உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா. வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார். …
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தோனேசியாவின் மராபி மலை வெடிப்பு : மலை ஏறுபவர்கள் 11 பேர் உயிரிழப்பு. இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது எழுபத்தைந்து பேர் அப்பகுதியில் இருந்தனர் என்றும் அவர்களில் 26 பேர் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2023/1361943
-
- 0 replies
- 252 views
-
-
பாரிஸ் ஈபிள் டவர் அருகே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : இருவர் காயம். மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டோர்மானின் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் அல்லாஹு அக்பர் என கத்தினார் என்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனத்தில் பல முஸ்லிம்கள் இறந்து கொண்டிருப்பதால் தான் வருத்தமடைந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்…
-
- 2 replies
- 616 views
-
-
இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் துபாயில் நடைபெறும் ஐ.நா.அவையின் உலக காலநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் 87 வயதை நிறைவுசெய்ய உள்ள போப் பிரான்சிஸுக்கு, இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒருவாரமாக அவர் நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் மருத்துவர்கள் பரிந்துரையை ஏற்று,…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
வடகொரியாவின் ஜனாதிபதியாக இருப்பவர் கிம் ஜாங் உன். இவரது சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது. இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு “வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமான…
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் காலமானார்! அமெரிக்காவின் முன்னாள் பிரபல இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் (Henry Kissinger) காலமானார். ஹென்றி ஹிசிஞ்சர் நேற்று (29) தனது 100 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிசிஞ்சர் ,நிக்சன் போர்ட்டின் இரண்டு அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். அமெரிக்க வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளில் முக்கியமான பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார்.1923 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹிசிஞ்சர் அவரது குடும்பத்தினருடன் ஜேர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு சென்று வசித்தார். 1943இல் அமெரிக்க பிரஜையான அவர், பின்னர் அமெரிக்க இராணுவத்திலும…
-
- 4 replies
- 704 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TELEGRAM கட்டுரை தகவல் எழுதியவர், அப்தெலாலி ரகட், ரிச்சர்வ் இர்வின் ப்ரவுன், பெனடிக்ட் கார்மன், சியான் செடான் பதவி, பிபிசி அரபிக், பிபிசி வெரிஃபை 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வேறு ஐந்து ஆயுதமேந்திய குழுக்களும் இணைந்து கொண்டன. அவர்கள் 2020-ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலுக்கான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். பிபிசியின் செய்திப் பகுப்பாய்வு இதனை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தக் குழுக்கள் அக்டோபர் 7 நடத்தப்பட்டத் தாக்குதலைப் போலவே சில பயிற்சித் தாக்குதல்களை மேற்கொண்டு அதனை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். இந்…
-
- 2 replies
- 409 views
- 1 follower
-
-
இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஆயிரக்கணக்கான கட்ட…
-
- 3 replies
- 855 views
-
-
படக்குறிப்பு, விடுதலை செய்யப்பட்ட பாலத்தீனப் பெண் கைதி சாரா அல்-சுவைஸா 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைப் பிடித்த மக்களை கடந்த வெளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 27) விடுதலை செய்து வருகின்றனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 50 பணயக் கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 150 பாலத்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இது நான்கு நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும். இதுவரை, இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 117 பாலத்தீனக் கைதிகளையும், ஹமாஸ் தாம் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 40 பேரையும் விடுவித்திருக்கின்றன. இரு தரப்பிலிருந்தும் வி…
-
- 1 reply
- 497 views
- 1 follower
-
-
சனிக்கிழமை மாலை பர்லிங்டன், வெர்மான்ட்டில் மூன்று பாலஸ்தீனிய கல்லூரி மாணவர்கள் சுடப்பட்டனர், தாக்குதலாளியால் சாத்தியமான சார்புநிலையை அதிகாரிகள் கவனிக்குமாறு சிவில் உரிமைகள் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அழைப்புகளைத் தூண்டியது. பர்லிங்டன் காவல் துறையின் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டின்படி, 20 வயது ஆண்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். "இருவர் நிலையாக உள்ளனர், ஒருவர் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளார்." நன்றி தெரிவிக்கும் விடுமுறைக்காக பர்லிங்டனில் உள்ள ஒரு உறவினரைப் பார்க்கச் சென்ற மாணவர்கள் ப்ராஸ்பெக்ட் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, "கைத்துப்பாக்கியுடன் ஒரு வெள்ளைக்காரரால் அவர்கள் எதிர்கொண்டனர்" என்று அந்த வ…
-
- 4 replies
- 903 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 24 NOV, 2023 | 03:50 PM 30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் ஒரு பனித் தீவாக மாறியது. 4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது. சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள…
-
-
- 17 replies
- 1.7k views
- 1 follower
-
-
காஸா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் மற்றும் உணவகங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு அரேபிய நாடுகளின் இளைஞர்கள் வந்துள்ளனர். அரேபிய இளைஞர்கள் மத்தியில் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், இந்த புறக்கணிப்பு முடிவு அரேபிய இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளின் இளைஞர்களே இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. @reuters மட்டுமின்றி, சமூக ஊடக தொடர்புகளால் தற்போது குவைத் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளிலும் பரவி வருகிறது. சில நிறுவனங்கள் வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்துள்ளதால், அந்த ந…
-
- 8 replies
- 1.2k views
-
-
Published By: RAJEEBAN 23 NOV, 2023 | 09:38 PM அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பார்னல் சதுக்கத்தில் உள்ள ஆரம்பபாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/170101 டப்பிளினில் கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பெரும் வன்முறை – வாகனங்கள் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN 24 NO…
-
- 4 replies
- 371 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கட்டுரை தகவல் எழுதியவர், ரெடாசியான் பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுன்னி மற்றும் ஷியாக்கள் - இது முஸ்லிம் உலகின் மிகப்பெரிய பிளவு. இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனத்துக்கு ஆதரவளித்தாலும், மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் மற்றும் மதப் பதற்றங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இஸ்லாமின் இரண்டு கிளைகளுக்கு இடையேயான வேறுபாடுகளே மத்திய கிழக்கில் உள்ள முக்கிய இரண்டு போட்டி…
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
23 NOV, 2023 | 10:38 AM சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு முழக்கத்துடன் தூதரக வளாகத்தில் 2 காலிஸ்தான் கொடிகளை பறக்கவிட்டனர். இந்தக் கொடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூலை 2-ம் தேதி, சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அதே தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து எரிக்க முயன்றனர். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொ…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
பெய்ஜிங், லியோனிங் மற்றும் சீனாவின் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் புதிய வகை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், சீன குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிமோனியா தொற்றுநோயை மூடி மறைக்க சீன அதிகாரிகள் செயல்படுவதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/282165
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
சிஎன்என் — அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் ரெயின்போ பிரிட்ஜில் புதன்கிழமை காலை ஒரு கொடிய விபத்தில் பென்ட்லியில் தனது மனைவியுடன் அதிக வேகத்தில் பயணித்த ஆண் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர், சட்ட அமலாக்க வட்டாரங்கள் CNN இடம் தெரிவித்தன. அதிவேகமாக வந்த வாகனம் ஒரு கர்ப் மீது மோதியது, பின்னர் ஒரு காவலர் வான்வழியாக வாகனத்தை அனுப்பியது மற்றும் இரண்டாம் நிலை திரையிடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. நியூயார்க் மாநிலத்தில் வசித்து வந்த அந்த நபர், கனடாவில் KISS கச்சேரியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார், ஆனால் அது ரத்து செய்யப்பட்டபோது, அதற்கு பதிலாக அமெரிக்காவில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்றார் என்று புலனாய்வாளர்கள் நம்புகி…
-
- 4 replies
- 624 views
- 2 followers
-
-
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்திருந்தார். கான்டன் பேரவை உறுப்பினர் பிரான்சிஸ்காவின் இந்த தேர்தல் வெற்றியானது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.பிரான்ஸிஸ்காவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் …
-
- 5 replies
- 801 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பசில்லோ ருகாங்கா பதவி, பிபிசி செய்திகள், நைரோபி 8 மணி நேரங்களுக்கு முன்னர் கென்ய மக்களுக்கு கடந்த நவம்பர் 13-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எதற்காகத் தெரியுமா? 10 கோடி மரங்களை நடுவதற்காக. கென்ய அரசின் இந்த முயற்சி அடுத்த பத்தாண்டுகளில் 1500 கோடி மரங்களை உள்ளடக்கிய காடுகளை வளர்ப்பதற்கான லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன் தொடக்கமாக விடுமுறையின் முதல்நாளில் 100 மில்லியன் மரங்கள் என்ற இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு கென்ய குடிமக்களும் குறைந்தபட்சம் 2 மரங்களையாவது நட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 0 replies
- 600 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 05:14 PM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு …
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று (21.11.2023) காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்த இந்த வரலாற்று நிகழ்வை செய்துள்ளார். பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது. தமிழீழத் தேசியக்கொடி மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்…
-
- 19 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடிமக்களில் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 50 பிணைக் கைதிகளை விடுப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலத்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்திருப்பதாக ஹமாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைச்சரவை இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பிரதமர் அலுவலகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தன…
-
- 61 replies
- 4.1k views
- 1 follower
-
-
ChatGPT தந்த OpenAI நிறுவனத்தில் குழப்பம் - 500 ஊழியர்கள் திடீர் ராஜினாமா மிரட்டல் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் வாலன்ஸ், அன்னாபெல் லியாங் & ஜோ க்ளீன்மேன் பதவி, தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப செய்தி ஆசிரியர் 21 நவம்பர் 2023 ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனின் அதிர்ச்சியளிக்கும் பணி நீக்கத்திற்கு எதிராக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஊழியர்கள் வெளியிட்டுள்ள ஒரு …
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 05:03 PM கொரோனா பெருந்தொற்றின் போது இரண்டாவது முடக்கல்நிலை அவசியமில்லை மக்கள் உயிரிழக்கட்டும் என தற்போதைய பிரதமர் ரிசி சுனாக் தெரிவித்தார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் கொரோனா நெருக்கடியை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து இடம்பெறும் விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரிசிசுனாக் இவ்வாறு தெரிவித்ததை பிரிட்டனின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் பட்ரிக் வலன்ஸ் தனது நாட்குறிப்பில் பதிவு செய்து வைத்துள்ளமையும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பொது பிரிட்டனின் பிரதமராக பணியாற்றிய பொறிஸ்ஜோன்சன் நிதியமைச்சர் சுனாக் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பில் …
-
- 3 replies
- 514 views
- 1 follower
-
-
ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆர்ஜென்டினாவில் நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜேவியர் மில்லேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/281740
-
- 5 replies
- 384 views
- 1 follower
-