kilometers (7 miles). Two aftershocks were reported by USGS, one 5.4 and one 4.8. A tsunami wave has already been spotted 22 kilometers off the coast of Iwaki City in Fukushima Prefecture, CNN affiliate NHK reported. Images …
-
- 3 replies
- 738 views
-
-
தனித்து போட்டியிடுவோம்: தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து தான் போட்டியிடும் என்று கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். சிவகிரியில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும் என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருக்கிறார். இதனால் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும். தி.மு.க. அணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி உளவுத்துறை மூலம் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அ.தி.மு.க.வை விட அதிக கூட்டத்தை கூட்டக்கூடிய சக்தி தே.மு.தி.க.வுக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலைவிட 100 மடங்கு வேகத்தில் தே.மு.தி.க. …
-
- 0 replies
- 1.1k views
-
-
நியூஸிலாந்து பிரதமர் திடீரென பதவி விலகல் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ திடீரென பதவி விலகியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த அறிவித்தலை விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 204 views
-
-
வாஷிங்டன்: 1984ஆம் ஆண்டு நாட்டின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை 'இனப்படுகொலை' என பிரகடனப்படுத்த அமெரிக்கா மறுத்துள்ளது. 1994-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களே சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்தனர். இப்படுகொலைச் சம்பவம் சீக்கியர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. அண்மையில் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இணையம் வழியே ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 1984-ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையாக அமெரிக்கா அறிவிக்க வேண்…
-
- 0 replies
- 590 views
-
-
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸை ஒபாமாவர்ணித்து பேசியதாக எழுந்த பிரச்சனையில் நேற்று ஒபாமா தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தார். இதற்கு இன்று பதில் கூறிய கமலா ஹாரிஸ் தரப்பு, அதிபர் ஒபாமாவின் வருத்தத்தை தான் ஏற்றுக்கொண்டதாகவும் இதை ஒரு பெரிய விஷயமாக தாம் நினைக்கவில்லை என்றும் அறிவித்திருக்கின்றார். இத்துடன் ஊடகங்கள் இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கமலா ஹாரிஸ் பல வருடங்களாக நெருங்கிய நண்பராக இருந்து வந்திருக்கின்றார் என்றும் அன்றைய நிகழ்ச்சியில் ஒபாமா தன்னுடைய அழகை வர்ணித்து கூறியதை தாம் தவறாக ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், ஊடகங்கள…
-
- 0 replies
- 609 views
-
-
பாரதிய ஜனதாக் கட்சியில் மோடியை போன்று அத்வானிக்கும் பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு பெருகி வருகின்ற வேளையில், தானும் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவரே என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு கட்சியின் உயர்மட்டக் குழுவில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் பா.ஜ.கட்சிக்கு தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாத் தளம் கட்சிக்கு மோடியை பிரதமராக முன் நிறுத்துவதற்கு பிடிக்கவில்லை . இதனால் இந்தக் கட்சி இரண்டு நாள் மாநாட்டைக் கூட்டி மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால், கூட்டணியில் இருந்து விலகி விடுவது …
-
- 0 replies
- 357 views
-