உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
முடிவுக்கு வருகிறது கியூபர்களுக்கான அமெரிக்க விசாயின்றி தங்கும் சலுகை கியூபா மக்கள் விசா இல்லாமல் குடியேறிகளாக அமெரிக்காவுக்கு வந்து தங்க அனுமதிக்கும் நீண்டகால கொள்கையை அதிபர் பராக் ஒபாமா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதுவரை அமெரிக்கா வந்த கியூபா குடியேறிகள் அங்கு தங்கும் அனுமதி பெறுகின்றனர் 20 ஆண்டுகளாக இருந்து வருகின்ற இந்த கொள்கைப்படி,, அமெரிக்காவுக்கு குடியேறிகளாக வந்தடையும் கியூபா மக்கள், அங்கு ஓராண்டு தங்கியிருந்த பின்னர், சட்டப்படி நிரந்தரமாக தங்குகின்ற உரிமையை பெறுபவர்களாக இருந்து வந்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அல்லது நாடு கடத்தப்படும் தங்களது மக்…
-
- 0 replies
- 348 views
-
-
புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், தங்களது கைக்கடிகாரத்தை சுற்றியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். முதல் சூதாட்டம் கடந்த 5 ஆம் தேதியன்று புனே வாரியர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு…
-
- 0 replies
- 506 views
-
-
எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது – அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை 7 Views “நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார். இது…
-
- 2 replies
- 394 views
-
-
ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் குறைந்தது 120 பேர் இறந்துள்ளனர். வரலாறு காணாத மழையால் நதிகளில் உடைப்பு ஏற்பட்டு, அப்பிராந்தியமே பெருமளவு சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்மானிக்கப்பட்ட போருக்கு அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல். பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 546 views
- 1 follower
-
-
உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் உயிருடன்? உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றியுள்ளார். அல்கொய்தாவின் பிரபல தலைவர் ஒசாமா பின்லேடனின் வாரிசான அய்மான் அல்-ஜவாஹிரி 2020 இல் இராணுத்தினர் நடத்திய ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என ஊகங்கள் பரவின. இந் நிலையில் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தோன்றியுள்ளார் என இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் இணையத்தள செயல்பாட்டைக் கண்காணிக்கும் SITE புலனாய…
-
- 0 replies
- 508 views
-
-
அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளது. அவுகஸ் ஒப்பந்தம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூலோபாய சமநிலையை சீர்குலைக்கும் என்றும் வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்ச…
-
- 0 replies
- 187 views
-
-
அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியாளர் நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கப்பல் பராமரிப்புப் பணிக்காக தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி என்பவரும், கப்பலின் கப்டன் டட்னிக் வாலன்டைனும் கப்பலிலேயே இருந்தனர். பராமரிப்புப் பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர். …
-
- 4 replies
- 735 views
-
-
லண்டன் கம்டன் லொக் சந்தை((Camden Lock Market )) யில் தீ விபத்து : பிரித்தானியாவின் லண்டனில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடக்கு லண்டனின் கம்டன் லொக் சந்தை (Camden Lock Market ) யில் இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் 70 தீயனைப்புப் படைவீரர்களும் பத்து தீயனைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிகவும் வேகமாக பரவியதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை, எனினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது http://globaltamilnew…
-
- 0 replies
- 408 views
-
-
தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து – 3 பேர் படுகாயம் தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த தாக்குதலை நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 27 வயது சிரிய நபரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 2014 இல் ஜேர்மனிக்குள் நுழைந்த பின்னர் அகதி அந்தஸ்து பெற்றார் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சனை காணப்பட்டதாகவும் ஜேர்மன் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2021/1248581
-
- 1 reply
- 394 views
-
-
இந்தப் பூவுலகில் ‘சொர்க்கம்’ ஒன்று இருக்கிறது. உலகுக்கே ‘வழி’ காட்டும் பொருளாதார அமைப்பு இருக்கிறது. அந்த சொர்க்கத்தில் மேலும் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாத நோயாளிகளும், வயதானவர்களும் கையில் சலைன் பாட்டிலோடு நடுத்தெருவில் இறக்கி விடப்படுகிறார்கள். வெட்டுப்பட்ட விரல்களுக்கு சிகிச்சை அளிக்க பேரம். வேலை இல்லாத, மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாத தொழிலாளி, விபத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்துக்கு தன் கையாலேயே தையல் போட்டுக் கொள்கிறார். வெட்டும் எந்திரத்தில் இரண்டு விரல்கள் சேதமடைந்த தொழிலாளியிடம் “துண்டிக்கப்பட்ட நடு விரலை இணைப்பதற்கு $60,000 ஆகும், வெட்டுப்பட்ட மோதிர விரலை சரி செய்ய $12,000 ஆகும்” என்று மருத்துவமனை பேரம் பேசியதைத் தொடர்ந்து, அவர் மோதிர விரலை சரி…
-
- 0 replies
- 486 views
-
-
அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு திடீரென உயர்வது குறித்து விசாரிக்காதது ஏன்? - மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம் அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திடீரென பலமடங்கு உயர்வது குறித்து விசாரணை நடத்தாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலின்போது பணபலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் லால் பிரஹார் எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தேர்தலின்போது அரசியல்வாதிகள் தாக்கல் செய்யும் சொத்துமதிப்பும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கிலும் பெரிய அளவிலான முரண்பா…
-
- 0 replies
- 159 views
-
-
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளில் மறியல் செய்து பேரணி நடத்தினர். இதனால் போக்குவரத்து முடங்கியது. சமரச பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா மீண்டும் அழைப்பு விடுத்தார். தலைநகரை மூடும் போராட்டம் தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலகக்கோரி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி போராட்டங்கள் நடக்கின்றன. எனவே பிப்ரவரி 2–ந்தேதி தேர்தல் நடத்த பிரதமர் முடிவு செய்தார். ஆனால் அரசு எதிர்ப்பு போராட்டக்குழு அதை ஏற்கவில்லை.மேலும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி 13–ந்தேதி தலைநகர் பாங்காக்கை மூடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதனால் அரசாங்க அலுவலகங்கள், முக்கிய சாலைகளில் 10 ஆயிரம் போலீசாரும், 8 ஆயிரம் ராணுவ…
-
- 0 replies
- 348 views
-
-
பிரான்ஸின் ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட்டுக்கும் அவரின் காதலி வலேரி திரையர்வெய்லருக்கும் இடையிலான காதல் முறிவடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட், திருமணம் செய்யாத நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் வலேரி திரையர்வெய்லருடன் இணைந்து வாழ்ந்தார். 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பிராங்சுவா ஹொலண்டே பதவியேற்றது முதல் வலேரி திரையர்வெய்லரே அந்நாட்டின் முதற்பெண்மணியாக விளங்கினார். ஆனால், சில மாதங்களாக பிரான்ஸின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஜூலி காயெட்டுடன் ஜனாதிபதி ஹொலண்ட்டுக்கு இரகசிய தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் ஜூலி காயெட்டின் வீட்டுக்கு ஜனாதிபதி ஹொலண்ட் இரகசியமாக செல்வதை 'குளோசர்' எனும் பிரெஞ்சு சஞ்சிகையான …
-
- 0 replies
- 401 views
-
-
பிரெக்சிற் குறித்த இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவது குறித்த தீர்மானமொன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவேளை அதற்கு ஆதரவாக 557 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தவேண்டும் என்ற கோரிக்க…
-
- 1 reply
- 267 views
-
-
சோதனை நடந்த விமானி பரிக்கின் வீடு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியப் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர். கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா (53) மற்றும் பரிக் அப்துல் ஹமித் (27) ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர். அந்த விமானிகளின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோநிலை ஆகியவைகள் குறித்து ஆராய இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. இந்தச் சோதனைகள் குறித்த புதிய விவரங்கள் எதையும் போலிசார் தரவில்லை. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொடர்பு சாதனக் கருவிகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டதாக மலேசி…
-
- 6 replies
- 1.1k views
-
-
Video இதில் வரவேற்பு அறிவிப்பாளர் ஒரு தமிழன் Aziz Ansari http://en.wikipedia.org/wiki/Aziz_Ansari
-
- 0 replies
- 594 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதலாவது ஆசிய சுற்றுப்பயணம் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. [Lee Jin-man/Pool via Reuters] குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பான் செல்லவுள்ளார். முன்னதாக நேற்று தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிற…
-
- 2 replies
- 485 views
- 1 follower
-
-
விழுப்புரம்: மணமகன் தாலி கட்டும் போது அதை தட்டிவிட்டு விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண் [^]. தனது காதலருடன் வெளியேறினார். இதனால் மணமகன் தனது எதிர் வீட்டு பெண்ணுக்கு தாலி கட்டினார். சினிமாவில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் [^] பற்றிய விவரம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி (27). இவருக்கும் அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் [^] நிச்சயிக்கப்பட்டது. நேற்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. காலை 7.15 மணியளவில் அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்றபோது, அதை மணமகள் சுதா தட்டிவிட்டார். கழுத்தில் அணிந்தி…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாரடைஸ் ஆவணங்களில் இந்திய ஆளுங்கட்சி அமைச்சர், எம்.பி பெயர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பனாமா ஆவணங்கள் கசிந்து 18 மாதங்கள் ஆன நிலையில், மற்றொரு முக்கியமான நிதித்தரவுகள் கசியவிடப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தகவல்களை கசியவிட்டிருப்பது 'சுடூஸ்ச்சே ஜெய்…
-
- 0 replies
- 450 views
-
-
முஸ்லிம் மதகுருவைத் துருக்கியிடம் ஒப்படைக்க டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பணம் பெற்றாரா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS Image captionமைக்கேல் பிளின் முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 277 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் வட கொரியா பயங்கரவாததிற்கு உதவுகிறது: டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடொனால்டு டிரம்ப் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், வட கொரியாவை பயங்கரவாதத்தின் ஆதரவளிக்கும் நா…
-
- 0 replies
- 573 views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தின் பாதையும் இடத்தையும் அறிய முடியும் உலகிலுள்ள அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மர்சாட் முன்வந்துள்ளது. மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மர்சாட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் பறக்கும் விமானங்கள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மர்சாட் முன்வந்துள்ளது.மலேசிய விமானத்தில் இருந்த இன்மர்சாட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்…
-
- 1 reply
- 373 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆஸ்ரியன் பீப்பிள் பார்ட்டி தலைவரான செபாஸ்டியன் கூர்ட்ஸ் மற்றும், குடியேற்றத்திற்கு எதிரான சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகிக்கும் கிரிஸ்டியன் ஷ்ட்ராஹாவிற்கு இடையே, கூட்டணி ஒப்பந்தம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆஸ்ரியாவில் புதிய நிர்வாகத்தை உருவாக்குவதற்காக, அந்நாட்டு அதிபர், அவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை அதிபர் உறுதி செய்தால், 31வயதாகும், செபாஸ்டியன் கூர்ட்ஸ், உலகின் மிகவும் இளமையான தேசிய தலைவராவார். பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குட்சீன்ஸ்கீ மீது, எதிர்கட்சியினர் குற்றச்சாட்டிற்கான…
-
- 0 replies
- 406 views
-
-
பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்! உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (http://wikileaks.org/wiki/CIA_Red_Cell_Memorandum_on_United_States_%22exporting_terrorism%22,_2_Feb_2010) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில: …
-
- 1 reply
- 481 views
-
-
இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஆதர்ஷ வாகனம் அம்பாஸ்ஸடர் இந்திய அரசியல்வாதிகளின் விருப்ப வாகனமாக பார்க்கப்பட்ட அம்பாஸ்ஸடர் காரின் உற்பத்தியை இந்தியாவின் மிகப் பழைய கார் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுத்திவைத்துள்ளது. கடன்கள் பெருகிவருவதாலும், வாங்க ஆட்கள் இல்லை என்பதாலும், உற்பத்தித்திறன் குறைந்துவிட்டபடியாலும், கொல்கத்தா அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து உருவாக்கப்படும் இந்த காரின் உற்பத்தியை காலவரையின்றி இடைநிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 1950களின் பிற்பகுதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட இந்தக் காரின் வளைவுகள் கொண்ட பிரபல வடிவம், நெடிய உற்பத்திக் காலம் முழுக்கவுமே பெரிதாக மாறியிருக்கவில்லை. இந்த கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றி…
-
- 15 replies
- 1.6k views
-