உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
வீரகேசரி நாளேடு 6/27/2008 9:50:54 PM - மலேசியாவிற்கு தொழில் நோக்கங் கருதி செல்லும் தமிழர்களை நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சார அதிர்ச்சியளிக்கும் கொடூரம் நிகழ்வதாக மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து மலேசியாவில் தமிழர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்த சட்டத்தரணி ஆர்வலன் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் தமிழர்களை பாதுகாக்கத் தக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதழியல் சார்ந்த அமைப்புகள் சார்பில் நேற்று தமிழக தொழிலாளர்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் ஒன்று மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மே…
-
- 4 replies
- 1.4k views
-
-
நடிகர் சத்யராஜ் மீது அவதூறு வழக்கு-நீதிமன்றம் உத்தரவு சிதம்பரம்: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிவைேற்றக்கோரி தமிழ் திரையுலகத்தினர் சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக நடிகர் சத்யராஜ் பேசியதாக, அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய பரங்கிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தடுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமாக நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இதில், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கு எதிராக சத்யராஜ் பேசியதாகவும், எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடலூர் மாவட்ட காங்கிரஸ் பிரமுக…
-
- 0 replies
- 1k views
-
-
இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல். கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி. ``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இ…
-
- 33 replies
- 7.1k views
-
-
தமிழர் எதிர்ப்பு: இந்திய அரசின் நிரந்தர அரசியல் வெளிநாட்டுக்கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கமே. இந்திய அரசு தமிழகத் தமிழர்கள் பால் என்ன அணுகுமுறை கொண்டிருக்கிறதோ அதே அணுகுமுறையைத்தான் ஈழத்தமிழர்கள் பாலும் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைப…
-
- 0 replies
- 551 views
-
-
தூங்கிப் போன பைலட்டுகள்-தப்பிய 100 பயணிகள் வியாழக்கிழமை, ஜூன் 26, 2008 மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில் தகவல் கசிந்துள்ளது. துபாயிலிருந்து மும்பை கிளம்பிய IC 612 என்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. இதையடுத்து அங்கிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில…
-
- 7 replies
- 1.8k views
-
-
மசகு எண்ணெய் விலை குறையாது ஒபெக் நாடுகள் உறுதியாக அறிவிப்பு [24 - June - 2008] மசகு எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதிகரித்துவரும் விலை உயர்வுக்கு உடனடித் தீர்வு கொண்டுவர விரும்பவில்லை. மசகு எண்ணெய் விலையேற்றத்துக்கு ஊக அடிப்படையிலான வர்த்தகம் காரணமாக இருந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்து மட்டும் முதல் கட்டமாக எழுந்திருக்கிறது. செல்வந்த நாடுகள் உட்பட சகல நாடுகளையும் பாதித்திருக்கும் மசகு எண்ணெய் விலையுயர்வுக்குத் தீர்வுகாண 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சவுதியின் தலைநகரான ஜெத்தாவில் ஞாயிறன்று ஆலோசனை நடத்தினர். இதில் உலகின் பாரிய எண்ணெய் கம்பனிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தற்போது பரல் 135 டொலர் வரை உயர்ந்திருக்கும் மசகு எண்ணெய்,இனி 150 டொலர் வரை எளிதி…
-
- 0 replies
- 701 views
-
-
பில்கேட்ஸ் 27ல் ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலகின் முன்னணி கோடீஸ்வரருமான பில்கேட்ஸ், தலைமை மென்பொருள் நிபுணர் என்ற அலுவலக பொறுப்பில் இருந்து 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது பொறுப்பை ரே ஓஸ்சே ஏற்பார். எனினும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராகவும், அதிக பங்குகளை வைத்துள்ளவராக வும் பில்கேட்ஸ் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்டு பல்கலை.யில் படிப்பை பாதியில் விட்டவர் பில்கேட்ஸ். தனது நண்பர் பால் ஆலெனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி உட்பட பல மென்பொருட்கள் கம்ப்யூட்டர் துறையில் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றன. உலகின் மிகப் பெரிய பணக்க…
-
- 0 replies
- 770 views
-
-
சென்னை: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்குவதிலிருந்து மீனவர்களைக் காக்க, கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்கள் குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய- இலங்கை கடல் பகுதியில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து தங்கள் பிழைப்பை நடத்தி வந்தது காலம் காலமாய் நடந்த சரித்திர உண்மை. கடந்த 26௬௧974 அன்று இந்திய அரசும், இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுளுக்கும் ஆடம்ஸ் பாலத்துக்கும் பாக் ஜலசந்திக்கும் இடையே எல்லை வரையற…
-
- 0 replies
- 825 views
-
-
பிலிப்பைன்ஸ் கப்பலில் இருந்து 33 பயணிகள் உயிருடன் மீட்பு! 700 பேர் கதி என்ன? சூறாவளியில் சிக்கி கவிழந்த பிலிப்பைன்ஸ் கப்பலில் இருந்து 33 பயணிகளை மீட்புகுழுவினர் மீட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அப்போது மணிக்கு 140 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியது. இதில் இல்லாய்யோ மாநிலத்தில் 230 பேர் பலியாயினர். அங்கு வீடுகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தலைநகர் மணிலாவிலிருந்து சிபுயான் தீவுக்கு புறப்பட்ட Ôபிரின்ஸஸ் ஆப் ஸ்டார்ஸ்Õ என்ற கப்பல் புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 749 பேர் பயணம் செய்தனர். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்பு …
-
- 0 replies
- 605 views
-
-
சிவாஜி பிறந்த நாளில் புதிய கட்சி: நடிகர் பிரபு திங்கள்கிழமை, ஜூன் 23, 2008 சேலம்: நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதியன்று அரசியில் பிரவேசம் நடைபெறும் என நடிகர் பிரபு கூறியுள்ளார். சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறஉகையில், சேலத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. எனது தந்தை ஏழு வயதில் சேலத்தில் தான் முதன் முதலில் நாடக நடிகர் ஆனார். எனது தந்தை மேல் உயிராக உள்ள ரசிகர்களுக்காகவும், ஏழை மக்களுக்காக உதவி செய்யவும் சிவாஜி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு வருடமும் 100 ஏழை மாணவ…
-
- 21 replies
- 3.7k views
-
-
செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டிகள் இருப்பதை பீனிக்ஸ் லேண்டர் ஆய்வுக் கலம் உறுதி செய்தது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த ஒடிஸி என்ற ஆய்வுகலத்தை நாசா விஞ்ஞானிகள் கடந்த 2002ம் ஆண்டு அனுப்பினர். இது செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு செய்து பல படங்களை எடுத்து அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தின் வடபகுதியில் ஐஸ் கட்டிகள் புதைந்திருப்பது போல் காட்சியளித்தது. இது ஐஸ்கட்டிகளா அல்லது வேறு ஏதாவது வேதிப்பொருட்களா என ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக பீனிக்ஸ் லேண்டர் ஆய்வுக்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு டெல்டா ௨ ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பியது நாசா. 10 மாத பயணத்துக்குப்பின் கடந்த மாதம் 25ம் தேதி செவ்வாய் கிரகத்தி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆப்கான் தற்கொலை குண்டு தாக்குதலில் பத்துப்பேர் பலி [21 - June - 2008] ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள ஹெரஸ் மாவட்டத்தினூடு வாகனத் தொடரணியாகச் சென்று கொண்டிருந்த வெளிநாட்டு துருப்பினரை இலக்கு வைத்தே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹெல்மண்ட் மாகாணமானது தலிபான்கள் அதிகமுள்ள பிரதேசமாக இருப்பதால் இப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. ஆப்கானின் தெற்கு நகரான கந்தஹாரிலிருந்து தலிபான் போராளிகளை விரட்டி அடித்ததைத் தொடர்ந்தே இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…
-
- 1 reply
- 644 views
-
-
இந்தியா வல்லரசு ஆகுமா? -- சீமான் சொல்கிறார் காணொளி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 3.2k views
-
-
2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும் . Friday, 20 June, 2008 03:05 PM . வாஷிங்டன், ஜூன் 20: 2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை எட்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. . தற்போது உலகில் 6.7 பில்லியன் மக்கள் உள்ளனர் என்றும், இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 304 மில்லியன் மக்கள் தொகையுடன் 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை கடந்த 1999ம் ஆண்டு 6 பில்லியனை எட்டியது என்றும், இது 13 ஆண்டுகளில் மேலும் ஒரு பில்லியனை எட்டி 2012ல் 7 பில்லியனாக உயரும் என்றும் அது கூறியுள்ளது. கடந்த 1800ல் மக்கள் தொகை 1 பில்லியனாக இருந்தது என்றும், அது 2 பில்லியனாக உயர 130 ஆண்டுகள் ஆனத…
-
- 1 reply
- 834 views
-
-
ஓநாய் மீண்டும் உறுமுகிறது (பழ.நெடுமாறன்) இந்தியாவின் மீது அமெரிக்கா மீண்டும் பாய்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து சாதாரக அரிசி மற்றும் சில உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு அமெரிக்கா ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்க உயர் அதிகாரியான கிரிஸ்டோபர் பாடில்லா என்பவர் “அரிசி உள்ளிட்ட உணவு தானியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அண்டைய நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கோபத்திற்கு உண்மையான காரணம் வேறு. அரிசியை ஒரு போதும் அமெரிக்கர்கள் உபயோகிப் பதில்லை. அமெரிக்காவில் வாழும் இந்தி யர்களும் ப…
-
- 0 replies
- 749 views
-
-
தினமலரில் வெளியான செய்தியின் ஒரு பகுதி இங்கே இணைக்கப்படுகிறது. தமிழ்த்தாய் இச்செய்தியால் குற்றுயிராக்கப்படாமல் சிற்சில திருத்தங்கள். (தமிங்கலத்தில் உள்ளவை தனி ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன.) தமிழில் "Left, Right' போட்ட ம.தி.மு.க.,: ம.தி.மு.க., சென்னை மண்டல மாநாடு, தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாலை 3.30 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து, சீருடை அணிந்த தொண்டர் அணியினரின் பேரணி துவங்கியது. மன்றோ சிலை அருகே ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பேரணியை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேடைக்கு 3.45 மணிக்கு வந்துவிட்ட வைகோ, 5 மணி வரை பேரணியை பார்வையிட்டார், பின்னர் மாநாட்டுத் திடலுக்கு சென்றார். மாநாடு மற்றும் பேரணியை முன்னிட்டு சில…
-
- 0 replies
- 859 views
-
-
உலகில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் கடந்த ஆண்டில் (2007) 198,499 சிசுக்கள் கருக்கலைப்பின் மூலம் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளன. அங்கு கருக்கலைப்பு வீதம் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 21% தாலும் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 10% தாலும் அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கையான பெண்கள் மத்தியில் 2.5% வீதத்தால் கருக்கலைப்பு அதிகரித்துள்ளது. உயர்ந்த அளவு கருக்கலைப்பு வீதம் 19 வயதுப் பெண்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. மாத்திரைகளைப் பாவித்து சிசுக்களை கொல்வது மொத்தக் கருக்கலைப்பில் சுமார் 35% ஆக இருக்கிறது. இது முன்னைய ஆண்டில் 30% ஆக இருந்துள்ளது. மொத்தக் கருக்கலைப்பில் வெறும் 1% மட்டுமே குழந்தை உலகில் குறைபாட்டோடு பிறக்கப்போகிறது என்பதற்காக செய்யப்பட்டுள…
-
- 2 replies
- 1k views
-
-
ஆப்கானில் எல்லைக் கிராமங்கள் தலிபான்கனால் கைப்பற்றப்பட்டன புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] ஆப்கானிஸ்தானில் தனிபான் அமைப்பினரால் எல்லைப்புறக் கிராமங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான ஆக்கானிஸ்தான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தலிபான்களால் பல எல்லைப்புறக் கிராமங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் இப்பகுதிகளுக்கு குவிக்கப்பட்டு எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகத் தெரிவியவருகிறது. தலிபான்களால் பாலங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டிடங்களில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. pathivu.com
-
- 1 reply
- 696 views
-
-
சென்னை: கூட்டணி முறிந்ததாக திமுக அறிவித்ததை பாமகவினர் இனி்ப்பு வழங்கி கொண்டாடினர். அதே போல திமுகவினரும் பாமக போனதை வெடி போட்டு கொண்டாடினர். 'இனிமேல்தான் நம் அரசியல் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கப் போகிறது' என்று கூறியபடி பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகமாய்க் கூறியபடி ஆடினர். சிலர் உற்சாக மிகுதியில் கிலோ கிலோவாக இனிப்புகளை வாங்கி சக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர். சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அண்ணா அறிவாலயத்துக்கு எதிரிலுள்ள தெருக்கள் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தேனாம்பேட்டையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. சி…
-
- 2 replies
- 1k views
-
-
பள்ளிக்கூடம், கல்லூரி கள் திறந்து விட்டாலே பெண்களை கிண்டல் செய்யும் வாலிபர்கள் மது குடித்த குரங்கு போல் அட்டகாசம் செய்ய ஆரம் பித்து விடுவார்கள். வட சென்னையில் அத்தகைய வக்கிரபுத்தி கொண்ட வாலிபர்களை மடக்கி பிடித்து தக்க பாடம் கற்று கொடுத்து வருகிறது. பெண் போலீசாரின் சுடிதார் படை. பெண்க ளுக்கு எதிரான ஈவ்டீசிங் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சேகர் உத்தரவின்பேரில் வடசென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவியின் நேரடி கண்காணிப்பில் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சேகர் மேற்பார் வையில் 4 பெண் சப்- இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் விறுவிறுப்பாக சுற்றி வருகின்றனர் சுடிதார் படை பெண் போலீசார் சப்- இன்ஸ்பெக்டர்கள், ரேகா, ஸ்ரீதேவி, இந்திராணி, மோகனவள்ளி அகியோர் தலைமையில் ஒவ்வொரு படையிலும் 5பெண் …
-
- 1 reply
- 2.5k views
-
-
-
ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் தோழி சசிகலாவுடன் மிக நீண்ட ஓய்வு எடுத்து வருகிறார் ஜெயலலிதா. கோடை காலத்தின் பெரும்பாலான பகுதியை அவர் ஊட்டியில் தான் செலவிட்டார். அங்கிருந்தபடியே தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். இப்போதும் அங்கு தான் இருக்கிறார். இந் நிலையில் அவரை சுப்பிரமணியம் சுவாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார். திமுக-பாமக மோதல் வலுத்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சில வாரங்களுக்கு முன்பே சுவாமியை கொடநாட்டுக்கு அழைத்திருந்தார் சுவாமி. அவரும் கிளம்பிப் போனார், ஆனால் அந்தச்…
-
- 6 replies
- 1.6k views
-
-
அணு வல்லரசாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா? ஈராக் மீதான ஆக்கிரமிப்பாலும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாததாலும், லெபனானில் நடைபெறும் நிகழ்வுகளாலும் ஏற்கனவே வெகுவாகக் குழம்பிப் போயுள்ள மத்திய கிழக்கின் ஸ்திர நிலை மேலும் குழம்பிப் போகுமா? உலகின் அநேக நாடுகளுக்கு எரிபொருளை வழங்கிக் கொண்டிருக்கும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை, குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் எரிபொருட்களின் விலை மேலும் உயர வழி செய்யுமா? இது இன்றைய உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி. http://www.swissmurasam.info/
-
- 0 replies
- 911 views
-
-
ஜூன் 14 உலக மக்களால் என்று மறக்கபடாத மனித குலப்போராளி சே குவராவின் 80 வது பிறந்த தினமாகும் 1967 ம் ஆண்டில் பொலீவிய இராணுவத்தால் தைது செய்யபட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட இப்போராளியின் உடலம் கூடவெளியே தெரியாதபடி இரகசிய இடத்தில் எரியூட்டபட்டது. உலகின் நினைவிலிருந்து அவரை அகற்ற ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட அம்முயற்சி நிறைவேறவில்லை. இன்றும் அவரது நினைவுகளைஉலக மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை. அம்மாவீரனின் பிறந்த நாளை முன்னிட்டு அப்போராளியின் நினைவுகளை முரசம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் செப்ரெம்பர் 2007 ல் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சேகுவராவின் வாழ்க்கை பதிவுகள் கொண்ட கட்டுரையை இங்கு தருகின்றோம். விபரம்: http://swissmurasam.info/content/blogca…
-
- 3 replies
- 1.1k views
-
-
பேசுற விதம்... செய்யற செயல்... தனித்தன்மைன்னு பல சமாச்சாரங்களை அள்ளிப் போட்டு அலசினா யாரோட எனர்ஜி லெவலையும் வட்டம் போட்டுக் காண்பிச்சிரலாமாம். இதுக்குப் பேருதான் செல்ஃபாலஜி. இந்தத் துறையைச் சார்ந்த அகஸ்திய பாரதியின் கையில் ஒரு வி.ஐ.பி. பட்டியலைத் திணித்தோம். அப்சர்வேஷன், எனர்ஜி லெவல் என்று எல்லாவற்றையும் ஒரு சுற்று சுற்றியவர், பிரபலங்களின் எதிர்காலத்தைப் பேச ஆரம்பிக்கிறார். (இதெல்லாம் நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்) மு.க.ஸ்டாலின் அடுத்த முதல்வரா வர்றதுக்கு ஸ்டாலினுக்கு எதிர்ப்பே இல்ல. ஆனா, அவரோட `எனர்ஜி லெவல்' இப்போதைக்கு சரியில்ல. சூழ்நிலைகளும் பலவீனமா இருக்கு. தி.மு.க.வோட முழு நிர்வாகமும் அவரோட கைக்கு நிச்சயம் வரும். ஆனா, கூட்டணிக் கட்சிகளோட தொல்…
-
- 0 replies
- 819 views
-