உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
சொடுகுக http://www.youtube.com/swf/l.swf?swf=http%...&autoplay=1
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈராக்கில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படை தாக்குதல் ஈராக் மொசூல் நகரத்தில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படையினர் அதிகாலை முதல் தொடர் தாக்குதல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ள்ஸ் டி கோல் விமானந் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ராவூல் தாக்குதல் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136502/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 406 views
-
-
ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/cq5dam.thumbnail.cropped.750.422-720x450.jpeg போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத் தவிர்த்த ஆபத்தான பயணம் என விபரிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி இதுகுறித்து கூறுகையில், ’84 வயதாகும் போப்பாண்டவர், தலைநகரான பாக்தாத் மற்றும் உர், ஆபிரகாமுடன் இணைக்கப்பட்ட ஒரு நகரத்தையும், நினிவே சமவெளிகளில் எர்பில், மொசூல் மற்றும் காராகோஷ் ஆகிய …
-
- 1 reply
- 712 views
-
-
தூக்கு தண்டனை விதிப்பதால் நியாயம் கிடைத்து விடப் போவதில்லை. எனவே அதை கைவிடும்படி இந்தியாவிடம் ஜெர்மனி தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மைக்கேல் ஸ்டெயினர் கூறினார். தூக்கு தண்டனை விதிப்பதை கொள்கை அளவில் ஜெர்மனி ஏற்கவில்லை. இதுதான் எங்கள் நாட்டின் நிலைப்பாடு. இந்த நிலையை வேறு நாடுகளும் பின்பற்றுகின்றன என்பதை இந்தியாவும் அறியும். காலிஸ்தான் விடுதலை இயக்க பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லர் உள்ளிட்ட எந்த தூக்கு தண்டனை கைதிகளுக்கும் இந்தியா அதை நிறைவேற்றக்கூடாது என்பதே எங்களின் நிலை. எனினும் தனிப்பட்ட முறையில் இந்தியாவிடம் இதுபோன்ற கோரிக்கை ஜெர்மனி தரப்பில் வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=81363&category=…
-
- 1 reply
- 315 views
-
-
பாகிஸ்தான் - சீனாவுடன் இந்தியா போருக்கு தயாரகிறது: சீன சிந்தனையாளர்கள் குழு தகவல் சீனா அரசுக்கு அறிவுரைகள் வழங்கி வரும் சிந்தனையாளர்கள் வெளியிட்டுள்ள புளூ புக்கில் இந்தியா குறித்து எழுதியுள்ளனர். அதில் இந்தியா பற்றி கூறியிருப்பதாவது:- நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவுள்ள பாகிஸ்தானை கண்காணிக்கவும், ஆயத்தமாக இருக்கவும் இந்தியா அதிகபட்ச அக்கறை எடுத்துகொள்கிறது. மேலும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து, அதி நவீன ஆயுதங்களையும் தளவாடங்களையும் மேம்படுத்தி படைகளை வலுவூட்டி ஒரு வரையறுக்கப்பட்ட போருக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மிரட்டல் விடுத்து வருகிறது.மேலும் சமீப காலமாக இந்தியா கப்பற்படையை விரிவுபடுத்தி, சீனாவிற்கு மிகப்பெரிய கவலையை கொடுக்கிறது. இந்தியாவின் பக்கத்து …
-
- 1 reply
- 618 views
-
-
’ பாலூட்டும் தாய் என்பதை விமான நிலையத்தில் நிரூபிக்க ஜெர்மனி போலிசார் நிர்ப்பந்தம்’ ஜெர்மனி நாட்டின் பிராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் ஒரு பெண், பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர் என்று அந்த பெண் காவல் துறையினரிடம் என்று புகார் அளித்துள்ளார். படத்தின் காப்புரிமைGAYATHRI BOSE Image caption’அவமானகரமான , அதிர்ச்சியூட்டும் நிகழ்வு’- காயத்ரி போஸ் புகார் செய்துள்ள காயத்திரி போஸ் இந்த அனுபவம் தன்னை ''அவமானப்படுத்துவதாக'' இருந்தது என்றும் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.…
-
- 1 reply
- 581 views
-
-
எனக்கு என்ட் கார்டே கிடையாது...2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.! வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பிறகு தலைநகர் வாஷிங்டனில் முதன்முறையாக பொது மேடையில் பேசிய டொனால்டு டிரம்ப், மாற்றங்களை ஏற்படுத்துவதாக கூறி கொண்டு அதிபரின் கடமைகளை ஜோ பிடன் மீறி வருவதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 2024 அதிபர்…
-
- 2 replies
- 609 views
-
-
கொழும்பு: பீகாரில் உள்ள மகாபோதி கோவிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து அறிந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இது குறித்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஊடக தொடர்பாளர் விஜயந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற புனித இடத்தில் குண்டு வெடித்தது ராஜபக்சேவுக்கு வேதனை அளிக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் விசாரணை நடத்தி அவருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு பற்றி தகவல் கிடைத்தவுடன் ராஜபக்சே மகாபோதி கோவிலின் தலைவரை அணுகி பேசினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் புத்தகயா ம…
-
- 3 replies
- 797 views
-
-
வத்திக்கான் தூதரை வெளியேற்ற ஆர்ப்பாட்டம் மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர். மலேசியாவிற்கான முதல் வத்திக்கான் தூதரான பேராயர் ஜோசப் மரினோ, 'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீமல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்ற வாதத்துக்கு ஆதரவு தந்ததற்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் பைபிள்களிலும் மற்ற இலக்கியப் படைப்புகளிலும் , 'கடவுள்' என்ற பதத்தை , 'அல்லா' என்று மொழி பெயர்க்க உள்ள உரிமை குறித்து ஒரு சட்டரீதியான போராட்டம் நடந்துவருகிறது. அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த முஸ்லி…
-
- 0 replies
- 362 views
-
-
இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார். பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தீப்பிடித்த கப்பலில் இருந்து கடலில் குதித்து உயிர்தப்பும் பயணிகள்... வீடியோ பயணிகளை லைப் ஜாக்கெட்டுகள் அணிய வைத்து கடலில் குதிக்க வைத்து பின்னர் உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர். ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று சிறிய கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த கப்பல் திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகளிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த பயணிகளை காப்பாற்றும…
-
- 1 reply
- 634 views
-
-
பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம் – தொழிலாளர் கட்சி பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய பிரெக்சிட் கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே பிரதமர் தெரசா மே ஜூன் 8ம்திகதி பொதுத்தேர்தலை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரெக்சிட் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஸ்கொட்லாந்து சுயாதீ…
-
- 1 reply
- 482 views
-
-
வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வரு…
-
- 0 replies
- 245 views
-
-
சிரியா மீது எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில், அங்கு பதட்டம் நிலவுகிறது. அதற்கு எந்த விதத்திலும் குறையாத பதட்டம் இஸ்ரேலில் நிலவுகிறது. அமொிக்கா, சிரியா மீது 48 மணிநேர மட்டுப்படுத்திய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அமொிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந் நடவடிக்கையில் நாசகாரி நீர்மூழ்கிகள் மூலம் 100 ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய இலக்குகளாக கட்டளை மையங்கள், விமானத் தளங்கள், ஆயுத தளபாட விநியோக மையங்கள், புலனாய்வுத் தளம், இராணுவப் பயிற்சி முகாங்கள் தெரிவாகியுள்ளது. தாக்குதல் தொடுக்கப்பட்டால் சிரியா உடனடியாக திருப்பி தாக்கப்போவது, இஸ்ரேலை நோக்கித்தான். இதனால், இஸ்ரேலிய நகரங்களில் பலத…
-
- 0 replies
- 994 views
-
-
பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில் தமிழ் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்தி தமது செயல்பாடுகளை ஏனைய போராட்ட அமைப்புகளுடன் கலந்து கொண்டு ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தி போராடும் போர்ராட்ட அமைப்புகளின் இன்றைய போராட்ட சூழல் பற்றி நடந்த கலந்துரையாடல், மக்களிடையே ஆனா விவாதத்த்தில் சஹாரவி ஓரியென்டல், தமிழீழம், குர்திஸ்தான்,பாலஸ்தீன மக்கள் பி…
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதன் விளைவை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கருணாநிதி, கூறியதாவது:- கேள்வி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கருணாநிதி : தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத…
-
- 0 replies
- 344 views
-
-
விமான பணிப்பெண்ணை 'பாட்டி' என்று கேலி செய்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி படத்தின் காப்புரிமைREUTERS விமானப் பணியாளர்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி மன்னிப்புக் கோரினார். கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் பேசிய கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க ஏர்லைன்ஸ் "தரம்" குறைவாக இருப்பதாகவும், அதில் "பாட்டிகள் சேவை வழங்குவதாகவும்" கூறியிருந்தார். "எங்கள் விமான பணியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே" என்று தற்புகழ்ச்சியாகவும் அவர் பேசினார்.. இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பியிருக்கும் நிலை…
-
- 0 replies
- 295 views
-
-
புதுடெல்லி:டெல்லி தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் அதிகளவில் வராததால், ராகுல் காந்தி அதிருப்தி அடைந்தார். 7 நிமிடத்தில் பேச்சை முடித்து கொண்டு கிளம்பினார். டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் டிசம்பர் 4ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் காங்கிரசின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக தக்ஷின்புரி கருதப்படுகிறது. இங்கு நேற்று தேர்தல் பிரசார கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகள் குறித்து பேசினார். ஆனால், அவரது பேச்சை கேட்க மக்கள் கூட்…
-
- 2 replies
- 602 views
-
-
சிரியா போரில் பதினோராயிரத்துக்கும் அதிகமான சிறார்கள் கொல்லப்பட்டதாக புதிதாக வெளியான ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது. இதில் குறைந்தது ஆயிரம் பேராவது சினைப்பர்களினால் வேண்டுமென்றே இலக்கு வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள், (அவர்களில் பலர் ஒரு வயதுக்கு குறைவானவர்கள்) சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிபிசிக்கு வழங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறுகின்றது. ஆயினும் இப்படியாக இறந்தவர்களில் பெரும்பாலானோர் தமது இருப்பிடங்களில் ஆர்ட்டிலறி குண்டுகள் விழுந்து வெடித்ததால் உயிரிழந்திருக்கிறார்கள். சிரியாவில் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு அனைத்துத் தரப்பையும் கோ…
-
- 0 replies
- 465 views
-
-
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று மாலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் பிரபல ஹொலிவுட் நடிகர் போல் வோல்கர் (வயது40) பலியானார். http://www.virakesari.lk/?q=node/359566 US actor Paul Walker, who starred in the Fast & Furious series of action films, has been killed in a car crash in California. Walker, 40, was a passenger in a Porsche sports car driven by a friend - who also died - when it crashed north of Los Angeles. Walker was said to be attending a charity event at the time. He starred in all but one of the films in the Fast & Furious franchise, the sixth of which opened in May. Walker also starred in the suspense drama Hours, a movie that i…
-
- 0 replies
- 428 views
-
-
பாரதீய ஜனதா கட்சி ஆம் ஆத்மியை தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக எடுக்க வேண்டாம் என்று பாரதீய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதாவுக்கு கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-09-BJP-must-take-the-AAP-challenge-seriously-Mohan-Bhagwat
-
- 5 replies
- 471 views
-
-
ஐரோப்பாவின்... மிகப்பெரிய அணுமின் நிலையத்தில், தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை! ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ ‘(அணு உலையின்) கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால்’ இது ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி டூஸ், ரஷ்ய படைகள், ‘கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,’ என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார். மேலும், ‘ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச…
-
- 11 replies
- 765 views
-
-
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதீய ஜனதாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி, தங்களது தொண்டர்களுக்கு தொல்லை கொடுக்க முதல் மந்திரி நரேந்திர மோடி உளவுதுறையை பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் இது தொடர்பான தகவல் அறிக்கையை மாலை 3 மணிக்கு அகமதாபாத் போலீஸ் கமிஷ்னரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-13-Modi-using-intelligence-to-harass-party-workers-alleges-AAP
-
- 0 replies
- 268 views
-
-
வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் - ஜப்பான் பிரதமர் அபே கண்டனம் - மக்களுக்கு அரசு எச்சரிக்கை. ஐக்கிய நாடுகளின் கடும் எச்சரிக்கையும் மீறி ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை …
-
- 0 replies
- 361 views
-
-
கிழக்கில்... ரஷ்யாவின் தாக்குதல்களை, முறியடித்துள்ளதாக... உக்ரேனிய படைகள் அறிவிப்பு உக்ரைனின் கிழக்கு எல்லைக்கு அருகே ரஷ்யாவில் எதிரிப் படைகள் மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக உக்ரேனிய ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யா கிழக்கில் புதிய தாக்குதலுக்கான தயார்படுத்தல்களுக்காக இராணுவ வாகனங்களை நகர்த்தி வருவதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், ஆறு தாக்குதல்களை முறியடித்ததாகவும், நான்கு டாங்கிகள், பல ரஷ்ய வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைனின் இராணுவம் கூறுகிறது. மேலும் ஒரு விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் உட்பட ஏழு வான் இலக்குகளைத் தாக்கியதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. டான்ப…
-
- 0 replies
- 188 views
-