Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.எஸ். நிறுவனர் ஒபாமா; துணை நிறுவனர் ஹிலாரி: விமர்சனத் தாக்குதலைத் தொடரும் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.எஸ். அமைப்பின் நிறுவனர் என விமர்சித்துள்ளார் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாரான டொனால்டு டிரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எதிரணியினர் குறித்து கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்று அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் மற்றுமொரு அதிர்வலை…

  2. கொரோனானாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க 750 பில்லியன் யூரோ நிதி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் by : Dhackshala கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமை அலுவலகத்தில், வரவு செலவுத் திட்டம் மற்றும் பொருளாதார மீட்பு நிதி தொகுப்பு உள்ளிட்டவை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த ஐந்து நாட்களாக நடந்த ஆலோசனைக்கு பின்னர், இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்லஸ்…

    • 0 replies
    • 447 views
  3. மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் 2016-09-04 20:39:41 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவு…

    • 19 replies
    • 1.4k views
  4. உலகளாவிய உணவுப் பொருள் ஊக வணிகத்தில் கோல்டமேன் சாக்ஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு $400 மில்லியன் (சுமார் ரூ 2,000 கோடி) லாபம் சம்பாதித்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் பணத்தை கோதுமை, மக்காச் சோளம், காபி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் மீதான ஊக வணிகத்தில் ஈடுபடுத்தியதாக கோல்ட்மேன் சாக்ஸின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. “போதுமான உணவு வாங்க முடியாமல் உலகெங்கிலும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியாக இருக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை மீது சூதாடி கோல்மேன் சாக்ஸ் அலுவலர்கள் தங்களது போனசை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் உலக முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டீன் ஹெய்க். 1990களில் இறுதியில் தாராளமய கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொரு…

    • 0 replies
    • 392 views
  5. ஜேர்மனியில் அடைக்கலம் புகுந்தோருக்கும் ஜேர்மனியருக்கும் இடையே மோதல் ஜேர்மனியின் கிழக்குப்பகுதியில் உள்ள போற்சென்; நகரத்தில் புகலிடம் கோரிய வெளிநாட்டவர்களுக்கும் நகரவாசிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு எதிரான குரோத மனப்பான்மையின் வெளிப்பாடாக நகரவாசிகள் புகலிடம் கோரியிருப்பவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிதீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 80க்கும் அதிகமானவர்கள் 20க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை தாக்கியதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பதிலுக்கு தாக்கயதையடுத்து கலவரம் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட அதி வலதுசாரி அமைப்பினர் புகலிடக்…

  6. மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட இராணுவ அதிகாரி அஸிமி கொய்டா! மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக இராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா அறிவித்துக் கொண்டுள்ளார். அஸிமி கொய்டாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்ற, இவர் முக்கிய காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது. தலைநகர் பமாகோவில் உள்ள இராணுவ அமைச்சகத்தில், உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய கொய்டா, இதன்பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘நான் என்னை முதலில் அறிமுகம் செய்துகொள்கிறேன். என் பெயர், கர்னல் அஸிமி கொய்டா. நான், மாலி இராணுவப் படையின் தலைவர். இன்று முதல், மாலி அ…

    • 0 replies
    • 498 views
  7. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புதிய பொதுச்செயலராக போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. மன்றம் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக தென்கொரிய நாட்டை சேர்ந்த பான்-கி-மூன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, புதிய பொதுச்செயலரை தெரிவு செய்யும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் போர்த்துகல் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார். இவருக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் தற்போது ஐ.நா., சபையின் அகதிகள்…

  8. சிரியா கைதி தற்கொலை; ஜெர்மன் சிறை கையாண்ட விதத்தில் 'தவறுகள்' கடந்த வாரம் சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்து கொண்ட, குண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவராக கருதப்பட்ட சந்தேக நபர் தொடர்பான சம்பவத்தில், தவறுகள் நடைபெற்றிருப்பதாக ஜெர்மனியின் சாக்சனி மாநிலத்தின் நீதி அமைச்சர் ஒப்பு கொண்டுள்ளார். சனிக்கிழமை சந்தேக நபரின் குடியிருப்பில் தேடுதல் நடத்திய காவல்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டனர் இஸ்லாமியவாத சந்தேக நபர்களை கையாள்வது தொடர்பாக சிறைச்சாலையின் அமைப்பிலுள்ள ஒவ்வொருவரும் இதிலிருந்து பாடங்களை கற்றுகொள்ள வேண்டும் என்று செபாஸ்டியான் கெம்கோக் என்பவர், வெல்ட் அம் ஸேண்டாக் என்ற ஜெர்மனி நாளிதழிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஊழி…

  9. புதிய அமெரிக்க ஜனாதிபதி முன்னாள் நடிகரா? அமெரிகாவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜேம்ஸ் பொன்ட் ஒரு நடிகர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இலங்கை திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணம் என்ற தமிழர் தயாரித்த "GHOSTS CANT DO IT" திரைப்படத்தில் புகழ் போ டெரக் என்ற நடிகையுடன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 1989இல் ஜோண் டெரக் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது . இதில் டிரம்பிற்கு பிரத்தியேக பாத்திரமொன்றை ஒதுக்கி அதற்கேற்ப உரையாடல்கள் எழுதப்பட்டிருந்தன. டிரம்ப் சம்மந்தப்பட்ட காட்சிப் படப்பிடிப்பு ஒருநாளில் மாத்திரமே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நல்ல நடிகர்களைக் கொண்டு இத் திரைப்படம் …

  10. எஸ்வடினி பிரதமர் கொரோனாத் தொற்றினால் மரணம் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எஸ்வடினி (Eswatini) பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி (Ambrose Dlamini), கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தனது 52 ஆவது வயதில் காலமானார். நான்கு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றினால் ல் பாதிக்கப்பட்ட அவர், உயர் சிகிச்சைக்காக தென் ஆபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, நாளடைவில் அவரது உடல்நிலை மோசமான நிலையில், அம்ப்ரோஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது. எஸ்வடினி பிரதமர் கொரோனாத் தொற்றினால் மரணம்! – Thinakkural

  11. சென்னை: மதிமுக விரும்பும் தொகுதிகள்தான் வேண்டும் என்றால் 4 மட்டுமே தரப்படும் என்றும், நாங்கள் தரும் தொகுதிகளைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் 5 தொகுதிகள் தரப்படும் என்று மதிமுகவிடம் அதிமுக கூறிவிட்டது. கிட்டத்தட்ட கத்திரிக்காய் வியாபாரம் மாதிரி தான் அதிமுக-மதிமுக கூட்டணிப் பேச்சு நடந்து கொண்டுள்ளது. சந்தைகளில் கத்திரிக்காயை கூறு கட்டி வைத்திருப்பார்கள். ஒரு கூறு 3 ரூபாய். அதில் சொத்தையும் இருக்கும். சொத்தை வேண்டாம், நல்ல கத்தரிக்காய் தான் வேண்டும் கூறு வாங்கக் கூடாது. தனியாக பொறுக்கி வாங்கலாம். அப்படி வாங்கும்போது கூறு மாதிரி சீப் ரேட்டுக்கு கிடைக்காது, விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். தனக்கு வேண்டிய தொகுதிகள் வேண்டும் என்றால் அதற்கான 'விலையை'த் தர வேண்டிய ந…

  12. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், ஈரானின் தென் பகுதியில் பஷெர் அணு உலைக்கு அருகே நிகழ்ந்தது. அணு உலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனினும், அந்த பகுதியில் இருந்து 37 பேர் உயிரிழந்தனர், சுமார் 850 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் வீடுகள்,கடைகள் மற்றும் வணிகத் தலங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு உலை 8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கத்தை தாங்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளதாகவும், அணு உலைக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை எனவும் அரசு தரப்பில்…

  13. அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனா – ட்ரம்ப் அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனாவே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும் பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என கூறியுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் …

  14. காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மக்களவை தேர்தலுக்காக சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் செய்வதாக இருந்தார். சென்னை தீவித்திடலில் முதலவர் கருணாநிதியுடன் இணைந்து பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தார். இதற்கிடையில் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி மட்டும் இன்று மதியம் சென்னை வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக் இருந்தார். இந்நிலையில் இன்று குலாம் நபி ஆசாத், சோனியாகாந்தியின் சென்னை வருகை ரத்துசெய்யப்பட்டுவிட்டது. அவர் சென்னை வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆதாரம்? நக்கீரன் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7950 சோனியா 10ஆம்…

    • 4 replies
    • 1.5k views
  15. புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன் ஆங்கிலேயர் பாதுகாப்புக் கழகம் (English Defence League -EDL) என்ற நிறவெறி அமைப்பு பிரித்தானியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பலர் கலந்துகொண்டுள்ளனர். வூலிச் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய மசூதிகள் மீதாதான தாக்குதல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. நியுகாசில் என்ற பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1500 இலிருந்து 2000 வரையானவர்கள் கலந்துகொண்டதாக போலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்லாமியர்களுக்கு எதிரான சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன, ‘யாருடைய தெருக்கள், எங்களுடையது’ என்ற சுலோ…

  16. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் விண்டூ தாராசிங்கை மும்பை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். ஆனால் அவர் மீதான புகார்களுக்கு உரிய ஆதாரங்களை மும்பை போலீசாரால் திரட்ட இயலவில்லை. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நடிகர் விண்டூ தாராசிங் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கையெழுத்து போட வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- கிரிக்கெட் சூதாட்டத்தில் நான் என்றுமே ஈடுபட்ட தில்லை. நான் அப்பாவி. நான் எந்த தவறும் செய்ய வில்லை. குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் என் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகியுள…

    • 0 replies
    • 374 views
  17. குவாம்: ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் திடீரென்று தீ பற்றி கொண்டது. தீ உடனே அணைக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 203 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகருக்கு சுமார் 190 பயணிகள் உட்பட 203 பேருடன் ஜெட் ஸ்டார் நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. ஏர் பஸ் ஏ 330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் பயணிக்கத் துவங்கிய நான்காவது மணி நேரத்தில் விமானியின் அறையில் திடீரென தீ பிடித்தது. இதையடு்தது சுறுசுறுப்பாக செயல்பட்ட விமான ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளுடன் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப…

    • 0 replies
    • 1.1k views
  18. தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னவர்களே அதை பின்பு மறுத்து விட்ட பிற்பாடும், தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நம்புபவர்கள் குறிப்பிடத்தக்களவு இருக்கின்றார்கள். தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு "தேசியத் தலைவர் வருவார்" என்று காத்து நிற்கிறார்கள் அதே வேளை ஈழத் த…

  19. சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்பது குறித்து இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த, முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனின் பிரேரணைக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. படத்தின் காப்புரிமைPA Image captionபிரிட்டன் பிரதமர் தெரீசா மே (இடது), ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்(வலது) ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த அனுமதி கோரும் இப்பிரேரணையை, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் 69 வாக்குகள் ஆதரவு, 59 எதிர்ப்பு என்ற நிலையில் நிறைவ…

  20. மத்திய தரைக் கடலில் மீட்கப்பட்ட புகலிடக் கேரிக்கையாளர்களில் இலங்கையர்களும் உள்ளடக்கம் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் நான்கு நாள் சிசுவொன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு படகுகளில் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகவும் இத்தாலி நோக்கியே இந்தப் படகுகள் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட, மத்திய ஆபிரிக்கா, இலங்கை, ஏமன் உள்ளிட்ட நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தப் படகில் பயணித்துள்ளனர். ஸ்பெய்னின் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளது. http://globaltamilnews.net/archives…

  21. வன்முறை போராட்டங்களின் பின் துனிசியா பிரதமர் பதவி நீக்கம் நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து துனிசியாவின் ஜனாதிபதி, பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை அரசாங்கம் தவறாக கையாள்வது தொடர்பாக பல துனிசிய நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது. இந் நிலையில் ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கைஸ் சையத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றம் இடையே அதிகாரங்களை பிரிக்கும் துனிசியாவின் 2014 அரசியலமைப்பிற்கு இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் …

  22. அமெரிக்க படைகள் வெளியேறியதே... ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம்: ஆப்கான் ஜனாதிபதி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அவசர கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்த அவசரமாக (அமெரிக்காவால்) முன்வைக்கப்பட்ட திட்டமானது அமைதியை ஏற்படுத்தத் தவறியதுடன், ஆப்கான் மக்களிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாகாண தலைநகரங்கள் மற்றும் பெரிய நகர்ப்புற ப…

  23. லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானாவை அரச குடும்பத்தில் உள்ள முக்கியப்புள்ளிகள் தான் திட்டமிட்டு கொன்றதாக இங்கிலாந்து ராணுவ வீரர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் உள்ள சில முக்கியப்புள்ளிகள் தான் இளவரசி டயானாவை திட்டம் போட்டு கொன்றுவிட்டதாக இங்கிலாந்து விமானப்படை வீரர் ஒருவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், என் முன்னாள் கணவர் கடந்த 2008ம் ஆண்டில் இளவரசர் வில்லியமுக்கு விமானப் படையில் சில பயிற்சி அளித்தார். அப்போது வில்லியம் கார்களில் சில பயிற்சி பெற்றார். என் முன்னாள் கணவரும் சில கார் ஸ்டண்ட்டுகள் செய்தார். ஜன்னல் வழியாக சுடுவது உள்ளிட்டவற்றை வில்லியமு…

  24. பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள கன்சூ மற்றும் கிங்காய் மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 12 நொடிகள் நீடித்துள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தையடுத்து கன்சூ மற்றும் கிங்காய் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. http://tamil.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.