உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார். அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது. தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர். இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து…
-
- 19 replies
- 2.3k views
-
-
http://www.singforcanada.ca/o_canada.mp3 O Canada! Our home and native land! True patriot love in all thy sons command. With glowing hearts we see thee rise, The True North strong and free! From far and wide, O Canada, we stand on guard for thee. God keep our land glorious and free! O Canada, we stand on guard for thee. O Canada, we stand on guard for thee. மூலம்: http://www.cbc.ca/arts/music/story/2010/03/03/o-canada-anthem.html
-
- 6 replies
- 1k views
-
-
''கதவைச்சாத்து காதல் வரட்டும்'' கவர் ஸ்டோரி 111.pdf
-
- 10 replies
- 1.1k views
-
-
சுவாமி சார்பாக பிரமச்சாரிகள் நாடத்திய ஊடகவியலாளர் மாநாடு. http://www.youtube.com/watch?v=w62Ttcpvovs சுவாமி நித்தியானந்த நிரபராதி என்கின்றார் http://www.youtube.com/watch?v=GE_Y5AHotyg ILANKAINET.COM
-
- 4 replies
- 1.1k views
-
-
இந்தியச் சிறுவனைக் கொன்றவனும் இந்தியனே ! அண்மையில் அவுஸ்த்திரேலியா மெல்பேர்னின் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட இந்தியச் சிறுவன் பற்றிய செய்தி இங்கு அவுஸ்த்திரேலியாவிலும், இந்தியாவிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது யாவரும் அறிந்தவொன்று. முக்கியமாக இந்தியாவில் அனைத்துத் தொலைக்காடிச் மற்ரும் செய்தித்தாள்களில் முக்கிய கவனத்தை ஈர்த்திருந்த இந்தச் சிறுவனின் கொலை, இந்தியப் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியான பாரதீய ஜனதாக கட்சியினர் அரசுக்கெதிராக கடுமையான அழுத்தங்கலைக் கொன்டுவந்திருந்ததோடு கடுமையான கலகத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். அதற்கு வலுச்சேர்க்குமாப்போல் இந்திய ஊடகங்களும் தம் பாட்டிற்கு ஊகங்களை அள்ளி விட்டதோடு அவுஸ்த்திரேலியாவில் இந்தயர்கலுக்கெதிரான இனவாதத் தாக்குதல்கள் எ…
-
- 3 replies
- 717 views
-
-
ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடந்த மோதலில் பிரிட்டன் இராணுவத்தைச் சேர்ந்த 18 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளார். உலகெங்கும் சிறுவர் படையணி தொடர்பில் கண்டனங்களைக் கொட்டி தலையீடுகளை மேற்கொண்டு வரும் பிரிட்டன் இன்றைய நாளில் 18 வயதான ஒருவரை எத்தனை வயதில் பயிற்சிக்கு எடுத்து எத்தனை மாதங்கள் பயிற்சி அளித்து அதிதீவிர சண்டைக் களத்திற்கு அனுப்பியது என்பது இப்போ.. புரியாத புதிராக இருக்கிறது. 18 வயதிற்கும் குறைந்தோரை இராணுவத்தில் இணைப்பதை.. சிறுவர் படையணியாக, போராளிகளாக இனங்கண்டு பிரச்சாரம் செய்து வரும் மேற்குலம்.. இந்த பிரிட்டிஷ் சிறுவர்கள் போரில் பலியிடப்பட்டு வருவதை பற்றி எதுவும் பேசாது ஊமையாக இருந்து வருகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இது தொடர்பில் மெளனம் காத்து வரு…
-
- 3 replies
- 537 views
-
-
காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட…
-
- 1 reply
- 522 views
-
-
-
சாமிகளும் மனிதர்களும் அரசியலாளர்களின் சுத்து மாத்து பயங்கரவாதத்தால் மனிதர்கள் வாழடியாத நிலை. எல்லாம் பணம், புகழ் ஆசை தான். உலகத்தில் மூலதனம் ஒன்று இல்லாமல் ஆரம்பித்து விரைவில் பணக்காரர் ஆகக்கூடிய தொழில் கோவில் கட்டுவதும் சாமியாராவதும் தான். சின்னச்சின்ன சாகசங்கள் புரியக் கற்றுக்கொள்ளவும் நன்றாகப்பேசவும் தெரியவேண்டும். அவ்வளவுதான். யாரும் கோடீஸ்வரன் ஆகலாம். அரசியல் என்றால் முதலில் கொத்தை விற்றாவது முதலிடவேண்டும். இதற்கு அதுவும் தேவையில்லை. ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவன் இருப்பான். கடவுளே வந்தாலும் எந்த ஒரு சடப்பொருளையும் கை அசைப்பதால் உருவாக்கிவிடமுடியாது. அப்படி என்றால் உலகத்தில் உள்ள பஞ்சத்தை உணவை எடுத்துக்கொடுத்தே போக்கிவிடலாமே. எத்தனைபேர் உணவில்லாமல் தவ…
-
- 2 replies
- 898 views
-
-
வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை. மெல்போர்ன் பல்கலைக்கழக கூறியதாவது: பற்சிதைவு, வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பிரபலமான பல மவுத்வாஷ்கள் உள்ளன. அவை பயன் அளித்தாலும், குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 9 மடங்கு வாய்ப்புள்ளது. புகைபிடிப்பவர்களுக்கு இது பல மடங்கு புற்றுநோய் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவோருக்கு 5 மடங்கு அபாயம் உள்ளது. எனவே, மவுத்வாஷ்களை குறுகிய காலத்த…
-
- 5 replies
- 879 views
-
-
கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியினைப் பிடித்திருப்பவர் சுவாமி பரமஹம்ச நித்யாணந்தர்.Sting operation என்னும் பெயரில் சாமியாரின் லீலைகள் என நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஒளிக் காட்சி ஒன்றை திரும்ப திரும்ப ஒளிபரப்பி தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் சேவை செய்திருக்கிறது சன் தொலைக்காட்சி. சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிக்கைகளும் சாமியாரை குறைகூறியும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்களைப் போட்டும் தங்களது பத்திரிக்கை விற்பனையையும் சன் தொலைக்காட்சி தனது TRP ரேட்டிங்கை உயர்த்திக் காட்டவும் முனைந்திருக்கின்றன. சிலபேர் சென்னை மாநகர காவல் ஆனையரிடம் சாமியார் தமிழ் கலாச்சாரத்தினை சீர்குலைத்ததாகவும் அவர்மேல் நடவடிக்கை எடு…
-
- 4 replies
- 3k views
-
-
சர்வதேச கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு இந்திய எல்லைக்கு அப்பால் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அதற்குக் காரணமான சிறிலங்க கடற்படையினரை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார் தமிழக மனித உரிமைக் கழக்கதின் வழக்கறிஞர் பா. ப…
-
- 2 replies
- 473 views
-
-
சித்தூர்: கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார் [^]கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்தின் நிலத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு நஷ்ட ஈடு கோரி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி அம்மா பகவான் ஆகியோர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். கல்கி பகவானின் நிஜப்பெயர் விஜயகுமார். இவர் எல்ஐசி ஏஜெண்டாக இருந்தவர். அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார். அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து…
-
- 14 replies
- 1.7k views
-
-
டெல்லி: ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியா [^] வரும்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு [^]த்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா, கூடுதலாக 29 மிக்-29கே போர் விமானங்களை வாங்கவுள்ளது. இதுதவிர ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அட்மிரல் கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி போர்க் கப்பலை இந்தியாவுக்கு அளிக்கும் இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது. இந்த பழைய கப்பலை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் இந்தியா கூடுதலாக 2.35 பில்லியன் டாலரை ரஷ்யாவிடம் வழங்கும். மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் புடின் இ…
-
- 0 replies
- 410 views
-
-
தென்கொரியாவில் குழந்தை வளர்க்கும் பாவணையில் விளையாடப்படுகின்ற கம்ப்யூட்டர் விளையாட்டொன்றில் மூழ்கிப் போன ஒரு பெற்றோர், தமது சொந்தக் குழந்தை பசியால் வாடி உயிரிழக்க இடம்தந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இந்தத் தம்பதியர் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் தொடர்ச்சியாக இணைய பாவனை நிலையம் ஒன்றில் நேரத்தைக் கழித்து வந்ததாகவும், குறைமாதத்தில் பிறந்த தமது சொந்தக் குழந்தைக்கு இவர்கள் ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே சாப்பாடு கொடுத்து வந்தனர் என்றும் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள தென்கொரிய அரசு ஊடகமான யொன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது. சியோலுக்கு தெற்கே சுவியோன் என்ற ஊரில் கைதுசெய்யப்பட்டுள்ள நாற்பத்தொரு வயதுத் தந்தையும் 25 வயது தாயும் இந்த வாரத்தில் முன்னதாக தமது 5 மாதக் கு…
-
- 0 replies
- 432 views
-
-
மூடநம்பிக்கையின் உச்சம்! இந்த செய்தியை பார்த்தவுடன் ஒரு கணம் அப்படியே ஆடி போய்விட்டேன். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு ஆசாமி நின்று கொண்டிருக்கிறார். இந்த கொடுமை நடந்தது பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில். அந்த ஊரில் உள்ள ஒரு சாமியார் தன்னிடம் அபார சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் எல்லா வியாதிகளையும் குணப்படுத்துவேன் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்துள்ளான். அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பீகார் மாநில சுகாதார துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் (இது என்ன கலாச்சாரமோ?) மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த சாமியார் மீது எந்த விதமான ந…
-
- 1 reply
- 1.2k views
-
-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. பென்னாகரம் உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்த ஏ.நூர்முகமது, கோவை மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் பொறுப்பாளராக உள்ளார். முன்னாள் கவுன்சிலரான இவர் பல்வேறு தேர்தல்கள் உள்பட இதுவரை 50 முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். தற்போது 51-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று இவர் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது 2 கழுதைகளையும் உடன் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28092
-
- 2 replies
- 547 views
-
-
இந்திய பாராளுமன்றத்தில் 153 அமைச்சர்கள் குற்றவாளிகள் என்று இந்திய சமூக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவர்களில் 74 அமைச்சர்கள் கொலை சம்பந்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அதில் பி.ஜே.பி யை சேர்ந்தவர்கள் 43 அமைச்சர்கள் என்றும், மற்றும் ஸ்ரீ பார்சி கொங்கிரஸ் 41 கொலைகார அமைச்சர்களையும் கொண்டுள்ளது. (இவர்களிடம் சரணடைய சொல்லும் இரவு சம்பந்தம் போன்றவரை பார்த்தால் பாவமா இருக்கு. ஈழத்தமிழன் அப்படி என்ன பாவம் செய்தான் இவருக்கு?) India 'has 153 tainted new MPs' At least 153 of the newly-elected MPs in India have criminal cases pending against them, according to a study by civil society groups. Groups working on electoral reforms say the…
-
- 10 replies
- 870 views
-
-
காபூல்: காபூலில் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள், இந்தியர்களைத் தேடித் தேடிக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் நேற்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 இந்தியர்கள் [^] உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இந்தியர்களில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள் ஆவர். இவர்கள் தவிர ஐந்து இந்திய ராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியர்களைக் குறி வைத்து நடந்திருப்பதாக இந்தியத் தூதர் ஜெயந்த் பிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் சம்பவம் போல இது தோன்றுகிறது. இந்தியர்களைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியர்களை ஒவ்வொரு (ஹோட்டலில்) அறையாக போய்த் தேடித் தேடிக் கொன்றுள்ளனர் என்றார். …
-
- 11 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக போடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கிலிருந்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் விடுதலை செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை திருவொற்றியுர் நீதிமன்றம் நேற்று(02.03.2010) பிறப்பித்தது. கடந்த 1999ஆம் ஆண்டு திருவொற்றியுரில் ”தென்மொழி அவையம்” சார்பில் நடந்த அரங்கக்கூட்டம் ஒன்று நடந்தது. திரு. இறைக்குருவனார் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், அப்போது அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன் உள்ளிட்டோர் அதில்…
-
- 2 replies
- 553 views
-
-
. பல் துலக்கியபடியே கார் ஓட்டினார் ஒரு பெண். அவரைப் போக்குவரத்துப் பொலிசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்தது. இங்கிலாந்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கால்ட்ரா நியூ போர்ட் பகுதியில் ஒரு பெண் டிரைவர் கார் ஓட்டிச் சென்றார். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சென்றபோது காரின் ஓரத்தில் உள்ள கண்ணாடியைப் பார்த்தவாறு பல் துலக்கினார். இதைப் பார்த்த போக்குவரத்து பொலிசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரை ஓட்டியபடி இது போன்ற செயல்களில் ஈடு படக்கூடாது என்று அறிவுரை கூறினர். மேலும் அவரது செயலுக்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். இந்தச் சம…
-
- 2 replies
- 622 views
-
-
ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு யோக்யகர்த்தா : இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு. அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன. ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனே…
-
- 4 replies
- 1.8k views
-
-
VANCOUVER - They call him India's fastest man. And when veteran luger and perennial underdog KANNAN PALAN Shiva Keshavan strides into BC Place Stadium this evening for the opening ceremonies of the 2010 Winter Games, it will be with some last-minute help from Vancouver's sizable Indo-Canadian community. India's Winter Olympic team faced considerable challenges just to make it to here. Mr. Keshavan broke both a bone in his back and his only sled in a nasty crash less than two months ago. Adding further stress, the uniforms supplied to the athletes and their coaches for tonight's event were mismatched and in poor condition. Yet South Asians in Greate…
-
- 7 replies
- 1.3k views
-
-
இந்தோனேசியாவின் தலைநகரான யகற்ராவில் உள்ள மென்ரெக் பூங்காவில் தற்பொதைய அமெரிக்க அரசுத் தலைவரான திரு பராக் ஒபாமா அவர்களின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. அதாவது அவரது 10ஆவது வயதிலே இருந்த தோற்றத்திலான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க http://www.nytimes.com/imagepages/2010/02/05/world/05cnd-indo.html http://www.nytimes.com/2010/02/06/world/asia/06indo.html
-
- 0 replies
- 541 views
-
-
பசிபிக் கடலில் 8.5 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்-சிலி, பெரு, ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை சனிக்கிழமை, பிப்ரவரி 27, 2010, 10:56[iST] சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில் மிக பயங்கர நிலநடுக்கம் [^] ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று காலை சிலி அருகே உள்ள கன்செப்சியான் நகர் அருகே கடல் பகுதியில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரி்க்டர் அளவுகோளில் 8.5 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடு்க்கப்பட்டுள்ளது. கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலியின் நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் மிக பயங்கர…
-
- 2 replies
- 596 views
-