Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தென்மேற்கு பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தை இன்று புதன்கிழமை தாக்கிய 6.4 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 160 பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 160 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் பலோசிஸ்தான் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வட குவேதாவிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மேற்படி பூமியதிர்ச்சி மையங்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பூமியதிர்ச்சியாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மண்சரிவுகளினாலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்…

  2. சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம்.... மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் - http://vinavu.wordpress.com/2008/10/30/usuicide/

  3. பெங்களூர், அக். 29- இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலம் ஹ¨ப்ளியில் மனித சங்கிலி போராட்டமும், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். உண்ண உணவின்றி அகதிகளாக தமிழர்கள் காடுகளில் வாழ்கின்றனர். சிங்கள ராணுவத்தின் கொடூர செயலை கண்டித்து கர்நாடக தமிழர் பேரவை சார்பில் ஹ¨ப்ளி மாநகர தலைமை தபால் நிலையம் எதிரே கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், முதியோர், ஊனமுற்றோர் உள்பட 500 பேர் கலந்துகொண்டனர். அம்பேத்கர் இளைஞர் சங்கம், முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளை, வைரமலை வைரவேல் முருகன் ஆலய அறக்கட்டளை, ஒசபேட்டை தமிழர் பேரவை துர்காதேவி சேவா சமிதி ஆகிய அமைப்புகளும்,…

  4. ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஜெயவர்த்தனே காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் இலங்கை அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என…

  5. தமிழ் நாட்டு கீயூ பிரிவு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? மத்திய அரசா அல்லது மாநில அரசின் கீழ உள்ளது. தெரிந்தவார்கள் கூறவும்.

    • 22 replies
    • 6.5k views
  6. ஆதாரம் Dinamalar 'புலிகள்': மறக்கவில்லை-மன்னிக்கவில்லை: வாசன் சென்னை: ராஜிவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமானவர்களை காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை என மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் வாசன் கூறினார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 1991ம் ஆண்டு நடந்த ராஜிவ் காந்தியின் கொடூரமான கொலையை நாட்டு மக்கள் மறக்கவில்லை. தேசத்திற்கும், காங்கிரசுக்கும் அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இதற்கு காரணமானவர்களை காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை. இலங்கையில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அவர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை அனுப்பவும், போர் ந…

  7. வீரகேசரி இணையம் 10/27/2008 11:44:20 AM - ""என்னைக் கைது செய்யுமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்'' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அறிக்கை வெளியிட்டேன். பின்னர் அரசியல் ஆதாயத்திற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் பாரபட்சம் காட்டாமல், சட்டவிரோதமாகச் செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மீண்டும் அறிக்கை விட்ட பிறகு திரைப்பட இ…

  8. சென்னை: சென்னை விமான நிலையத்தில் மறந்து போய் விட்டு விட்டுச் சென்ற பத்து பட்டுச் சேலைகளை மும்பையிலிருந்து மீண்டும் விமானத்தில் பறந்து வந்து எடுத்துச் சென்றார் மும்பைப் பெண் ஷியாமா. மும்பையைச் ேசர்ந்தவர் ஷியாமா. இவர் தீபாவளிக்காக பட்டுச் சேலைகள் வாங்க சென்னை வந்தார். பத்து பட்டுச் சேலைகளையும் பர்ச்சேஸ் செய்தார். பின்னர் மாலையில் விமானம் மூலம் மும்பை திரும்பினார். மும்பை சென்ற பின்னர்தான் பட்டுச் சேலைகள் இருந்த சூட்கேஸை சென்னை விமான நிலையத்திலேயே மறதியாக விட்டு வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் இரவில் கேட்பாரற்றுக் கிடந்த பட்டுச் சேலை இருந்த சூட்கேஸைப் பார்த்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் பரபரப்படைந்தனர். அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அச்சம் வந்தது. இதையடு…

    • 5 replies
    • 1.5k views
  9. NIBIRU 21 டிசெம்பர் 12இல் எமது சூரிய குடும்ப வட்டத்துக்குள் நுளையும் சூரியனை விட பெரிய கிரகம்...... நாசா சொல்லியிருக்கு, பயப்படவேண்டாம் எண்டு....

  10. மாறும் உலகில் மாறத்தான் வேண்டும் இரா. சோமசுந்தரம் இப்படியாகப் பேசினால் கைது செய்வார்கள் என்பது மதிமுக தலைவர் வைகோ-வுக்கு தெரியாத விஷயம் அல்ல. ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு இதெல்லாம் தெரிந்தவைதான். ஆகவேதான் பேசினார். அதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசை எதிர்த்த அரசியல் தலைவர் என்ற புகழ் தனக்கே இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கு போய்விடக்கூடாது இரண்டாவதாக, தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் தந்தாலும், தமிழ்நாட்டு மக்களிடையே 1980களில் நிலவிய உணர்ச்சிக் கொந்தளிப்பு காணப்படவில்லை. அந்த கொந்தளிப்பை…

  11. தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எழுச்சி தினம் தினம் புதிய பரபரப்புகளை உருவாக்கி வருகின்றது. மதிமுகவின் தலைவர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோர் "இந்திய இறையாண்மைக்கு" எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு எதிரான சக்திகளும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கும். ராஜீவ்காந்தி கொலையில் இருந்து இந்திய ஒருமைப்பாடு வரை பேசி மக்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படும். இம்முறையும் அப்படியே நடக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உயர்ந்த ஒரு இடம் இருக்க…

  12. இரு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே ஒரு மனைவி http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...tion/index.html

    • 1 reply
    • 2.2k views
  13. பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார். ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ். கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது: இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்…

  14. குமுதத்தின் கேலிச்சித்திரமும் தலையங்கமும், சில கட்டுரைகளும்.. அபூர்வமாக எப்போதாவது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே எழும் ஒற்றுமையான குரல் இந்த முறை - இலங்கைத் தமிழர்களுக்காக எழுந்திருக்கிறது. சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் - தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கு இருவாரக் கெடு விதிக்கப்பட்டிருப்பது & உறுதியான தீர்மானமே. ஈழப்பிரச்னையில் இதுவரை ஒதுங்கி வந்த அ.தி.மு.க.வும் கரிசனத்துடன் குரல் எழுப்பியிருக்கிறது. தமிழக காங்கிரஸும் இந்த அலையிலிருந்து தனித்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. திரைப்படக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ராமேஸ்வரத்தில் கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தித் தங்கள் எதிர்ப்பைத் தெரி…

  15. சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டதற்கு உதவி இயக் குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் உள்ள காமராஜர் சிலை முன்பு இன்று காலை அவர்கள் திரண்டனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். சீமான், அமீர் கைதை எதிர்த்தும் கோஷம் எழுப்பினார்கள். மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரிக்க முயன்றனர். போலீசார் விரைந்து வந்து கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் உதவி இயக்குனர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். டைக்டர்கள் சுப்பிரமணிய சிவா, ராம், ஜெகன், வேல் முருகன் உதவி இயக்குனர்கள் தாயுமானவன், மித்ரன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அன…

    • 0 replies
    • 694 views
  16. ம.தி.மு.க. சார்பில் "ஈழத்தில் நடப்பது என்ன?'' என்ற தலைப்பில், கடந்த 21-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப் பன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். வைகோ பேசும் போது, `நாங்களும் எங்கள் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுப்போம். ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வைகோ முதல் ஆளாக ஆயுதம் ஏந்தி செல் வான்' (கூட்டத்தினரை பார்த்தும் நீங்கள் ஆயுதம் ஏந்த தயாரா என்று வைகோ கேட்டார். அதற்கு கூட்டத்தினர் தயார் என்று குரல் கொடுத்தனர்) ஆயுதம் ஏந்தி போராட முடியும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசினார். கண்ணப்பன் பேசும் போது, `தமிழ்நாடு தனி நாடு' என்று சொல்லக்கூடிய காலம் விரைவில் வரும் என்று பேசினா…

    • 0 replies
    • 887 views
  17. அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்க…

  18. சுவிஸில் 70,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளனர் சுவிட்சர்லாந்தில் சுமார் 79,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகத் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், 110,000 இணைய பாவனைக்கு அடிமையாகக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நேரங்களைத் தவிர வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் இணையத்தைப் பயன்படுத்துவோர் இணையத தளத்திற்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இணைய அரட்டை மற்றும் இணைய விளையாட்டுக்கள் போன்றவைகளுக்கு அதிக அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

    • 4 replies
    • 1.1k views
  19. சென்னை: இலங்கை அரசுக்கு ஆயுதம், ரேடார், ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி, அங்கு தமிழர்களைக் கொல்லும் இலங்கையின் இனப்படுகொலையில் இந்திய அரசும் முக்கியப் பங்குதாரராக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை இனப் பிரச்சினையில் ஜெயலலிதா இதுவரை தமிழர்களுக்கு சாதகமாக பகிரங்கமாக பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக இலங்கைத் தமிழர்களைக் கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதப் பயிற்சி, ரேடார் கருவிகள், ஆயுதங்களை இந்திய அரசு வழங்கி, அங்கு இனப்படுகொலையை இலங்கை அரசுடன் சேர்ந்து நடத்தி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து சமீபத்தில் சிபிஐ நடத்திய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் க…

  20. தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?-பால் தாக்கரே மும்பை: தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசியல் கட்சிகள் உணர்வோடு செயல்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள் மராத்தியர் நலன் காக்க தீவிரம் காட்டினால் எங்கள் மீது குறிவைத்து குற்றம் சாட்டுகின்றனர் என்று சிவசேனை தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனை காக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உணர்வோடு நடந்து கொள்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என்று திமுக அரசு மிரட்டல் விடுத்துள்…

  21. மிக அதிகபட்ச ஊடக சுதந்திரத்தைத் தருவது, பொருளாதார சுபிட்சம் அல்ல , அமைதிதான் என்கிறது, எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு. போரில் ஈடுபட்டிருக்காத நாடாளுமன்ற ஜனநாயகங்கள் ஊடக சுதந்திரம் என்ற இந்த விஷயத்தில் நன்றாக செயல்படுகின்றன; ஆனால், அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட பிற நாடுகள் பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறைக்க, கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த அமைப்பு ஊடகச் சுதந்திரம் உள்ள நாடுகள் என்று தயாரித்த பட்டியலில், அமெரிக்கா 36வது இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது. முதல் சுமார் 20 இடங்களில் இடம்பிடித்திருப்பவை, ஐரோப்பிய நாடுகள், அதிலும் குறிப்பாக ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் பின்லாந்து போன்ற நோர்டிக் நாடுகள்தாம். எஸ்தோனியா, லாட்வியா, ஸ்லோவேகியா போன்ற புதிதாக ஜ…

    • 2 replies
    • 1.1k views
  22. முதல்- அமைச்சர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:- இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது. எழுபது ஆண்டுக்காலமாக இலங்கை வாழ் ஈழத்தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன்; உயிரையும் கூட அர்ப்பணிப்பவர்களாக; இன்னும் சொல்லப்போனால் கற்பெனும்மான உணர்வையும் கொள்ளை கொடுப்பவர்களாக; கணவன் முன்னிலையில் அவன் கட்டிய மனைவி - கற்பிழந்தாள் - அண்ணனோ தம்பியோ கண்ணெதிரே பார்த்துக் கொண்டு அலற அலற; அவர்களின் அருமைச் சகோதரி; அக்காளோ, தங்கையோ அம்மாவோ; அதனினும் கொடுமையாக முதிர்ந்த வயதுத் தாய்க்குலமும் சிங்கள முள்ளம்பன்றிகளின் மு…

  23. திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும். 28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில்…

  24. புதுடெல்லி, அக். 21- இலங்கை தமிழர் பிரச் சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. அமளியில் ஈடுபட்டது. பாராளுமன்றம் கூடிய தும் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் இலங்கை தமிழர் பிரச் சினையை அவையில் கிளப்பினார்கள். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இந்த பிரச்சினைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதே போல கம்ïனிஸ்டு உறுப்பினர்கள் அணு ஒப்பந் தம் பிரச்சினைப் பற்றி விவா திக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதே போல வேறு சில கட்சிகளும் பிரச்சினைகளை கிளப்பி வாக்குவாதம் செய்தனர். அனைத்து உறுப்பினர்களையும் சபா நாயகர் சோம்நாத் சட் டர்ஜி அமைதிப்படுத்த முயன்றார். அதை யாரும் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் "5 கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்தி வை…

    • 0 replies
    • 784 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.