உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27006 topics in this forum
-
கோவை செம்மொழி மாநாடு நடத்தி காங்கிரசை வியக்க வைத்து கூட்டணிக்கு மாற்று யோசனை இல்லாமல் பண்ண வேண்டும் என கலைஞர் நினைத்தார்.ஆனால் ஜெ அதிரடியாக அதே கோவையில் அதே அளவு கூட்டத்தை கூட்டி தி.மு.க வின் வயிற்றில் புளியை கரைத்தார். பதிபக்தி இல்லாதவர் என ஜெ சோனியாவை விமர்சித்ததை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது என கலைஞர் புலம்பும் அளவுக்கு ஜெவின் கோவைக்கூட்டம் அபரிதமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார். கவர்னரை மாற்றுவது என.தேர்தல் சமயத்தில் தி.மு.க கள்ள ஓட்டு தில்லுமுல்லுகள் செய்துவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 2 முறை அதிகாரப்பூர்வமாகவும்,ஒரு முறை ரகசிய விசிட்…
-
- 1 reply
- 646 views
-
-
தெஹ்ரான்: அடுத்த மூன்று மாதங்களுக்குள் மத்திய கிழக்கிலுள்ள இரு நாடுகள் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை ஆரம்பிக்குமெனத் தாம் எதிர்பார்ப்பதாக ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார். செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ள அஹமதி நிஜாத் இவ்விரு நாடுகளுக்குள் ஈரானும் உள்ளடங்குகிறதா என்பது தொடர்பில் எதனையும் குறிப்பிடாத அதேவேளை தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களில் எது இவ்வாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதையும் கூறவில்லை. இதேவேளை ஈரானின் அணு நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரிக்கவில்லை. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இப் பிராந்தியத்திலுள்ள குற…
-
- 10 replies
- 965 views
-
-
கும்மிடிப்பூண்டி, ஜூலை 30: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ÷கும்மிடிப்பூண்டியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் தற்போது 1070 குடும்பங்களைச் சேர்ந்த 3850 பேர் வசித்து வருகின்றனர். ÷தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் பெரிய முகாமானது கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் ஆகஸ்ட் 19, 1990-ம் ஆண்டு முதல் முகாம் பள்ளி செயல்பட்டு வருகிறது. ÷ஈழ ஏதிலியர் மறுவாழ்வு தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த பள்ளியில் தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளைச…
-
- 0 replies
- 430 views
-
-
சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது. கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்…
-
- 1 reply
- 1k views
-
-
நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் _ திகதி: 29.07.2010, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபரா…
-
- 1 reply
- 482 views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களை கற்கலால் அடித்தும், அரிவாளால் தாக்குதலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்திய எல்லைக்குள், மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கயிறுகளால் அடித்து துரத்தியுள்ளனர். பின்னர் அதே இடத்திற்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசியதோடு, அரிவாளலால் தாக்கியுள்ளதோடு, வளைகளையும் சேதப்படுத்திச் சென்றுள்ளதாக, ராமேஸ்வர மீனவர்கள் சங்கர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மீன்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்…
-
- 1 reply
- 858 views
-
-
ஆசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது-பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு கோலாலம்பூர் : ஆணவம் பிடித்த ஆசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சத்தீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசியாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு விடுத்துள்ள கோரிக்கை... இலங்கையின் வட கிழக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை, உலக வல்லரசுகளின் உதவியோடு, ஆயுதம் பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு கூடி, களித்து, கும்மாளமடித்து திரியும் ஆசின…
-
- 1 reply
- 767 views
-
-
Jul 28, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை உலகத் தமிழர்களே கருணாநரி தயாரிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிப்பீர்! இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில் காக்கை வன்னியனைப் போலவும் எட்டப்பனைப் போலவும் நடந்து கொள்கிறாரோ என்கிற ஐயப்பாடு உலகத் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் 'நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு' என்பதற்கு அமைய கருணாநிதி தனது கையாலாகத்தனத்தை வெளிக்காட்டும் விதமா…
-
- 3 replies
- 617 views
-
-
பாக். விமான விபத்தில் 100 பலி; 42 பேர் உயிர் தப்பினர் இஸ்லாமாபாத், புதன், 28 ஜூலை 2010( 13:50 IST ) பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 100 பேர் பலியாகினர்; 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். துருக்கியிலிருந்து கராச்சி வழியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி, ஏர் புளூ என்ற விமான நிறுவனத்தின் ஏர் பஸ் விமானம் ஒன்று, 146 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகள் என மொத்தம் 152 பேருடன் சென்றுகொண்டிருந்தது. கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்கி மீண்டும் காலை 7.50 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம், இஸ்லாமாபாத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மார்காலா என்ற மலைப்பகுதியில் பறந்தபோது மோசமான வானிலை மற்றும் புகை…
-
- 3 replies
- 631 views
-
-
முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி மோனிகா லெவின்ஸ்கி புகழ் பில்கிளிண்டனின் மகள் செல்சியா திருமண செலவு 23 கோடியாம் .
-
- 1 reply
- 971 views
-
-
கமல்ஹாசனுடன் முதன்முதலாக திரிஷா ஜோடியாக நடிக்கும் படம் மன்மதன் அம்பு. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு இத்தாலி பிரான்சு ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 50 நாட்களுக்கும் மேல் நடந்தது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய திரிஷா தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார். நிருபர் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:- முதல் அனுபவம் கேள்வி:- மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசனுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது? பதில்:- கமல் சார் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இதற்கு முன்பு நான் பல படங்களுக்காக வெளிநாடுகளுக்கு ப…
-
- 0 replies
- 664 views
-
-
Jul 28, 2010 / பகுதி: செய்தி / யாதவன் பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம் நவம்பர் 29ம் திகதி முதல் அமுல் ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29ம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு கடந்த திங்கட்கிழமை இந்தத் திகதியை அறிவித்திருக்கிறது. எந்தவொரு குடியேற்றவாசியும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க அல்லது தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் அதாவது பிரிட்டிஷ் பிரஜையாக அங்கிருக்க விரும்பினால் அவர்…
-
- 0 replies
- 327 views
-
-
இலங்கையில் இருந்து உயிருக்குப் பயந்தது லண்டனில் தஞ்சம் கோரிய மயூரன் சபாரத்தினம் லண்டன் வீதிகளில் படுத்து உறங்கினார். மேலும்...
-
- 0 replies
- 604 views
-
-
நானும் ஈழத் தமிழன்தான்-நாம் தமிழருக்கு கருணாஸ் பதில் சென்னை: நானும் ஈழத் தமிழன்தான். ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல் [^]வாதியோ இல்லை நான் என்று நடிகர் [^] கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை நான். நான் ஒரு சாதாரண நடிகன். என்னால் ஈட்ட முடிந்த சொற்ப பணத்தில் என்னால் இயன்ற அளவிற்கு ஈழ மக்களுக்கு செய்தவன், செய்கிறவன் நான். நான் அப்படி செய்வதற்கு நான் தமிழன் என்பது மட்டுமல்ல என் மூதாதையர் ஈழத்தை சார்ந்தவர்கள் என்பதும் முக்கிய காரணம். 25.07.2010 அன்று வெளியான செய்திதாள் ஒ…
-
- 0 replies
- 630 views
-
-
http://www.youtube.com/watch?v=AfiCyVKnSSw&feature=player_embedded கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்தது.அதற்கான பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானியான கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார் இவர் CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாமர்த்தியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமா…
-
- 5 replies
- 944 views
-
-
முதல்வர் கருணாநிதிக்கு வெடிகுண்டு மிரட்டல் திகதி: 23.07.2010 // தமிழீழம் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர். இது பற்றி தெரியவருவதாவது: நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். அந்த நபர் கூறுகையில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார். இதேபோல 108 அம்புலன்ஸ் சேவை மையத்தையும் தொடர்பு கொண்டு இதேபோல கூறியுள்ளார். இதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டனர். விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் எங்குமே க…
-
- 1 reply
- 486 views
-
-
சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். . புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்ச்சி: Nokia changed as a another bhopal factory. மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்…
-
- 1 reply
- 621 views
-
-
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடற்கரையில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை [^]யின் தலை தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்தவர் கவுஸ் பாஷா. இவர் 4 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியானார். இதனால் அவரது மனைவி சீரின் பாத்திமா தனது ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன் மன நி்ம்மதிக்காக மதுரை, கோரிப்பாளைத்தில் உள்ள தர்காவில் தங்கினார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் குழந்தை காதர் யூசுப்பை யாரோ கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை [^] நடத்தி காயல்பட்டினம் மொகதூம் தெருவை சேர்ந்த …
-
- 2 replies
- 611 views
-
-
வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து. உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத…
-
- 7 replies
- 1.2k views
-
-
பி.பி.சியின் சிங்கள ஒலிபரப்பான ‘சந்தேசிய’ உட்பட குறைந்த நேயர்களைக் கொண்ட அனைத்து ஒலிபரப்புச் சேவைகளையும் நிறுத்துவதற்கு பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தீர்மானத்துள்ளது என நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் புதிய அரசின் தேவையற்ற மற்றும் இலாபம் தராத விடயங்களை முடக்கிக் கொள்ளல் என்கிற கொள்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1280090663&archive=&start_from=&ucat=1&
-
- 0 replies
- 571 views
-
-
முதலில் மகனுக்கு முடியெடுக்க இலங்கை செல்வதாக கூறிய கருணாஸ், தற்போது இலங்கையில் நடக்க இருக்கும் வானொலியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்வதாக முன்னுக்குப் பின் முரணாக கூறுகிறார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது பழி சொல்வதற்காக யாரோ பின்னணியில் இருந்து பகடைக்காயாக கருணாஸை இயக்குகிறார்கள் என்று அவரது நடவடிக்கை சந்தேகிக்க வைக்கிறது. முன்னதாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன். நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரில் நான் இலங்கை செல்வதை கண்டித்து எனது செல்போனுக்கு 150-க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.க்கள் வந்துள்ளன. சிங்களன் …
-
- 12 replies
- 1.1k views
-
-
பதிவர் “சவுக்கு” சங்கர் கைது ! 2008ஆம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், இவரோடு அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. தெரிந்தவர்களை ஊழல் புகாரில் காப்பாற்றும் முயற்சிகள் இதன் மூலம் வெளிவந்தன. வழக்கமாக அரசுக்கு எதிரானவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் வரும்போது அரசுக்கு ஆதரவானர்களின் பேச்சுக்கள் வெளிவந்தது கருணாநிதி அரசுக்கு கடும் எரிச்சலை தந்தது. இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ.சங்கர் என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதையும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிங்களதேசத்தில் சென்று விழாவில் பங்கேற்றவர் விவேக் ஒபராய். இதே போல சிறிலங்காவுக்கு சென்ற கிரித்திக் ரோசனின் திரைப்படமான கைட்ஸ் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது. விவேக் ஒபராயும் நடிகர் சூரியாவும் நடிக்கும் இரத்த சரித்திரம் என்ற கிந்தி, தமிழ்ப்படம் தமிழகத்தில் திரையிடப்படும் போது பிரச்சனை வந்தால் அதில் இருந்து தப்புவதற்காக கலைஞரின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு தமிழ்ப் படத்தின் தமிழக உரிமையை விற்றுள்ளார் சூரியா. மகிந்தாவுடன் நட்புறவாக இருக்கும் காங்கிரசு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதி திரைமறைவில் அசின் தடையை நீக்க சரத்குமார் மூலம் ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாக இப்படத்துக்கு வரும் தடையை நீக்க சூரியா, தயாநிதி அழகிரியின் 2வது நாடகமாகும். 3வது நாடகம் நடிகர் …
-
- 0 replies
- 578 views
-
-
தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம். இலங்கை அரசு வானொலியில் நிகழ்ச்சி நடத்த இன்று காலை செல்லவிருந்த நிலையில் தமிழகம் முழுக்க இருந்து மர்ம மனிதர்கள் கருணாஸை கண்டித்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து செய்தியாளர்களிடையே பேசிய காமெடி நடிகர் கருணாஸ். “இலங்கை செல்ல முடிவு செய்துள்ளதால் தன்னை நாம்தமிழர் இயக்கத்தினர் செல்போனில் மிரட்டு வதாகவும், தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இழிவுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முட…
-
- 7 replies
- 1.3k views
-
-
இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர் 24 July 10 04:07 pm (BST) இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்து;ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லொகர் மாவட்டத்தில் இராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சமரின் போது இந்த இரண்டு அமெரிக்கப் பிரஜைகளையும் தலிபான்கள் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறெனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. குறித்த இரண்டு அமெரிக்கர்களும் எச்சரிக்கைய…
-
- 0 replies
- 423 views
-